search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "make up tips"

    • ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
    • மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.

    நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.

    லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.

    புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.

    கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.

    கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.

    ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.

    • சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது.
    • மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல்.

    கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவு மற்றும் பாதுகாப்பான உடைகளை கவனமாகத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிகள், மேக்கப் போடுவதிலும் சற்றே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். முக அழகை மேம்படுத்திக் காட்டுவதற்கு பலவிதமான மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள மூலப் பொருட்களைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சில பொருட்களில் உள்ள ரசாயனக் கலவைகள், வயிற்றில் இருக்கும் கருவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அது பற்றிய தகவல்களை இங்கே காணலாம்:

    மேக்கப் பொருட்களில் இருக்கும் பாராபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட், பித்தலேட்ஸ் போன்ற ரசாயனக் கலவைகள் உடல்நலத்துக்கு ஆபத்தானதாகும். எனவே இத்தகைய மேக்கப் சாதனங்கள் பயன்படுத்துவதை கர்ப்ப காலம் முடியும் வரை தவிர்க்கலாம். செயற்கை நிறங்கள் மற்றும் சாலிசிலிக் அமிலம் கொண்ட மேக்கப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது.

    சரும பராமரிப்புக்கு 'வைட்டமின் ஏ' அவசியமானது. ஆனால் சில அழகு சாதனப் பொருட்களில் செயற்கை ரெட்டினாய்டுகள் எனப்படும் வைட்டமின் ஏ-வின் கலவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், சருமத்தை பொலிவாக்கும் கிரீம்களில் காணப்படும் 'வைட்டமின் கே' ரத்தத்தை உறைய வைப்பதற்கு பயன்படுகிறது. இவை கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதுதவிர மேக்கப் பொருட்களில் கலக்கப்படும் காரீயம் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

    மேக்கப் பொருட்களும், பாதுகாப்பான பயன்பாடும்: லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்): கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனக் கலவைகள் வயிற்றுக்குள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக தேன், ரோஸ் எண்ணெய், பாதாம் எண்ணெய் முதலிய இயற்கை பொருட்களால் ஆன லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

    முக கிரீம்: முகத்துக்கு பூசும் கிரீம்களில் செயற்கையான பொருட்கள் அல்லது ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, 'ஹைபோஅலர்ஜெனிக்', 'வாசனை இல்லாத', 'இயற்கையான' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்கலாம்.

    நெயில் பாலிஷ்: நகச் சாயத்தில் 'டோலுயீன்' எனும் ரசாயனக் கலவை பயன்படுத்தப்படுகிறது. இது சாப்பிடும்போது உடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முடியும் வரை நகச் சாயத்தை முழுமையாக தவிர்த்து விடலாம்.

    காஜல் (மை): மேக்கப் பொருட்களில் முக்கியமானது காஜல். 'கண் மை' பிடிக்காத பெண்களே இல்லை. இயற்கையான முறையில் கற்பூரம், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'கண் மை' உபயோகிப்பது நல்லது. இது கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

    மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கலாம்:

    * கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள் ஏற்பட்டாலும், கர்ப்பிணி பெண்களுக்கு உரித்தான பொலிவு, அவர்களுக்கு தனி அழகை ஏற்படுத்தும்.

    * ஆரோக்கியமான உணவும், பழங்களும், பச்சை காய்கறிகளும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும், அழகும் இயற்கையாகவே மேம்படும்.

    * கர்ப்ப காலத்தில் 100 சதவீதம் இயற்கையான மேக்கப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.

    • மேக்கப் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்துள்ளனர்.
    • சிறந்த பிராண்ட் கொண்ட டோனர் வாங்குவதும் அவசியம்.

