என் மலர்
உத்தரப் பிரதேசம்
- டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது.
- ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறிவிப்பு.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள மேளம் சிறப்பு ரதத்தில் இன்று வந்தடைந்தது.
குஜராத்தின் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
மேளத்தை இங்கு கொண்டு வந்த குழுவின் உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், "இது தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேளம் அமைப்பு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த இசைக்கருவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பியதாக குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் தெரிவித்தார்.
- 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
- அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுள்ள ரவையில் அல்வா தயாரிக்க உள்ளார்.
இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.
ராம் அல்வா கிண்டுவதற்காக 12000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
இது எக்கு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில விஷ்ணு மனோகர் பல முறை இடம் பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறைாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது.
- வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள ஷாகஞ்ச் பகுதியில் உள்ள வங்கி கிளைக்குள் காளை ஒன்று வழி தவறி சென்றுள்ளது. இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது. இதைப்பார்த்த சில வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து சத்தம் போடுகின்றனர்.
உடனே வங்கி காவலாளி கையில் கம்புடன் வந்து காளையை வங்கியில் இருந்து வெளியே விரட்டும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#SBI Bull enters SBI bank in Uttar Pradesh's Unnao, here's what happened next. Watch viral video#ShareMarket #SBIBull pic.twitter.com/0xckemJGOo
— Current Affairs Funda™ (@MCurrentAffairs) January 11, 2024
- இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது.
- உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்தும், மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் இருந்தும் விழாவில் இணைந்தனர்.
அப்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, வருகிற 22-ந்தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் அங்கு 19 விமான நிலையங்களாக உயரும்" என்றார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
- அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ம் தேதி அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். 22-ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
- அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
- 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளார் ஜார்கண்டை சேர்ந்த மூதாட்டி
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜன.22 ஆம் தேதி பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது. இந்நிகழ்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி 30 வருட மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த 85 வயதான மூதாட்டி முடிவுக்கு கொண்டு வர உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வசிக்கும் 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக, 1992ம் ஆண்டு சபதம் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு தனது வாழ்நாளை ராமருக்காக அற்பணித்துள்ள சரஸ்வதி தேவி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாளொன்றில் 23 மணி நேரம் மவுன விரதம் இருந்து வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு 24 மணி நேரமும் மவுன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜன.22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, தனது 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்..
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
- அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது.
- அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.
அயோத்தி:
அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி உள்பட நாட்டின் பிரபலங்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
அயோத்தி கோவில் எந்த அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரமாண்டமானதாக அமைக்கப்படுகிறது. கோவில் நுழைவு வாயில் கதவுகள், மணிகள், சிலைகள் அனைத்தும் பல அடி உயரத்துக்கு பிரமிக்க தக்க வகையில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது. இறுதியில் குஜராத் மாநிலத்தில் அதற்கான மரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கொடி கம்பம் தங்க முலாம் பூசப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. 5 கிலோ எடையுடன் அந்த கொடி கம்பம் பிரமாண்டமானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 5-ந்தேதி அந்த பிரமாண்ட கொடி கம்பத்தை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரமாண்டமான லாரியில் அந்த கொடி கம்பம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டது.
நேற்று அந்த கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. அயோத்தியில் ஏற்கனவே குழுமி உள்ள ராம பக்தர்கள் கொடி கம்பத்தை தொட்டு வணங்கினார்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு அந்த கொடி கம்பத்தை வரவேற்றனர்.
அந்த கொடி கம்பம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதன் மொத்த உயரம் 161 அடி உயரமாக இருக்கும். அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிர மாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.
வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அதே நேரத்தில் இந்த கொடி மரமும் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
- 17-ந்தேதி குழந்தை வடிவிலான ராமர் சிலை ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. 16-ந்தேதி முதல் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
இதற்கு முன்னதாக 17-ந்தேதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
- ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.
"ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

"இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
- ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம்.
- அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 23 முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்ட கோவின் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோயிலில் ராமரின் பழைய மற்றும் புதிய சிலைகள் வைக்கப்படும்.
குறிப்பாக, தேவையான அனைத்து சடங்குகளையும் பின்பற்றி, கோவிலில் பழைய மற்றும் புதிய இரண்டு சிலைகளையும் வைத்திருக்கிறோம். மற்ற அனைத்து சிலைகளும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இங்கு கொண்டு வரப்படும்.

ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம். எந்த இடையூறும் இருக்காது. இங்கு நீங்கள் காணும் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும்.
அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம் மற்றும் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்காக, நாங்கள் பல மணிநேரம் ஆலோசித்து பணியாற்றுகிறோம்.
மகா கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட இருக்கிறது. மேலும் கோவிலில் பல சிலைகள் நிறுவப்பட இருக்கிறது. கோவில் வளாகங்களில், சுவர்கள் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமர் கோவில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் படத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

ராமர் கோவில் தொடர்பான அனைத்து அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள் மூலம் பிரபலங்களுக்கு நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில தலைவர்கள் அயோத்தில் செல்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பல தலைவர்கள் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளனர்.
- விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
- எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.
லக்னோ:
அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
இதையடுத்து அயோத்தியில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற இருக்கிறது. இதை இந்திய மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக நேரடி ஒளிபரப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 6 கோடி பேரை பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி. தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர்.
அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அகன்ற திரைகளில் அந்த நேரடி ஒளிபரப்பு காட்டப்படும். இதற்காக அகன்ற திரைகளை வாட கைக்கு எடுக்க பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.






