என் மலர்
ஒடிசா
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
- சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது
புவனேஷ்வர்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது.
பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது.
ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார்.
சி.பி.ஐ. அமைப்பினர், ரிலே இண்டர்லாக்கிங் பேனல் அமைப்பிற்கு சீல் வைத்துவிட்டனர். இது ரெயில் சமிக்ஞை கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். இதை தடை செய்ததால் பயணிகள் ரெயிலோ, சரக்கு ரெயிலோ இங்கு நிற்காது எனவும் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் அனைத்து இருப்பு பாதைகளும் சரி செய்யப்பட்டிருந்தாலும், சில கோளாறுகள் சரிசெய்ய வேண்டி உள்ளதால் சுமார் 24 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல்-கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூரில் சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் கீழே கிடந்தார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2-ந்தேதி நடந்த ஒடிசாவில் ரெயில் விபத்தில் 288 பேர் பலியாகினர்.
- ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.
புவனேசுவரம் :
ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.
அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, "அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம். அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன.
அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்" என குறிப்பிட்டார்.
- ஒடிசாவின் பாலசோரில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பலியானார்கள்.
- விபத்தில் சிக்கியிருந்த உடல்கள் பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டன.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ரெயில் பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்புப் படையினர் அகற்றியதும், அந்த உடல்கள் விசாரணைக்காக பகாநகா பஜார் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பள்ளியின் 3 அறைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளி அறை ஒன்றிலேயே பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் 2 நாட்கள் அங்கேயே இருந்தன. பிறகுதான் அவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பல உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது அந்தப் பள்ளியில் சிறப்பு பரிகார பூஜை கள் நடந்து வருகின்றன. 100-க்கும் மேற்பட்ட உடல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறை களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. புனித குளங்களில் இருந்து நீர் எடுத்து வந்து தெளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வரும் 16-ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் அவர்களது கெட்ட ஆவி சுற்றுமோ என்று பயப்படுகிறார்கள். இது மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. பெரும்பாலான பெற்றோர்கள் கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் கொண்ட கட்டிடத்தையே இடித்து விடலாம் என தெரிவித்தனர். பள்ளி நிர்வாகக் குழுவும் அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானம் பாலசோர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் உயரதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்கள் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கின. முதல் கட்டமாக மேற்கூரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்டன.
- இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் பாலசோர் எனும் இடத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட மிக கோரமான விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்னாயக் ரூ.5 லட்சமும், பிரதம மந்திரி ரூ.2 லட்சமும், ரெயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளனர். விபத்திற்கான காரணத்தை கண்டறிய சி.பி.ஐ. ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் பெயரில் போலியாக வரும் நிவாரண கோரிக்கைகளை கண்டறிந்து அவற்றை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா தலைமை செயலாளர் பி.கே.ஜெனா இந்திய ரெயில்வே, ஒடிசா போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்த நிவாரணத்தை பெறுவதற்காக தன் கணவர் என வேறு ஒருவரின் சடலத்தை அடையாளம் காட்டிய பெண், போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா எனும் இடத்தைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவரது கணவர் பிஜய் தத்தா.
ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் கீதாஞ்சலி தத்தா, தன் கணவரான பிஜய் தத்தா உயிரிழந்ததாக கூறி, இறந்தவர்களின் சடலங்களில் கணவரது உடல் என ஒரு சடலத்தை அடையாளம் காட்டினார். அவர் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கடந்த 13 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த பெண்மணியின் கணவர் பிஜய் தத்தா, தன் மனைவியின் மீது போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் பொது பணத்தை அபகரிக்க முயற்சி செய்ததற்காகவும், உயிரோடு உள்ள தன்னை ரெயில் விபத்தில் மரணம் அடைந்ததாக கூறியதற்காகவும் கீதாஞ்சலி மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார். காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.
- சரக்கு ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
- முதல் மந்திரி நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரெயில் என்ஜின் இல்லை.
இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரெயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடி இடிக்கிறது என்பதற்காக சரக்கு ரெயில் பெட்டியருகே சென்று தொழிலாளர்கள் ஒதுங்கினர்.
இந்நிலையில் மழையின்போது காற்று பலமாக வீசியதில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஜஜ்பூர் கியோஞ்சர் சாலையருகே பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, என்ஜின் இல்லாத சரக்கு ரெயிலின் பெட்டிகள் வேகமான காற்று வீசியதால் உருண்டன என தெரிவித்தது.
விபத்து குறித்து அறிந்த முதல் மந்திரி நவீன் பட்நாயக், சரக்கு ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் கடந்த 2-ம் தேதி 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதில் 278 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் 288 பேரை பலி கொண்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தது. அந்த வகையில், உயிரிழந்தோர் உடல்களை அடையாளும் காணும் பணியின் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த வெள்ளி கிழமை இரவு நடந்த கோர விபத்தில், மறுநாளான சனிக்கிழமை மாலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன. பின் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் துவங்கின. இதனிடையே உயிரிழந்தோர் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வந்தன.
அடையாளம் காணப்பட்ட உடல்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த உடல்களை மீட்பு படையினர் ஆய்வுக்காக எடுக்க சென்றனர். உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை. இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையினர் காலை திடீரென யாரோ பிடித்துள்ளனர்.
சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில் மீட்பு படையினர் காலை உயிர்பிழைந்தவர் பிடித்ததால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு மெல்ல விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ந்த மீட்பு படையினர், மெல்ல உயிர்பிழைத்த நபர் அங்கிருந்து நகர முடியாமல் இருப்பதை பார்த்து அவருக்கு உதவினார். பிறகு மீட்பு படையினர் உயிர்பிழைத்த ராபினை வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். விபத்தில் கால்களை இழந்த ராபின் உயிர்பிழைத்துள்ளார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பிரம்மபூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
- ஒடிசா ரெயில் விபத்து மனித தவறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது.
இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒடிசாவில் சென்றுகொண்டிருந்த செகந்திராபாத்- அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். புகை வந்தது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரம்மபூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறிய அளவில் மின்னணு சாதன பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதையடுத்து புகை வெளியேறுவது நின்றது. எனினும், தொடர்ந்து அந்த பெட்டியில் பயணிக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன.
- மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.
ஒடிசா:
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை. சிறு ரத்த துளிகூட வெளியேறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தரம் புரண்டபோது எதிர்திசையில் வந்த பெங்களூரு-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. அப்போது ரெயில்வே மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.
- 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது.
பாலசோர்:
ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
1,175 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சென்னை-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் அதிகபட்ச சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது. மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து எப்படி நேர்ந்தது என்பது தொடர்பாக முதலில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியானது.
ரெயில்வே உயர்மட்ட குழு நடத்திய முதல் கட்ட விசாரணையில், "பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், "விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்" என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக சி.பி.ஐ. விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரெயில் விபத்துக்கள் அனைத்தையும் ரெயில்வே உயர்மட்ட குழுதான் விசாரித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
ரெயில்வே உயர்மட்ட குழு ஏற்கனவே தொழில் நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை இன்று தொடங்கினார்கள்.
3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான கோர சம்பவத்துக்கான விடையை தேடி இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர்.
- இரண்டு பயணிகள் ரெயில் என்பதால் 1000-க்கும் மேற்பட்டோர் காயம்
- விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது
ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் காயம் அடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 1100 பேர் காயம் அடைந்தனர். அதில் 900 பேர் முதல் உதவி உள்ளிட்ட லேசான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்னும் 200 பயணிகள் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 278 பேர் உயிரிழந்துள்ளனர். 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
புவனேஸ்வர் நகராட்சியின் கமிஷனர் விஜய் அம்ரித் குலாங்கே கூறியதாவது:-
193 உடல்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவி எண் 1929-க்கு வந்துள்ளன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
- இந்த விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக கட்டாக் காவல் நிலையம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