    பெரும்பாலும் மேக்கப் பற்றிய தெளிவான புரிதல் அதிகப்படியான பெண்களுக்கு இருப்பதில்லை. மேக்கப் குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

    எனவே, நிபுணர்கள் இது குறித்து சில தெளிவான ஆலோசனைகளையே முன் வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக எந்த வகையான மேக்கப் போட வேண்டும், எது சருமத்திற்கு சிறந்த ஒன்று, மேக்கப் போடுவதற்கு முன் சருமத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

    கிளென்சிங்:

    மேக்கப் போடுவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது கிளென்சிங் தான். உங்கள் தோல் வகையுடன் நன்றாக பொருந்தும் கிளென்சிங்கை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தின் அனைத்து அசுத்தங்களையும் சுத்தப்படுத்தும். மேலும் இந்த செயல்முறையை மெதுவாக செய்தல் நல்லது. பிறகு உங்கள் சருமத்தை சிறிது நேரம் உலர வைக்கவும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    எக்ஸ்போலியேஷன்:

    இறந்த சரும செல்களை அகற்ற எக்ஸ்ஃபோலியேஷன் அவசியம். மேக்கப்-ஆனது வறண்ட சருமத் திட்டுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது, எனவே மேக்கப்பிற்கு முன் எக்ஸ்ஃ போலியேஷன் உங்களுக்கு மென்மையான மேற்பரப்பைக் கொடுத்து மேக்கப்பை எளிதாக பயன்படுத்துவதற்கும் உதவும். குறிப்பாக நீங்கள் மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், உங்கள் உதடுகளையும் எக்ஸ்ஃபோலியேட் செய்ய மறக்காதீர்கள்.

    டோனர்:

    டோனிங் முறை என்பது துளைகளை சுருக்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. மேக்கப் தோலின் ஆழமான அடுக்கில் நுழைவதற்கு இது ஒரு தடையாகவும் செயல்படுகிறது. டோனிங்கிற்கு குளிர்ந்த நீரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

    மேலும், இது சருமத்துளைகளை சுருக்கி, மேக்கப்பை மிருதுவாகப் பயன்படுத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. சிறந்த பிராண்ட் கொண்ட டோனர் வாங்குவதும் அவசியம்.

    சீரம்:

    சருமப் பராமரிப்பு சீரம்கள் மேக்கப்பிற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இது சருமத்திற்கு சிறந்த ப்ரைமராக செயல்பட உதவுகிறது. சீரம் சருமத்தை நன்கு ஹைட்ரேட் செய்து, நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க வழி செய்கிறது.

    மாய்ஸ்சரைசர்:

    உங்கள் தோல் வகையைப் பொருட்படுத்தாமல், மேக்அப் பயன்பாட்டிற்கு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். இது உங்கள் தோலின் மேல் மேக்கப் அழகாக இருப்பதையும், நாள் முழுவதும் வசதியாக இருப்பதையும் உறுதிசெய்கிறது. அதே போன்று, உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த செயல்முறையாகும்.

    SPF அவசியம்:

    சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தால், சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் பயன்படுத்துவதற்கு மறக்காதீர்கள். ஒருவேளை இதை பயன்படுத்திய பிறகு உங்கள் சருமம் க்ரீஸாக உணர்ந்தால், அதிகப்படியான எண்ணெயை சரிசெய்ய டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.

    பிரைமர்:

    ப்ரைமர் உங்களின் மேக்கப்பை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது. ப்ரைமர்கள் உங்கள் மேக்கப் பயன்பாட்டிற்கு ஒரு மென்மையான தளத்தை உருவாக்குவதோடு, உங்கள் மேக்கப்பையும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு நல்ல தரமான ப்ரைமருக்கு, துளைகளை மங்கச் செய்து, மேக்கப்பிற்காக சருமத்தை தயார் செய்யவும், சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க கூடிய சக்தி உள்ளது

    • நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான்.
    • கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள்.

    நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.

    லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.

    புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.

    கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.

    கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.

    ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.

    • லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள்
    • கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள்.

    எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்கான டிப்ஸ்தான்.

    கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும். முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

    அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

    வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

    ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

    உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்! மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

    மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

    கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

    • சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
    • கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள்.

    நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.

    லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.

    ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.

    புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.

    கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.

    கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.

    ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.

    • நிறைய பெண்களுக்கு கண் இமை அல்லது கண் புருவ முடி இயற்கையாகவே இருப்பதில்லை.
    • பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அடர் நிறத்தில்தான் இருக்கின்றன.

