என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026-ல் தி.மு.க. - த.வெ.க. இடையே மட்டும்தான் போட்டி: விஜய் மீண்டும் மீண்டும் திட்டவட்டம்
- தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?
- குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* திருச்சி, அரியலூர் கடந்த வாரம் சென்றிருந்தேன், பெரம்பலூர் பகுதிக்கு வர முடியாததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
* தேர்தலுக்கு முன்பு தி.மு.க.காரர்கள் வந்து செய்வோம்... செய்வோம்.. என்று சொன்னார்களே செய்தார்களா?
* எதையும் செய்யாமல் செய்வோம் செய்வோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள்.
* குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
* 2026-ல் இரண்டே இரண்டு பேருக்குள்ள தான் போட்டி... ஒன்னு தி.மு.க. இன்னொன்னு த.வெ.க.
* இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க சார்.
* கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா...? இல்லை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் உள்ளும் இருக்கும் நானா...? என பார்த்துவிடலாம் சார்.
இவ்வாறு அவர் கூறினார்.






