என் மலர்
அழகுக் குறிப்புகள்
- டபுள் க்ளென்ஸிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது.
- பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம்.
தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
கொரியன் பியூட்டி அல்லது கே-பியூட்டி எனப்படும் ட்ரெண்டானது பலரது சரும பராமரிப்பு வழக்கத்தை மாற்றி இருக்கிறது. டிரெண்டாக இருக்கும் கொரியன் பியூட்டி சரும பராமரிப்பு டிப்ஸ்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குவதால் பிரபலமாக இருக்கின்றன.
டபுள் க்ளென்ஸ்: டபுள் க்ளென்சிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீன் அனைத்தையும் அகற்ற இரண்டு வெவ்வேறு க்ளென்சர்களை பயன்படுத்துவதே டபுள் க்ளென்சிங் ஆகும். இந்த டிப்சை பின்பற்றும் போது சருமத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை நீக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரை முதலில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற இரண்டாவதாக நீர் சார்ந்த க்ளென்சரை பயன்படுத்த வேண்டும்.
எக்ஸ்ஃபோலியேட்: எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீங்கி நமக்குபளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கிறது. இருப்பினும், அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தை சேதப்படுத்த கூடும் ஜென்ட்டிலாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும், அதே சமயம் அடிக்கடி செய்ய கூடாது. வாரத்திற்கு அதிகபட்சம் 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பழக்கமாக இருக்கும்.
தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: வெயில் காலமோ, மழை காலமோ அல்லது பனி காலமோ கிளைமேட்டை பொருட்படுத்தாமல் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.
போதுமான தூக்கம்: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம். போதுமான அளவு தூங்காத போது, உங்கள் உடல் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. கார்டிசோல்என்பது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உடைக்க கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும். எனவே தினசரி இரவு முதல் காலை வரை 7-8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள்.
- பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.
நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?
வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்
எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒருஅகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.
அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.
- உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு.
- தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.
இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.
கரும்புள்ளிகள் நீங்க
5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும். தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.
வறண்ட சருமம் பளபளக்க...
உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும். முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
முகத்தில் உள்ள தழும்புகள் மறைய
தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.
- கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும்.
- சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும்.
கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.
தேவையான பொருட்கள்:
சீயக்காய்-1 கிலோ
வெந்தயம்- 100 கிராம்
பாசிபயறு- 200 கிராம்
பூந்திகொட்டை-100 கிராம்
நெல்லிக்காய் (காய்ந்தது)- 50 கிராம்
ஆவரம்பூ- 50 கிராம்
செம்பருத்தி பூ- 20 பூ
நாட்டு பன்னீர் ரோஜா- 20 பூ
வெட்டிவேர்- 25 கிராம்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஒவ்வொரு எண்ணெய் குளியளின் போதும் இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த பொடி முடியை வளரச்செய்வது மட்டுமல்லாமல், பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம், முடி கொட்டும் பிரச்சினை, நரை முடி மற்றும் கூந்தலுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். செய்து பாருங்கள்.
சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.
சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.
சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.
- தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
- வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.
உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.
இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.
அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
செம்பருத்தி பூ- இரு 10 பூ
செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி
வேப்பிலை- ஒரு கைப்பிடி
மருதாணி இலை- ஒரு கைப்பிடி
சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)
சோற்றுக்கற்றாலை- ஒரு கப்
வெந்தயம்- 2 டீஸ்பூன்
பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)
கருசீரகம்- 2 டீஸ்பூன்
வெட்டிவேர்- ஒரு கைப்பிடி
செய்முறை:
ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.
முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.
- தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது.
- வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
முகத்தில் அம்மை வடு, தழும்பு, காயங்கள் போகணுமா ? இதை செய்துபார்த்து பயன் அடையுங்கள்
உடலில் காயங்களினால் ஏற்படும் தழும்பு ஆறாமல் இருந்தால் முகம், உடல் என எந்த இடத்தில் இருந்தாலும் அது அசெளகரியாகவே நினைக்க தோன்றும். அதிலும் அவை முகத்தில் வந்தால் அழகையும் குறைத்து காட்டும்.
தழும்புகள், வடுக்கள், காயங்கள் என எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பை குறைத்து சருமம் பழைய தோற்றத்தை பெறுவதற்கு வீட்டு வைத்தியங்கள் உண்டு. எளிமையான முறையில் இதை சரி செய்ய உங்களுக்கு இந்த வைத்தியம் உதவும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த இவை உதவும்.