    ''நமக்கு எல்லோருக்குமே, மேக்கப் கலை பற்றி நன்றாக தெரியும். அதில் பலவிதமான மேக்கப் நுட்பங்கள் இருப்பதும் தெரியும். ஆனால் அத்தகைய மேக்கப், ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். ஆனால் இப்போது நிரந்தரமாக இருக்கக்கூடிய மேக்கப் கலையும் பிரபலமாகி வருகிறது. 'நிரந்தர மேக்கப்', 'செமி நிரந்தர மேக்கப்'... இப்படி முகப்பொலிவையும், சரும அழகையும் நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள, பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது உலக அளவில், படுவைரலான விஷயம் என்றாலும், நம் இந்தியாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் இப்போதுதான், அதுபற்றிய புரிதல் உருவாகி வருகிறது'' என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார், ஜாஸ்மின்.

    சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்தவரான இவர், டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ரொம்ப பிரபலம். அழகுக் கலை சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு நிரந்தர மேக்கப் கலை மூலமாக தீர்வு கூறி, தனக்கென பெரிய ரசிகைகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். அவர், நிரந்தர மேக்கப் பற்றியும், அதனால் அவர் ஈர்க்கப்பட்டது குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.

    ''நான் பி.காம் படித்திருக்கிறேன். இளங்கலை படிப்பிற்கு பிறகு, வேறு என்ன புதுமையான படிப்புகளை மேற்கொள்ளலாம் என்ற தேடலில்தான், எனக்கு நிரந்தர மேக்கப் பற்றி தெரியவந்தது. சிறுவயதில் இருந்தே, அழகுக் கலையில் ஆர்வம் அதிகம் என்பதால், நிரந்தர மேக்கப் பற்றிய குறுகிய கால படிப்புகளை படித்து முடித்தேன்'' என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு, நிரந்தர மேக்கப் கலை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

    ''நிரந்தர மேக்கப் என்பது, நிரந்தர அழகுக் கலை. உதாரணத்திற்கு, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மேக்கப் செய்கிறோம் என நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மேக்கப் பணியில், பவுடர் பொருட்களை கொண்டு முகத்தை 'பளிச்' என மாற்றுவார்கள். உதட்டு சாயம் பூசி, உதடுகளின் வண்ணத்தை மாற்றுவார்கள். செயற்கை கண் இமைகளைப் பொருத்தி, கண் புருவங்களை நல்ல வடிவில் மாற்றி அழகாக்குவார்கள். இப்படி திருமண வரவேற்பில் நம்மை அழகாக காட்ட, நிறைய மேக்கப் வேலைகள் நடைபெறும். இவை அனைத்தும், தற்காலிகமானவை. அடுத்த சில மணி நேரங்களிலேயே முகத்தில் பூசிய பவுடர் கலைந்து விடும். உதட்டு சாயமும் அழிந்துவிடும். அதுவே, 6 மாதங்களுக்கு, ஒரு வருடத்திற்கு என நிரந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையில்தான், இந்த நிரந்தர மேக்கப் கலை உருவானது'' என்பவர், மருத்துவமும், அழகுக் கலையும் சேர்ந்ததுதான் நிரந்தர மேக்கப் கலை என்கிறார்.

    ''காஸ்மட்டாலஜி, டெர்மட்டாலாஜி... இவ்விரு துறை சார்ந்த மருத்துவர்களுடன், அழகு கலை நிபுணர்களும், இந்த நிரந்தர மேக்கப் கலையில் முக்கியமானவர்கள். சரும அழகை மேம்படுத்துவது, முகப்பொலிவை மீட்டெடுப்பது, நிறத்தை நிரந்தரமாக மாற்றுவது... போன்றவை எல்லாம் மருத்துவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் நடக்கக்கூடியவை. ஆனால் கருப்பான இதழ்களை நிறம் மாற்றுவது, கண் புருவங்களை செயற்கை நூலிழை தைத்து நிரந்தரமாக உருவாக்குவது, கண் இமைகளை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது, கரும்புள்ளிகளை அகற்றுவது, பேஸ் ஒயிட்னிங், பேஸ் கலரிங்... இது போன்றவை எல்லாம் மேக்கப் கலை நிபுணர்களே செய்யக்கூடியது. இத்தகைய மேக்கப் தொழில்நுட்பங்கள், நிரந்தரமாகவே அழகை தக்க வைத்துக்கொள்ள உதவும்'' என்றவரிடம், நிரந்தர மேக்கப் கலையின் அவசியம் என்ன? என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர் பொறுப்பாக பதில் அளித்தார்.

