என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-05-2025- ஒரு கிராம் ரூ.108

    17-05-2025- ஒரு கிராம் ரூ.108

    16-05-2025- ஒரு கிராம் ரூ.108

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    • நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் விலை அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்று நிலவரப்படி, கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்தை தாண்டி, ரூ.70 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.8,720-க்கும், ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-05-2025- ஒரு கிராம் ரூ.108

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவை சந்தித்தது.

    சென்செக்ஸ் 200.15 புள்ளிகள், நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,530.74 புள்ளியாக இருந்தது. இன்று காலை 82,392.63 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 82,146.95 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,514.81 புள்ளிகளிலும வர்த்தகமானது. இறுதியாக 200.15 புள்ளிகள் சரிந்து 82,330.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,062.10 புள்ளியாக இருந்தது. இன்று காலை 25,064.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,953.05 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 25,070.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    பாரதி ஏர்டெல் நிறுவன பங்கு இன்று 2.81 சதவீதம் சரிவை சந்தித்தது.

    ஹெச்.சி.எல். டெக், எஸ்பிஐ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

    இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.

    ஆசிய மார்க்கெட்டுகளில் ஜப்பானின் Nikkei 225 index, ஷாங்காயின் SSE Composite index, ஹாங் காங்கின் Hang Seng பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. தென்கொரியாவின் Kospi, ஐரேப்பிய பங்குசு் சந்தைகள், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

    நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் 82,530.74 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிஃப்டி 395.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 புள்ளிகளை தொட்டது.

    • கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.

    அதன் பின்னர் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனால் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதனைத் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே பயணித்தது.

    இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மீண்டும் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தையும், ரூ.73 ஆயிரத்தையும் தாண்டியது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360 அதிரடியாக சரிந்து, ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. மறுநாள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்து இருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவர ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவர ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதற்கு முன்பு கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அந்தவகையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.4,160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. இன்று விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-05-2025- ஒரு கிராம் ரூ.108

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்தது.
    • இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது. இதனால் 8.65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

    2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 65.48 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 73.80 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

    அதேவேளையில் 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 71.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 82.45 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

    ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்த நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.

    • சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.
    • டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டது.

    அமெரிக்கா மற்ற நாடுகள் மீது கடுமையாக வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை சரிவை எதிர்கொண்டு வந்தது. பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதனால் பங்குச் சந்தை மெல்ல மெல்ல ஏற்றம் கண்டன.

    கடந்த வாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.

    அதேவேளையில் அமெரிக்கா சீனா மீது விதித்த கடுமையான பரஸ்பர வரியை வெகுவாக குறைத்துள்ளது. இவற்றுடன் வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டார்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதால் இன்று மதியத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக அளவு ஏற்றம் காணப்பட்டது.

    இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 1200.18 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 395.20 புள்ளிகளும் உயர்ந்தன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,330.56 புள்ளிகளாக இருந்து. இன்று காலை 81,354.43 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்த பட்சமாக 80,762.16 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,718.14 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,200.18 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,666.90 புள்ளியாக இருந்தது. இன்று காலை 24,694.45 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 24,494.45 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 25,116.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 395.20 புள்ளிகள் உயர்ந்து நிஃப்டி 25,062.10 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் 30 நிறுவன பங்குகளை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 29 நிறுவன பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

    இந்தூஸ்இந்த் வங்கி பங்கு மட்டும் சரிவை சந்தித்தது.

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,610-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், தற்போது விலை குறைந்து விற்பனையாவது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-05-2025- ஒரு கிராம் ரூ.109

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

    பல நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 500 வரை சென்று இதுவரை இல்லாத உச்சமாக பதிவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை குறைந்து காணப்பட்ட தங்கம், நேற்று மீண்டும் அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

    நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலை நேரத்திலும் விலையில் மாற்றம் இருந்தது. கூடுதலாக கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது.

    அந்தவகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,840

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-05-2025- ஒரு கிராம் ரூ.109

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப்பை பயன்படுத்தி தாக்கியது.
    • போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளது. இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேலும் 63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை தாக்கியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறுகிறது.

    முப்படைகள் இணைந்து நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் வான்படை சார்பில் ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஃபேல் போர் விமானங்களில் இருந்து SCALP க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் ஹப் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

     இதற்கிடையே பாகிஸ்தான் கூற்றுப்படி, அந்நாட்டு ராணுவம், 3 ரஃபேல் விமானங்களையும், 2 ஜெட் ரக விமானங்களையும் தாக்கி அழித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் பார்தி, சண்டையில் இழப்புகள் சகஜம் என்று பொத்தாம்பொதுவாக பதில் கூறினார். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நேரடி மோதலில் இறங்கியது. தொடர்ந்து சர்வதேச தலையீட்டின் பின் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது என்று கூறப்படுவதன் காரணமாக அவ்விமானங்களை தயாரிக்கும் பிரான்ஸை சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அடுத்த நாள், மே 8 அன்று, ஐரோப்பிய பங்குச்சந்தையில் டசால்ட் பங்குகள் 1.75 சதவீதம் உயர்ந்தன.

    ஆனால் அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் ரஃபேலை வீழ்த்தியதாக கூறப்படுவதன் காரணமாக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன. குறிப்பாக திங்களன்று(மே 12 அன்று) , இந்த நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் சரிவைக் கண்டன. அன்றைய தினம் டசால்ட் ஏவியேஷன் பங்குகள் சுமார் 292 யூரோக்களாக இருந்தது. நாள் முழுவதும் அது 291 யூரோக்களுக்கும் 295 யூரோக்களுக்கும் இடையில் ஏற்ற இறக்கமாக இருந்தது.

    ஒருபுறம், ரஃபேல் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்ட அதே நேரத்தில், J-10 போர் விமானங்களை தயாரிக்கும் சீன நிறுவனமான செங்டு விமானக் கார்ப்பரேஷன் (CAC) பங்கு விலை மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது.

    திங்களன்று (மே 12 அன்று) CAC நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன. நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.86 சீன யுவானை எட்டியது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் அதிகமாகும். சீனாவின் இந்த J-10 போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை உபயோகித்து வருகிறது. இந்த J-10 மூலமே 3 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்படுகிறது.  

    • இன்று காலை தங்கம் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்தது.
    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5-ந்தேதி சவரன் ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6-ந்தேதி சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. மே 8-ந்தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.

    இதற்கிடையே தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என 2 முறை சரிந்தது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.

    இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை சற்று உயர்ந்தது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,765-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனையாது.

    திடீரென இன்று மாலையிலும் தங்கத்தின் விலை 2 ஆவது முறையாக உயர்ந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 855-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5-ந்தேதி சவரன் ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6-ந்தேதி சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. மே 8-ந்தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.

    இதற்கிடையே தங்கத்தின் விலை நேற்று மேலும் சரிந்தது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.165-ம், ஒரு சவரன் ரூ.1,320-ம் குறைந்து முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 880-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

    திடீரென, மாலையிலும் தங்கம் விலை 2-வது முறையாக குறைந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது. நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,765-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயத்தால் கடந்த வாரத்தின் இறுதிநாளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்தது.

    இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால் இன்று காலை முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 79,454.47 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 2145 புள்ளிகள் சரிந்து 81.600 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,008 புள்ளியாக இருந்தது. இன்று காலை 667 புள்ளிகள் சரிந்து 24,675 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

    ×