என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Harman Preet Kaur"
- ஹர்மன் பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறினார்.
- ஆஸ்திரேலியாவின் பெர்ரி செய்த டைவ்வை பாருங்கள் என முன்னாள் கேப்டன் தெரிவித்தார்.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா போராடி தோற்றது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (52 ரன்) ரன்-அவுட் ஆனார். அவரது அவுட் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
அவர் 2வது ரன்னை எடுக்க முயற்சித்தபோது மெதுவாக ஓடியதால் ரன்-அவுட் ஆனார் என சர்ச்சை எழுந்தது. ஹர்மன் பிரீத் கவுர் ரன்-அவுட் ஆன விதம் சிறுபிள்ளைத்தனமானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறினார். ஆனால் அதை ஹர்மன் பிரீத் கவுர் மறுத்தார்.
இந்த நிலையில் ஹர்மன் பிரீத் கவுர் மீது இந்திய பெண்கள் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி பாய்ந்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்மன் பிரீத் கவுர் தனது பேட், கிரீசுக்கு முன்பாக தடுமாறிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் அவர் இரண்டாவது ரன்னை எடுக்க முயற்சித்தபோது ஜாக்கிங் செய்தது போல் இருந்தது. உங்கள் விக்கெட் மிகவும் முக்கியமானது என்று தெரிந்தவுடன் நீங்கள் ஏன் நிதானமாக ஓடுகிறீர்கள்? வெற்றிபெற தொழில்முறை கிரிக்கெட் விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் பெர்ரி செய்த டைவ்வை பாருங்கள். ஹர்மன் பிரீத் கவுர் 2வது ரன்னின்போது சாதாரணமாக இருந்தார். சவுகரியமாக அடையலாம் என்று நினைத்தார். ஷபாலி வர்மா தன்னை வீழ்த்த முடியாது என்று நினைத்தார். அவர் தவறாக நினைக்கிறார். அவரது ஷாட் தேர்வு மிகவும் மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்