என் மலர்tooltip icon

    ஒடிசா

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தவறான சிக்னலே ரெயில் விபத்துக்கு காரணம் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் லூப் லைனில் சென்று சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    • உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது.

    ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மருத்துவமனைகளில், உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல் இன்னும் 52 உடல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்னா தாஸ் கூறியதாவது:-

    புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 81 உடல்கள் உள்ளன. ஒரே சடலத்தை அடையாளம் கண்டு பலர் உரிமைக் கோரி வருகின்றனர். இதனால், அவற்றின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

    இதில், 29 சடலங்களுக்கான உறுதிப்படுத்தல் பெறப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. மீதமுள்ள 52 உடல்களை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை.

    மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, புவனேஸ்வர் நகராட்சி கார்ப்பரேஷன் (பிஎம்சி) உடல்களை அவர்களின் சொந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதோடு யாராவது உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என்றால், புவனேஸ்வரில் இரண்டு இடங்களில் தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர்.
    • சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ரா தேவிக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டன.

    இந்த புதிய தேர்களில் 10 நாள் நடைபெறும் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள் குறிப்பிட்ட தூரம் இழுத்து செல்லப்படும். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    ஜெகநாதரின் பிறப்பிடமாக கருதப்படும் ஸ்ரீ குண்டிச்சா கோவிலில் சுவாமி ஓய்வெடுப்பார். பின்னர் அங்கிருந்து தெய்வங்கள் திரும்பிய ஒரு நாளுக்கு பிறகு 'சுனா பெசா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர், தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து கொண்டுவந்த ஏராளமான நகைகளைக் கொண்டு, சுவாமிகளுக்கு தங்க உடைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னர் கபிலேந்திர டெப் காலத்தில் 1460-ம் ஆண்டு முதல் சுனா பெசா விழா கொண்டாடப்பட ஆரம்பித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தங்க அங்கிகளில் தேரில் எழுந்தருளினர். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோவாகும். மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தங்க அங்கி அலங்காரம் 6.10 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    சுவாமிகளின் தங்க அங்கி அலங்காரத்தை காண 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கூடி நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர். இது வீடு திரும்புதல் (நிலாத்திரி பிஜே) எனப்படுகிறது.

    தேரோட்ட திருவிழா சமயம் மட்டுமல்லாது தசரா, கார்த்திக் பூர்ணிமா மற்றும் தோலா பூர்ணிமா உள்ளிட்ட மேலும் 4 விழா காலத்திலும் பூரி ஜெகநாதர் ஆலய தெய்வங்களுக்கு தங்க அலங்காரம் செய்யப்படுகின்றன.

    • திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது.
    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர்.

    மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    திகபகண்டி-பெர்காம் பூர் சாலையில் அவர்கள் பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பயணிகள் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது. இரு பஸ்களிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இடிபாடுகளை அகற்றி சிக்கி இருந்தவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர். அப்போது 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது.

    50-க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • அரசு பேருந்து- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்
    • தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சியில கலந்து கொண்டு திரும்பியவர்கள் பயணம்

    ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் திகாபஹண்டி அருகே அம்மாநில அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அரசு பஸ் ராயகடா என்ற இடத்தில் இருந்து புவனேஸ்வர் சென்று கொண்டிருந்தது. அப்போது பெர்ஹாம்புரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அரசு பஸ் மீது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பலர் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள். தனியார் பேருந்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    • பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
    • கடந்த 2 மாதமாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.

    புவனேஷ்வர்:

    பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர்.

    ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.

    எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

    • தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார்.
    • நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளிக்கின்றனர்.

    ஒடிசாவின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

    கோவிலில் இருந்து புறப்படும் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர் குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. தேர்களில் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு ஜெகன்னாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளித்து பகவானை வழிபடுகின்றனர்.

    ரத யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் என்பதமால் தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பூரி நகரில் ரத யாத்திரை தொடங்கியதையடுத்து, நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்த புனிதமான ரத யாத்திரை, ஒடிசாவில் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூரி நகரில் நடைபெறும் ரதயாத்திரையில் பங்கேற்பதற்காக, பக்தர்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்திருக்கின்றனர். மேலும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பூரியில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 180 படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையர் அமிதாப் தாக்கூர் தெரிவித்தார். பூரி நகருக்கு 125 ரெயில்கள் இயக்கப்படும் என்றும், டிரோன்கள் உள்ளடக்கிய ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார். 

    "பூரி நகரில் நிகழும் இந்த புனிதமான தேர் திருவிழாவிற்காக, ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, மற்றும் ஸ்ரீ பாலபத்ரர் ஆகிய கடவுள்களின் தேர்களை ஸ்ரீ குண்ச்சா கோயில் வரை வடம் பிடித்து இழுக்கும் சேவையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார்.

    "பூரியின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பார்கள். மேலும் எந்தவொரு சுகாதார அவசரநிலைக்கும் பசுமை வழித்தடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று மாநில தலைமைச் செயலாளர் பி.கே. ஜெனா கூறியிருக்கிறார்.

    ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னா, மாநிலத்தின் பல அமைச்சர்கள், ஆகியோர் இந்த புனித ரத யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.

    சமீபத்திய "மன் கி பாத்" வானொலி உரையில் பிரதமர் மோடி பூரி ரத யாத்திரை ஒரு அதிசயம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூரி ரத யாத்திரையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவருக்கும் பூரி ஜெகன்னாதர் அருளால் வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும், வளர்ச்சியும் உண்டாக வேண்டுமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்
    • சிபிஐ அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

    கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின. இதில் இதுவரை 291 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த கோரவிபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சோரா செக்சன் ரெயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    • ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
    • அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.

    இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    ×