என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் கொஞ்சம் 'ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

    இதுபோன்ற பணி சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். பயணங்களில் கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள். இது மனரீதியாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.


    காதலியுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.

    • வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.
    • எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. கற்றாழை வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.

    தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்தில் கூட வளரும். இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கற்றாழை ஜெல் சருமத்தை வறண்டு போகச்செய்யாமல் பாதுகாக்க உதவுகிறது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.

    முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. எனவே அவை முகத்தில் உள்ள வடுக்களை நீக்க உதவுகின்றன. தினமும் இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    • சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
    • ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.

    பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

    அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

    வெங்காயம் ஹேர் பேக்

    சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ஆலிவ் ஆயில் மசாஜ்

    ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

    இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

    முட்டை ஹேர்மாஸ்க்:

    முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

    இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    • கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளது.
    • இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    கனவாய் மீன் தான் கடம்பா மீன் என்று அழைக்கப்படும். இந்த கடம்பா மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை. இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு பொட்டாசியம், கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு விந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இந்த மீன்களை வறுவல் செய்து சாப்பிடும்போது அதிக அளவு பலன்கள் கிடைக்கின்றன. இந்த நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    கனவா- 500 கிராம்

    வெங்காயம்- 20

    பூண்டு-8

    இஞ்சி- ஒரு துண்டு

    மல்லி- இரண்டு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    வர மிளகாய்- மூன்று

    பட்டை- இரண்டு

    கிராம்பு- இரண்டு

    அண்ணாச்சி பூ- ஒன்று

    மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பிறகு மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு தனியாக அரைத்துவைத்த மசாலா கலவையை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

    மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக கழுவி வைத்துள்ள கனவா மீனை சேர்க்க வேண்டும். மசாலா கலவையின் சாறு கனவாய் மீனில் இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா மீன் கிரேவி தயார்.

     

    • சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஆரஞ்சு பழம்- 3

    பாதாம், முந்திரி- 10

    செய்முறை:

    முதலில் ஒரு முழு ஆரஞ்சை பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழு ஆரஞ்சு பழம் போல் முழுவதுமாக நமக்கு வேண்டும்.

    இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து அதில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால்கோவா பதத்திற்கு முன்புள்ள நிலையான கிரீம் பதம் வர வேண்டும். கிரீம் பதம் வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பாதாம் , முந்திரி சேர்த்து, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

    இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். இந்த கலவை இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.

    இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இந்த ஜூசை நாம் கிரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின்னர் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்திற்குள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் ஏற்கனவே வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

     

    • கர்ப்பிணிகள் சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் கற்றுக் கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று என்ன சாப்பிடக்கூடாது என்பதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    காபி

    மருத்துவர்களின் அறிவுரைப் படி, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் (மி.கி.) குறைவான காஃபின் மட்டும் எடுத்துகொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கு மேல் எடுப்பதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை எளிதில் கடக்கிறது. குழந்தைகள் மற்றும் அவர்களின் நஞ்சுக்கொடிகளில் காஃபின் வளர்சிதை ஏற்படுத்தும் என்பதால் இது அதிக அளவு ஆபத்திற்கு வழிவகுக்கும். பிரசவத்தின்போது குறைந்த எடையுடன் பிறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மெர்குரி மீன்

    பெரிய கடல் மீன்கள் அதிக அளவு பாதரசத்தை கொண்டது. அதனால் வாரத்திற்கு 180 கிராமிற்கு குறைவாக எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் தவிர்த்துவிடலாம். சூரை மீன், சுறா மீன், புள்ளி களவா மீன், சங்கரா மீன்கர்ப்பம் போன்ற மீன்களை பாலூட்டும் போது இதுபோன்ற பாதரசம் நிறைந்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.

    நன்கு சமைக்காத இறைச்சி

    பச்சை மீன், குறிப்பாக மட்டி, பல்வேறு நோய்த்தொற்றுகளை சுமந்து செல்லும். இதில் நோரோவைரஸ், விப்ரியோ, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி போன்ற நோய்த்தொற்றுகளை வர வைக்கலாம்.

    கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக பட்டியலிடப்பட்ட நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, பொது மக்களை விட கர்ப்பிணி பெண்கள் லிஸ்டீரியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம்.

