என் மலர்
பெண்கள் மருத்துவம்
மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும்.
ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்... ‘Alcohol may increase your desire, but it takes away the performance'. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.
மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.
தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.
இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது... பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.
அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்... பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.
மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை... மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.மது செயல்திறனை மட்டுமல்ல... செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!
மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே. என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை.
தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.
இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது... பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.
அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்... பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.
மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை... மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.மது செயல்திறனை மட்டுமல்ல... செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!
குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.
குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்
இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.
மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.
குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்
இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.
மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவீதப் பெண்களில், 23 சதவீதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை. 65 சதவீதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.
இவை ஒரு பக்கம் இருக்கட்டும், நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும்.
அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது.

சிலர் பாலிமர் ஜெல்லுக்குப் பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருட்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்றிவிட வேண்டும்.
நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
இவை ஒரு பக்கம் இருக்கட்டும், நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலர்ஜியை அறிந்து கொள்வதோடு, அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும்.
அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது.

சிலர் பாலிமர் ஜெல்லுக்குப் பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருட்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்பட வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பேடுகளை மாற்றிவிட வேண்டும்.
நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.
35 வயதிற்கு மேல் பெண்கள் மன அழுத்தம், மாறிப்போன உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடலியல் மற்றும் மனம் சார்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
பெரும்பாலும், இந்தியக் குடும்பங்களின் பெண்கள் சுமைதாங்கிகளாகவே இருந்து வருகிறார்கள். உலகமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்த வாழ்க்கை முறை மாற்றத்தாலும், பொருளாதாரத் தேவைகள் அதிகரிப்பாலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிக்குச் செல்ல நேர்கிறது. அதனால் குடும்பச்சுமை மட்டுமின்றி அலுவலகச் சுமையும் பெண்களை வதைக்கிறது.
இதனால் ஏற்படும் மன அழுத்தம், மாறிப்போன உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் உடலியல் மற்றும் மனம் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வைட்டமின்கள், மினரல்கள் குறைபாடுதான்.
பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

ஷைனி ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்யத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
அடுத்ததாக உடற்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடற்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.
இதனால் ஏற்படும் மன அழுத்தம், மாறிப்போன உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் உடலியல் மற்றும் மனம் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வைட்டமின்கள், மினரல்கள் குறைபாடுதான்.
பொதுவாக, பெண்கள் மினரல், வைட்டமின்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். பழங்கள், பருப்பு உணவுகள் அதில் முக்கியனமானவை. அதேபோல் பெரும்பாலான பெண்கள், அலுவலகம் செல்லும் வேகத்தில் காலை உணவுகளைத் தவிர்த்து விடுகின்றனர். அது அவர்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
காலை உணவு சாப்பிட்ட பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஜூஸ், கிரீன் டீ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்கவேண்டும். சர்க்கரைக்குப் பதில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. அரிசி உணவுகளை குறைத்துக்கொண்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பெண்களை அதிகமாக பாதிக்கக் கூடிய நோய் அனீமியா எனப்படும் ரத்தசோகை. இதற்குக் காரணம் இரும்புச் சத்து குறைபாடு. அதனால், இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கீரை வகைகள், பருப்பு வகைகளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். கூடவே வைட்டமின் சி சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது.

ஷைனி ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்உதாரணமாக மீன் சாப்பிடும்போது அதோடு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். உணவு சுவையாக இருப்பதுடன் ஆரோக்யத்தையும் கொடுக்கும். ஜூஸ்களிலும் கூட எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம். முட்டைக்கோஸ், மாங்காய் போன்ற 'பச்சை'க் காய்கறிகளிலும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் . தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் உடலுக்கு நல்லது. வைட்டமின் பி- 6 மற்றும் பி- 12 குறைவினாலும் அனீமியா உண்டாகும். பி -12 குறைபாடு, சைவ உணவுகள் சாப்பிடுவோருக்கு அதிகமாக ஏற்படும். எனவே தினமும் பால் உணவுகள் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
35 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கால்சியம் குறைபாடு உண்டாகும். இதனால் எழும்பு முறிவு, எலும்பு தேய்மானம் ஏற்படும். இதனால் கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.
அடுத்ததாக உடற்பருமன் பெண்களைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. இதனால் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடற்பருமன் ஏற்படுத்தக் கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சீரகம், சோம்பு, ஓமம் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கின்றன. எனவே, ஆன்டி ஆக்ஸ்டிடென்ட்கள் அதிகமாக உள்ள திராட்சை, பீட்ரூட் போன்ற நிற காய்கறிகள் மற்றும் பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் காலையில் குறைந்தது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்வது, ஜிம்மிலோ, வீட்டிலோ உடற்பயிற்சிகள் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
கர்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பெண்களை அதிக அளவில் பாதித்து வருகின்றன. எனவே 6 மாதத்துக்கு ஒருமுறை முழுமையாக செக் அப் செய்துகொள்வது நல்லது. பலர் சரியாகத் தூங்குவதில்லை. தூக்கமின்மையே பல நோய்களை உற்பத்தி செய்துவிடும். எனவே நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம்.
பிரசவித்த உடனே குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பதால் தாயின் உடல்நலம் கெட்டு, தாய்க்கு மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது.
பிரசவத்துக்குப் பிறகான கருத்தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் அவசியம். ஏனென்றால், புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த தம்பதியருக்கு குழந்தை பிறந்ததுமே எந்த மாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்; குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரத்தில் இந்த சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பது பற்றிய விபரங்கள் அவ்வளவாகத் தெரிவதில்லை.
பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு மற்றும் தேவை இடைவெளி. குழந்தையைப் பிரசவித்த முதல் 6 மாதகாலத்தில் திட்டமிடப்படாமல், குறுகியகால இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழாமல் தடுப்பதுதான் இதன் நோக்கம்.
குழந்தை பிறந்ததுமே குடும்பக் கட்டுப்பாடு பற்றிய புரிதலும், அதற்கான வாய்ப்பு வசதிகளும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குழந்தை பிறந்தபிறகு எந்தமாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விபரமும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
‘‘பிரசவம் ஆனதும் அதைத் தொடர்ந்த 6 மாதங்கள் பிரசவத்துக்குப் பிந்தைய காலம் எனப்படுகிறது. இந்த 6 மாதகாலத்தில் புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் கருத்தடை முறை ஒன்றைப் பயன்படுத்தினால் திட்டமிடப்படாத கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழ்வதால் ஏற்படக்கூடிய உடல்நலன் தொடர்பான அபாயங்களையும் தவிர்க்க முடியும்.
பிரசவித்த உடனே குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பதால் தாயின் உடல்நலம் கெட்டு, தாய்க்கு மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது. திட்டமிடப்படாத கருத்தரிப்பின் விளைவுகளை பிரசவத்துக்குப் பிறகு பல மாதங்களுக்கு காணலாம். இதனால் தாய்க்கு மனச்சோர்வும், குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளும் உண்டாகின்றன.

பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு முறைகள் பற்றிய தகவல்களை கணவனும் மனைவியும் அறிந்து கொள்வதால் அவர்களுடைய உடல்நலம் மேம்படுகிறது.
காப்பர் ‘டி’ என்று சொல்லப்படும் IUD- கள். தாமிரக் கம்பியினாலான இந்த சாதனம் குழந்தை பிறந்ததுமே அல்லது 48 மணி நேரத்துக்குள் பெண்ணின் கருப்பைக்குள் நுழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த 4 வாரங்கள் கழித்து கூட, IUD-களை நுழைக்க முடியும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு குழந்தையைப் பிரசவித்த 6 வாரங்களில் புரொஜெஸ்ட்டின்- ஒன்லி (Progestin only) ஊசிகளையும், மாத்திரைகளையும் தொடங்கலாம். DMPA ஊசி 3 மாதங்களுக்கு ஒருமுறை போடப்படுகிறது.
ஆனால் புரொஜெஸ்ட்டின் (Progestin) ஒன்லி மாத்திரைகளை தினமும் ஒரு தடவை எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டாத பெண்கள் குழந்தையைப் பிரசவித்த உடனே புரொஜெஸ்ட்டின் - ஒன்லி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். C எஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்டின் மாத்திரைகள் இரண்டையும் குழந்தையைப் பெற்றெடுத்தபிறகு, தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தி 6 மாதங்கள் கழித்து தர வேண்டும்.
தாய்ப்பால் புகட்டினாலும், புகட்டாவிட்டாலும் எல்லாப் பெண்களும் குழந்தையைப் பிரசவித்த பின்னர் காண்டம்களை ஒரு கருத்தடை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். குழந்தையைப் பிரசவித்ததும் தாய்ப்பால் புகட்டுவது ஓர் இயற்கையான கருத்தடை முறையாகும். இதை மருத்துவர்கள் LAM என்கின்றனர். எனினும், பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனதும் தாய்மார்கள் LAM முறையைவிட்டுவிட்டு வேறொரு கருத்தடை முறைக்கு மாற வேண்டும்.
C டியூபல் லிகேஷன் (Tubal ligation) எனப்படும் பெண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சையை பிரசவமான உடனே அல்லது 4 நாட்கள் வரை அல்லது பிரசவித்த 6 வாரங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது ஒரு நிரந்தரமான கருத்தடை முறை. எனவே, இனிமேல் குழந்தை வேண்டாம் எனத் தீர்மானிக்கும் பெண்கள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட கருத்தடை முறைகளைப் பற்றி மகப்பேறு மருத்துவர் அல்லது மகளிர் நல மருத்துவரிடம் பிரசவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே கலந்தாலோசியுங்கள். அப்போதுதான் பிரசவம் ஆனதும் உங்களுக்குப் பொருத்தமான ஒரு கருத்தடை முறையை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு மற்றும் தேவை இடைவெளி. குழந்தையைப் பிரசவித்த முதல் 6 மாதகாலத்தில் திட்டமிடப்படாமல், குறுகியகால இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழாமல் தடுப்பதுதான் இதன் நோக்கம்.
குழந்தை பிறந்ததுமே குடும்பக் கட்டுப்பாடு பற்றிய புரிதலும், அதற்கான வாய்ப்பு வசதிகளும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குழந்தை பிறந்தபிறகு எந்தமாதிரியான கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற விபரமும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
‘‘பிரசவம் ஆனதும் அதைத் தொடர்ந்த 6 மாதங்கள் பிரசவத்துக்குப் பிந்தைய காலம் எனப்படுகிறது. இந்த 6 மாதகாலத்தில் புதிதாகக் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் கருத்தடை முறை ஒன்றைப் பயன்படுத்தினால் திட்டமிடப்படாத கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பு நிகழ்வதால் ஏற்படக்கூடிய உடல்நலன் தொடர்பான அபாயங்களையும் தவிர்க்க முடியும்.
பிரசவித்த உடனே குறுகிய இடைவெளிக்குள் கருத்தரிப்பதால் தாயின் உடல்நலம் கெட்டு, தாய்க்கு மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கிறது. திட்டமிடப்படாத கருத்தரிப்பின் விளைவுகளை பிரசவத்துக்குப் பிறகு பல மாதங்களுக்கு காணலாம். இதனால் தாய்க்கு மனச்சோர்வும், குழந்தைகளை வளர்ப்பதில் நெருக்கடிகளும் உண்டாகின்றன.

