என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்- அமைச்சர் சிவசங்கர்
    X

    புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்- அமைச்சர் சிவசங்கர்

    • மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.
    • அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

    மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என்ற அ.தி.மு.க.வினரின் புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க.வினர் தேவையற்ற புகாரை கூறி வருகின்றனர்.

    * மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.

    * மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

    * பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவனமே பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

    * அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

    * புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×