    ''யோசிக்கக் கூடிய கேள்விதான் என்றாலும், சமூகத்தில் பல பெண்களும், ஆண்களும் பலவிதமான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறைய பெண்களுக்கு கண் இமை அல்லது கண் புருவ முடி இயற்கையாகவே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், அவை அடர்த்தியாக இல்லாமல், லேசாகவே இருக்கும். அது மிகவும் இயல்பான விஷயம்தான். இருப்பினும் சமூகத்தின் பார்வையில் தங்களையும் இயல்பாக காட்டிக்கொள்ள, அதை சரிசெய்ய ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். அவ்வப்போது பொருத்திக்கொள்ளக்கூடிய கண் இமைகளுக்கு பதிலாக, மைக்ரோ பிளேடிங் முறையில் நிரந்தரமாக இருக்கக்கூடிய கண் இமைகளை பொருத்திக் கொள்கிறார்கள். அதேபோலதான் உதட்டு நிறமும். எல்லா பெண்களுக்கும், உதடுகள் 'பளிச்' என்ற நிறத்தில், இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு உதடுகள் அடர் நிறத்தில்தான் இருக்கின்றன. அதை உதட்டு சாயங்கள் மூலம் தற்காலிகமாக மறைப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக எப்படி 'பளிச்' என மாற்றுவது என யோசிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, நிரந்தர மேக்கப் ரொம்பவே உபயோகமானதாக இருக்கும்'' என்றவர், இந்த மேக்கப் கலையை பெண்களை விட, ஆண்களும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

    ''புகைப்பழக்கத்தினால் உதடுகள் கருப்பானவர்களும், சரும நோயினால் புருவத்தை இழந்த டீன்-ஏஜ் ஆண்களும், நிரந்தர மேக்கப் செய்து கொள்கிறார்கள். மேலும் முக அழகை மேம்படுத்த பேஸ் கிரீம்களுக்கு பதிலாக, நிரந்தர அழகை பெற நிரந்தர மேக்கப் கலைஞர்களையே நாடுகிறார்கள். மேலும் இது எளிமையான பணியே. 2 முதல் 3 மணிநேரங்களில் மேக்கப் வேலைகள் முடிந்துவிடும்'' என்றவர், இனி வருங்காலங்களில் இதற்கான வரவேற்பு அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்.

    ''10 ஆண்டுகளுக்கு முன்பு, மேக்கப் கலைஞர்களை தேடிப்பிடிப்பது சிரமமான ஒன்று. ஆனால் இன்று அப்படியில்லை. திரும்பிய திசை எல்லாம் மேக்கப் கலைஞர்கள் இருக்கிறார்கள். கூடவே, எல்லா பெண்களும், மேக்கப் கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டு, தாங்களாகவே மேக்கப் போட பழகிக் கொண்டிருக்கின்றனர். இப்படியொரு சூழலில், மேக்கப் கலையை முழுநேர தொழிலாக பார்க்கும் டீன்-ஏஜ் பெண்களுக்கு, நிரந்த மேக்கப் கலை புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

    தற்காலிக மேக்கப் கலைக்கும், நிரந்தர மேக்கப் கலைக்கும் 'பட்ஜெட்' விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், இனி வருங்காலங்களில் தற்காலிக மேக்கப் கலையை விட, நிரந்தர மேக்கப் கலைக்கே மவுசு அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, அழகு கலை பயிற்சி நிறுவனங்கள், நிரந்தர மேக்கப் கலையையும் பயிற்றுவிக்க தொடங்கி விட்டன. நிறைய மேக்கப் கலைஞர்களும், தங்களை மேம்படுத்திக் கொள்ள நிரந்தர மேக்கப் கலை பயில்கிறார்கள்'' என்பவர், இது மருத்துவ உலகையும், அழகு கலையையும் மையப்படுத்தி இயங்குவதால், புதுமைக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்.

