இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் பிரம்மாண்ட சந்திரயான்-3 மணல் சிற்பம்

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" என்ற செய்தியுடன் வாழ்த்து.பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் பிரம்மாண்ட சந்திரயான்-3 மணல் சிற்பம்
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்கலமான சந்திரயான்- 3 இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்படுகிறது.

சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக ஒடிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" (வெற்றி பெறுங்கள்) என்ற செய்தியுடன் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை நிறுவி சந்திரயான்- 3ன் 22 அடி நீள மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com