பிரசவத்துக்குப் பிந்தைய கருத்தடுப்பு முறைகள் பற்றிய தகவல்களை கணவனும் மனைவியும் அறிந்து கொள்வதால் அவர்களுடைய உடல்நலம் மேம்படுகிறது.
காப்பர் ‘டி’ என்று சொல்லப்படும் IUD- கள். தாமிரக் கம்பியினாலான இந்த சாதனம் குழந்தை பிறந்ததுமே அல்லது 48 மணி நேரத்துக்குள் பெண்ணின் கருப்பைக்குள் நுழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த 4 வாரங்கள் கழித்து கூட, IUD-களை நுழைக்க முடியும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு குழந்தையைப் பிரசவித்த 6 வாரங்களில் புரொஜெஸ்ட்டின்- ஒன்லி (Progestin only) ஊசிகளையும், மாத்திரைகளையும் தொடங்கலாம். DMPA ஊசி 3 மாதங்களுக்கு ஒருமுறை போடப்படுகிறது.
ஆனால் புரொஜெஸ்ட்டின் (Progestin) ஒன்லி மாத்திரைகளை தினமும் ஒரு தடவை எடுத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டாத பெண்கள் குழந்தையைப் பிரசவித்த உடனே புரொஜெஸ்ட்டின் - ஒன்லி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். C எஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்டின் மாத்திரைகள் இரண்டையும் குழந்தையைப் பெற்றெடுத்தபிறகு, தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்தி 6 மாதங்கள் கழித்து தர வேண்டும்.
தாய்ப்பால் புகட்டினாலும், புகட்டாவிட்டாலும் எல்லாப் பெண்களும் குழந்தையைப் பிரசவித்த பின்னர் காண்டம்களை ஒரு கருத்தடை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். குழந்தையைப் பிரசவித்ததும் தாய்ப்பால் புகட்டுவது ஓர் இயற்கையான கருத்தடை முறையாகும். இதை மருத்துவர்கள் LAM என்கின்றனர். எனினும், பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் ஆனதும் தாய்மார்கள் LAM முறையைவிட்டுவிட்டு வேறொரு கருத்தடை முறைக்கு மாற வேண்டும்.
C டியூபல் லிகேஷன் (Tubal ligation) எனப்படும் பெண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சையை பிரசவமான உடனே அல்லது 4 நாட்கள் வரை அல்லது பிரசவித்த 6 வாரங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது ஒரு நிரந்தரமான கருத்தடை முறை. எனவே, இனிமேல் குழந்தை வேண்டாம் எனத் தீர்மானிக்கும் பெண்கள் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட கருத்தடை முறைகளைப் பற்றி மகப்பேறு மருத்துவர் அல்லது மகளிர் நல மருத்துவரிடம் பிரசவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே கலந்தாலோசியுங்கள். அப்போதுதான் பிரசவம் ஆனதும் உங்களுக்குப் பொருத்தமான ஒரு கருத்தடை முறையை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
கர்ப்ப காலத்தில், சிறுநீர் வெளியேறும் பகுதியை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினால் சிறுநீர்த் தொற்று ஏற்படும். இதனால் ஏற்படும் பிரச்சனையை பார்க்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு, சிறுநீர் போகும்போது எரிச்சல், கடுப்பு, அரிப்பு, அடிவயிற்றில் வலி, முதுகில் விலாபகுதிகளில் வலி ஏற்படுவது, கஞ்சி அல்லது பால்போல் சிறுநீர் போவது, சிறுநீரில் ரத்தம் கலந்துபோவது, சிறுநீர் துர்நாற்றம் எடுப்பது, குளிர் காய்ச்சல் வருவது, வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படுவது ஆகியவை சிறுநீர்த் தொற்றுக்கான முக்கிய அறிகுறிகள் ஆகும்.
கர்ப்ப காலத்தில், சிறுநீர் வெளியேறும் பகுதியை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும், நீரிழிவு நோய் இருந்தாலும் சிறுநீர்த் தொற்று ஏற்படும். வீட்டில் கழிப்பறை வசதியும் தண்ணீர் வசதியும் இல்லாத ஏழை கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவார்கள். அப்போது அவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட வழி கிடைக்கிறது. காரணம், இந்த சந்தர்ப்பங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகமாக சேர்ந்துவிடுவதால், அங்கே பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகி, நோயைக் கொண்டு வரும்.
இது தவிர, கருத்தரித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ந்துகொண்டே போவதால், கருப்பை அதற்கேற்றாற் போல் தன்னை விரித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அப்போது அருகில் உள்ள சிறுநீர்ப்பையின் இடத்தையும் கொஞ்சம் அபகரித்துக் கொள்கிறது. குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை உள்நோக்கி அழுத்துவதால், சிறுநீர்ப்பையில் சிறிய வளைவு ஏற்படுகிறது. அந்த வளைவில் சிறுநீர் தேங்குகிறது. தேங்கும் சிறுநீரில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள காரணத்தால், கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் கர்ப்பிணியின் உடலில் பல ஹார்மோன்கள் மாற்றம் அடைகின்றன. இவற்றின் விளைவால், குழந்தை பிறந்து வெளியேறும் கர்ப்ப வாயில் உள்ள சருமம் விரிவடையும். அந்த இடத்தில் சரும வறட்சி இருந்தால் வெடிப்புகள் உண்டாகும். அப்போது அந்த வெடிப்புகளிலும் பாக்டீரியாக்கள் புகுந்துகொண்டு சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பையில் மட்டும் கிருமித்தொற்று இருந்தால் அதை சிறுநீர்ப்பை அழற்சி(Cystitis) என்றும், சிறுநீரகத்திலும் தொற்று காணப்பட்டால், அதை சிறுநீரகச்சீழ் அழற்சி(Pyelonephritis) என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். புதிதாகத் திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றுக்கு தேனிலவுச் சிறுநீர்ப்பை அழற்சி(Honeymoon cystitis) என்ற பெயரும் உண்டு.
கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையில் மட்டும் நோய்த்தொற்று ஏற்படுமானால், அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்காது. கர்ப்பிணியின் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது என்றால், சிலருக்கு குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பிரசவம் ஆகலாம். சிறுநீரைப் பரிசோதிக்காமல் தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும்போது நோய் முழுவதும் கட்டுப்படாமல், கர்ப்பிணியின் பொது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
இது பிரசவ நேரத்தில் தாய் சேய் இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். முதல் டிரைமஸ்டரில் இது ஏற்படுமானால், கருச்சிதைவு ஏற்படவும் வழி உண்டு. மேலும், கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படும்போது, கர்ப்பிணிக்கு ரத்தசோகை நோய் உண்டாகும். இதுவும் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில், சிறுநீர் வெளியேறும் பகுதியை சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும், நீரிழிவு நோய் இருந்தாலும் சிறுநீர்த் தொற்று ஏற்படும். வீட்டில் கழிப்பறை வசதியும் தண்ணீர் வசதியும் இல்லாத ஏழை கர்ப்பிணிகள் சிறுநீரை அடக்குவார்கள். அப்போது அவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட வழி கிடைக்கிறது. காரணம், இந்த சந்தர்ப்பங்களில் சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகமாக சேர்ந்துவிடுவதால், அங்கே பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகி, நோயைக் கொண்டு வரும்.
இது தவிர, கருத்தரித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ந்துகொண்டே போவதால், கருப்பை அதற்கேற்றாற் போல் தன்னை விரித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அப்போது அருகில் உள்ள சிறுநீர்ப்பையின் இடத்தையும் கொஞ்சம் அபகரித்துக் கொள்கிறது. குழந்தையின் தலை சிறுநீர்ப்பையை உள்நோக்கி அழுத்துவதால், சிறுநீர்ப்பையில் சிறிய வளைவு ஏற்படுகிறது. அந்த வளைவில் சிறுநீர் தேங்குகிறது. தேங்கும் சிறுநீரில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள காரணத்தால், கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுகிறது.

