என் மலர்
புதுச்சேரி
- காரைக்காலில் உள்ள நகைக்கடை மற்றும் வங்கி களில் போலி தங்க நகைகளை விற்றல், அட மானம் வைத்தல் உள்ளிட்ட மோசடி வழக்கில்10 பேரை, காரைக்கால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தொடர்ந்து, 4 பேரிடமும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள நகைக்கடை மற்றும் வங்கி களில் போலி தங்க நகைகளை விற்றல், அட மானம் வைத்தல் உள்ளிட்ட மோசடி வழக்கில், காரைக் கால் நகர போலீசார், இதுவரை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, ரிபாத் காமில், சோழன் உள்ளிட்ட 10 பேரை, காரைக்கால் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில், பல்வேறு குற்ற வாளிகள் இன்னும் வெளியில் இருப்பதாகவும், அவர்களை எல்லாம் கைது செய்தால்தான், பல லட்சம் மோசடி வெளிச்சத் திற்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித் தால் உண்மை தெரியவரும் என்ற நிலையில், ஜெரோம் அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, ரிபாத் காமில், சோழன் ஆகிய 4பேரை, போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்து, காரைக்கால் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, நீதிபதி வரதராஜன், 4 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, 4 பேரிடமும், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை யின் முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்பட லாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்,
- 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும் என ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் 70-க்கும மேற்பட்ட ரேஷன் கடைகளில், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.புதுச்சேரி அரசு இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்காமலும், ரேஷன் கடைகள் திறக்காமல் மூடியும் உள்ளது. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, பல்வேறுகஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் வேறு வழியின்றி, காய்கறி விற்றல், கொத்தனார், பல்வேறு தனியார் நிறுவனங்களில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர் இந்நிலையில், இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ்வதால், இந்த அவலநிலையை, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் கவனத்தில் கொண்டு, ரேஷன் கடையை உடனே திறக்கவும், நிலுவையில் உள்ள 5 ஆண்டு ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்கவேண்டும். என வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, நேற்று ஊழியர்கள் முற்றுகையிட சென்றனர்.
கலெக்டர் அலுவலக வாசலில், காரைக்கால் நகர போலீசார் ஊழியர்களை தடுத்து, அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப ட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வாயில் எதிரே உள்ள நேரு வீதியில், அப்பா பசிக்குது. அப்பா ஸ்கூல் பீஸ் கட்டு, அப்பா வீட்டு வாடகையை கட்டு, அப்பா மின்சார பில்லை கட்டு உள்ளிட்ட பதாதைதைகளுடன் பள்ளி மாணவர்களுடன்( குழந்தைகளோடு) குடும்பத்தோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும், அவர்கள் கலைந்துச் செல்லாததால், போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கோட்டக்குப்பம் அடுத்த குயிலாப்பா ளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது72). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், முருகன், ஈஸ்வரன் ஆகிய 3 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.
முருகனும்,ஈஸ்வரனும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக பெரியசாமிக்கும் இவரது மகன்களான முருகன், ஈஸ்வரன் ஆகியோர்களுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் முருகனும், ஈஸ்வரனும் சேர்ந்து தந்தை பெரியசாமியை அடிக்கடி தாக்கி வந்துள்ளனர்.
சம்பவத்தன்று கோட்டகுப்பத்தில் இருந்து கோட்டைமேடு வழியாக பெரியசாமி சைக்கிளில் குயிலாப்பாளையம் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஆட்டோ ஓட்டி வந்த முருகன், பெரியசாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது வேகமாக மோதியதில் அவர் கீழே விழுந்து தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் பெரியசாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெரியசாமியின் மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் முருகன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய 2 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து முருகனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட முருகனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். குயிலாப்பாளையத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையை மகன்களே திட்டம் போட்டு ஆட்டோ ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது.
- குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யில், பெட்டிக்கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீ சாருக்கு ரகசியத்தகவல் வந்தது. அந்தன்பேரில், போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனைச் செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட ரூ.600 மதிப்பிலான பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் கலந்தர் ராஷித் (வயது34) என்பவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொட்களை பறிமுதல் செய்தனர்.
- போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் கடந்த 10-ந் தேதி நகைக்கடையில் போலி தங்க நகையை விற்க முயன்ற போது, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசுராமன்(வயது30) என்ற வாலிபரை, கையும், களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பரசுராமனை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், போலி நகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வங்கிகளில் அடமானம் வைத்தல் உள்ளிட்ட குற்ற பட்டியலின் கீழ், திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான்(35) புதுச்சேரி காவல் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்- இன்ஸ்பெக்டர் ஜெரோம்(38), ஜெரோமின் கள்ளக்காதலி புவனேஸ்வரி(35) காரைக்காலைச்சேர்ந்த ரமேஷ்(32), புதுத்துறை முகமது மைதீன், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ்(38), அவருக்கு உடந்தையாக இருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சிவக்குமார்(45), கடலூரைச் சேர்ந்த சோழன்(52) என, இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று , காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார்(32) போலி நகைகள் தயாரிக்க ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.
- காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
- இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால அடுத்த ராயன் பாளையம் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
இம்முகாமில் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் பற்றியும் தன்னார்வலர்க ளுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன். நவோதயா பள்ளியின் முதல்வர் நந்தகுமார், போக்குவரத்து துறையைச் சார்ந்த கல்விமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சு மணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
- லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி:
காரைக்கால் - பேரளம் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக, மயிலாடுதுறை மாவட்டம் பருத்திகுடி கிராமப் பகுதி யில் உள்ள மண் குவாரியில் இருந்து, மணல் அளவுக்கு அதிகமாக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதன் காரணமாக, காரைக்காலை அடுத்த அகரமாங்குடி ஆற்றங்கரை சாலையில் கடந்த ஒரு மாதமாக இரவும் பகலும் லாரிகள் சென்று வருவதால். ஆற்றங்கரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
சாலையில் அதிகப்படியான பள்ளங்கள் தோன்றுவதால், ஆற்று நீர் ஊரில் உட்புகும் அபாய நிலை உள்ளது இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், சாலையை உடனடியாக சீர் செய்து தரவேண்டும். அளவுக்கு அதிகமான லாரி கள் இவ்வழியை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், லாரி களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். சாலை சீர்செய்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு லாரிகளை விடுவித்தனர்.
- தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
- ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 326 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கியதில் கிடைத்த கமிஷன் அடிப்படையில் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டு வந்தது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி, அரிசிக்கு பதில் பணம் வழங்க உத்தரவிட்டார்.
இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனது. இதனிடையே, கொரோனா காலங்களில் மத்திய அரசு வழங்கிய அரிசியை கமிஷன் அடிப்படையில் விநியோகிக்கும் நடவடிக்கையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுவரை 55 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், ரேஷன் கடைகளை மறுபடியும் திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோரி மேடு அப்பா பைத்தியசாமி கோவில் பின்புறம் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தை 100-க்கனக்கானோர் முற்றுகையிட்டனர்.
ரேஷன் கடைகளை திறந்து நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி டென்னீஸ் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஊழியர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர்.
இதனிடையே விளையாட்டை முடித்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் ஊழியர்கள், 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம். தற்போது எங்களுக்கு நிரந்தர வேலையும் இல்லை சம்பளமும் வழங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களை நிரந்தரம் செய்தது போல் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தினர்.
அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி 7 வருடங்களாக என்ன செய்தீர்கள்.? தற்போது நான் முதலமைச்சராக வந்து 2 வருடங்கள்தான் ஆகின்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? என ஊழியரிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இதனையடுத்து அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை அங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என கூறினர். அப்போது போலீசாருக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை போலீசார் அங்கிருந்தும் கலைந்து போகும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் ஊழியர்கள் சாலை மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
ஏற்கனவே இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவமனை மேலே ஏறி நின்று தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். அன்று மாலை அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்து அதற்கான உத்தரவை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
இதனால் பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற போராட்டங்கள் மூலம் பணி நிரந்தரம் பெற்று விடலாம் என்று எண்ணத்தால் புதுவை முழுவதுமே போராட்டக் களமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
- விஜய்(வயது32)ர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார்
- இருவருடைய மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்,
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது32) மற்றும் தாமனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். அப்பொழுது திடீரென்று சாலையின் மறு பக்கத்திற்க்கு செல்ல முயன்ற விஜய், சாலையில் இடது புறம் சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார். இதனால், வேகமாக வந்த சிங்காரவேலு மோட்டார் சைக்கிள், விஜய் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்
. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்த இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இருவரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
- தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
- இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
புதுச்சேரி:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல்துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது .
- அதன் துகள்கள்காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர்
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. கடந்த சில வாரமாக, இந்த துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதன் துகள்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர் இதனைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முன்தினம் துறைமுக வாயிலில் முற்றுகை போராட்டம் செய்தனர். இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனியார் கப்பல் துறைகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மேலவாஞ்சூர், கீழவாஞ்சூர், வடக்குவாஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் கருத்துகளை கேட்டனர். அப்போது கிராம மக்கள், தங்கள் வீட்டு சமையல் பாத்திரங்கள், துணிகள், வீடுகளில் படிந்த அளவுக்கு அதிகமான நிலக்கரி துகள்களை காட்டினர். இதற்கு நிரந்தர தீர்வு காணும்படி கண்ணீர்மல்க புகார் அளித்தனர்.
சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.
- நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
- புதுவையில் திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
பிஆர்.சிவா(சுயே): சுகாதாரத்துறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? பழைய காப்பீடு திட்டத்தின் கீழ் மஞ்சள் மற்றும் சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வருமான சான்றிதழ் அடிப்படையில் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வருமா?
முதலமைச்சர் ரங்கசாமி: ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுவையில் ரூ.20 கோடியே 25 லட்சத்தில் 34 ஆயிரத்து 327 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். காரைக்காலில் ரூ.2 கோடியே 54 லட்சத்தில் 2 ஆயிரத்து 417 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலிருந்த தி.மு.க.-காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் புதுவையில் எந்த நோயாளிகளும் பயனடைவதில்லை.
இந்த திட்டம் முறையாக புதுவையில் செயல்படுத்தவில்லை. இதனால் பலர் உரிய காலத்தில் நிதி கிடைக்காமல் இறந்துள்ளனர் என சரமாரியாக ஒரே நேரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.
இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உறுப்பினர்கள் தனித்தனியாக கருத்து தெரிவிக்கும்படி கூறினார்.
எதிர்கட்சித்தலைவர் சிவா:-பிரதமர் மிகுந்த நல்லெண்ணத்தோடு கொண்டு வந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புதுவையில் அதிகாரிகள் முறையாக இதை செயல்படுத்தவில்லை. இதற்கான காப்பீடு அட்டையை மருத்துவமனைகளில் காண்பிக்கும் போது தூக்கி வீசி விடுகின்றனர். புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.
கல்யாணசுந்தரம் (பா.ஜனதா): தவறு செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கின்றனர்.
வி.பி.ராமலிங்கம் (பா.ஜனதா): நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதை களைய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் ரங்கசாமி: திட்டம் தோல்வி என சொல்லக்கூடாது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் நிலையில் உள்ளோம். அனைவருக்குமான சுகாதார திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களையும் உள்ளடக்கும் காப்பீடு திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.






