search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volcano eruption"

    • எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
    • சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் எரிமலை வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலையானது நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்தது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றன. பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

    ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்திருக்கிறது. எரிமலை வெடிப்பையடுத்து சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 2,378 அடி உயரமுள்ள ருவாங் எரிமலையில் இருந்து குறைந்தது 6 கி.மீ. தொலைவில் இருக்குமாறு சுற்றுலா பயணிகள், பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

    மேலும் எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    சுலவேசி தீவில் இருந்து பொதுமக்கள் மனடோ நகருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலையின் வெடிப்பால் சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்தியது. அதன்பின் மலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து 430 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #GuatemalaVolcano
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது.

    இதிலிருந்து எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. 
    கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற மீட்பு பணியின்போது மேலும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் கவுதமலா எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. #GuatemalaVolcano 
    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption
    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை சமீபத்தில் வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலைக் குழம்பு சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

    எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மேலும் 7 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உயிரிழப்பு 69 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

    எரிமலை வெடிப்பால் சிதறிய சாம்பல் துகள்கள் இறந்தவர்களின் மீது படிந்து இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், நெருப்பு குழம்பினால் உயிரிழந்த பலருக்கு ரேகை இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும்  மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்க மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தேசிய தடயவியல் நிறுவன இயக்குனர் ஃபனூயெல் கார்சியா தெரிவித்துள்ளார்.



    இதனால் டி.என்.ஏ மாதிரிகளை கொண்டு அடையாளம் காண இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரும் கடுமையாக போராடி பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ளும் படியும், வீட்டுக்கூரைகளின் மேல் படிந்துள்ள எரிமலை சாம்பலை அகற்றுமாறும், உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்குமாறும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
    மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள ஃபுயீகோ எரிமலை நேற்று வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. #valcanoeruption
    கவுதமாலா:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. அங்குள்ள ஃபுயீகோ என்ற எரிமலை நேற்று வெடித்துச் சிதறியதில் பாறைகளும், சாம்பல் துகள்களும் பரவின. இதையடுத்து கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

    எரிமலை வெடிப்பினால் இன்று காலை வரை 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரழிவு தடுப்பு ஒருங்கிணைப்பாளர் கான்ரெட் தெரிவித்துள்ளார்.

    ஃபுயீகோ எரிமலையைச் சுற்றி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பலர் காணாமல் போனதாகவும், அவர்கள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை என்றும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    முன்னதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவரும், அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசும் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் ஜிம்மி மொராலஸ், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் ‘ரெட் அலார்ட்’ அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் பேசிய தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு குழு தலைவர், நேற்று இரவு வெளிச்சம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று காலை மீட்பு பணி மீண்டும் துவங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த ஆண்டின் மிகப்பெரிய எரிமலை வெடிப்புகளில், இது இரண்டாவதாக கருதப்படுகிறது. #valcanoeruption
    ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலை வெடித்து சிதறியதில் 37 வீடுகள் வரையில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hawaiivolcanoeruption #Kilaueavolcano

    நியூயார்க்:

    ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக  நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. 

    இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 4-ம் தேதியும் இந்த எரிமலை வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது. #Hawaiivolcanoeruption #Kilaueavolcano
    ×