கர்ப்பத்தின் இறுதிக் கட்டத்தில் கர்ப்பிணியின் உடலில் பல ஹார்மோன்கள் மாற்றம் அடைகின்றன. இவற்றின் விளைவால், குழந்தை பிறந்து வெளியேறும் கர்ப்ப வாயில் உள்ள சருமம் விரிவடையும். அந்த இடத்தில் சரும வறட்சி இருந்தால் வெடிப்புகள் உண்டாகும். அப்போது அந்த வெடிப்புகளிலும் பாக்டீரியாக்கள் புகுந்துகொண்டு சிறுநீர்த் தொற்றை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பையில் மட்டும் கிருமித்தொற்று இருந்தால் அதை சிறுநீர்ப்பை அழற்சி(Cystitis) என்றும், சிறுநீரகத்திலும் தொற்று காணப்பட்டால், அதை சிறுநீரகச்சீழ் அழற்சி(Pyelonephritis) என்றும் மருத்துவர்கள் அழைக்கிறார்கள். புதிதாகத் திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றுக்கு தேனிலவுச் சிறுநீர்ப்பை அழற்சி(Honeymoon cystitis) என்ற பெயரும் உண்டு.
கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையில் மட்டும் நோய்த்தொற்று ஏற்படுமானால், அது கருவில் வளரும் குழந்தையை பாதிக்காது. கர்ப்பிணியின் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது என்றால், சிலருக்கு குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பிரசவம் ஆகலாம். சிறுநீரைப் பரிசோதிக்காமல் தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைக் கொடுக்கும்போது நோய் முழுவதும் கட்டுப்படாமல், கர்ப்பிணியின் பொது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
இது பிரசவ நேரத்தில் தாய் சேய் இருவருக்கும் சிக்கலை ஏற்படுத்தும். முதல் டிரைமஸ்டரில் இது ஏற்படுமானால், கருச்சிதைவு ஏற்படவும் வழி உண்டு. மேலும், கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர்த்தொற்று ஏற்படும்போது, கர்ப்பிணிக்கு ரத்தசோகை நோய் உண்டாகும். இதுவும் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம்.
ஆம், ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்து, பின் அந்த செல்கள் பெருகி, சில மாதங்கள் கழித்து, குழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்ன? உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1-2 வார காலத்தில், கருமுட்டையானது விந்தணுவுடன் இணைந்து, சிறிய கடுகு அளவில் இருக்கும். இந்நிலையில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும்.
5-ம் வாரத்தில், அந்த கரு சற்று வளர்ந்து மிளகு அளவு இருக்கும். இந்த காலத்தில் தான் இரத்த நாளங்கள், இதயம், தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற ஆரம்பமாகும். இந்த வாரத்தில் கரு சுமார் 0.05 இன்ச் இருக்கும்.
7 வாரத்தில் கரு 1/2 இன்ச், அதாவது ஒரு ப்ளூபெர்ரி அளவில் இருக்கும்.

