search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
    • எரிமலை வெடிப்பினால் அருகில் உள்ள கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை இன்று மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    அதிகாலை 6.21 மணிக்கு எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மராபியின் சிகரத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றங்கரைக்கு அருகே வசிக்கும் மக்களுக்கு, சுமத்ரா தீவில் உள்ள மராபி மலையில் இரண்டாவது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

    மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எரிமலைக்குழம்புகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும், எரிமலை ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    எரிமலை ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரையின்படி, 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்கு தங்குமிடம் அந்நாட்டு அரசாங்கத்தால் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் எரிமலை சாம்பலால் ஏற்படும் சுவாச நோய்த் தொற்றுகளை தவிர்க்க இலவச முககவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. 

    • உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இந்தோனேசியா தீவுகளில் நிலநடுக்கம் என்பது வழக்கமான ஒன்றதாகிவிட்டது. அடிக்கடி அங்குள்ள தீவுகள் அதிர்ந்த வண்ணமே உள்ளன.

    • பயணிகள் ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • ரெயில் பயணிகளின் பல பெட்டிகள் தரம் புரண்டதால் பலர் காயம்

    இந்தோனேசியாவின் முக்கியமான தீவுகள் ஒன்றான ஜாவாவில் இன்று இரண்டு ரெயில்கள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரெயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த ரெயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் மையம் கொண்டிருந்தது என தேசிய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்தது.

    ஜகார்த்தா:

    பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான ரிங் ஆப் பயர் மீது இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்தில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது.இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடதக்கது.

    • ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்ப வெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. ஆனால் மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை, இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 19-வது நினைவு தினம் முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது.
    • மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அவசரமாக திரும்பினர். மொத்தம் 75 மலையேற்ற வீரர்கள் அங்கு சென்றிருந்திருந்தனர்.

    அவர்களில் 46 பேர் கீழே இறங்கி வந்துவிட்டனர். மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இதில் 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் 12 பேரும் பலியானது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. மவுண்ட் மராபி எரிமலை காற்றில் 800 மீட்டர் உயரத்திற்கு அதிக வெப்பமான சாம்பலை கக்கி வருகிறது.

    • உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    • குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமாண்டமான ஓட்டல்கள், அதில் உள்ள வசதிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

    இந்நிலையில் உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரிஇந்திரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 5 தளங்களை கொண்டுள்ளது. 9 அடி அகலத்துடன் 7 அறைகள் மட்டும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஒரு ஓய்வு அறையும் உள்ளது. குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், வசதியாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் உண்மையில் எவ்வளவு சிறிய இடம் தேவை என்று விருந்தினர்கள் வியக்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

    • நிலநடுக்கத்தை தொடர்ந்து, சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு.
    • இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் அறிவிப்பு.

    இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    6.0 என்கிற ரிக்டர் அளவில் நிலநடுக்கம், இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு டோபெலோ என்கிற பகுதியில் இருந்து 94 கி.மீ., தொலைவில் 116 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறுகையில், "சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் சாத்தியமான பின்அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றது.

    கடந்த ஆண்டு மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 600 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தோ-பசிபிக் மீதான ஏசியன் கண்ணோட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது
    • இந்தோ-பசிபிக் முயற்சியில் ஏசியன் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது

    ஏசியன் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் 20-வது ஏசியன்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய மாநாடு இந்தோனேசியாவில் இன்று நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோ அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இன்று இந்தோனேசியாவுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றடைந்த மோடிக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் மோடி, தான் தங்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை அசைத்தும் மோடியுடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கலைக்குழுவினர் நடனமாடி மோடியை வரவேற்றனர். இந்தோனேசியாவுக்கு சென்றடைந்ததும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஜகா்த்தாவுக்கு சென்றடைந்துள்ளேன். ஏசியன் தொடர்பான கூட்டங்களை எதிர்நோக்கி இருக்கிறேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்க பல தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்" என்று கூறினார்.

    பின்னர், இன்று காலை நடந்த 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த உச்சி மாநாட்டுக்கு இணைத் தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெருமை. உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோவுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். நமது (இந்தியா-இந்தோனேசியா) கூட்டான்மை நான்காவது சகாப்தத்தில் நுழைகிறது.

    கடந்த ஆண்டு நாங்கள் இந்தியா-ஏசியன் நட்பு தினத்தை கொண்டாடி விரிவாக கூட்டாண்மையை வழங்கினோம். நமது வரலாறு மற்றும் புவியியல் இந்தியாவையும், ஆசியாவையும் ஒன்றிணைக்கிறது.

    அதனுடன் நமது பகிரப்பட்ட மதிப்புகள், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு, பல்முனை உலகின் நம்பிக்கை ஆகியவையும் நம்மை ஒருங்கிணைக்கிறது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையப் புள்ளியாக ஆசியா உள்ளது. இந்தியாவின் இந்தோ-பசிபிக் முன் முயற்சியிலும் இந்த பகுதி முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த ஆண்டின் கருப்பொருளாக ஏசியன் விஷயங்கள் உள்ளன. அது வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஏசியன் கூட்டமைப்பு முக்கியமானது.

    இங்கு அனைவரின் குரல் கேட்கப்படுகிறது. ஏனென்றால் 2-வது வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் நமது பரஸ்பர ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றம் உள்ளது.

    21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நம் அனைவரின் நூற்றாண்டு. கொரோனாவுக்கு பிந்தைய உலக ஒழுங்கை உருவாக்குவது மற்றும் மனித நலனுக்காக அனைவரின் முயற்சிகளை உருவாக்குவது நம் அனைவருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏசியன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார்.
    • ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுவதால் பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அங்கு குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

    ஏசியன் மாநாடுகளில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று மாலை இந்தியா திரும்புகிறார். இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் இது குறுகிய பயணமாக அமைந்துள்ளது.

    • இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

    டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×