    ''புதுப்புது தொழில்நுட்பங்கள், புதுமையான மருத்துவ முறைகள்... என ஏற்கனவே நிரந்தர மேக்கப், வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டது. இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ஓரிரு வருடங்களில், எல்லோரும் அறிந்த மேக்கப் கலையாக இது மாறிவிடும். மக்களின் தேவைக்கு ஏற்ப, மேக்கப் நுட்பங்களில் புதுமையான புரட்சிகளும் ஏற்படும்'' என்றவர், சின்னத்திரை-வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இதுபோன்ற நிரந்தர மேக்கப் கலைகளினாலேயே, நிரந்தர முகப்பொலிவு பெறுகின்றனர் என்ற கருத்துடன் விடைபெற்றார்.

    • தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம்.
    • பவுண்டேஷனை தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது.

    மேக்கப் என்றாலே, அதற்கு அடித்தளமாக இருப்பது பவுண்டேஷன் (Foundation) தான். சருமத்தின் நிறத்துக்கு, தன்மைக்கு ஏற்ப பவுண்டேஷனை தேர்வு செய்யும்போதுதான், மேக்கப் சரியான முறையில் வெளிப்படும். பவுண்டேஷன் சரியாக இல்லையெனில், மொத்த மேக்கப்பும் சொதப்பிவிட வாய்ப்புள்ளது. இப்படி, மேக்கப்பில் மிக முக்கிய அம்சமான பவுண்டேஷனை சருமத்துக்கு ஏற்ப எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.

    பவுண்டேஷன் பயன்படுத்தும் முன் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சரும வகைதான். எண்ணெய்ப்பசை சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், காம்பினேஷன் சருமம் என இந்த அடிப்படை நான்கு சரும வகைகளில் என்ன மாதிரியான சருமத்தை கொண்டுள்ளோம் என்பதை கொண்டே பவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    எண்ணெய்ப்பசை சருமம் என்றால் பவுடர் பவுண்டேஷன் அல்லது எண்ணெய் இல்லாத திரவ வடிவிலான பவுண்டேஷனை (Liquid Foundation) பயன்படுத்தவும்.

    வறண்ட சருமம் என்றால் ஈரப்பதம் கொடுக்கவல்ல லிக்விட் பவுண்டேஷன், க்ரீம் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    காம்பினேஷன் சருமம் என்றால் லிக்விட் அல்லது பவுடர் பவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    முகப்பரு உள்ள மற்றும் சென்சிட்டிவ் சருமம் என்றால், ஆல்கஹால் மற்றும் நறுமண பொருள்கள் கலந்த பவுண்டேஷனை தவிர்ப்பது நல்லது.

    சரும நிறத்தை முகத்தில் இல்லாமல் தாடை பகுதி அல்லது கழுத்துப் பகுதி நிறத்தை கொண்டே கணக்கிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமே பவுண்டேஷனில் சரியான ஷேடை (shade) தேர்ந்தெடுக்க முடியும். மேலும் குளிர்காலம், கோடைக்காலம் என்று சருமத்தின் நிறம் மாறும் என்பதால் ஒவ்வொரு முறை பவுண்டேஷன் வாங்கும் போது நிறத்தை கவனிப்பது நல்லது.

    சருமத்தின் அண்டர்டோன் (Undertone) பற்றிய அறிய வேண்டும். வார்ம் (Warm) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பீச், மஞ்சள், அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இவர்கள் வார்ம் டோன்க்கு பொருந்தும் பவுண்டேஷன் ஷேடை (shade) தேர்ந்தெடுக்க வேண்டும். கூல் (Cool) அண்டர்டோன் உள்ளவர்களின் சருமம் பிங்க், ரெட் நிறத்தில் இருக்கும். இவர்கள் கூல் டோன்க்கான பவுண்டேஷன் ஷேடை தேர்ந்தெடுக்க வேண்டும். நியூட்ரல் (Neutral) அண்டர்டோன் உள்ளவர்கள், மேலே சொன்ன இரண்டின் சீரான கலவை சருமத்தை கொண்டிருப்பார்கள்.

    பவுண்டேஷன் உங்கள் சருமத்தில் எந்த மாதிரியான இறுதிப் பொலிவை (Finish) ஏற்படுத்த விருபுகிறீர்களோ, அதற்கேற்ப dewy, matte, semi-matte மற்றும் luminizing finish வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

    பவுண்டேஷனை வாங்கும் முன், பெரும்பாலும் அதனை கைகளில் பரிசோதித்து வாங்குவோம். ஆனால் கையின் நிறமும், முகத்தின் நிறமும் ஒன்றுபோல் இருக்காது என்பதால் தாடையின் ஓரத்தில் பரிசோதனை செய்து வாங்குவது நல்லது. தாடையின் நிறம்தான் முகத்திற்கேற்ப இருக்கும். தற்போது விர்ச்சுவல் ட்ரை வசதி இருப்பதால் அதையும் பயன்படுத்தலாம்.

