search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Not Allowed"

    • கோவில் பஸ்கள் மற்றும் படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல அறிவுறுத்தல்
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் மும்முரம்

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகமானோர் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி தினமும் காலை, மாலை என 2 வேளைகளிலும் யாக சாலை வேள்வி பூஜை நடைபெற்று வருகி றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று புதிதாக கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, சேச வாகனத்தில் ராஜ தர்பார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    நாளை மறுநாள் சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கூட்டம் அதிகமாக வருவதை கருத்தில் கொண்டு, நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும், படிக்கட்டு வழியாகவும் சென்று சாமியை தரிசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் அருகே கல்லூரியில் படிக்க வைக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மூத்த மகள் சேதுபிரியா (வயது21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணின் 2-வது மகன் பிளஸ்-2 படித்து முடித்ததும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று வீட்டில் பேசி வந்துள்ளனர். தன்னை மட்டும் கல்லூரியில் சேர்க்கவில்லை. தம்பியை கல்லூரியில் சேர்க்கிறார்கள் என்று வேதனையடைந்தார்.

    இதைத்தொடர்ந்து சேதுபிரியா தனியாக இருந்தபோது எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கியுள்ளார். காலையில் மூக்கில் ரத்தம் வந்துள்ளது.

    இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் சேதுபிரியாவை மீட்டு மண்டபம் முகாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மாணவியின் தாய் மலர்விழி அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளதால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. #DelhiPollution #AirPollution
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவதாலும், வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகிறது.

    காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழைய கனரக மற்றும் மித ரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



    நேற்று இரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இருப்பினும் காய்கறிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை போலீசார்  சோதனை செய்து அனுப்புகின்றனர். 11-ம் தேதி இரவு 11 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

    தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டியது. நேற்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

    இன்று சற்று குறைந்துள்ளபோதிலும் அபாய அளவிலேயே உள்ளது. ஆனந்த் விஹாரில் 585, அமெரிக்க தூதரக பகுதியில் 467, ஆர்.கே.புரத்தில் 343 என்ற நிலையில் காற்றின் தரம் இருந்தது. #DelhiPollution #AirPollution
    ×