என் மலர்tooltip icon

    ஒடிசா

    • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஒடிசா வந்துள்ளார்.
    • அவர் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கைச் சந்தித்துப் பேசினார்.

    புவனேஸ்வர்:

    பிரிட்டன் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் இன்று ஒடிசா மாநிலம் வந்தடைந்தார். மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார்.

    இந்தச் சந்திப்பின்போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை.
    • தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில் இயங்கும் ஆட்டோவை ஓட்டிய இவருக்கு தினமும் ரூ.400 வரை எரிபொருள் செலவாகியதால் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்கி உள்ளார்.

    ஆனால் குறைவான பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் பிரச்சினைகளால் சரியாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அப்போது அவரது 11 வயது மகனின் அறிவுரைப்படி எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். இதன்மூலம் சிங்கிள் சார்ஜில் 140 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ இயங்குவதாகவும், இதனால் தினமும் ரூ.1,500 வரை சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    • இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" என்ற செய்தியுடன் வாழ்த்து.
    • பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்கலமான சந்திரயான்- 3 இன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்படுகிறது.

    சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக ஒடிசாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் "விஜயீ பவ" (வெற்றி பெறுங்கள்) என்ற செய்தியுடன் 500 ஸ்டீல் கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை நிறுவி சந்திரயான்- 3ன் 22 அடி நீள மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

    பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு பலர் பாராட்டி வருகின்றனர்.

    • இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
    • இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு.

    ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை தின்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (58) மற்றும் நரேந்திர சிங் (25) ஆகியோர் குடிபோதையில் சுடுகாட்டிற்கு சென்று அங்கு தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலின் சதையை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த செவ்வாய்கிழமை காலை பிஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்த 25 வயதான மதுஸ்மிதா சிங் என்ற இளம்பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலத்தை பீய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த படாசாஹி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர், இறந்த இளம்பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இருவரிடமும் போலீசார் விசாரித்ததில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்கு சக்தியைத் தரும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் கூறினர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • நியூயார்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி பழகி வருகிறார்.
    • செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளிலும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப நாமும் மாறவேண்டியது உள்ளது.

    சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் (ஏஐ-ஆர்டி பிசியல் இன்டலிஜென்ஸ்) வளர்ச்சி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    ஆரம்பத்தில் பொழுது போக்குக்காவும், கேளிக்கை நிகழ்ச்சிக்காவும் பயன் படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நாட்கள் செல்ல செல்ல மனித வளத்துறை, சாப்ட்வேர், எந்திரவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் புகுந்து விட்டது.

    மேலும் சில துறைகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொழில்நுட்பத்தில் கேட்கும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் சாட்ஜிபிடி அறிமுகமானது. அமெரிக்காவில் கோர்ட்டுகளில் வழக்குகளில் வாதாடுவதற்கு கூட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வக்கீல்கள் அறிமுகமாகி விட்டன.

    இதே போல அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தை விர்ச்சுவலாக உருவாக்கி அதை வைத்து ஆன்லைனில் டேட்டிங் தளம் ஒன்றை தொடங்கினார். இந்த விர்ச்சுவல் உருவத்தை வாடிக்கையாளர்களிடம் பேசி பழக விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.

    இதே போல நியூயார்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி பழகி வருகிறார். இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களை காணும் நேரம் வந்து விட்டது. ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான 'ஓடிவி' நாட்டிலேயே முதன் முறையாக மெய்நிகர் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்து உள்ளது. இந்த செய்தி வாசிப்பாளரிடம் செய்திகளை எழுதி கொடுத்தால் அச்சு அசலாக அப்படியே வாசித்து விடுகிறார்.

    கடினமான வார்த்தைகளையும் கூட எந்த திணறலும் இல்லாமலும் லிசாவால் செய்திகளை படிக்க முடிகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த செய்தி வாசிப்பாளரால் தொகுத்து வழங்க முடியும். இந்தியாவில் புதிய மைல் கல்லாக அறிமுகமாகி உள்ள இந்த மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசா பல மொழிகளையும் பேசும் திறன் படைத்தது என்றாலும் முதல் கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் உருவானதன் பின்னணியே சுவாரசியமானது தான்.

