என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்திராவால் சிறைக்கு சென்றவர்கள் ராகுலை வரவேற்கின்றனர் - ஜே.பி.நட்டா தாக்கு
- பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டார்.
- கடந்த 2 மாதமாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்தார்.
புவனேஷ்வர்:
பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர்.
ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.
எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்