என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
    • எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள் கண்டிஷனரை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் என்பது நம் கூந்தலை எண்ணெய் தன்மையுடன் வைத்து வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் பசை இல்லாத கூந்தலின் பகுதிகளில் மட்டும் கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டும் போதும்.

    அதிக எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், அல்லது பொடுகு பிரச்சினை உள்ளவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    கண்டிஷனர் வாங்கும் போது உங்களது கூந்தலின் உறுதித்தன்மையை மனதில் வைத்து டிபாட்மெண்ட் ஸ்டோர்களிலோ அல்லது காஸ்மெடிக் கடைகளில் வாங்குவது நல்லது.

    அவகேடோ பழத்தின் சதை பகுதியை ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு கூந்தலில் மட்டும் படும்படி தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கூந்தலுக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்.

    பூந்திக்கொட்டையை எடுத்து குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரை ஒவ்வொருமுறை ஷாம்பு வாஷிற்கு பிறகும் கூந்தலை இந்த தண்ணீரில் அலசி வர வேண்டும். இது இயற்கையாகவே கண்டிஷனர் போல் உங்களது கூந்தலை பாதுகாக்கும்.

    ஒரு ஸ்பூன் வினிகரை கால் கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த தண்ணீரையும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த வினிகர் கலந்த தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

    • கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம்.
    • வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள்.

    அழகிலும், ஆரோக்கியத்திலும் முன்னோடியாக இருக்கும் கொரிய நாட்டு பெண்களின் ஆரோக்கிய ரகசியம் அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இளைஞர்கள், இளம்பெண்கள், வயதான தாத்தா, பாட்டியாக இருந்தாலும் உடலை மிகவும் ஸ்லிம்மாகவே வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் உணவுமுறைதான், அப்படி அவர்கள் என்ன ரகசிய உணவுமுறையை பின்பற்றுகிறாரார்கள் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

    டயட் என்ற பெயரில் எந்த உணவினையும் ஒதுக்கி வைக்காத கொரிய பெண்கள் புரதம் தொடங்கி கார்ப்ஸ் முதல் கொழுப்புகள் வரை, ஆரோக்கியமான கொரிய உணவு அனைத்தையும் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

    ஆனால் உணவுகளின் அளவில் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் அளவாகவே சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப உடல் செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.

    கொரிய உணவு மேஜையில் அதிகளவில் இருப்பது காய்கறிகள் தானாம். ஆம் காய்கறிகளை அதிகமாக விரும்பும் இவர்களின் உடல் எடையை ஸ்லிம்மாக வைத்திருக்கின்றதாம்.

    இவர்களின் பெரும்பாலான காய்கறிகள் நார்ச்சத்துள்ளவை, ஆரோக்கியமானவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை என்பதால், இது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

    கொரியப் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் வெளியில் சாப்பிடுவதை விட, வீட்டிலேயே சாப்பிடுவார்கள். தங்கள் உடலுக்கு நல்ல உணவுகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் அதற்கேற்ப ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்கிறார்கள்.

    இவர்களின் முக்கிய உணவாக கடல் உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆம் ஆரோக்கியத்திற்கு சிறப்பான கொழுப்பு நிறைந்த மீன்களைத் தவிர, கடற்பாசி ஒரு பொதுவான கொரிய உணவுப் பொருளாகும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கடற்பாசியில் நிறைய நார்ச்சத்து உள்ளதுடன், செரிமானத்திற்கும், நீண்ட காலம் இளமையாகவும் வைக்கின்றதாம்.

    ஆதலால் கடற்பாசியினை வழக்கமான உணவிலிருந்து சூப் வரை அனைத்திலும் சேர்க்கப்பட்டு இவர்கள் சாப்பிடுகிறார்களாம்.