9 வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரிப் பழ அளவில் இருக்கும். 9 வாரத்தில் தான், கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.
15 வாரத்தில் குழந்தை ஒரு ஆப்பிள் அளவில், அதாவது 4 இன்ச் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தை மெதுவாக நகர ஆரம்பிக்கும்.
18 வாரத்தில் குழந்தை 6 இன்ச் இருக்கும். 19 ஆவது வாரத்தில், குழந்தையின் கால்கள் வளர ஆரம்பிக்கும்.
22 வாரத்தில் குழந்தை சுமார் 10 இன்ச் அளவில் இருக்கும். இந்த காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளர ஆரம்பமாகும்.
30 வாரம் இந்த வாரத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தை தூங்குவதையும், விழித்துக் கொண்டிருப்பதையும் உணர முடியும். 30 வார காலத்தில் குழந்தை சுமார் 15 இன்ச் அளவில் இருக்கும்.
40-42 வாரம் இது கர்ப்ப காலம் முடிவடையும் காலமாகும். இந்த காலத்தில் குழந்தை 20 இன்ச் அளவில் இருக்கும்.
ஆம், ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்து, பின் அந்த செல்கள் பெருகி, சில மாதங்கள் கழித்து, குழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்ன? உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1-2 வார காலத்தில், கருமுட்டையானது விந்தணுவுடன் இணைந்து, சிறிய கடுகு அளவில் இருக்கும். இந்நிலையில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும்.
5-ம் வாரத்தில், அந்த கரு சற்று வளர்ந்து மிளகு அளவு இருக்கும். இந்த காலத்தில் தான் இரத்த நாளங்கள், இதயம், தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற ஆரம்பமாகும். இந்த வாரத்தில் கரு சுமார் 0.05 இன்ச் இருக்கும்.
7 வாரத்தில் கரு 1/2 இன்ச், அதாவது ஒரு ப்ளூபெர்ரி அளவில் இருக்கும்.

9 வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரிப் பழ அளவில் இருக்கும். 9 வாரத்தில் தான், கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.
15 வாரத்தில் குழந்தை ஒரு ஆப்பிள் அளவில், அதாவது 4 இன்ச் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தை மெதுவாக நகர ஆரம்பிக்கும்.
18 வாரத்தில் குழந்தை 6 இன்ச் இருக்கும். 19 ஆவது வாரத்தில், குழந்தையின் கால்கள் வளர ஆரம்பிக்கும்.
22 வாரத்தில் குழந்தை சுமார் 10 இன்ச் அளவில் இருக்கும். இந்த காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளர ஆரம்பமாகும்.
30 வாரம் இந்த வாரத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தை தூங்குவதையும், விழித்துக் கொண்டிருப்பதையும் உணர முடியும். 30 வார காலத்தில் குழந்தை சுமார் 15 இன்ச் அளவில் இருக்கும்.
40-42 வாரம் இது கர்ப்ப காலம் முடிவடையும் காலமாகும். இந்த காலத்தில் குழந்தை 20 இன்ச் அளவில் இருக்கும்.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகளை அனுபவிக்கிறார்கள்.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும் மட்டும் வலிகளை அனுபவிப்பதில்லை. பிரசவத்திற்கு பிறகும் கூட பெண்களுக்கு சில வலிகளை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் பின்னாளில் சற்று அதிகமாக சிரமப்படுவார்கள். பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் வலிகளால் பெண்கள் அசௌகரியமாக உணருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களின் மார்பகங்கள் சற்று அதிகமாகவே வளர்ச்சியடைந்திருக்கும். பின்னர் பால் கொடுக்க தொடங்கும் போது, குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால், தாய்க்கு பால் கட்டிக்கொள்ளும். இதனால் பெண்களுக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்படும். மேலும் மார்பக காம்புகளில் உண்டாகும் புண்களினாலும் வலி உண்டாகும்.
பிரசவத்திற்கு பிறகு பெண் உறுப்புகளில் உள்ள காயங்கள் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதுவரை பெண் உறுப்புகளில் வலி இருக்கும். இது இயற்கையானது தான். குடல் அசைவுகளின் போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகும்.

சில நேரங்களில் யோனிகளில் உண்டாகும் வலியையும், நரம்புகளில் உண்டாகும் வலியையும் பெண்களால் வேறுபடுத்தி காணமுடியாது. இந்த வலியால் அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். அதுமட்டுமின்றி அவர்களால் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது குழந்தைக்கு பால் தரவோ மிக சிரமமாக இருக்கும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் காயங்கள் ஆறும் வரை அவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது எடைகளை தூக்கமால் இருக்க வேண்டியது அவசியம்.
மகப்பேறுக்கு பிறகு இது ஏற்படுவது தான். ஆனால் பாக்டீரியாக்கள் சிறுநீரகப்பாதை வழியாகச் சென்று சிறுநீரகத்தை அடைந்தால், வலியும், எரிச்சலும் உண்டாகும்.
பிரசவத்திற்கு பிறகு சிறுநீரகப்பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகள் இருப்பது சாதாரணம் தான். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாமல் நீண்ட காலம் நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது சிறந்தது.
கர்ப்பமாக இருக்கும் போதே பெண்களின் மார்பகங்கள் சற்று அதிகமாகவே வளர்ச்சியடைந்திருக்கும். பின்னர் பால் கொடுக்க தொடங்கும் போது, குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால், தாய்க்கு பால் கட்டிக்கொள்ளும். இதனால் பெண்களுக்கு மார்பகத்தில் கடுமையான வலி ஏற்படும். மேலும் மார்பக காம்புகளில் உண்டாகும் புண்களினாலும் வலி உண்டாகும்.
பிரசவத்திற்கு பிறகு பெண் உறுப்புகளில் உள்ள காயங்கள் முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுத்துக்கொள்ளும். அதுவரை பெண் உறுப்புகளில் வலி இருக்கும். இது இயற்கையானது தான். குடல் அசைவுகளின் போது பெண்ணுறுப்பில் வலி உண்டாகும்.