எலுமிச்சை சாறு - 3 அல்லது 4 டீஸ்பூன் அளவு நீர்த்தது
காட்டன் பஞ்சு - சிறு உருண்டை
பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் க்ளென்ஸ் செய்யுங்கள். பின்னர் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும். தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
சிலருக்கு எலுமிச்சை சாறு சருமத்தில் ஒவ்வமையை உண்டாக்கலாம். அதனால் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
தேன்
தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது. தேனில் இருக்கும் பண்புகள் காயங்களை குணப்படுத்தக்கூடியவை. இதனுடன் பேக்கிங் சோடா இணைந்து பயன்படுத்தும் போது அது சரும வடுக்களை மங்கி காட்டும்.
தேன் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
சுத்தமான மெல்லிய துணி - தேவைக்கு
தேனையும் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்யலாம்.
வெங்காயம்
வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
வெங்காயச்சாறு - தேவைக்கு
சிறிய வெங்காயமாக இருக்கட்டும். வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம். வெங்காயம் சருமத்துக்கு பயன்படுத்தினால் பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். கண்டிப்பாக மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டவை. இது சரும எரிச்சலை போக்க கூடியது. சருமத்தில் உண்டாகும் வடுக்களையும் போக்கும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.
சோற்றுக்கற்றாழை மடல்களில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். இதற்கு பிறகு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய சிறந்த பொருள். இதை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது வடுக்களை குறைக்க செய்யும். இது நாள்பட்ட தழும்புகளையும் வடுக்களையும் மாற்றி சருமத்தை புதியது போல் ஜொலிக்க செய்யும்.
நெல்லிக்காய் பொடி (கொட்டை நீக்கியது)
ஆலிவ் ஆயில் - தேவைக்கு
நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாறு பைட்டோகெமிக்கல் சருமத்தில் இருக்கும் வடுக்களை மந்தமாக்க செய்யும். இது பிக்மெண்டேஷன் போக்குவதோடு கருவளையம், முகப்பரு மற்றும் பருக்களையும் போக்கும் தன்மை கொண்டவை. இது சரும நிறத்தை மீட்டு கொடுக்கும்.
உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.
தழும்புகள், வடுக்களை போக்க வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுக்கலாம். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை அதன் தீவிரம் பொறுத்து மந்தமாக்கும் அல்லது குணப்படுத்தவும் செய்யும்.
- ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும்.
- பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும்.
கடுமையான வெயில் காலங்களில் உதடுகளில் உள்ள செல்கள் இறந்து விடுவதால் உதடுகள் காய்ந்து கருப்பாகி விடுகிறது.
இதனால் பெண்களின் அழகுகளில் குறைபாடு ஏற்படுகிறது.
இதுகுறித்து தோல் சிகிச்சை டாக்டர்கள் கூறியதாவது:-
இவ்வாறு உதடுகளில் இறந்த நிலையில் உள்ள செல்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
அப்போதுதான் அவை ஈரமாக இருக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் ஜெல்லில் சிறிது சர்க்கரை கலந்து உதடுகளில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
டூத் பிரஷில் சிறிது சர்க்கரை சேர்த்து உதடுகளில் தேய்த்தால் போதும். இதை வாரம் ஒருமுறை செய்தால் உதடு கருமை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
அல்லது ஒரு கொத்து ரோஜா இதழ்களை அரைத்து, அதனுடன் சிறிது தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் மெதுவாக தேய்க்கவும்.
அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நேரில் உதட்டை கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் ஒரு வாரத்தில் உதட்டில் உள்ள கருமை மறையும்.
அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசவும். அரை மணி நேரம் கழித்து பாலுடன் மென்மையான துணியை கொண்டு தேய்த்து தேய்த்து கழுவ வேண்டும்.
இப்படி அடிக்கடி செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி மென்மையாக மாறும். இரண்டு ஸ்பூன் ரோஜா இதழ் பொடியுடன் சிறிது சாக்லேட் பவுடர், சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடுகள் வெடிக்காமல் புத்துணர்ச்சி பெறும். மேலும் பெண்களின் உதடுகள் சிவப்பு நிறமாக மாறி பெண்களுக்கு அழகை கூட்டி தரும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது.
எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய முதல் முக்கிய பிரச்சனை எண்ணெய் பசையான பொடுகு எனப்படுகிற ஆயிலி டாண்டிரஃப். டிரை டாண்டிரஃப் எனப்படுகிற வறண்ட பொடுகைக் கூட சுலபமாக சரி செய்து விடலாம். ஆனால், ஆயிலி டாண்டிரஃபை அத்தனை சுலபத்தில் சரி செய்ய முடியாது. இது இருக்கும்வரை தலையில் ஒருவித மோசமான வாடையும் அடிக்கும். எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், ரொம்பவும் நீளமாக கூந்தலை வளர்க்காமல் மீடியமான அளவில் வெட்டிக் கொள்வது பராமரிக்க சுலபமாக இருக்கும்.
சாதாரணமாக வெளியில் நடக்கும் போதும், டூ வீலரில் பயணம் செய்கிற போதும் சுற்றுப்புற மாசும் தூசும் மிகச் சுலபமாக இவர்களது மண்டையில் படிந்து, ஆயிலி டாண்டிரஃபுக்கு வழி வகுத்து விடும். இந்த வகையான பொடுகு வறண்ட பொடுகு மாதிரி உதிராது என்பதால் இருப்பதும் தெரியாது. அடிக்கடி அலசி சுத்தப்படுத்தினால்தான் பொடுகு இன்றி பாதுகாக்க முடியும். இந்தப் பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். டெயில் கோம்ப் என்று கேட்டு வாங்கவும். அதன் கூரிய பின் பகுதியால் தலைமுடியில் பகுதி பகுதிகளாகப் பிரித்து, லேசாகச் சுரண்டவும். அப்போது பொடுகு இருந்தால் வெளியே வரும். இருப்பது தெரிந்தால் சிகிச்சை அவசியம்.
வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் எண்ணெய் வைத்தே ஆக வேண்டும் என்றாலும், வைத்த சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். வெளியில் செல்லும் போது தலைமுடிக்கு ஸ்கார்ஃப் அவசியம்.
* பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, தலையில் மிதமாக மசாஜ் செய்யவும். செம்பருத்திப் பூவின் விழுது 1 டேபிள்ஸ்பூன், வெந்தய விழுது கால் டீஸ்பூன், நெல்லிக்காய் விழுது கால் டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் கலந்து, எண்ணெய் மசாஜ் செய்த தலையில் தடவவும். அதையே கூந்தலின் இடையிலும் விட்டு விரல்களால் நீவி விடவும். அரை மணி நேரம் வைத்திருந்து சீயக்காய் அல்லது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஷாம்பு உபயோகித்து அலசவும்.
* தயிரில் சிறிது பாதாம் ஆயில், 2 துளிகள் எலுமிச்சைச்சாறு, சிறிது வேப்பிலை விழுது, துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். தலையை அலசும்போதும் கவனம் அவசியம். முதலில் தலைமுடியை இட, வலப் பக்கமாக இரண்டாகப் பிரிக்கவும். இடப்பக்க முடியை நன்கு விரல்களை விட்டு சுத்தம் செய்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி சுத்தப்படுத்திய பிறகு, வலப்பக்க முடியையும் அதே போலச் செய்யவும். பிறகு மொத்த கூந்தலையும் மீண்டும் அலசவும். முதலில் வெறும் தண்ணீரில் இப்படி அலசிய பிறகு, சீயக்காயோ, ஆயில் கன்ட்ரோல் ஷாம்புவோ உபயோகித்து அலசி, வெயிலில் சிறிது நேரம் நின்று உலர்த்தவும்
* ஒரு கைப்பிடி அளவு சீயக்காய், 3 பூந்திக் கொட்டை, கைப்பிடி அளவு குண்டு மல்லி ஆகியவற்றை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்தத் தண்ணீரை வடித்து, தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். எண்ணெய் பசை கட்டுப்படும். தலைமுடிக்கு இயற்கையான நறுமணமும் கிடைக்கும்.
* 2 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜாவை எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிலுள்ள நிறமெல்லாம் போனதும் அந்த ரோஜாவை எடுத்து வேறு தண்ணீரில் போட்டு, கொஞ்சம் மரிக் கொழுந்தும் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள் இந்தத் தண்ணீரைக் கசக்கி, வடிகட்டி, தலையை அலச உபயோகிக்கலாம்.
* தலைக்குக் குளித்ததும் அவர்கள் உபயோகிக்கிற சீப்பு, பிரஷ் போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.
* தலையைத் துவட்ட டர்கி டவல் உபயோகிக்காமல், கதர் டவல் உபயோகிப்பதே சிறந்தது.
- பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
- சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.
வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.
ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.
பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.
பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.
மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.
சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.
சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.
சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.
- ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.
- நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது கூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது.
அடர்த்தியான கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் கூந்தல் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது. தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும். நல்ல பயனை பெற கீழ்வரும் இரண்டு வழிகளை பின்பற்றலாம்.
முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை நன்றாக துடைக்க வேண்டும். சில துளி ஆமணக்கு எண்ணெயை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூச வேண்டும். ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளின் வேர்களை அடைவது முக்கியம். எனவே மிகுந்த கவனத்துடன் துல்லியமாக செய்ய வேண்டும். இது மாதிரி மற்றொரு கண் இமைகளுக்கும் செய்ய வேண்டும்.
கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை துடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் செய்யவேண்டும். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும். கண்டிப்பாக தினமும் இரவில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல கிடைப்பதை காணலாம்.
கிளிசரினுடன் முட்டை வெள்ளை கரு இரண்டு துளிகள் கலந்து கண் இமைகளுடன் பூச வேண்டும். இந்த கலவை கண் இமைகளை தடிமானாக , உறுதியாக மற்ற உதவுகிறது. அதே நேரத்தில் முட்டை வெள்ளை கருவில் இருக்கும் அதிகமான புரதம் கண் இமைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் நல்லதாகும். வாரத்திற்கு இரண்டு முறை ஆமணக்கு எண்ணெய்யைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலைமுடி வேகமாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும் மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கவும் உதவுகிறது.
- இது உங்கள் சருமத்தை குளிர்விக்க செய்கிறது.
- சருமத்தை நன்கு சுத்தம் செய்ய தினமும் ஒரு முறை செய்யவும்.
உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.
மோர் இது சருமத்திற்கு சிறந்த க்ளென்சராக செயல்படுகிறது. இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த பயன்படுகிறது. இதன் லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தின் உள் துளைகளில் பதிக்கப்பட்டிருக்கும் அழுக்கு, தூசி, அழுக்கு மற்றும் சகதி ஆகியவற்றை வெளியேற்றுகிறது. மோரில் உள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சருமத்தை இறுக்கமாக்கவும், வயதை குறைக்கவும் உதவுகிறது. சருமத்தை வெண்மையாக்க மோர் பயன்படுத்துவது எப்படி என்பதை விவாதிக்க இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பல தோல் பிரச்சனைகளுக்கு எதிராக மோர் ஒரு சிறந்த தீர்வாக இருப்பதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று, அதில் இயற்கையான ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் அல்லது AHA கள் இருப்பதுதான். இந்த மூலப்பொருள் உங்கள் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை நீக்கி முகப்பருவை தடுக்கிறது. உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தில் இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது, தற்போதுள்ள வடுக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முற்றிலும் தெளிவான மற்றும் களங்கமற்ற சருமத்தை வழங்குகிறது.
நீங்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், ஒரு கிளாஸ் மோர் எடுத்து உங்கள் வெயிலில் எரிந்த சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும். இது உங்கள் சருமத்தை குளிர்விக்க செய்கிறது.
கடலை மாவு, மஞ்சள், சந்தனப் பொடி மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஆரஞ்சு தோல் பொடியுடன் போதுமான அளவு மோர் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் போட்டு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு அதை வைத்திருங்கள். உங்கள் தோல் இறுக்கமாக உணருவீர்கள்(இயற்கையாகவே, முகமூடி காய்ந்து வருவதால்). ஒரு மாதத்திற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த பேக்கை திரும்பத் திரும்ப போட்டு, உங்களை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள்.
2 டீஸ்பூன் உலர் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, தேவையான அளவு மோர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் செய்து கொள்ளவும். அதை தோலில் தடவி வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் அதை ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், பிடிவாதமான புள்ளிகள் மற்றும் புள்ளிகள் குறையும்.
அரை டீஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து சம அளவு ரோஸ் வாட்டருடன் கலக்கவும். அதில் சில துளிகள் பாதாம் எண்ணெயைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். ஒரு காட்டன் பந்தைக் கொண்டு, இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். சருமத்தை நன்கு சுத்தம் செய்ய தினமும் ஒரு முறை செய்யவும்.
இந்த மோர் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையானது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் அசுத்தங்களின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்ற உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
- மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.
நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.
லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.
புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.
கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.
கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.
ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.






