search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் முறை வாக்காளர்கள்: மணல் சிற்பம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதல் முறை வாக்காளர்கள்: மணல் சிற்பம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்

    • பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
    • அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டன.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×