என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், விஜய் வாகனம் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார். அப்போது, தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆள் உயர வேல் ஒன்றை பரிசாக அளித்தார்.
விஜய் வேலை பெற்றுக் கொண்டு தொண்டர்களிடம் காண்பித்தபடி கையசைத்தார்.
- பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க.
- இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க..,
நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதவாது:-
மக்களை சந்திப்பதற்கு, சொந்தங்களை சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள். அந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. இந்த இடத்தில் பெர்மிஷன் இல்ல. அதற்கான காரணங்களை நீங்கள் கேட்டீர்கள் என்றால், அனைத்தும் சொத்தையாக இருக்கும். அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது. ஐந்து நிமிடம்தான் பேசனும், 10 நிமிடம்தான் பேசனும்..,
நான் பேசுறதே 3 நிமிசம்தான். அந்த நேரத்தல நான் அத பேசக்கூடாது, இத பேசக் கூடாதுன்னு சொன்னா? நான் எதைத்தான் பேசறது? அரியலூருக்கு போகும்போது, ஒரு ஏரியாவுக்குள் நுழையும்போதே மின்சாரம் தடை. திருச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்பீக்கருக்கு சென்ற வயர் கட்.
உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் இங்கே வருகிறார் என்று வச்சிக்கோங்க., பிரதமர் மோடி அல்லது அமித் ஷா இங்கே வருகிறார்கள் என்று வச்சிக்கோங்க. இதேபோன்ற கண்டிஷன் போடுவீங்க.., இந்த மாதிரி பவர் கட் பண்ணுவீங்க.., இந்த மாதிரி வயர் கட் பண்ணுவீங்க.., கட் பண்ணிதான் பாருங்களேன். முடியாதுல... பேஷ்மென்ட் அதிரும்ல. நீங்கதான் மறைமுக உறவுக்காரர்கள் ஆயிற்றே. பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
நேரடியாகவே கேட்கிறேன். CM சார் மிரட்டு பார்க்கிறீங்களா?. அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். கொள்கையை பேருக்கு வச்சிக்கிட்டு, குடும்பத்தை வச்சி கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமான உழைச்சி சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?.
இவ்வாறு விஜய் ஆவேசகமாக பேசினார்.
- தவெக சார்பில் இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை நடத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, திருச்சி, அரியலூரை தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இதில், தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார்.
அப்போது அவர், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசார பயணம் நடந்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசாரத்தில் விஜய் கூறியதாவது:-
உங்கள் எல்லாரையும் வந்து பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால்தான் வார இறுதி நாட்கள், ஓய்வு நாட்களில் பயணத்தை திட்டமிட்டுள்ளோம்.
அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வு நாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?
- குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* திருச்சி, அரியலூர் கடந்த வாரம் சென்றிருந்தேன், பெரம்பலூர் பகுதிக்கு வர முடியாததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
* தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?
* எதையும் செய்யாமல் செய்வோம் செய்வோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள்.
* குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
* 2026-ல் இரண்டே இரண்டு பேருக்குள்ள தான் போட்டி... ஒன்னு தி.மு.க. இன்னொன்னு த.வெ.க.
* இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க சார்.
* கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா...? இல்லை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் உள்ளும் இருக்கும் நானா...? என பார்த்துவிடலாம் சார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
- என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
* நாகை மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, வேதாரண்யம் உப்பு ஏற்றுமதியை வளர்த்தெடுக்கவில்லையே ஏன்?
* நாகையில் மூடப்பட்ட ரெயில் பெட்டி தொழிற்சாலையை திறந்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* தஞ்சை, நாகை சாலை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது, அதை ஏன் முடிக்கவில்லை.
* நெல் மூட்டைகள் பல ஆண்டுகளாக மழையில் நனையும் நிலையில் அதை தடுக்க நடவடிக்கை எடுத்தீர்களா?
* உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் சந்திக்க வர வேண்டும் என்பதற்காக தான் சனிக்கிழமையில் வருகிறேன்.
* அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் ஓய்வுநாளில் உங்களை சந்திக்க வருகிறேன்.
* அதை பேசாதீர்கள், இதை பேசாதீர்கள் என்றால் நான் எதைத்தான் பேசுவது?
* பேருந்துக்குள் இருக்க வேண்டும், வெளியில் வரக்கூடாது, கையை அசைக்காதே... மக்களை பார்த்து சிரிக்காதே என காமெடியாக நிபந்தனை விதிக்கிறார்கள்.
* என் சொந்த மக்களை சந்திக்க எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள். நான் தனியாள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் செயினை பறித்ததாக குற்றச்சாட்டு.
- த.வெ.க. தொண்டர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று நாகைப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, த.வெ.க. தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார்.
பெண் ஒருவர் மகளுடன் கூட்டத்திற்கு சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணின் நகை கூர்ந்து கவனித்ததாகவும், இதனால் அந்த பெண் தன் மகளிடம் நகையை கழற்றி கொடுத்து பையில் வைக்கச் சொன்னதாகவும் தெரிகிறது.
பையில் இருந்த நகையை வடமாநிலத்தவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். ஆனால், அந்த நபரிடம் நகை இல்லை. நகையை பறிகொடுத்த அந்த பெண், அந்த வாலிபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார். 4 சவரன் செயின் என அந்த பெண் அழுதபடியே தெரிவித்தார். மேலும், போலீசாரிடம் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
முழு விசாரணைக்குப்பின்தான் என்ன நடந்தது என்பது தெரியும். இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...
- நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது.
* இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களை என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது.
* பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.
* CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா..
* ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் CM.
* கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த கும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
* வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...
* நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
* மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
* நாகை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
* நாகை பேருந்து நிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.
* நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.
- மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவரது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியது.
இதில் அவரை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட காரணத்தினால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை 7 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் பிரசார வாகனத்தை பல்லாயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர்.
நள்ளிரவு வெகுநேரம் ஆனதால் திருச்சி மற்றும் அரியலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயின் இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது. இதற்காக விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். இன்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் இன்று முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நுழைவு வாயில் பகுதியிலேயே தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. விமான நிலைய பணியாளர்கள், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மாநகருக்குள் நுழையாமல் புறநகர் பகுதி வழியாக செல்வதால் இன்று திட்டமிட்டபடி அவர் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் விஜய் கார் மூலம் புதுக்கோட்டை ரோடு மாத்தூர், சூரியூர் ரிங் ரோடு, துவாக்குடி டோல் கேட் வழியாக தஞ்சாவூர் பைபாஸில் நாகை வந்தார். இதைத்தொடர்ந்து பிரசார வாகனம் மூலம் விஜய் நாகை வந்தடைந்தார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் அலைஅலையாய் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
நாகை வந்தடைந்த விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் வாளை பரிசாக அளித்தனர். அப்போது புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் வழிவிட்டனர்.
இந்நிலையில் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க... தொண்டர்களை நலம் விசாரித்து விட்டு உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன்.
* அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம். பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம்.
* என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
* இப்ப நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா...
* எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.
* மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம்.
* என்றும் மீனவர்கள் நண்பன் நான்.
* மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை.
* மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.
* இலங்கை கடந்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா?
* மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை.
* நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் புரட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும். அதற்காக சென்ட்ரல் மெட்ரோவில் அலுவலகம் திறக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும், பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: LFO@cmrl.in
இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
- செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னைக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 265 மி.லி. குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடி வந்தது. இன்று 2-வது நாளாக அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
- மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:
* மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
* மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி.
* ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.
* மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
* மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
* சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
* பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.
* மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம்.
* மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.
* மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள்.
* பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
* தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






