என் மலர்
கேரளா
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
- 21ஆம் தேதி பக்தர்கள் தரிசத்திற்கான நடை திறந்திருக்கும்.
புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். 21-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.
பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்குவதற்கு http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 20-ஆம் தேதி பம்பை நதிக்கரையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
- அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.
அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.
14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
- தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று அப்பெண் கோரியுள்ளார்.
கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த இந்து பெண்ணுக்கு இந்து முறைப்படி இஸ்லாமியர் இறுதி சடங்கு செய்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கடினம்குளம் மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த ராக்கி என்ற 44 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மறுவாழ்வு மையம் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி, தான் இறந்த பின், இந்து வழக்கப்படி இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இஸ்லாமியரான சஃபீர் தானே முன்வந்து இந்து முறைப்படி அப்பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
இந்து பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு இஸ்லாம் மதம் எனக்கு தடையாக இருக்கவில்லை என்று சஃபீர் தெரிவித்தார்.
சஃபீரின் இச்செயலுக்கு உள்ளூர் ஜமாத் மற்றும் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.
- சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார்.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
செப்டம்பர் 12 அன்று, கேரளாவின் திருச்சூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், வேலாயுதன் என்ற முதியவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம் அரசின் வீட்டு வசதி மூலம் வீடு கேட்டு மனு கொடுக்க முயன்றார்.
இருப்பினும், சுரேஷ் கோபி அதை பகிரங்கமாக ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான பிறகு, அவரது நடத்தை நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சுரேஷ் கோபி, "ஒரு மக்கள் பிரதிநிதியாக, நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் உள்ளது.
வீட்டுவசதி என்பது மாநில அரசின் எல்லைக்குள்பட்ட விஷயம். மாநில அரசு அந்த விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல" என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிலர் இந்த சம்பவத்தை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்கிடையே கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி முதியவருக்கு வீடு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
- சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.
- இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனப்புழா பகுதியில் இருவர் மலைப்பாம்மை கொன்று இறைச்சி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தளிப் பரம்பா வனச்சரக அதிகாரி சனூப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பனப்புழா பகுதிக்கு சென்றனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருவர் மலைப்பாம்பை கொன்று இறைச்சியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர்.
அவர்கள் மாதமங்கலம் பனப்புழாவை பூர்வீகமாக கொண்ட பிரமோத் (வயது40), வந்தனஞ்சேரி பினீஷ்(37) ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மலைப்பாம்பை வேட்டையாடி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.
சம்பவத்தன்று மாலை அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை பிரமோத் மற்றும் பினீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து கொன்றிருக்கின்றனர்.
பின்பு அதனை தங்களின் வீட்டுக்கு எடுத்து வந்து துண்டுதுண்டாக வெட்டி சுத்தப்படுத்தி இறைச்சியாக சமைத்துள்ளனர். பின்பு இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்துவிட்டனர். பிரமோத் மற்றும் பினீஷ் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரை யும் வனத்துறையினர் கைது செய்தனர்.
பிரமோத் மற்றும் பினீஷ் தங்கியிருந்த வீட்டில் இருந்து மலைப்பாம்பு உடலின் சில பாகங்கள் மற்றும் அவர்கள் சமைத்து வைத்திருந்த மலைப்பாம்பு இறைச்சி உள்ளிட்டவைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டடது.
- என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன்.
- ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த பி.டி.கோபிதாஸ் என்ற முதியவர் 80வது வயதில், பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
1957ல் 5ம் வகுப்பு முடித்த கோபிதாஸ் அதன்பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா அரசின் கல்வியறிவு திட்டம் குறித்து அறிந்து 7, 10ம் வகுப்புகளுக்கான படிப்பில் கோபிதாஸ் தேர்ச்சி பெற்றார்.
பிளஸ் 2க்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் பேசிய கோபிதாஸ், "பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நான் தினமும் எதையாவது படித்துக்கொண்டு தான் இருப்பேன். அதனால் மீண்டும் பள்ளி பாடப்புத்தகங்களை படிப்பது எனக்கு சிரமமாக இருக்கவில்லை. ஒருநாளைக்கு 2 மணிநேரம் படிப்பேன். என்னுடைய பேர குழந்தைகளுடன் அமர்ந்து பாடம் படிப்பேன். ஆங்கிலம் மட்டும் தான் எனக்கு சற்று கடினமாக இருந்தது.
நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு. அதை நிறைவேற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய ஆசிரியர்கள் உட்பட பலரும் என்னை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
கோபிதாஸுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், தற்போது அவர் தனது இளைய மகள் மற்றும் அவர்களது இரண்டு பேராகுலந்திகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓணம் பண்டிகையை அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள்.
- இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய பினராயி விஜயன், "மத்திய அமைச்சர் அமித் ஷா அண்மையில் கேரளா வந்திருந்த போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25% வாக்கினை பெற வேண்டும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதைபாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். கேரளா பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது என்பதை அவரின் பேச்சு தெளிவுபடுத்துகிறது.
ஓணம் பண்டிகை நாளில் வாமனனுடன் மகா விஷ்ணுவையும், வாமனனின் காலடியில் மகாபலியையும் சித்தரிக்கும் செய்தியை ஒருவர் எனக்கு காட்டினார். இதன் பொருள், மகாபலி நம்மைப் பார்ப்பதாக நம்பப்படும் ஒரு பண்டிகையான ஓணத்தையே அவர்கள் மாற்ற விரும்புகிறார்கள். இன்று நாம் கொண்டாடும் அனைத்தையும் பழைய காலத்திற்கு மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கேரளாவின் பண்பாட்டை அழித்துவிடும்" என்று தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார்.
அவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி அருகே பரத்தோடு பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு கேரளா வந்தார். பின்பு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள போலீசார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அந்த மருத்துவமனையில் இன்று முதல் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார். ஆயுர்வேத சிகிச்சைக்காக பல அரசியல் பிரபலங்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருக்கிறார்.
மூன்று முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மார்ச் மாதம் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், 2025 சட்டமன்ற தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
- ஒரே மாதத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரளாவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மக்களை பல்வேறு நோய்கள் சமீப காலமாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக அமீபிக் மூளைக் காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.
சுல்தான்பத்தேரி ரதீஷ், கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை, மலப்புரம் ரம்லா (வயது 52), தாமரசேரியில் 9 வயது சிறுமி ஆகியோர் இந்த மாதம் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில் மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மலப்புரம் மாவட்டம் வாண்டூரை சேர்ந்த ஷோபனா என்ற பெண் இன்று இறந்தார்.
ஒரே மாதத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரளாவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
- உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.
கொச்சி:
கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.
கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
- நடிகர் சவுபின் சாகிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது.
தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இந்த மோசடியால் ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது.
இந்த நிலையில் அந்த படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் சாகிரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.
நிதி மோசடி வழக்கில் கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கியிருந்ததால் போலீசார் அவரை விடுவித்தனர். மேலும் அந்த வழக்கில் நடிகர் சவுபின் சாகிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது.
இந்தநிலையில் துபாயில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் சவுபின் சாகிர் திட்டமிட்டார். அதில் பங்கேற்பதற்கு துபாய் செல்ல அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்தது. நடிகர் சவுபின் சாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்தது. "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் நடந்த நிதி மோசடி வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்திருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சவுபின் சாகிர் துபாய் செல்ல கோர்ட்டு தடை விதித்துள்ளது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கேரள உயர்நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல அனுமதி கோர சௌபின் சாகிர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
- இந்தாண்டு ஓணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஜுனைஸ் வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர். ஜுனைஸ் மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






