என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • இந்தோனேசியா சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.

    தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.

    தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.

    இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

    விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

    • நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.
    • தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியுள்ளது.

    இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் கடலில் குதித்தனர்.

    தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெற்றோர் தெறித்து ஓடும் காட்சி பதைபதைக்க வைக்கிறது.

    தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நிலையில், கப்பலில் இருந்து குதித்தவர்களையும் சிக்கிக் கொண்டவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தோனேசிய நாட்டின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், படகில் நடனமாடி கவனம்பெற்ற 11 வயது சிறுவன் ரியாவ் மாகாணத்தின் சுற்றுலாத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரய்யான் அர்கன் திகா என்ற சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    • விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
    • குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து நேற்று இரவு 65 பேருடன் படகு ஒன்று பாலி தீவில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது. மேலும் அந்த படகில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்தன.

    கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்று பெயரிடப்பட்ட அந்த படகு புறப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. இதில் படகு கடலில் ஒருபக்கம் சாய்ந்து மூழ்கியது.

    இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். உடனே மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்தபோது கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் மீட்புப் பணி சவாலாக இருந்தது.

    இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 38 பேர் மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்க இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.

    மீட்புப் பணியில் 2 இழுவைப் படகுகள், 2 சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட 9 படகுகள் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் சுமார் 6.5 அடி உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்டவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான கடலில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்துக்குள்ளான படகில் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

    இந்தோனேசியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

    விபத்துக்குள்ளான படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்தன.

    விபத்து நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

    இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் மாயமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

    • ஜூலியானா மரின்ஸ் எரிமலையில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
    • இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார். அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். 

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிசுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி உடன் மோதியது.

    ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் காலிறுதியில் தோல்வி கண்ட சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் ஷி யுகி உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 11-22, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்..

    மற்றொரு போட்டியில், இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் பர்கான் உடன் மோதினார். இதில் பர்கான் 21-17, 21-18 என்ற செட் கணக்கில் பிரனாயை வீழ்த்தினார்.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் கர்னாண்டோ-பகாஸ் மவுலானா ஜோடியுடன் மோதியது.

    இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து முதல் செட்டை 22-20 என வென்றார். 2வது செட்டை நஜோமி 23-21 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பி.வி.சிந்து 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தோனேசியாவின் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது
    • 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த கல் குவாரியில் நேற்று காலை பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன.

    இச்சம்பவத்தில் 14 தொழிலாளர்கள் பலியாகினர். ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அந்தக் கல் குவாரி சட்டப்படி உரிய அனுமதிகள் பெற்று இயங்கி வந்தாலும், அங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா கவர்னர் டெடி முல்யாடி தெரிவித்தார்.

    கல் குவாரியில் பாறை விழுந்து 14 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும்.
    • வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது.

    ஜகர்த்தா:

    தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.

    வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கம் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும். மேலும் கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருகின்றன. இருப்பினும் நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

    உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் இந்த சுரங்கங்களால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது மட்டுமின்றி அவ்வப்போது அசாம்பாவித சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் இவற்றை அகற்ற அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்தநிலையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வடக்கு பப்புவாவில் கனமழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிரிழந்த 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    ×