    இறுதியாக கொரிய மக்களைப் பொருத்த வரை எங்கு சென்றாலும் நடப்பதையே விரும்புகின்றனராம். ஆம் பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதை விட, காலால் நடந்தே செல்வதை தான் வழக்கமாக வைத்துள்ளார்களாம்.

    • தலைமுடி வறட்சி அதிகரிக்கும்போது நுனிகளில் வெடிப்பு அதிகமாகும்.
    • தயிர் மற்றும் அவகேடோ பழங்களை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முட்டை தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் மிக முக்கியப் பொருள். முட்டை நம்முடைய தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷ்னராகவும் தலைமுடி சேதமாவதை தடுக்கவும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் முடியின் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.

    தலைமுடி வறட்சி அதிகரிக்கும்போது நுனிகளில் வெடிப்பு அதிகமாகும். அதேபோல முடி உதிர்தல், பொடுகு என ஒவ்வொரு பிரச்சனையாக அதிகமாகும். வறண்ட கூந்தலுக்கு  முட்டை ஹேர்மாஸ்க் ஏற்றது.

    தயிர் - 1 கப்

    முட்டை வெள்ளைக்கரு - 2

    அவகேடோ - 2 ஸ்பூன்

    முட்டையின் வெள்ளைக்கருவை தனியே பிரித்து எடுத்து நன்கு அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தயிர் மற்றும் அவகேடோ பழங்களை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். 

    அவகேடோ மற்றும் தயிர் சேர்க்கப்படும்போது கட்டிகள் ஏற்படலாம். அதனால் கட்டிகள் இல்லாமல் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் வேர்க்கால்களில் அப்ளை செய்து குறைந்தது அரைமணி நேரம் வரை தலையில் வைத்திருக்க வேண்டும்.

    இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தும்போது அவகேடோவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் தயிர் ஆகிய இரண்டும் தலைமுடியின் வறட்சியை நீக்கி பளபளப்பாக வைத்திருக்கச் செய்யும்.

    • வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.
    • எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. கற்றாழை வீட்டில் எளிமையாக வளர்க்கக்கூடிய ஒரு வகையான தாவரம்.

    தண்ணீர் இல்லாத வறண்ட பிரதேசத்தில் கூட வளரும். இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கற்றாழை ஜெல் சருமத்தை வறண்டு போகச்செய்யாமல் பாதுகாக்க உதவுகிறது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும் போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் இவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது.

    நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.

    முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

    முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. எனவே அவை முகத்தில் உள்ள வடுக்களை நீக்க உதவுகின்றன. தினமும் இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    • சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
    • ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.

    பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.

    அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...

    வெங்காயம் ஹேர் பேக்

    சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    ஆலிவ் ஆயில் மசாஜ்

    ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

    தேன்- 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்

    இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

    முட்டை ஹேர்மாஸ்க்:

    முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

    இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.

    • குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.
    • சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

    மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய குங்குமப்பூ உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. குங்குமப்பூவில் வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    குங்குமப்பூவை பால் (அ) தயிர் அல்லது தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். குங்குமப்பூவில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். குங்குமப்பூ சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் வடுக்களை நீக்குகிறது.

    குங்குமப்பூவில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். சருமம் பொலிவற்று கருமையாக இருந்தால் குங்குமப்பூ சிறந்த மருந்தாகும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும்.

    கண்களை சுற்றி உள்ள கருவளையங்களுக்கு குங்குமப்பூவை அரைத்து தினமும் தடவி வர மாற்றம் தெரியும். தேங்காய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தும்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் குறையும்.

    குங்குமப்பூவில் உள்ள லிகோபீன் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

    குங்குமப்பூ சிலருக்கு சரும ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். முதலில் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

    • தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது.
    • ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

    மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    * ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    * தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

    * அன்றாடம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக்கொள்வதுடன் இரவு தூக்கமும் சரும அழகிற்கு உதவுகிறது. தினமும் 6 முதல் 8 மணிநேர உறங்குவதால் காலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.

    * சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. உடற்பயிற்சி சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறங்கும் முன் தோலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

    * சன்ஸ்கிரீனை கோடையில் மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. வருடத்தின் அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை தடுக்கிறது.

    * மன அழுத்தமே முடி உதிர்தல், முடி நரைத்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் தியானம், இசையை கேட்பது, பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    • மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் குறையும்.
    • மாம்பழக் கூழ், கோதுமை மாவு, தேன் கலந்து முகத்தில் தடவி வர சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.

    கோடை காலத்தில் கிடைக்கும் சீசன் பழமான மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். மாம்பழம் உணவாக மட்டும் இல்லாமல் நமது அழகை அதிகரிக்க உதவுகிறது.

    * மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தயிர், தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள முகப்பருக்கள் குறையும்.

    * மாம்பழக் கூழ், தேன், அரிசி மாவு, பால் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் மிருதுவாகும்.

    * மாம்பழக் கூழ், கோதுமை மாவு, தேன் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவினால் சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

    * மாம்பழக் கூழ், அவகேடோ கூழ், தேன் கலந்து முகத்தில தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர தோல் சுருக்கத்தை தடுக்கலாம்.

    • இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள்.
    • சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.

    சூரியனிலிருந்து வரும் வெப்பம் கூந்தலுக்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. இது உலர்ந்த உடையக்கூடிய மற்றும் கடினமான கூந்தலை உண்டாக்குகிறது. ஏற்கனவே பளபளப்பாக இருக்கும் கூந்தலே சூரியனின் வெப்பத்தால் பல விளைவுகளை சந்திக்கும் போது வறட்சியான கடினமான கூந்தலின் நிலை இன்னும் மோசமானதாக ஆகிவிடுகிறது. ஹேர் கலர் செய்த கூந்தல் மங்கலான தோற்றத்தில் மாறிவிடுகிறது. வெளுத்து வெண்மையாகிவிடுகிறது. இந்த காலத்தில் முடியை பாதுகாக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்.

    சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முடியை உலர்த்தி விட செய்யும். இது கூந்தல் இழையின் மென்மையான அல்லது வெளிப்புற அடுக்கை கடினமாக்குகிறது. இது ஃப்ரீஸ் முடியை கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலான பிரச்சனை வர செய்கிறது. இது முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.

    கோடையின் வெப்பத்தை தணிக்க நீச்சலில் ஈடுபடும் போது அது மேலும் கூந்தலின் எண்ணெய்ப்பசையை நீக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள குளோரின் கூந்தலில் இருக்கும் ஈரப்பசையை வெளியேற்ற செய்கிறது. அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படும் முடியை எப்படி பராமரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


    கோடைக்காலத்தில் முதலில் முடி பிளவை கட்டுப்படுத்துங்கள். அவை வராமல் தடுக்க முன்கூட்டியே கூந்தலை வெட்டி விடுவது பாதுகாப்பானது. அதே நேரம் குளிர்காலத்தை காட்டிலும் கோடைக்காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

    அதனால் பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியில் சிறிதளவு வெட்டி விடுவது நல்லது. ஆண்களும் கழுத்துவரையிலும் காது வரையிலும் ஒட்டியிருக்கும் முடியை மேலும் வளரவிடாமல் வெட்டிவிடுவது நல்லது.

    சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம். அதனால் கூந்தலுக்கு முடி பராமரிப்பு பொருளை பயன்படுத்துவதை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களின் தன்மைக்கேற்ப ஜெல் அல்லது க்ரீம் வகைகளாக இருக்கலாம்.

    இது சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து சேதத்தை தவிர்க்கலாம். இது கலரிங் செய்த முடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பணி அதிகம் வெயில் என்றால் நீங்கள் கூந்தலின் உச்சந்தலையை முழுமையாக மறைக்கும் தொப்பியை அணிவது அவசியம். இது உச்சந்தலையை பாதுகாப்பதோடு சரும புற்றுநோயையும் தடுக்க செய்யும்.

