search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசு"

    • திருச்சி வந்த அரசு பஸ்சில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி
    • சைல்டு லைன் அமைப்பினர் மீட்டனர்

    திருச்சி,

    புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு இரவு சுமார் 8.30 மணியளவில் அரசு பேருந்து ஒன்று வந்தது. பேருந்து நிலையத்தை அடைந்ததும் அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பேருந்தை பிளாட்பாரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடு–வதற்காக சென்றனர். இதை–யடுத்து மீண்டும் பஸ்சை இயக்க அதில் ஏறியபோது பஸ்சுக்குள் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஆனால் பயணிகள் யாரும் இல்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக் டர் இருவரும் சென்று பார்த்தபோது பஸ்சின் பின்புற இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுற்று முற்றும் பார்த்தும், விசாரித்தும் யாரும் குழந் தைக்கு சொந்தம் கொண் டாடி வரவில்லை அந்த குழந்தை பிறந்து சுமார் 10 நாட்களே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் குழந்தை கிடந்த இருக்கையின் அருகே ஒரு பையில் பால் பாட்டில், உடைகள் மற்றும் பேம்பர்ஸ் ஆகியவையும் இருந்தன.எனவே புதுக்கோட்டை–யில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிதான் யாரோ குழந்தையை விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை–யடுத்து பேருந்து ஊழியர்கள் அந்த குழந்தையை மீட்டு பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடி–யாக அவர்களும் குழந்தை பசியில் இருக்கும் என்பதை அறிந்து பாட்டிலில் இருந்த பாலை கொடுத்தனர்.பின்னர் இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் பிரியா ஆகியோர் வந்து குழந்தையை மீட்டுச் சென்று குழந்தைகள் நலக்குழு ஆலோசனைப்படி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்ப–டைத்தனர்.அங்கு சிசு வார்டில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்க்குபேட்டரில் வைத்து சிகிச்சையும் அளிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த சிசு ஒன்று தெருவோரம் வீசப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
    • தமிழகத்தில் பெண் சிசு கொலை நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் இருந்து வந்தது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரம் ஓடைத்தெருவில் ஈஸ்வரி என்பவரின் வீட்டுக்கு அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. அந்த உடலை தெருநாய்கள் கடித்துக் குதறிக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து நாய்களை விரட்டி விட்டு கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையின் தலை மற்றும் கால்களை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை முற்றிலும் கடித்துக்குதறிய பாகங்களை பார்த்து அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் கடந்த மாதம் பிறந்த பெண் சிசுவை அவரது பாட்டி வீட்டுக்கு அருகிலேயே புதைத்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த சிசு ஒன்று தெருவோரம் வீசப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. தற்போது 3-வது சம்பவமாக பிறந்த குழந்தையை மர்ம நபர் வீசிச் சென்ற நிலையில் தெருநாய்கள் கடித்து குதறி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பெண் சிசு கொலை நடக்கும் மாவட்டங்களில் ஒன்றாக தேனி மாவட்டம் இருந்து வந்தது. அது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் தகாத முறையில் பிறக்கும் குழந்தையை கூட பராமரிக்க அரசு தொட்டில் உள்ளது என்ற விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் வறுமையின் காரணமாக பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.7000-க்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக, தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர், சுரேஷ் தாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் குழந்தை இல்லாத தம்பதிக்கு பிறந்த சில நாட்களே ஆன குழந்தையை ரூ.7000-க்கு விற்றதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் குழந்தை இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் பின்னர், போலீசார் சம்பேபால் கிராமத்தில் இருந்து விற்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், " நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் குழந்தையை விற்கவில்லை " என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    ×