என் மலர்tooltip icon

    ஒடிசா

    • வெளியூர் சென்றபோது மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி கெஜலட்சுமி (வயது 40). இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கணவன், மனைவி வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று இருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் வீட்டிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய கெஜலட்சுமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்ற பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பணம், நகை கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு ‘5டி செயலாளர்’ என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
    • நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    புவனேஸ்வர்:

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அரசுத்துறைகளில் மாற்றத்துக்கான முயற்சிகளை அமல்படுத்த இப்பதவி உருவாக்கப்பட்டது.

    இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அரசு திட்டங்களை ஆய்வு செய்ய வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.

    மாநில அரசை நவீன் பட்நாயக்குக்கு பதிலாக, வி.கே.பாண்டியன்தான் நிர்வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவும் வி.கே.பாண்டியன் பேசப்பட்டார்.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில், பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

    அதன்படி, வி.கே.பாண்டியன், அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.

    இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற 24 மணி நேரம் முடிவதற்குள் வி.கே.பாண்டியனை ஒடிசா மாநில அரசு புதிய பதவியில் நியமித்துள்ளது. இது, கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மாற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நவீன ஒடிசா திட்டத்துக்கான தலைவராக கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்-மந்திரியின் கீழ் நேரடியாக செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநில அரசின் 'நமது ஒடிசா, புதிய ஒடிசா' என்ற புதிய திட்டத்தின் பொறுப்பாளராகவும் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட உள்ளார். இத்திட்டம், பாண்டியனின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.

    வி.கே.பாண்டியன், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தில் இணைவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்மூலம், அவர் நேரடி அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    • ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
    • இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என மூன்று நீதிபதிகள் தீர்ப்பு

    ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது 3 நீதிபதிகள் (பெரும்பாலான நீதிபதிகள்) ''ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவ செய்ய வேண்டும்.

    இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை'' எனத் தீர்ப்பு அளித்தனர்.

    இதனால் இந்தியாவில் ஒரே பாலினத்தினர் திருமணம் செல்லத்தக்கது அல்ல நிலை அப்படியே தொடர்கிறது. இந்த தீர்ப்பை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையும், அதிவேக ஓட்டப் பந்தய வீராங்கனையுமான டூட்டி சந்த், ஒரே பாலின திருமணம் குறித்து கூறியதாவது:-

    ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழ்வதை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. அரசியல் சட்டம் அதற்காக இல்லை. இதனால் உச்சநீதிமன்றம் அதில் தலையிடவில்லை. எதிர்காலத்தில் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்யும் வகையில், முறையான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசும், பாராளுமன்றமும் உறுதியாக ஆலோசனை செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.

    இது மனித குலத்தின் பிரச்சினை. வாழ்வில் அனைவருக்கும் சரியான உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்தியாவில் விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஏதும் வழங்கப்பட்டதா?. ஒரே பாலின திருமணம் ஒருநாள் நம் நாட்டில் அனுமதிக்கப்படும்'' என்றார்.

    கடந்த ஐந்து வருடங்களாக ஒரே பாலின வாழ்க்கை வாழ்ந்து வரும் டூட்டி சந்த், நானும் எனது பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம். இணைந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம் என்பது தயக்கமின்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    • விபத்து நடந்து 4 மாதங்கள் ஆகியும் 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன.
    • இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

    அப்போது, எதிர்திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 297 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இதனிடையே விபத்தில் பலியானவர்களில் 162 பேரின் உடல்கள் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 134 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அதே சமயம் விபத்து நடந்து 4 மாதங்கள் ஆகியும் 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன. எனவே உரிமை கோரப்படாத அந்த 28 உடல்களையும் தகனம் செய்ய புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சியிடம் எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து பெண் தன்னார்வலர்கள் மூலம் அந்த உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, அவற்றை தகனம் செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கின.

    இந்த நிலையில் 28 உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாதவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது. அனைத்து பணிகளும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உடல்களுக்கு இறுதி சடங்கு செய்தனர்" என்றார்.

    முதல் 3 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் தன்னார்வலர்களான மதுஸ்மிதா பிரஸ்டி, ஸ்மிதா மோகன்தி, ஸ்வகதிகா ராவ் ஆகியோர் கூறுகையில், "அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனிதமான காரியத்தை செய்ய நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே முன்வந்தோம். ஒரு வேலை முந்தைய பிறப்புகளில் அவர்கள் எங்கள் சொந்தக்காரர்களாக இருந்திருக்கலாம். இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன. அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு அனைத்து மரியாதைகளுடனும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன" என கூறினர்.