    டிப்ஸ்

    * பவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்ய வட்டமான பவுண்டேஷன் பிரெஷ், மேக்கப் ஸ்பொஞ் என வசதிக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளவும். ஆனால் அது தரமானதாக இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

    * பவுண்டேஷனுடன் ப்ரைமர் (Primer) பயன்படுத்துவது நல்ல, நீடித்த மேக்கப்புக்கு அவசியம்.

    * தேவைக்கும் அதிகமான பவுண்டேஷனை பயன்படுத்த வேண்டாம். சிறிது சிறிதாக தேவையான இடங்களில் இட்டு, சீராக தடவும் போது இயற்கையான லுக் கிடைக்கும்.

    • மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது.
    • இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.

    மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை 'பிரைமர்' எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, 'பவுண்டேஷன்' பூச வேண்டும். நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு 'நீட்'டாக இருக்கும்.

    எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், 'காம்பாக்ட் பவுடர்' பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை 'கன்சீலர்' கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, 'பிரான்சர்' கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.

    'கான்டர்' என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது. ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க 'ஐ புரோ பவுடர்', 'ஐ லைனர்', 'மஸ்காரா' போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை 'லிப் பாம்', 'லிப் லைனர்', 'லிப்ஸ்டிக்' கொண்டு அழகாக்கலாம்.

    மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம். இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.

    ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.

    • எந்த வகையான மேக்கப் போடுவதற்கு முன்பும், முகத்தை அதற்கேற்றவாறு தயார் செய்வது முக்கியம்.
    • நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது முக்கியம்.

    அழகுக்கு அழகு சேர்ப்பது போல, ஒருவரது தோற்றத்தை மெருகூட்டி காட்டுவது 'மேக்கப்'. முக அமைப்பு, சரும நிறம் மட்டுமில்லாமல் காலை, மாலை, வெயில், மழை போன்ற கால நேரங்களையும் மேக்கப் போடும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். காலை நேரத்தில் இயற்கை வெளிச்சம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விருப்பத்துக்கேற்ற மேக்கப் போட்டுக்கொள்ளலாம்.

    மாலை நேரங்களில் நடக்கும் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் அதிக வெளிச்சம் தருவதற்காக பெரிய மின்விளக்குகள் பயன்படுத்தப்படும். இவை அதிக வெப்பத்தை வெளியிடுவதால், எளிதாக உருகி வழியாதவாறு மாலை நேர மேக்கப் போட வேண்டும். எந்த வகையான மேக்கப் போடுவதற்கு முன்பும், முகத்தை அதற்கேற்றவாறு தயார் செய்வது முக்கியம். மேக்கப் சிறப்பாக அமைய வேண்டுமெனில், சருமம் புத்துணர்ச்சியோடு ஈரப்பதமாக இருப்பது அவசியம். எனவே முகத்தை நன்றாகக் கழுவி, ஸ்கிரப் செய்து, மாய்ஸ்சுரைசர் பூசிய பின்பு அதன் மேல் மேக்கப் போடுவது நல்லது. இதனால் அழகு சாதனப் பொருட்கள், சருமம் முழுவதும் சீராகப் படர்ந்து சிறந்த பினிஷிங் கிடைக்கும்.

    மேக்கப்பின் முதல் படியாக பிரைமர் பயன்படுத்த வேண்டும். இது இரவு விளக்குகளின் வெப்பத்தால் உருகாமல், மேக்கப் வெகு நேரம் நீடித்திருக்க துணைபுரியும். இரவு நேர மேக்கப்பிற்கு பவுண்டேஷனை தவிர்த்து, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவற்றை மறைக்க கன்சீலர், முகத்தின் வடிவை மேம்படுத்திக்காட்ட கான்டூர் மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதிகமான பொருட்களைப் பயன்படுத்துவது, மேக்கப் உருகுவதற்கு வழிவகுக்கும். நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு மேக்கப் செய்வது முக்கியம்.