சில நேரங்களில் யோனிகளில் உண்டாகும் வலியையும், நரம்புகளில் உண்டாகும் வலியையும் பெண்களால் வேறுபடுத்தி காணமுடியாது. இந்த வலியால் அவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகும். அதுமட்டுமின்றி அவர்களால் நீண்ட நேரம் உட்காரவோ அல்லது குழந்தைக்கு பால் தரவோ மிக சிரமமாக இருக்கும்.
சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் காயங்கள் ஆறும் வரை அவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது எடைகளை தூக்கமால் இருக்க வேண்டியது அவசியம்.
மகப்பேறுக்கு பிறகு இது ஏற்படுவது தான். ஆனால் பாக்டீரியாக்கள் சிறுநீரகப்பாதை வழியாகச் சென்று சிறுநீரகத்தை அடைந்தால், வலியும், எரிச்சலும் உண்டாகும்.
பிரசவத்திற்கு பிறகு சிறுநீரகப்பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகள் இருப்பது சாதாரணம் தான். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாமல் நீண்ட காலம் நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது சிறந்தது.
ஏழில் ஒரு கரு சிதைகிறது. 35 வயதுக்கு கர்ப்பமடையும் பெண்களுக்கு ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குக் கருச்சிதையும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். 35 வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உதிரப்போக்கும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தப்போக்கு நின்ற சுமார் 50 விழுக்காடு பெண்களுக்கு கர்ப்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதிக ரத்தப் போக்கும், தீவிரமான தசைப்பிடிப்பும் மாறும் சூழலில் கருச்சிதைவைத் தவிர்க்க இயலாது. இதை தவிர்க்க இயலாத கருச்சிதைவு என்பர்.
பரிசோதனையில் கருப்பைக் கழுத்து சிதைந்து திறக்க ஆரம்பித்திருப்பதையும், கருவானது, கருப்பைக் கழுத்தின் வெளிப்புறத் திறப்பு வழியாகத் தொங்கிக் கொண்டிருப்பதையும் மருத்துவரால் கண்டறிய இயலும். இந்த நிலையில் எந்த சிகிச்சையாலும் இத்தகைய கருச்சிதைவை தடுக்க இயலாது.
* மூன்று மாத கர்ப்பத்தில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு அச்சுறுத்தும் கருச்சிதைவு என்று பெயர். இந்த நிலையில் உதிரப்போக்கு குறைவாகவோ அல்லது மாதவிலக்குக் காலத்தில் ஏற்படுவதைப் போன்றோ இருக்கும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் வரையிலோ அல்லது சில நாட்கள் வரையிலோ கூட உதிரப் போக்கு இருக்கலாம். இந்த நிலையைப் பார்த்து கர்ப்பம் கலைந்துவிட்டதாகப் பலர் நினைத்துக் கொள்வார்கள்.
உடனடியாக மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடுவார். புறகர்ப்பம், குழந்தை சரியாக உருவாகாத நிலை போன்ற சில நிலைகளில் இத்தகைய அச்சுறுத்தும் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

பயம் காட்டுமே தவிர, குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்காமல் தடுத்துக்கொள்ளலாம். சிலவேளைகளில் பிரச்னை தீவிரமாக இருந்தால் கருச்சிதைவை தவிர்க்கவும் இயலாது. வைட்டமின்-ஈ மாத்திரைகள், படுக்கையில் முழுமையாக ஓய்வு எடுத்தல் போன்று மருத்துவரின் ஆலோசனையை சரியாகப் பின் பற்றினால் அச்சுறுத்தும் கருச்சிதைவைத் தடுத்துக் கொள்ளலாம்.
* சிலருக்கு பிரசவத்தை நெருங்கும் காலத்தில் உடை நனைகிற அளவுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு பேற்றுக்கு முன்னான ரத்தப்போக்கு அல்லது ஆன்டிபார்ட்டம் ஹெமரேஜ் என்று பெயர். கருப்பைக் கழுத்துப் பகுதியில் தோன்றும் பிரச்னையால் இவ்வாறு ஏற்படுகிறது.
பனிக்குடமானது தான் அமைந்துள்ள இடத்தைவிட்டு நகர்ந்துவிடும் நிலையில் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. இதை நஞ்சுக்கொடி முந்து நிலை அல்லது பிளசென்டா ப்ரேவியா என்கிறார்கள். தற்செயலாக உதிரப்போக்கு ஏற்படுவதை கருக்கொடை விலகல் அல்லது அப்ரப்டோ ப்ளசன்டே என்கிறார்கள். இதில் இருவகைகள் உள்ளன. கொஞ்சமாக விலகுவது மற்றும் அதிகமாக விலகுவது.
முப்பதாவது வாரங்களில் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் பனிக்குடத்தைத் தெளிவாகப் பார்த்து பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கும். ரத்த இழப்பை ஈடுகட்ட ரத்தம் செலுத்த வேண்டிய தேவையிருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும்.
குழந்தை உயிரோடு இருந்தால் பிரச்னை அதிகமாவதற்கு முன்பே பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தை விரைவுப் படுத்தி குழந்தையைப் பிறக்கச் செய்துவிடலாம். இது இயல்பான பிரசவமாகவோ, சிசேரியன் பிரசவமாகவோ இருக்கக்கூடும். பத்தில் நான்கு பேருக்கு இயல்பான பிரசவம் நடக்கிறது. பத்தில் ஆறு பேருக்கு சிசேரியன் தேவைப்படுகிறது.
* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உதிரப்போக்கும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தப்போக்கு நின்ற சுமார் 50 விழுக்காடு பெண்களுக்கு கர்ப்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதிக ரத்தப் போக்கும், தீவிரமான தசைப்பிடிப்பும் மாறும் சூழலில் கருச்சிதைவைத் தவிர்க்க இயலாது. இதை தவிர்க்க இயலாத கருச்சிதைவு என்பர்.
பரிசோதனையில் கருப்பைக் கழுத்து சிதைந்து திறக்க ஆரம்பித்திருப்பதையும், கருவானது, கருப்பைக் கழுத்தின் வெளிப்புறத் திறப்பு வழியாகத் தொங்கிக் கொண்டிருப்பதையும் மருத்துவரால் கண்டறிய இயலும். இந்த நிலையில் எந்த சிகிச்சையாலும் இத்தகைய கருச்சிதைவை தடுக்க இயலாது.
* மூன்று மாத கர்ப்பத்தில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு அச்சுறுத்தும் கருச்சிதைவு என்று பெயர். இந்த நிலையில் உதிரப்போக்கு குறைவாகவோ அல்லது மாதவிலக்குக் காலத்தில் ஏற்படுவதைப் போன்றோ இருக்கும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் வரையிலோ அல்லது சில நாட்கள் வரையிலோ கூட உதிரப் போக்கு இருக்கலாம். இந்த நிலையைப் பார்த்து கர்ப்பம் கலைந்துவிட்டதாகப் பலர் நினைத்துக் கொள்வார்கள்.
உடனடியாக மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடுவார். புறகர்ப்பம், குழந்தை சரியாக உருவாகாத நிலை போன்ற சில நிலைகளில் இத்தகைய அச்சுறுத்தும் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