    அதிக கொழுப்பு உணவுகள்

    பன்றிக்கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு, கோழி கொழுப்பு, வெண்ணெய், கிரீம், சீஸ் இந்த கெட்ட கொழுப்புகள் சில பல இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்களிலும் மறைந்துள்ளன. அதாவது பொரித்த கோழி, ஐஸ்கிரீம், பீட்ஸா, குக்கீகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் ஆகியவை கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும்.

    பதப்படுத்தப்படாத பால்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால், மொஸரெல்லா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களின் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.

    மது

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவதது கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவு கூட குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் மது அருந்துவது, முக குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் மனநல குறைபாடு உள்ளிட்ட கருவின் ஆல்கஹால் நோய்க்குறியையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

    சோடா போன்ற குளிர் பானங்கள்

    சோடா போன்ற குளிர் பானங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பல காஃபின் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் இது அருந்த பரிந்துரைக்கப்படுவதில்லை.

    முட்டை

    பச்சை முட்டைகள் சால்மோனெல்லாவால் மாசுபட்டிருக்கலாம். சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

    முளைகட்டிய பயிர்கள்

    முளை கட்டிய பயிரில் சால்மோனெல்லா என்ற நோய்கிருமி இருக்கும். விதை முளைப்பதற்குத் தேவையான ஈரப்பதமான சூழல் இந்த வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்றது மற்றும் முளை கட்டிய பயிரினை கழுவுவது கடினம். இந்த காரணத்திற்காக, முளை கட்டிய பயிர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    துரித உணவுகள்

    கர்ப்ப காலத்தில் ஹோட்டல்களில் விற்கப்படும் துரித உணவுகளை தவிர்த்து புரதம், காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளை மையமாகக் கொண்ட உணவு மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துகொள்ளுங்கள். சுவையை இழக்காமல் உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்து உணவுகள்.
    • ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு உடலுக்கு சமநிலையை வழங்குகிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தாதுக்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளாக உள்ளன.

    கர்ப்ப காலத்தில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த முடியும். இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவற்கு உதவும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவற்கும் உதவுகிறது.

    பேரீச்சை

    பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருட்கள் உள்ளது.

    கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். பேரீச்சம்பழங்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கர்ப்ப காலத்திற்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த உணவாகும்.

    மாதுளை

    மாதுளையில் வைட்டமின் சி மற்றும் கே, அத்துடன் பல ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை பெண் கருவுறுதலை அதிகரிக்கச் செய்வதாகவும், கருப்பை சுவரை தடிமனாக்க உதவுவதாகவும், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மக்கா வேர்

    மக்கா ரூட் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். இது சத்தானது மற்றும் வைட்டமின்கள் பி, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இந்த வேர் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

    இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் அரை டீஸ்பூன் மக்கா ரூட் தூள் சேர்க்கவும். நீங்கள் பல மாதங்களுக்கு மக்கா ரூட் தூள் எடுக்கலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதை தவிர்க்கவும்.

    வைட்டமின் டி

    உடலில் வைட்டமின் டி இல்லாதது கருவுறாமைக்கு வழிவகுக்கும் மற்றும் முந்தைய கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.

    எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதலில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் காட்டுகின்றன.

    லவங்கப்பட்டை

    இந்த அற்புதமான மருந்து பெண்களின் கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலட்டுத்தன்மையை தடுக்கிறது. பெண் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த தேநீரை பல மாதங்களுக்கு குடிக்கலாம்.

    ஆலமரத்தின் வேர்கள்

    ஆலமரத்தின் வேர் கருத்தரிப்பிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேரின் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல மாதங்கள் கூட இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூண்டு

    கர்ப்பம் தரிக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வு உண்டு என்றால் அது பூண்டு சாப்பிடுவது. பூண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பூண்டு விந்தணு மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. 1 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடலாம்.

    பூண்டை மென்று சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்கவும். அல்லது பாலில் பூண்டு பற்களை வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம். கருவுறுதலை மேம்படுத்த குளிர்காலங்களில் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும்.

    • பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம்.
    • எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்.

    சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம். எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் உங்களுக்காக....

    சமைக்கும் போது பால் பாத்திரம், டீ போடும் பாத்திரம் மற்றும் குழம்பு வகைகள் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டால், இனி அதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம். இப்படி செய்து பாருங்கள்.

    பாத்திரத்தில் அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்யூடை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும்.

    இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடலாம்.

    அதன்பிறகு பாத்திரத்தை ஒரு துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் ஸ்க்ரப் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தால் போதும் அந்த கறைகள் நீங்கி விடும். இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென்று இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். உதவியாக இருக்கும்.