    மினுமினுப்பான உடை அணியும்போது லேசான மேக்கப் போடுவது சிறந்தது. சாதாரண உடை அணிந்தால் பளிச் என்ற மேக்கப் பொருத்தமாக இருக்கும். உதடுகளில் அடர்ந்த நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், கண்களில் குறைவாக மேக்கப் போடுவது பொருத்தமாக இருக்கும். கண்களுக்கு அதிக மேக்கப் போடும்போது, உதடுகளில் லேசான நிறம் கொண்ட லிப்ஸ்டிக் போடுவது நன்றாக இருக்கும். இரவுநேரத்தில் மின்விளக்கு வெளிச்சம் முகத்தில் பட்டு அதிகமாக பிரதிபலிப்பதால், கன்னம், மேல் உதடு மற்றும் புருவ வளைவு போன்ற இடங்களில் சிறிது ஹைலைட்டர் பயன்படுத்துவது அந்தப் பகுதிகளை அழகாகவும், எடுப்பாகவும் காட்டும்.

    • ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.
    • மழைக்காலத்திற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...

    பல பெண்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக 'மேக்கப்' போடுவது உள்ளது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உளவியல் கூறுகிறது. தோற்றத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் மேக்கப் உதவுகிறது. ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது.

    இதனால், மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் அழகை மெருகேற்றிக்காட்டும். மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், அதற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ...

     மழைக்காலம் என்றாலும் டோனர், மாய்ஸ்சுரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் உபயோகிப்பதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இது சரும வறட்சி, எண்ணெய் வழிதலைக் குறைத்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

     மழையில் நனைந்தாலும் அதிக வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்கு, குறைவான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. கலர் கரெக்டர், பவுண்டேஷன், கன்சீலர் என்று அடுக்கு அடுக்காக போடாமல், முக்கியமான பொருட்களைமட்டும் உபயோகித்தால், மழையில் நனைந்தாலும் உங்கள் முகம் சிறப்பாக தோற்றமளிக்கும். குறிப்பாக பிரைமரைத் தொடர்ந்து கன்சீலர் மற்றும் காம்பாக்ட் மட்டும் போட்டுக்கொள்வது மழைக்காலத்திற்கு ஏற்றது. பவுண்டேஷன் போட்டுக்கொள்ள விரும்பினால் அதனை பிரைமருடன் கலந்து போடுவது நல்லது.

     தண்ணீரில் அழியாத மேக்கப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதே சமயம் முழு மேக்கப்புக்கு தேவையான, அனைத்து பொருட்களும் கிடைப்பது இல்லை. சில வாட்டர்-புரூப் மேக்கப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி, மற்றவற்றுக்கு சாதாரணப் பொருட்களை உபயோகித்தால் அது மேக்கப்பின் தரத்தைக் குறைக்கும்.

     ப்ளஷ் (Blush) மற்றும் ஹைலைட்டர் (Highlighter) போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால் 'பவுடர்' வடிவில் இருப்பவற்றை பயன்படுத்தலாம்.

     புருவம், இமைகள் மற்றும் விழிகளை சிறப்பாகக் காட்டும் ஐ லைனர், கண் மை (காஜல்) மற்றும் மஸ்காரா போன்றவை வாட்டர்-புரூப் வகையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.

     காஜல் அணியும்போது, வழக்கமான கருப்பு நிறத்தில் அணியாமல் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் அணிந்தால் கரைவது தெரியாது, கண்கள் பெரிதாகத் தெரியும்.

     வாட்டர்-புரூப் லிப்ஸ்டிக் சந்தையில் கிடைக்கிறது. அதில் மேட் ரகத்தில் உள்ளவற்றை பயன்படுத்தலாம். லேசான நிறங்களான பிங்க் மற்றும் பழுப்பு நிறங்கள் மழைக்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

     இமைகளில் மஸ்காரா அணியும்பொழுது, முதலில் வழக்கமான ஒன்றை அணிந்து கொண்டு பின்னர் அதன் மேல் வாட்டர் புரூப் வகையை பயன்படுத்தினால் அதிக நேரம் நீடிக்கும். இமைகளை நீளமாக காட்டும். நீரில் அழியாது. மேக்கப் என்பது நம் அம்சங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுவது. அது சரியான அளவில் மற்றும் சீரான நிறத்தில் இருந்தால்தான் சிறப்பான தோற்றம் பெற முடியும். மழைக்கால மேக்கப்பை பொறுத்த வரை, குறைவான பொருட்களை பயன்படுத்துவதால் அழகான தோற்றம் பெறலாம்.

    • மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும்.
    • நாம் போடும் மேக்கப் நமது ஆளுமையை வெளிப்படுத்தும்.

    'ஒப்பனை' என்பது தோற்றத்தை அழகாக எடுத்துக்காட்டுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பும் விதத்தில் உங்களை உருவாக்குவதும் தான். நாம் போடும் மேக்கப்பை, நமது ஆளுமையை வெளிப்படுத்தும் கருவியாக மாற்றுவது எவ்வாறு என்பதைப் பற்றி பார்ப்போம்

    கண்கள்: கண்கள் மனதின் ஜன்னல்கள். எனவே, கண்களைச் சுற்றி செய்யும் அலங்காரம், நமது மனதின் ஆழத்தில் உள்ள சாயல்களை வெளிப்படுத்தும். பெரும்பாலான இளம்பெண்கள் அணியத் தொடங்கும் முதல் அழகுசாதனப் பொருள் கண் மை (காஜல்). கண்களுக்கு செய்யும் ஒப்பனைக்கு முகத்தை மாற்றும் சக்தி உள்ளது. ஐ லைனர்கள் முதல் ஐ ஷேடோக்கள் வரை, நீங்கள் விரும்பும் அழகான கண் தோற்றத்தை உருவாக்க பல அழகு சாதனங்கள் உள்ளன.

    முகம்: கண்களுக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது முகம்தான். லேசான மேக்கப் மட்டும் இருந்தாலே, முகத்தை அழகாக எடுத்துக் காட்டலாம். குறைவாக ஒப்பனை செய்யும் போது, முகம் பிரகாசமாக மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடனும் வெளிப்படும். இதில், கவனிக்க வேண்டிய விஷயம், நம் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்தல். இது முகத்தின் அழகை மெருகூட்டிக் காட்டும்.

    லிப்ஸ்டிக்: முகத்தில், நாம் உதிர்க்கும் புன்னகையை தன்னம்பிக்கையுடன் வெளியே பிரதிபலிக்க உதட்டை அழகாக வைத்திருப்பது அவசியம். வறட்சியுடனோ, வெடிப்புடனோ உதடு இருந்தால், பல பாதிப்புகள் ஏற்படும். உதட்டை எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைக்க 'லிப் பாம்' பயன்படுத்தலாம். ஒப்பனைக்கேற்ப லிப்ஸ்டிக் நிறத்தைத் தேர்வு செய்யலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தினால், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாய் பிரதிபலிக்க முடியும்.

    நகப்பூச்சு: நகங்களுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் நகப்பூச்சு, நம் எண்ணங்களின் பிரதிபலிப்பாக மாறும். சிவப்பு நிறம் பூசும்போது, அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். பிறர் மீதான கோபத்தின் வெளிப்பாட்டுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்தலாம். மற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக்கு வானவில்லின் பிற நிறங்களைப் பயன்படுத்தலாம். இந்த வண்ணக் குறியீடு, உங்கள் ஆற்றலின் அளவை வெளிப்படுத்தும். அழகு, ஒப்பனை, தோல் பராமரிப்பு மற்றும் சுய பாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு முக்கியமானவை.

    'மேக்கப்' நம் அழகை வெளிக்காட்ட உதவும் ஓர் ஆயுதம். இதனால், பெண்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர முடியும். இது உங்களின் ஆளுமையை மீட்டெடுப்பதற்கான சிறந்த வழியும் ஆகும். மேக்கப்பை நாம் கவசமாகப் பயன்படுத்தும்போது, நம்மைத் திறமையானவர்களாக வெளிக்காட்ட முடியும். கச்சிதமாக ஒப்பனை செய்வதற்கு நாம் செலவழிக்கும் 10 நிமிடம் என்பது நமக்கான தியானம் போன்றது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர் தனக்காக சிறிது நேரம் ஒதுக்க ஒப்பனை சிறந்த வழியாகும்.

    ×