search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puri Rath Yatra"

    • சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர்.
    • சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ரா தேவிக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டன.

    இந்த புதிய தேர்களில் 10 நாள் நடைபெறும் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள் குறிப்பிட்ட தூரம் இழுத்து செல்லப்படும். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    ஜெகநாதரின் பிறப்பிடமாக கருதப்படும் ஸ்ரீ குண்டிச்சா கோவிலில் சுவாமி ஓய்வெடுப்பார். பின்னர் அங்கிருந்து தெய்வங்கள் திரும்பிய ஒரு நாளுக்கு பிறகு 'சுனா பெசா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர், தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து கொண்டுவந்த ஏராளமான நகைகளைக் கொண்டு, சுவாமிகளுக்கு தங்க உடைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னர் கபிலேந்திர டெப் காலத்தில் 1460-ம் ஆண்டு முதல் சுனா பெசா விழா கொண்டாடப்பட ஆரம்பித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தங்க அங்கிகளில் தேரில் எழுந்தருளினர். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோவாகும். மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தங்க அங்கி அலங்காரம் 6.10 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    சுவாமிகளின் தங்க அங்கி அலங்காரத்தை காண 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கூடி நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர். இது வீடு திரும்புதல் (நிலாத்திரி பிஜே) எனப்படுகிறது.

    தேரோட்ட திருவிழா சமயம் மட்டுமல்லாது தசரா, கார்த்திக் பூர்ணிமா மற்றும் தோலா பூர்ணிமா உள்ளிட்ட மேலும் 4 விழா காலத்திலும் பூரி ஜெகநாதர் ஆலய தெய்வங்களுக்கு தங்க அலங்காரம் செய்யப்படுகின்றன.

    • தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார்.
    • நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளிக்கின்றனர்.

    ஒடிசாவின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.

    கோவிலில் இருந்து புறப்படும் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர் குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. தேர்களில் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு ஜெகன்னாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளித்து பகவானை வழிபடுகின்றனர்.

    ரத யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் என்பதமால் தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பூரி நகரில் ரத யாத்திரை தொடங்கியதையடுத்து, நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்த புனிதமான ரத யாத்திரை, ஒடிசாவில் மட்டுமல்லாது குஜராத், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூரி நகரில் நடைபெறும் ரதயாத்திரையில் பங்கேற்பதற்காக, பக்தர்கள் லட்சக்கணக்கில் அங்கு வந்திருக்கின்றனர். மேலும் பலர் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பூரியில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 180 படைகள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஆணையர் அமிதாப் தாக்கூர் தெரிவித்தார். பூரி நகருக்கு 125 ரெயில்கள் இயக்கப்படும் என்றும், டிரோன்கள் உள்ளடக்கிய ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டிருப்பதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்தார். 

    "பூரி நகரில் நிகழும் இந்த புனிதமான தேர் திருவிழாவிற்காக, ஜெகன்னாதர், தேவி சுபத்ரா, மற்றும் ஸ்ரீ பாலபத்ரர் ஆகிய கடவுள்களின் தேர்களை ஸ்ரீ குண்ச்சா கோயில் வரை வடம் பிடித்து இழுக்கும் சேவையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என ஸ்ரீ ஜெகன்னாதர் கோயில் நிர்வாக தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார்.

    "பூரியின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பார்கள். மேலும் எந்தவொரு சுகாதார அவசரநிலைக்கும் பசுமை வழித்தடம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது" என்று மாநில தலைமைச் செயலாளர் பி.கே. ஜெனா கூறியிருக்கிறார்.

    ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்னா, மாநிலத்தின் பல அமைச்சர்கள், ஆகியோர் இந்த புனித ரத யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.

    சமீபத்திய "மன் கி பாத்" வானொலி உரையில் பிரதமர் மோடி பூரி ரத யாத்திரை ஒரு அதிசயம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    பூரி ரத யாத்திரையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் அனைவருக்கும் பூரி ஜெகன்னாதர் அருளால் வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும், வளர்ச்சியும் உண்டாக வேண்டுமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    பூரி:

    ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர், குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். 9 நாட்கள் இந்தத் திருவிழா நடக்கும்.

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் புரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத யாத்திரையின்போது, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால், லட்சக்கணக்கானோர் பூரி நகரில் திரண்டனர். ரத யாத்திரையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வரும் ரத யாத்திரை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் யாத்திரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். 

    • பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர்.
    • ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.

    ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது.

    ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர். ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது.

    • வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது.
    • ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    புவனேஸ்வர்

    ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இந்த ரத யாத்திரையில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

    இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வருகிற ஜூலை 1-ந்தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    மேலும், ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒடிசா சுகாதார சேவைகள் இயக்குனர் பிஜாய் மொகபத்ரா நேற்று தெரிவித்தார்.

    பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    ×