என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல் முறைகேடு"
- போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
- எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்" என்றும் தேர்தல் தோல்விக்கு ஆணையத்தை குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி,
"அன்புள்ள தேர்தல் ஆணையம், நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல.
உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்.
மகாராஷ்டிரா உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மாகாரஷ்டிர வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிட வேண்டும்.
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
- விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.
- தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
ராகுல் காந்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில், தேர்தல் ஆணையர் நியமனக் குழு சீர்குலைக்கப்பட்டது, போலி வாக்காளர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர்கள் அதிகரிக்கப்ட்டது, வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது, போலி வாக்களிப்பின் மூலம் பாஜக பிராட்மேனாக மாற்றப்பட்டது, இதற்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டன என குற்றம்சாட்டினார்.
ஆணையத்தால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட வாக்கு சதவீத புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் விரைவில் வர உள்ள பீகார் தேர்தலிலும் பாஜக இதையே செய்யும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவால்.
டிசம்பர் 24, 2024 அன்று காங்கிரசுக்கு அளித்த பதிலில் அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இது ஆணையத்தின் வலைத்தளத்தில் கிடைக்கிறது. இவை அனைத்தையும் முற்றிலும் புறக்கணித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை யாரேனும் பரப்புவது சட்டத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், அந்தந்த அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாக தேர்தல் ஆணையம் மேலும் கூறியது.
தேர்தலின் போது வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான அதிகாரிகளை இது ஊக்கப்படுத்துவதில்லை. வாக்காளர்களிடமிருந்து பாதகமான தீர்ப்பு வந்தால், தேர்தல் ஆணையம் ஒரு சார்புடையது என்று கூறி, அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
- தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
- பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்
மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.
இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.
சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- சண்டிகர் மாநில மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
- தேர்தல் நடத்திய அதிகாரி ராஜினாமா செய்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கண்டிப்பு.
சண்டிகர் மாநிலத்தின் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடு மூலமாக, பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தேர்தலில் முறைகேடு நடந்தது உறுதியானது என கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் முறைகேடு நடந்ததை அதிகாரி ஒப்புக்கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகார பசியில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப்பூர்வமாகவும், அரசியலமைப்பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடும், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன்றவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்காது" என்றார்.

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி "அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் தேசத்துரோகத்திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்." என்றார்.