    • என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின.
    • சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

    வரலாறு...

    இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதைவிட எதிர்கால தேடல்களே மேலோங்கி இருக்கிறது. பலருக்கு இன்னும் தனது குடும்ப பரம்பரை பற்றியே தெரியாமல் இருப்பதுதான் வேதனை. அன்றைய காலத்தில், 7 தலைமுறைகளை அறிந்து வைத்திருந்தார்கள். தந்தை - தாய், பாட்டன் - பாட்டி, பூட்டன் - பூட்டி, ஓட்டன் - ஓட்டி, சேயோன் - சேயோள், பரன்-பரை என்று அதை வரிசைப்படுத்தினார்கள்.

    ஆனால், இன்றைக்கு 3-வது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி கூட யாருக்கும் தெரியவில்லை. கடந்த காலங்களில் சொந்த ஊரிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஏராளம். பெரிய வீட்டில் மரங்கள் சூழ்ந்திருக்க, தாத்தா - பாட்டி, பெரியப்பா - பெரியம்மா, சித்தப்பா - சித்தி, அத்தை - மாமா, அவர்களின் பிள்ளைகள என ஆரவாரத்துக்கும், ஆசுவாசத்துக்கும் பஞ்சம் இருக்காது.

    என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே ஒரு கூட்டு கிளிகளாக இருந்த கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின. "நாம் தான் சொந்த ஊரில் கஷ்டப்படுகிறோம். நம் பிள்ளையாவது நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கட்டுமே" என்று, முதலில் பெற்றோர் விருப்பத்துடன் படிப்புக்காக வெளியூருக்கு செல்லும் குழந்தைகள், பிறகு படித்து முடித்து அங்கேயே வேலையைத் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். திருமணமான பிறகும், வெளியூரிலேயே குடும்பத்துடன் தங்கிவிடுகிறார்கள். இப்படித்தான் கூட்டு குடும்பங்கள் எல்லாம் எங்கெங்கோ தனிக்குடும்பங்களாக பிரிந்து சிதறி கிடக்கின்றன. 

    சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடினமான பணியில் இருக்கும் சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் போய்விடுகிறது. பெற்ற பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் வெளியூரில் இருக்க, சொந்த ஊரில் தனி மரமாய் ஏக்கத்துடன் காத்திருந்து முதுமையை கழிக்கும் பெற்றோர் ஏராளம்.

    தாய்-தந்தையுடன் வெளியூரில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தனது பூர்வீகத்தை பற்றியும், சொந்த பந்தங்களை பற்றியும் தெரியாமலேயே போய்விடுகிறது. தாயும், தந்தையும் வேலை.. வேலை.. என்று பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், பிறந்த மண்ணின் மகத்துவத்தை பிள்ளைகளிடம் எடுத்துச்சொல்வதற்கு கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.

    இப்போது கோடை காலம். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை காலம். இந்த நேரத்திலாவது, நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை சொந்த கிராமத்தில் தாத்தா - பாட்டி வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். நமக்குத்தான் விடுமுறை கிடைக்கவில்லை. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளாவது சொந்த ஊரில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகை செய்யலாம். அங்கு பெற்ற பிள்ளைகளுக்காக ஏங்கித் தவிக்கும் முதியவயதுடைய பெற்றோர், பேரப்பிள்ளைகளை பார்த்தாவது சற்று நெஞ்சம் குளிர்வார்கள். குழந்தைகளுக்கும் உண்மையான அன்பு, பாசம் கிடைக்கும்.

    காகிதத்தால் செய்யப்பட்ட பட்டம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், அதன்பிடி நூலின் அடிப்பகுதியில்தான் இருக்கிறது. அதுபோலத்தான், நாம் இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழ்ந்து வந்தாலும், நமக்கான பிணைப்பு நாம் பிறந்த சொந்த ஊருடன்தான் இருக்கிறது. எனவே, சொந்த மண்ணையும், மண்ணில் வசிக்கும் உறவுகளையும் பேணிக் காப்போம்.

    • சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.

    கோடை வெயிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பநிலை, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படும். எனவே கோடை வெயிலில் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்:

    * அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம் என்று காத்திருக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும். விருப்பப்படும் பழங்களை சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * காலை 10 மணி முதல் மாலை 4 மணி வெயில் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    * அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் குடை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடையை தவிர்க்க வேண்டும்.

    * குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. 

    * உணவுகளை 5 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் உண்ண வேண்டும்.

    * தூக்கம் வரும் நேரத்தில் படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூங்குவதால் மன அழுத்தம் குறையும். 

    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.
    • பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சியை தாய்ப்பால்தான் அதிகமாக நிர்வகிக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டிபயாடிக்குகளை வழங்குவதிலும் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    * தாய்ப்பால் சுமார் 90 சதவீத நீரால் ஆனது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சுமார் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அல்லது பால் (அ) பழச்சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும்.

    * தாய்ப்பால் அதிகமாக சுரக்க பச்சை காய்கறிகள், முட்டை, பால், பூண்டு, வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்களை சாப்பிட வேண்டும்.

    * தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். குழந்தை தூங்கும்போது தாயும் தூங்க முயற்சி செய்ய வேண்டும்.

    * மார்பகங்களில் எப்போதும் குழந்தைக்கு பால் சுரக்கும். குழந்தைக்கு பாலூட்டும்போது மார்பகங்களில் மேலும் பால் அளவு அதிகரிக்கும்.

    * பிறந்த குழந்தைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 10 நிமிடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    * குழந்தை தூங்கிவிட்டால் மெதுவாக எழுப்ப முயற்சித்து பால் கொடுக்க வேண்டும்.

    * பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலையில் எழுந்ததுமே படுக்கையறையில் பெட் ஷீட்டை மடித்து வைத்துவிடுங்கள்.
    • வீட்டின் தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களுக்குப் பதிலாக பழைய ஷாம்புவை பயன்படுத்தலாம்.

    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. சிலர் அதை ஒரு பெரிய வேலையாக கருதி, திணறிக்கொண்டிருப்பார்கள்.

    அதிக சிரமமின்றியும், அதிக நேரம் எடுக்காமலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்...

    சிங்க்: அனைவரும் உபயோகிக்கக் கூடியது சமையல் அறை 'சிங்க்' மற்றும் வாஷ் பேசின் என்பதால், அவை அழுக்கு கறைபடிந்து

    அருவருப்பான தோற்றத்தை உண்டாக்கக்கூடும். சிங்க், வாஷ் பேசின் அழுக்கை சுத்தம் செய்வதற்கு, தண்ணீர் போகும் இடத்தில் வினிகரை ஊற்றுங்கள். பின்னர் அதில் பேக்கிங் சோடாவை தெளியுங்கள். தண்ணீர் வெளியே போகாதவாறு அதை மூடிவிடுங் கள். அரை மணி நேரம் அப்படியே வைத்து அதன் பிறகு வெந்நீர் ஊற்றி கழுவினால் சிங்க், வாஷ் பேசின் 'பளிச்' ஆகிவிடும்.

    படுக்கையறை: காலையில் எழுந்ததுமே படுக்கையறையில் பெட் ஷீட்டை மடித்து வைத்துவிடுங்கள்.

    இரவு தூங்கும்போது துணிகள், சாக்ஸ், புத்தகங்கள் போன்றவை கட்டிலின் மேல் இருந்தால் அதை ஷெல்ப்பில் வைத்துவிடுங்கள்.

    வாரம் ஒருமுறை பெட்டை நகர்த்தி உதறிப் போடுங்கள். இவ்வாறு செய்தால் கட்டிலில் பூச்சிகள் தங்காது, தூசி சேராது.

    பொதுவாக ஹால் சுத்தமாக தோன்றுவதற்கு, பொருட்களை ஆங்காங்கே போடாமல் எடுத்த இடத்தில் வைத்தாலே போதும்.

     

    அழுக்குத் துணிகளை கதவிலோ அல்லது நாற்காலியிலோ போடாமல் துணி போடுவதற்கு இருக்கும் 'டப்'பில் போட்டு வைத்து விடவும்.

    தரைகள்: வீட்டின் தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களுக்குப் பதிலாக பழைய ஷாம்புவை பயன்படுத்தலாம். அதை வைத்து வீட்டை துடைத்தாலே வீடு அழுக்கு அகன்று, பிரகாசிக்கும்.

    சீலிங் பேன்: சீலிங் பேனை சுத்தம் செய்வதற்கு ஒட்டடைக்குச்சியை பயன்படுத்தாமல் பழைய தலையணை உறையை உபயோகிக்கலாம்.

    பழைய தலையணை உறையை எடுத்து சீலிங்பேனின் இறக்கையில் மாட்டி மென்மையாக தலைப்பகுதியிலிருந்து நுனி வரை இழுக்கலாம். இதனால் தூசிகள் கீழே கொட்டி தரையை அழுக்குப் படுத்தாது.

    Java burn 

    Nagano tonic

    ×