    தலை குளியலுக்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யுங்கள். குறிப்பாக கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு என்றால் அது நீங்கள் உப்புநீரில் குளித்தாலும் ரசாயனங்களை உறிஞ்சாது. குறிப்பாக நீங்கள் நீச்சல் குளங்களில் குளிப்பதாக இருந்தால் இது பாதுகாப்பானது. இயற்கை பொருள்களையும் பயன்படுத்தலாம்.

    உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கோடையில் வெளியேறும் வியர்வை பிரச்சனைக்கு நீங்கள் கண்டிப்பாக ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷரை பயன்படுத்த வேண்டும். வியர்வை பிரச்சனையில் கோடையில் வாரம் இரண்டு நாள் வரை நீங்கள் தலைகுளியலை மேற்கொள்வீர்கள்.

    அதனால் இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூந்தலின் அடி அடுக்குவரை கண்டிஷனிங் செய்வதை உறுதி செய்யலாம்.


    சூடான கருவிகள் பொறுத்தவரை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைமுடிக்கு சூடான கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் முடியின் ஈரப்பதம் மேலும் குறைகிறது.

    இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள். பிறகு தூங்குவதற்கு முன்பு தலையை பின்னலிட்டு தூங்குங்கள். இது கூந்தல் இழைகள் ஒன்றோடொன்று உரசி பாதிப்பில்லாமல் செய்வதை தடுக்கும்.

    அழகான கூந்தல் அலங்காரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக செய்ய வேண்டாம். கூந்தலை சிக்கில்லாமல் வைக்க போனிடெயில் அல்லது எளிதான பின்னல் மூலம் அலங்காரத்தை முடிவு செய்யுங்கள்.

    முடி ஃப்ரீஸ் ஆவதற்கு எதிரான பாதுகாப்பை நீங்கள் செய்து கொள்வதன் மூலம் கூந்தலின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த காலத்தில் கூந்தல் நிபுணரின் ஆலோசனையின் பெயரில் கூந்தலை மென்மையாக்கும் எண்ணெய், சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கண்டிப்பாக தரமானதாக பயன்படுத்துங்கள்.

    • உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.
    • செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.

    முக மற்றும் வெளிபுற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடலில் உள்ள உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    அக்குள், கழுத்து மற்றும் தொடையின் உள்பகுதிகளில் கருமை காணப்படும், அதுவும் உடல் எடை அதிகம் இருக்கும் நபர்கள் என்றால் சதை அதிகம் உள்ள இடங்களிலும் கருமை காணப்படும்.

    இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம். இதற்கு செயற்கை முறையில் நாம் பல கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது சிலநாட்கள் மட்டுமே பலன் கொடுக்கும். நிரந்தரமான தீர்வு என்பது இல்லாமலே போய்விடுகிறது.

    நாம் நமது வீட்டிலேயே எளிய முறையில் கருமையை நீக்க ஒரு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

    * பச்சை பயறை நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்ந்து கருமையாக உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் கருமை நீங்குவதுடன் நிரந்தர தீர்வு காணலாம்.


    * கற்றாழையை தோல்களை நீக்கிவிட்டு அதன் ஜெல் பகுதியை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். தினமும் இரவு நேரங்களில் அக்குள், கழுத்து, தொடை ஆகிய பகுதிகளில் தேய்த்து வர 15 நாட்களில் நல்ல மாற்றம் உங்களுக்கு தெரியும்.


    * தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து தேய்த்து வர ஒரு வாரங்களில் கருமை நீங்குவதை உங்களால் உணர முடியும்.

    * உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சாரை எடுத்து தொடையின் கருமையான பகுதிகளில் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்ந்து 30 நிமிடம் காத்திருப்பிக்கு பின் கழுவிவர கருமை விரைவில் நீங்கும்.

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    ×