    அதாவது இந்த லிசாவின் உருவம் அதே தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மற்றொரு பெண்ணை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அச்சு அசலாக அந்த பெண் போலவே, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட லிசாவும் தோன்றுகிறார்.

    செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியாத யாராவது லிசா செய்தி வாசிப்பதை பார்த்தால் அவர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. உண்மையிலேயே ஒரு பெண் தான் செய்தி வாசிப்பது போன்று தோன்றும். இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் மூலம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பணியை தொடர முடியும் என்பது போன்ற பல வசதிகள் உள்ளன.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலத்தில் மனிதவள துறையில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வேலைக்கு வேட்டு வைக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

    ஆனால் அவ்வாறு எந்த ஆபத்தும் ஏற்படாது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதும் சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    • கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வர் :

    ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை தலைமையிடமாக கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அந்த ஒப்பந்தத்தின் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நிதி தொழில்நுட்ப நிறுவனம், நொய்டா நிறுவனத்துக்கு யூபிஐ (பண பரிமாற்றத்துக்கான அடையான எண்) விவரங்களை வழங்கியது.

    இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரண் சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலு சிங் ஆகியோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கியூ.ஆர். கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் கியூ.ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர்.

    இந்த மோசடியின் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய சுமார் ரூ.14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் சுருட்டினர்.

    புவனேஸ்வர் நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதித்தபோது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த நிறுவனம் உடனடியாக இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது.

    அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர். கோடை பயன்படுத்தி மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரண் சிங் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருமித்த உடலுறவுக்குப்பின் திருமண வாக்குறுதி மீறப்பட்டால் கற்பழிப்பு குற்றம் கிடையாது
    • பொய்யான வாக்குறுதி கொடுத்திருந்தால் அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படும்

    ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளிக்கையில், ''திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமித்த உடலுறவு ஏற்பட்டு, பின்னர் வேறு சில காரணங்களால் அதே உறுதிமொழி நிறைவேற்றப்பட முடியாமல் போனால், அந்த உடலுறவை பலாத்காரமாக கருத முடியாது என்று கூறியிருக்கிறது''.

    மனுதாரர் மீதுள்ள மற்ற மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு விடப்படுகின்றன என்று நீதிபதி ஆர்.கே. பட்நாயக், தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் ''நல்ல நம்பிக்கையில் அளிக்கப்பட்ட ஒரு திருமண வாக்குறுதியை பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நிறைவேற்ற முடியாமல் போவதற்கும், திருமணம் செய்து கொள்வதாக அளிக்கப்படும் பொய் வாக்குறுதிக்குமிடையே ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது.

    முதல் வாக்குறுதியை வைத்து பார்க்கும்போது பாலியல் நெருக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது ஐ.பி.சி. செக்ஷன் 376-ன் கீழ் வரும் கற்பழிப்பு குற்றம் என கருத முடியாது. அதே நேரத்தில், இரண்டாவது வாக்குறுதியின்படி பார்த்தால் திருமணம் செய்து கொள்வதாக தரப்பட்ட வாக்குறுதியே பொய்யானது என்றால் அது இத்தகைய செக்ஷன்களில் வரும்" என்று தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    "ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, இருவரும் உடல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொண்டாலும், சில காரணங்களால் திருமணம் நடக்காமல் போகலாம். அதனால் அந்த ஆண் வாக்குறுதியை மீறியதாக கூற முடியாது. இதன் மூலம் அவருக்கும் அந்த பெண்ணிற்கும் நடந்திருந்த உடலுறவு, பாலியல் பலாத்கார குற்றம் என்று கூற முடியாது" என்று முன்னதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை, இவ்வழக்கில் உயர்நீதிமன்ற பெஞ்ச் கவனித்தில் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    "நட்பாக ஆரம்பித்த உறவு பிறகு கசப்பானதாக மாறியிருந்தால், அது எப்போதும் 'அவநம்பிக்கை' என முத்திரையிடப்படக்கூடாது. இதற்காக அந்த ஆணின் மீது கற்பழிப்பு குற்றம் சாட்டப்படக்கூடாது" என்று இந்த வழக்கு தொடர்பாக கூறியிருக்கிறது.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தவறான சிக்னலே ரெயில் விபத்துக்கு காரணம் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் லூப் லைனில் சென்று சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    • உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது.

    ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மருத்துவமனைகளில், உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல் இன்னும் 52 உடல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்னா தாஸ் கூறியதாவது:-

    புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 81 உடல்கள் உள்ளன. ஒரே சடலத்தை அடையாளம் கண்டு பலர் உரிமைக் கோரி வருகின்றனர். இதனால், அவற்றின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

    இதில், 29 சடலங்களுக்கான உறுதிப்படுத்தல் பெறப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. மீதமுள்ள 52 உடல்களை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை.

    மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, புவனேஸ்வர் நகராட்சி கார்ப்பரேஷன் (பிஎம்சி) உடல்களை அவர்களின் சொந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதோடு யாராவது உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என்றால், புவனேஸ்வரில் இரண்டு இடங்களில் தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர்.
    • சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் படையெடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கு புதிய தேர்கள் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வர, தேரோட்டம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும். இந்த ஆண்டு ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ரா தேவிக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டன.

    இந்த புதிய தேர்களில் 10 நாள் நடைபெறும் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேர்கள் குறிப்பிட்ட தூரம் இழுத்து செல்லப்படும். அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    ஜெகநாதரின் பிறப்பிடமாக கருதப்படும் ஸ்ரீ குண்டிச்சா கோவிலில் சுவாமி ஓய்வெடுப்பார். பின்னர் அங்கிருந்து தெய்வங்கள் திரும்பிய ஒரு நாளுக்கு பிறகு 'சுனா பெசா' எனப்படும் தங்க அங்கி அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    இந்த பகுதியை ஆட்சி செய்த மன்னர், தென்னிந்திய மன்னர்களை தோற்கடித்து கொண்டுவந்த ஏராளமான நகைகளைக் கொண்டு, சுவாமிகளுக்கு தங்க உடைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னர் கபிலேந்திர டெப் காலத்தில் 1460-ம் ஆண்டு முதல் சுனா பெசா விழா கொண்டாடப்பட ஆரம்பித்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

    தேர் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சுவாமிகள் 3 பேருக்கும் தங்க அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. ஜெகநாதர், பலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் தங்க அங்கிகளில் தேரில் எழுந்தருளினர். இந்த தங்க அங்கிகளின் எடை 208 கிலோவாகும். மாலை 5.20 மணிக்கு தொடங்கிய தங்க அங்கி அலங்காரம் 6.10 வரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

    சுவாமிகளின் தங்க அங்கி அலங்காரத்தை காண 15 லட்சம் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கூடி நின்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    சுவாமிகள் இன்று மதியம் தங்க அங்கிகளை களைந்து மீண்டும் கருவறைக்குள் செல்ல உள்ளனர். இது வீடு திரும்புதல் (நிலாத்திரி பிஜே) எனப்படுகிறது.

    தேரோட்ட திருவிழா சமயம் மட்டுமல்லாது தசரா, கார்த்திக் பூர்ணிமா மற்றும் தோலா பூர்ணிமா உள்ளிட்ட மேலும் 4 விழா காலத்திலும் பூரி ஜெகநாதர் ஆலய தெய்வங்களுக்கு தங்க அலங்காரம் செய்யப்படுகின்றன.

    • திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது.
    • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் திகபகண்டி பகுதியை சேர்ந்த திருமண வீட்டார் நேற்று தனி பஸ்சில் பெர்காம்பூர் நகருக்கு சென்றனர். நேற்று அங்கு நடந்த திருமண விழாவில் அவர்கள் பங்கேற்றனர்.

    மாலை அவர்கள் பஸ்சில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    திகபகண்டி-பெர்காம் பூர் சாலையில் அவர்கள் பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே பயணிகள் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் திருமண கோஷ்டியினர் இருந்த பஸ் கடுமையாக நொறுங்கியது. இரு பஸ்களிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இடிபாடுகளை அகற்றி சிக்கி இருந்தவர்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர். அப்போது 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி இருப்பது தெரிந்தது.

    50-க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×