என் மலர்tooltip icon

    சென்னை

    • பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
    • ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு தான் என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இன்று பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாசிச ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்கிறது.

    இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் இவ்வாறு வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.

    நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உண்மையான மாற்றத்தின் குரல் என்றும், ஜனநாயகத்தின் காவலன் என்றும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.
    • சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பீகாருக்கு சென்றுள்ளார்.

    புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பீகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.

    அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீகார் தான்.

    இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.

    அத்தகைய சிறப்புமிக்க பீகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

    சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம் என தெரிவித்துள்ளார். 

    • ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    • விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள்.

    மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தயாராகி வருகிறார். விஜய் பிரசாரம் செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் பஞ்சாப் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேனுக்குள் லிப்ட் வசதியும் உள்ளது.

    பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசவும், பொது மக்களை சந்திக்கவும் இந்த லிப்ட் வழியாக வேனின் மேல் பகுதிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வேன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) விஜய் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசாரத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். இதை உறுதிப்படுத்திய திருச்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

    விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளையும் உள்ளடக்கி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்படி விஜய் கூறி இருக்கிறார். அதற்கு ஏற்ப பயண திட்டங்கள் தயாராகி வருகிறது.

    • காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
    • கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க புது வியூகத்தை வகுத்து இருக்கிறார்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

    குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க அவர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசிலும் கோரிக்கை உள்ளது. அதற்காக சிலர் டெல்லியிலும் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டை கண்டித்து ராகுல் காந்தி பிரசார பயணம் செய்து வருகிறார். 16 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள காங்கிரஸ் அழைத்துள்ளது.

    காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரசுடன் கைகோர்க்கும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வலுவான கூட்டணியாக இருக்கும் என்று கருதுகிறார். இதற்காக ராகுலை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு ஒரு முன்னோட்டமாக ராகுலின் பீகார் பிரசார பேரணியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

    விஜய் பா.ஜ.க.வை எதிர்ப்பவர். ராகுலும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தான் மேற்கொண்டுள்ளார். எனவே அந்த பிரசார பேரணியில் பங்கேற்பது தமிழக வெற்றி கழகத்துக்கு பலன் அளிப்பதாகவே இருக்கும் என்று விஜய் நம்புகிறார். அது மட்டுமல்ல இந்த பேரணியில் பங்கேற்பதன் மூலம் ராகுலுடனான சந்திப்பு எளிதாகும். அதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சை தொடங்கவும் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.

    விஜய்யின் இந்த நகர்வு தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறும் காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மிகப்பெரிய மோசடியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் முயற்சியை ராகுல் மேற்கொண்டுள்ளார். நாட்டை காக்கும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்.

    இதை வைத்து கூட்டணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.

    • லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது.
    • மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்.

    சென்னை:

    பீகார் மாநிலத்தில் வாக்கு அதிகாரப் பயணத்தில் கலந்துகொள்ளச் சென்றுள்ள தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பீகார் வந்தடைந்தேன். லாலு பிரசாத்தின் மண் கண்ணில் தீயுடன் என்னை வரவேற்கிறது. களவாடப்பட்ட ஒவ்வொரு வாக்கின் கனத்தையும் மண்ணில் உணர முடிகிறது.

    அன்பு இளவல்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன், மக்களின் வலியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத ஆற்றலாக மாற்றும் வாக்கு அதிகாரப் பயணத்தில் நானும் இணைந்தேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு, நிரந்தர உதவிப் பேராசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரே மாதிரியான பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாடான வகையில் ஊதியம் வழங்கப்படுவது கண்ணியமற்ற செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், இதற்கு காரணமான மாநில அரசுகள் தலைகுனிய வேண்டும்.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வெறும் ரூ.10,000 தான் ஊதியம் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளைக் கடந்து இப்போதும் கூட ரூ.25,000 மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு இந்தியாவிலேயே மிகக் குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழகம் தான். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இயங்குவதற்கு காரணமே கவுரவ விரிவுரையாளர்கள் தான். மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் உள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை 8000க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து தான் தமிழக அரசு சமாளித்து வருகிறது. பல கல்லூரிகளில் பல துறைகளில் ஒரே ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலையில், அத்துறைகளின் துறைத் தலைவர் பொறுப்புகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.25,000 மட்டுமே ஊதியம் தரப்படுகிறது.

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு பாட வேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு 28.01.2019-ந் தேதி ஆணையிட்டது. அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியாது என்று தமிழக அரசு அறிவித்து விட்டது. கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு எவ்வளவு கண்ணியக்குறைவாகவும், அவமரியாதையாகவும் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

    குஜராத் ஒப்பந்த உதவிப் பேராசிரியர்கள் வழக்கில் இப்போது உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். உதவிப் பேராசிரியர்களின் உழைப்புச் சுரண்டல் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனத்தை தமிழக அரசு மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பணி நிலைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். 



    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும் நேற்று சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்தநாளையொட்டி தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    22-08-2025- ஒரு கிராம் ரூ.128

    • பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தாம்பரம்: சிடிஓ காலனி, சசிவரதன் நகர், FCI நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர்.

    ஈஞ்சம்பாக்கம்: விஜிபி லேஅவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியார் தெரு, பொதிகை தெரு, முனிசுவரன் கோவில் தெரு, கௌரிஅம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, ஷாலிமார் கார்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோவில் தெரு, தேவி நகர், பெத்தல் நகர்.

    ஐடி காரிடார் : புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகர், காரனை கிராமம், காசா கிராண்ட், ஒட்டியம்பாக்கம் சாலை, எல்&டி ஈடன் பார்க்.

    ஆவடி: பத்மாவதி நகர், தென்றல் நகர், மூர்த்தி நகர், முல்லை நகர், வெங்கடேஸ்வரா பள்ளி தெரு, வள்ளலார் நகர்.

    • வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    'வாக்கு திருட்டு' தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வரும் கடந்த 17-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். சிறப்பு விமானத்தில் புறப்பட்ட முதல்வர் பீகார் மாநிலம் தர்பங்கா விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் NH 57 பகுதியில் நடைபெறும் பேரணியில் காலை 10.30 மணி அளவில் பங்கேற்கிறார்.

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ×