என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக உள்ளது.
    • கருமுட்டை குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    கரு முட்டைகளை உறையவைப்பது என்றால் என்ன?

    கரு உறைய வைத்தல் என்பது அதி நவீன தொழில்நுட்பங்களால் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். இதில் 2 முறைகள் பராமரிக்கப்படுகிறது. ஒன்று பெண்ணின் உடலில் இருந்து கருமுட்டைகளை எடுத்து சேமித்து வைக்கும் முறை.

    மற்றொன்று கருமுட்டைகளை விந்தணுவுடன் சேர்த்து கருவாக உறுமாறி 3 அல்லது 5 நாட்களுக்கு பிறகு எம்ரியோ ஃப்ரீசிங் அதாவது கரு உறைய வைத்தல் முறை மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

    இந்த முறையில் கருமுட்டைகளை மட்டுமே எடுத்து சேமித்து வைக்கும் போது அது தரமான முட்டைகள் தானா என்ற உத்திரவாதம் அளிக்க முடியாது. சில நேரங்களில் கருக்கலைந்துபோக வாய்ப்புகள் அதிகம். எனவே தான் இந்த கருமுட்டைகளை எம்ரியோவாக மாற்றி தான் சேமித்து வைப்பது தான் நல்லது.

    அப்படி உருமாற்றி உள்ள கருவை திரவ நைட்ரஜை பயன்படுத்தி குடுவைக்குள் செலுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. இதனை தேவைப்படும் போது எடுத்து பெண்ணின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

    பொதுவாகவே குழந்தைகளை தாமதமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டையை, மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறைய வைக்கலாம். அறிவியல்பூர்வமான 'ஊசைட் கிரையோபிரிசர்வேஷன்' என்பது இதன் பெயர். இதனை கருமுட்டைகளை உறைய வைக்கும் முறை என்று குறிப்பிடப்படுகிறது.

    இதில் முட்டைகளை உறையவைக்க, ஒரு பெண்ணுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு அவருடைய ஓவரீஸ் தூண்டி விடப்படும். இதன் மூலமாக குறிப்பிட்ட அளவிலான முட்டைகள் ஒரு பெண்ணின் கருப்பையில் உருவாகும். அவை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்பநிலையில் உறைய வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.

    ஒரு பெண்ணோ அல்லது ஒரு தம்பதியோ இப்போது எனக்கு குழந்தை வேண்டாம், நான் தேவைப்படும் பொழுது இந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறுபவர்கள் அவர்கள் விரும்பும் பொழுது உறைய வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பெற இந்த முறை உதவியாக இருக்கும்.

    எனவேதான் பல நடிகைகளும் தங்களுடைய 30 வயதில் கருமுட்டைகளை உறைய வைக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான இளம்பெண்கள் தமக்கு வசதியான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக கருமுட்டைகளை உறைகுளிர் பெட்டிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     

    கரு முட்டைகளை எப்படி உறையவைப்பது?

    மாதவிடாய் காலத்தின்போது, பொதுவாக ஒரு கரு முட்டை உருவாவதுண்டு. பல கரு முட்டைகள் உருவாவதற்கு பெண்களுக்கு ஊசி வழியாக சுரப்பிநீர் செலுத்தப்படும்.

    கரு முட்டைகளை அகற்ற, அல்ட்ரா சவுண்டு கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    தரம் மிகுந்த கரு முட்டைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க, அந்த நடைமுறை பல முறை தொடரலாம். அதன்பிறகு கரு முட்டைகள் பின்னர் உறையவைக்கப்படும்.

    நடைமுறையில் சில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.

    யாரெல்லாம் எக் ஃப்ரீசிங் முறையை பயன்படுத்தலாம்.

     இப்போது மக்கள் பல்வேறு காரணங்களுக்காக "எக் ஃப்ரீசிங்" எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர்.

    உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளம்வயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம்.

    ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

    எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும்.

    எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம்.

    தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லை என்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

    மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர்.

    உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

    அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்த பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

    பெண்ணின் கருவணுவகத்தில் இருந்து ஒரு கரு முட்டையை எடுத்து, அவளுடைய கணவனின் விந்தணுவை நுண்அறுவை முறையில் அந்த கரு முட்டைக்குள் புகுத்தி அதை சினைப்படுத்தும் உத்தி பல ஆண்டுகளாகவே கையாளப்பட்டுவருகிறது.

    அந்த கருவை ஒரு சோதனைக் குழாயில் சில நாட்களுக்கு வளரவிட்ட பின், அதை அதே பெண்ணின் கருப்பைக்குள் பதித்துவிட்டால், பத்து மாதம் கழித்து முழுக் குழந்தையாக வெளிப்படும்.

    பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

    • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு, இஞ்சி - 50 கிராம்

    ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

    சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

    குடை மிளகாய் - 1

    பச்சை மிளகாய் - 2

    கருவேப்பிலை -சிறிதளவு

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

    மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

    செய்முறை

    ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

    ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

    • கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான்.
    • எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான்.

    கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்."மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்" குணம்."மாதா பழமொழி. உணவில் பல விதமாக மாங்காயை பயன்படுத்தலாம்.

    மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். அந்த வகையில் சுவையான வெங்காயம்-மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - அரை கிலோ

    மாங்காய் - பெரியது 1

    கடுகு - தேவையான அளவு

    வெந்தயம் - அரை ஸ்பூன்

    மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை காய் சீவலைக் கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.

    இதை நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட வேண்டும்.

    இதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு இதை வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

    இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தியுன் வைத்து சாப்பிட இந்த டிஷ் மிகவும் நன்றாக இருக்கும்.

    • வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது.
    • வயதாகும்போது, ​​குறைவான முட்டைகள் கிடைக்கின்றன.

    கருமுட்டை தரம் குறைதல்

    முட்டையின் தரத்தில் வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைவான முட்டைகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறக்கும் போது குறைந்த அளவு முட்டைகள் உள்ளன, மேலும் அவர்கள் வயதாகும்போது, குறைவான முட்டைகள் கிடைக்கின்றன, இது இயற்கையாக கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம்.

    ஹார்மோன் மாற்றம்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகள்

    நார்த்திசுக்கட்டிகள், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிக்க மிகவும் சவாலான சில மருத்துவ பிரச்சனைகளாகும்.

    கர்ப்பத்தில் சிக்கல்

    முன்கூட்டிய பிரசவம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்ப பிரச்சினைகளில் அடங்கும்.

    குரோமோசோம் அசாதாரணங்கள்

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணுக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    கருவுறுதல் சிகிச்சையின் செயல்திறன் குறைந்தது. ஐ.வி.எப் போன்ற கருவுறாமை சிகிச்சைகள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், இது கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    40 வயதிற்கு மேற்பட்ட கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணரிடம் தங்கள் விருப்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சாத்தியமான சிரமங்கள் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

    • பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
    • ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும்.

    40 வயதிற்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த வழிகள்?.

    பல பெண்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் எண்ணம் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும். 40 வயதிற்கு பிறகும் கருத்தரிக்க முடியும் என்றாலும், ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் பல்வேறு காரணம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி ஆராய்வோம். 40 வயதிற்குப் பிறகு கர்ப்பத்துடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பரிசீலனைகளைப் பற்றியும், இதன்மூலம் நீங்கள் வாழ்க்கையில் ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும், ஆனால் ஒரு பெண் வயதாகும்போது, கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும். 40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் காரணிகள்.

    கருப்பை செயல்பாடு குறைதல்

    பெண்களின் முட்டைகளின் அளவு மற்றும் தரம் குறைவதால், வயதாகும்போது இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் சவாலானது.

    ஹார்மோன் மாற்றங்கள்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களால் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    மருத்துவ நிலைகள்

    எண்டோமெட்ரியோசிஸ், பிசிஓஎஸ் மற்றும் ஃபைப்ராய்டுகள் உள்ளிட்ட பல மருத்துவக் கோளாறுகளால் கருவுறுதல் பாதிக்கப்படலாம்.

    வாழ்க்கை முறை

    புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    ஆண் துணையின் வயது

    சந்ததியினருக்கு சில மரபணு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்து, வயதான தந்தையின் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பல கருச்சிதைவுகள் அல்லது பிற கர்ப்ப கஷ்டங்கள் 40 வயதிற்குப் பிறகு பெண்கள் கர்ப்பமாக இருப்பதை மிகவும் கடினமாக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையான கருத்தரித்தல் சாத்தியம் என்றாலும், பெண்கள் தங்கள் கருவுறுதல் விருப்பங்களைப் பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசுவதும், தேவைப்பட்டால், செயற்கை கருத்தரித்தல் போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களைப் பெறுவதும் முக்கியம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
    • பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் அவர்களின் தனித்திறனை வளர்க்க உதவும்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.

    எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மன வளர்ச்சி

    குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள பெற்றோர்களின் செயல்பாடுகள் உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பீடு

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டு விடும்.

    தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்து போய்விடுவார்கள்.

    பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது.

    எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    • கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
    • இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

    இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    மாதவிடாய் இல்லாமல் போவது

    ஹார்மோன் பிரச்சனைகள்

    ஃப்லோபியன் குழாய் அடைப்பு

    செலியாக் நோய்

    சிறுநீரக நோய்

    எக்டோபிக் கர்ப்ப்பம்

    இடுப்பு அழற்சி நோய்

    பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    சிக்கிள் செல் இரத்த சோகை

    எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)

    தைராய்டு நோய்

    அதிக வயதை கொண்டிருத்தல்

    உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது

    இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.

    ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)

    விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்

    மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)

    இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்

    விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)

    முன் கூட்டிய விந்து வெளிபாடு

    விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு

    மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    • சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும்.
    • குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது.

    சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை 'கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

     முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.

    அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

    கடலை மாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.

     எலுமிச்சையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.

    ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும்.

    குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.

    இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது. பொலிவிழந்த சருமம் இளமை பெறும்.

    • ஷீர் குருமா ஒரு முகலாய டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெசட்

    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

    சேமியா - முக்கால் கப்

    பேரீச்சைப் பழம் -10

    முந்திரி பருப்பு - கால் கப் (நறுக்கியது)

    பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

    பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது

    சாரை பருப்பு - ஒரு ஸ்பூன்

    காய்ந்த திராட்சை - 15

    சர்க்கரை - கால் கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின்னர் வறுத்த பேரீச்சைப்பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக வைத்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார்.

    இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

    ×