    அனைத்து உடல்களும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி தகனம் செய்யப்பட்டதாகவும், விசாரணைக்காகவும், பின்னாளில் சட்டச்சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உடல்களின் மரபணுக்கள் பாதுக்கப்படுகின்றன என்றும் புவனேஸ்வர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

    • பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
    • அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.

    ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
    • ஒடிசா அரசு சார்பில் இமாச்சலுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி தெரிவித்தார்.

    புவனேஷ்வர்:

    இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இமாச்சல பிரதேச முதல் மந்திரி சுக்வீந்தர் சிங்கிற்கு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடிதம் எழுதினார்.

    அப்போது, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் நிவாரண பணிகளுக்காக ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    • சகோதரிகளை பாதுகாக்கும் உறுதி மொழி எடுக்கும் விழாவாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது
    • சகோதரரர்கள் கை மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டுவார்கள்

    இந்தியாவில் நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சகோதரர் மற்றும் சகோதரராக நினைக்கும் ஆண்கள் கைகளின் மணிக்கட்டில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் ராக்கி கயிறு கட்டுவதாகும். இவ்வாறு கட்டிவிடும் பெண்களுக்கு சசோதரர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.

    இது வெறும் கயிறு கட்டுதல், பரிசு வழங்கும் சம்பிரதாயம் இல்லை. அந்த பெண், சகோதரர் தனது வாழ்க்கைக்கு துணையாகவும், கடைசி மூச்சு வரை வளர்ப்பதாகவும் எண்ணுவார். ஆண்களும் இதுபோன்று கருத வேண்டும் என்பதுதான்.

    ஆனால், ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று சகோதரரால் கற்பழிக்கப்பட்டு, கர்ப்பம் அடைந்த சகோதரி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே. சாஹூ விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.

    மேல்முறையீட்டான இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் தண்டனையுடன், 40 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    இதுகுறித்து நீதிபதி தனது கருத்தில் ''சகோதரிக்கு சகோதரன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாகவும், கடைசி மூச்சு வரை உன்னை வளர்ப்பேன் என்றும் உறுதிகொள்ளும் மங்களரமான நாள் அன்னு இதுபோன்ற முரண்பாடான வழக்கை கேட்பதும், அதற்கு தீர்ப்பு வழங்குவதும் அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார்.

    மல்காங்கிரி சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 2018 முதல் 2019 வரை தங்கையை தொடர்ந்து கற்பழித்ததாகவும், அதன்விளைவாக அந்த சிறுமி தனது 14 வயதில் கர்ப்பமானதாகவும் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

    • சொந்தமாக வாங்கிய இடத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.
    • ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் வசித்து வருபவர் வைரமுத்து (வயது 48), டிரைவர். இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் (22) வசந்த் (21) என்ற மகன்கள் உள்ளனர்.

    வைரமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் 4 சென்ட் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு மனையை விற்க முடிவு செய்தார். இதனை அறிந்த வைரமுத்துவின் மனைவி முத்துலட்சுமியின் தங்கை பார்வதி தன்னிடம் நிலத்தை விற்குமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு சம்மதித்த வைர முத்து அந்த இடத்தினை பார்வதிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இடத்திற்குரிய தொகையை பார்வதி சிறிது சிறிதாக கொடுத்துவந்துள்ளார். இதன் காரணமாக வைர முத்துவிற்கும் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி தங்கைக்கு ஆதரவாக பேசி யதால் குடும்பத்தில் பிரச் சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்து கொண்டு வைரமுத்துவைப் பிரிந்து சென்று தென்காசி மாவட்டம் பொதிகை நகரில் இரு மகன்களுடன் தனியே வசித்து வருகிறார்.

    வீட்டுமனை விற்ற பணமும் முழுமையாக கிடைக்காததாலும், மனைவி, மகன்கள் பிரிந்து சென்றதாலும் வைரமுத்து மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற வைரமுத்து அங்கு வந்திருந்த தனது இரு மகன்களிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் வைரமுத்து மன வேதனைக்கு ஆளானார். இது குறித்து தனது தாய் மற்றும் உறவிரகளிடம் கூறி மனவேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் , குடும்பம் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் அந்த வீட்டுமனை தான் என்றும், அதனால் அந்த இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளார். அதற்கு தாய் மற்றும் உறவினர்கள் வைரமுத்துவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வீட்டுமனை பகுதிக்கு பெட்ரோல் கேனுடன் வைரமுத்து சென்றார். அங்கு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே வைரமுத்து பரிதாபமாக பலியானார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அவர் தீக்குளித்ததை உடனடியாக யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    அந்த வழியாக சென்ற வர்கள் வைரமுத்து இறந்து கிடப்பதைப் பார்த்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமை மற்றும் குடும்பப்பிரச்சினையால் வைரமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக கால் பதித்தது.
    • அன்று பிறந்த குழந்தைகளுக்கு ஒடிசா மாநில பெற்றோர் சந்திரயான் என பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

    புவனேஷ்வர்:

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. 

    விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த நிகழ்வை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது.

    இந்நிலையில், லேண்டர் விக்ரம் நிலவில் கால் பதித்த நேரத்தில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 3 ஆண், ஒரு பெண் என மொத்தம் 4 குழந்தைகளுக்கு சந்திரயான் என பெற்றோர் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்த சாதனை நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    • 155 ஏக்கர் பரப்பளவில் உள்ளது புதராஜா காட்டுப்பகுதி.
    • பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு சாதகமான பல செடிகளும், ஓடும் நீரும் ஏற்கெனவே இங்கு உள்ளது.

    இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா.

    பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம் உள்ளது சம்பல்பூர் நகரம்.

    சம்பல்பூரில், 155 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதராஜா வனப்பகுதி ஒரு முக்கியமான சுற்றுலா மையமாகும். அங்குள்ள ஒரு மலை மேல் உள்ள சிவன் கோயிலில் இருந்து அந்த நகரம் முழுவதையும் காண முடியுமென்பதால், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு.

    இந்த வனப்பகுதியில் பட்டாம்பூச்சிகளுக்கான ஒரு மிக பெரிய பூங்காவை உருவாக்க அந்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.

    இது குறித்து இவ்வனப்பகுதிக்கான வனத்துறை அதிகாரி நீலன்னவர் தெரிவித்ததாவது:-

    ரூ.25 லட்சம் திட்ட மதிப்பில் உருவாக்கப்படும் இது ஒரு திறந்தவெளி பூங்காவாக இருக்கும். பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவும் வகையில் ஏற்கெனவே இங்கு பல செடிகளும், ஓடும் நீரும் அதிகம் உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் தேன் அதிகம் உள்ள நூற்றுக்கணக்கான செடி வகைகள் அங்கு பயிரிடப்பட்டு அதன் மூலம் பட்டாம்பூச்சிகள் ஈர்க்கப்படும்.

    அந்த பூங்காவில் அனைவரையும் கவரும் வகையில் அழகூட்டும் வேலைகளும் செய்யப்படும். பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளின் வசிப்பிட, உணவு, மற்றும் இனப்பெருக்க தேவைகளுக்கு வசதியான ஒரு பூங்காவாக இது அமையும். இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் அவற்றின் இனம் பன்மடங்காக பெருகவும், அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கவும் இது பயன்படும். இதற்கான வரைபடம் ஓரிரு நாட்களில் தயாராகி விடும். மழைக்காலம் முடிந்ததும் பணிகள் தொடங்கப்படும். இந்த டிசம்பர் இறுதிக்குள் பூங்கா மக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுற்றுலா பயணிகளை, அதிலும் குறிப்பாக குழந்தைகளை, ஈர்க்கும் பூங்காவாக அமைவது மட்டுமல்லாமல், இப்பூங்கா இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் உதவும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • தடைகள் இருந்த போதிலும், சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது
    • பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன

    பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டுதான் வருகிறது. சிறிய பொருட்கள் வாங்கினாலும், அதற்கு பிளாஸ்டிக் பேக் கேட்பவர்கள், அதை பொது வெளியில் வீசி எறிந்துவிடுகின்றனர்.

    மக்காத இந்த பிளாஸ்டிக் மண்ணில் புதைந்து நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், கால்நடைகளை அதில் ஒட்டியிருக்கும் உணவு பொருட்களை உண்பதுடன், அந்த பிளாஸ்டிக் பேக்குகளையும் சேர்த்து உண்கிறது. இதனால் ஜீரணம் ஆகாமல் வயிற்றிலேயே தங்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது.

    அந்த மாட்டை கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த டாக்டர்கள் வயிறுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளதை கண்டுபிடித்து, அறுசை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கழிவு வந்து கொண்டே இருந்துள்ளது.

    சுமார் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் வயிற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் இதுபோன்று கடந்த வருடம் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுத்ததாக தெரிவித்தனர்.

    ×