பயம் காட்டுமே தவிர, குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்காமல் தடுத்துக்கொள்ளலாம். சிலவேளைகளில் பிரச்னை தீவிரமாக இருந்தால் கருச்சிதைவை தவிர்க்கவும் இயலாது. வைட்டமின்-ஈ மாத்திரைகள், படுக்கையில் முழுமையாக ஓய்வு எடுத்தல் போன்று மருத்துவரின் ஆலோசனையை சரியாகப் பின் பற்றினால் அச்சுறுத்தும் கருச்சிதைவைத் தடுத்துக் கொள்ளலாம்.
* சிலருக்கு பிரசவத்தை நெருங்கும் காலத்தில் உடை நனைகிற அளவுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு பேற்றுக்கு முன்னான ரத்தப்போக்கு அல்லது ஆன்டிபார்ட்டம் ஹெமரேஜ் என்று பெயர். கருப்பைக் கழுத்துப் பகுதியில் தோன்றும் பிரச்னையால் இவ்வாறு ஏற்படுகிறது.
பனிக்குடமானது தான் அமைந்துள்ள இடத்தைவிட்டு நகர்ந்துவிடும் நிலையில் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. இதை நஞ்சுக்கொடி முந்து நிலை அல்லது பிளசென்டா ப்ரேவியா என்கிறார்கள். தற்செயலாக உதிரப்போக்கு ஏற்படுவதை கருக்கொடை விலகல் அல்லது அப்ரப்டோ ப்ளசன்டே என்கிறார்கள். இதில் இருவகைகள் உள்ளன. கொஞ்சமாக விலகுவது மற்றும் அதிகமாக விலகுவது.
முப்பதாவது வாரங்களில் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் பனிக்குடத்தைத் தெளிவாகப் பார்த்து பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கும். ரத்த இழப்பை ஈடுகட்ட ரத்தம் செலுத்த வேண்டிய தேவையிருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும்.
குழந்தை உயிரோடு இருந்தால் பிரச்னை அதிகமாவதற்கு முன்பே பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தை விரைவுப் படுத்தி குழந்தையைப் பிறக்கச் செய்துவிடலாம். இது இயல்பான பிரசவமாகவோ, சிசேரியன் பிரசவமாகவோ இருக்கக்கூடும். பத்தில் நான்கு பேருக்கு இயல்பான பிரசவம் நடக்கிறது. பத்தில் ஆறு பேருக்கு சிசேரியன் தேவைப்படுகிறது.
மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் பொதுவாக பெண்களுக்கு குறிப்பாக 7-ம் மாதம் நெருங்கிவிட்டால் பயம் அதிகமாகிவிடும் போலியான வலி எது? பிரசவ வலி எது என்று புரியாமல் குழம்புவார்கள். இந்த பகுதியில் பிரசவ வலி என்பது எப்படி இருக்கும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குறித்துக்கொடுத்துள்ள நாட்கள் நெருங்கும் போது, அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் இருந்தால், அது பிரசவ வலியாக இருக்கலாம். அதுபோல ஒரே நாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தால், கர்ப்ப வாய் அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
முதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.
இடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.
சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.

பனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.
கர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.
வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.
தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா? ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது. பொதுவான அறிகுறிகள்.
முதல் வலி வந்ததுமே ஏதாவது ஆகிடுமோ என பயம் வேண்டாம். அந்த வலி தீவிர நிலையை அடைந்து முழுமையான பிரசவ வலியாக மாற சில மணி நேரம் ஆகும். அதற்குள் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.
இடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜ வலியா, பொய்யானதா எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த வலியானது இழுத்துப் பிடித்து பிறகு விடுபடுவதுமாகத் தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம்.இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள்.
சில நேரங்களில் அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியாத போது உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது.

பனிக்குடம் உடைவது நிச்சயமாக பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறிதான். அதைப் பெரும்பாலும் எல்லா பெண்களாலும் உணர முடியும். பனிக்குடம் உடைந்துவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு அது உடனடியாக பிரசவ வலியை ஏற்படுத்தும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. அந்தக் கசிவுகள் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதே காரணம்.
கர்ப்பம் உறுதியான நாள் முதல் உங்களுக்கு மாதவிலக்கு வந்திருக்காது. பிரசவம் வரை ரத்தப்போக்கு இருக்காது என்றும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென அப்படி ரத்தப் போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவ நேரம் நெருங்கிவிட்டதற்கான அவசர அறிகுறியாக அது இருக்கலாம்.
வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென வித்தியாசமான, கடுமையான தலைவலியும் வந்தால், அதுவும்கூட பிரசவம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். அடுத்து பிரசவ வலி ஏற்படப் போவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். மருத்துவரைப் பாருங்கள்.
தொடர்ந்து 2 அல்லது 3 மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாதது போல உணர்கிறீர்களா? ஒருநொடிகூடத் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியதற்கான அவசர எச்சரிக்கை மணி அது. பொதுவான அறிகுறிகள்.
‘அந்த நாட்கள்’ எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
‘அந்த நாட்கள்’ எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படும். இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை. இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது.. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம்.
இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்னைகள் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.

மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கு ஓய்வு என்பது அவசியம். இந்த நாட்களில் உதிரப்போக்குக் காரணமாக உடல் மற்றும் மனதளவில் சில சிரமங்களை எதிர்கொள்வர். ஆனால், இன்றைய நடைமுறையில் பணிக்குச் செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதால் ஓய்வு என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகிவிட்டது.
இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம். கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
இந்த நாட்களில் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த நாட்களிலாவது அவசியம் பருக வேண்டும்.
இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை. இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது.. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம்.
இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்னைகள் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.

மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கு ஓய்வு என்பது அவசியம். இந்த நாட்களில் உதிரப்போக்குக் காரணமாக உடல் மற்றும் மனதளவில் சில சிரமங்களை எதிர்கொள்வர். ஆனால், இன்றைய நடைமுறையில் பணிக்குச் செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதால் ஓய்வு என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகிவிட்டது.
இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம். கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
இந்த நாட்களில் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த நாட்களிலாவது அவசியம் பருக வேண்டும்.
பெண்களுக்கு சில காரணங்களால் மார்பங்களில் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த பகுதியில் மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்பை சாதாரணமாக நினைத்து விட்டுவிட வேண்டாம். இதற்கான உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பகுதியில் மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் தண்ணீர் இல்லை என்றால், அரிப்பு மற்றும் கடுமையான சருமம் இருக்கும். நீங்கள் மிக அதிக நேரம் குளித்தாலோ அல்லது சூடான நீரை பயன்படுத்தினாலோ இது போன்று ஏற்படும். சில சோப்புகள் சருமத்தை வறட்சியடைய செய்யும்.
உங்களது சருமத்திற்கு ஏற்ற மாஸ்சுரைசர் உபயோகிக்க வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான சருமத்தை சுத்தமாக துடைத்துவிட்டு மாஸ்சுரைசர் அப்ளை செய்யுங்கள். இயற்கை எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை ஒரு சிறந்த தீர்வாக அமையும். இது நீங்கள் உபயோகிக்கும் சோப்புகளில், ஆல்கஹால் மற்றும் பிற கெமிக்கல்கள் இருந்தாலும் காக்கும்.

எக்ஸிமா என்பது சருமத்தின் ஒரு நிலை. இது அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை உண்டாக்கும். இது மார்பகத்திலும் இது போன்ற ஒருநிலையை ஏற்படுத்தும். இது பரம்பரையாகவும் தொடரலாம் அல்லது சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் உண்டாகலாம்.
இந்த அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும், சோப்புகள், க்ரீம்கள் மற்றும் சில வகையான எரிச்சலை ஏற்படுத்தும் ஆடைகளை தவிர்க்கவும். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.
சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சனை. இது சருமத்தில் எரிச்சலையும், சிவந்த நிறத்தையும் உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆயில்மெண்ட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சருமத்தை பாதிக்க செய்யும் சோப்புகள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.
சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் தண்ணீர் இல்லை என்றால், அரிப்பு மற்றும் கடுமையான சருமம் இருக்கும். நீங்கள் மிக அதிக நேரம் குளித்தாலோ அல்லது சூடான நீரை பயன்படுத்தினாலோ இது போன்று ஏற்படும். சில சோப்புகள் சருமத்தை வறட்சியடைய செய்யும்.
உங்களது சருமத்திற்கு ஏற்ற மாஸ்சுரைசர் உபயோகிக்க வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான சருமத்தை சுத்தமாக துடைத்துவிட்டு மாஸ்சுரைசர் அப்ளை செய்யுங்கள். இயற்கை எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை ஒரு சிறந்த தீர்வாக அமையும். இது நீங்கள் உபயோகிக்கும் சோப்புகளில், ஆல்கஹால் மற்றும் பிற கெமிக்கல்கள் இருந்தாலும் காக்கும்.

எக்ஸிமா என்பது சருமத்தின் ஒரு நிலை. இது அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை உண்டாக்கும். இது மார்பகத்திலும் இது போன்ற ஒருநிலையை ஏற்படுத்தும். இது பரம்பரையாகவும் தொடரலாம் அல்லது சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் உண்டாகலாம்.
இந்த அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும், சோப்புகள், க்ரீம்கள் மற்றும் சில வகையான எரிச்சலை ஏற்படுத்தும் ஆடைகளை தவிர்க்கவும். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.
சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சனை. இது சருமத்தில் எரிச்சலையும், சிவந்த நிறத்தையும் உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆயில்மெண்ட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சருமத்தை பாதிக்க செய்யும் சோப்புகள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.






