என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 3
    உருளைக்கிழங்கு - 2
    பீன்ஸ் - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    பட்டாணி - 50கிராம்
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய்துருவல் - கால் மூடி
    கசகசா - அரை ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 5
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 5 ஸ்பூன்

    தாளிக்க  :

    கிராம்பு
    பட்டை
    ஏலக்காய்



    செய்முறை :

    முதலில் வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு, முந்திரி பருப்பு, அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்  போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை - 4
    சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்
    வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி  - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    புதினா இலை - 50 கிராம்
    கொத்தமல்லித்தழை - 50 கிராம்
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    தயிர் - 50 மில்லி
    தேங்காய்ப்பால் - 100 மில்லி
    பட்டை - 2
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 4
    பிரிஞ்சி இலை - ஒன்று
    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 100 மில்லி
    நெய் - 50 மில்லி

    பிரியாணி மசாலா செய்ய :

    பட்டை - 2
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 6
    பூண்டு - 50 கிராம்
    இஞ்சி-1 துண்டு



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

    வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

    பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புதினா, பன்னீர் சேர்த்து புலாவ் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த புலாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    பன்னீர் - 200 கிராம்
    புதினா - 1 கட்டு
    கிராம்பு - 4
    பட்டை - 1 இன்ச்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 4 கப்



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    இப்போது சுவையான புதினா பன்னீர் புலாவ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன், முட்டை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    கேரட் - 2
    பட்டாணி - ½ கப்
    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
    முட்டை - 2
    சோயா சாஸ் - 1 /4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
    சிக்கன் எலும்பில்லாதது - 150 கிராம்
    வெங்காயத் தாள் - 4
    அரிசி - 1 கப்



    செய்முறை :

    சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கேரட், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக வேகவைத்து உதிரியாக வடித்து கொள்ளவும்.

    முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்..

    கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக பொரித்து எடுத்து வைத்த கொள்ளவும்.

    அதே கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.

    இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

    இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 2 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் - முட்டை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தேங்காய் சாதம் செய்யும் பொழுது அதில் வேர்க்கடலையை வறுத்து சேர்த்தால் சூப்பராக இருக்கும். வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - கால் கப்
    வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
    கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
    உளுந்து - ஒரு தேக்கரண்டி
    வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
    கடுகு - ஒரு தேக்கரண்டி
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - சிறு துண்டு
    கொத்தமல்லி - சிறிது
    பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப



    செய்முறை :

    உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர்  பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

    நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சுவையான வேர்கடலை - தேங்காய் சாதம் தயார்.

    இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல், புதினா துவையல் சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் என்றால் மிகவும் பிடிக்கும். கோடை வெயிலுக்கு பாதாம் பிசின் வைத்து ரோஸ் மில்க்கை செய்வது எப்படி என்று பார்ககலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - கால் லிட்டர்
    சீனி - கால் கப்
    ரோஸ் மில்க் எசன்ஸ் - கால் தேக்கரண்டி
    ஊற வைத்த பாதாம் பிசின் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

    பாதாம் பிசினில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். காலையில் எடுத்து மேலே இருக்கும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஆற வைத்த பாலுடன் சீனி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    சீனி கரைந்ததும் ரோஸ் மில்க் எசன்ஸுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலந்து அதை பாலில் ஊற்றி நன்றாக கலக்கவும்.

    பிறகு அதில் ஊற வைத்த பாதாம் பிசினை போட்டு நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.

    கோடை வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான பாதாம் பிசின் ரோஸ் மில்க் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொட்டை நீக்கிய பலாச்சுளை - 20,
    கோதுமை மாவு - 100 கிராம்,
    பொடித்த வெல்லம் - 200 கிராம்,
    கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
    நெய் - 50 மி.லி,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  

    கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து கொள்ளவும்.

    பலாச்சுளைகளை வேகவைத்து கொள்ளவும்.

    மிக்சியில் வேக வைத்த கடலைப்பருப்பு, பலாச்சுளையுடன் தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து அதில் அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

    கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி பூரணமாக உருட்டிக்கொள்ளவும்.

    பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    இலையில் சிறிது நெய் தடவி அதில் கோதுமை மாவை அப்பள வடிவில் திரட்டி அதன் நடுவில் பலாச்சுளை பூர்ணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள போளியை போட்டு மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

    சூப்பரான பலாப்பழ போளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸை பயன்படுத்தி சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    குடைமிளகாய் - பாதி
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    ப.மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    சீஸ் - தேவைக்கு



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், கேரட், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி மெல்லிய தோசையாக வார்க்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    தோசையின் மேல் வெங்காயம், கேரட், குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை பரவலாக தூவி அதன் மேல் தக்காளி சாஸை ஊற்றவும்.

    சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி கரண்டியால் காய்கறிகளை நன்றாக பரப்பி விட்டு மூடி வைத்து வேக விடவும்.

    கடைசியாக துருவிய சீஸை தூவி 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குஜராத் உணவு வகைகளில் இந்த டோக்ளா மிகவும் பிரபலம். இன்று ரவையை வைத்து எளிய முறையில் டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    தயிர் - 1/4 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    மிளகுப் பொடி - 1/4 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    ஈனோ(ரெகுலர்) - 1 சிறிய பாக்கெட்

    தாளிக்க :

    கடுகு, சீரகம், ப.மிளகாய் - 2.



    செய்முறை  :

    ரவையில் தயிர் கலந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்பும் சேர்த்து, ரவை கலவையில் கலக்கவும்.

    அடுப்பில் குக்கர் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி தயாராக எடுத்து வைக்கவும்.

    ரவைக் கலவையில் ஈனோ சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக் கலவை தயிர் பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    இந்தக் கலவையை, எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி அதன் மேல் [பாட்டி மசாலா] மிளகுத் தூளை பரவலாகத் தூவவும்.

    இந்த கலவையை குக்கருக்குள் வைத்து கலவையில் தண்ணீர் பட்டு விடாமல், அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதன் மேல் இந்தக் கலவை இருக்கும் தட்டை வைக்க வேண்டும்.

    குக்கரில் வெயிட் போட வேண்டாம். ஒரு தம்ளரை குக்கரின் மேல் வெயிட் போடும் இடத்தில், மூடி வைக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.

    பாத்திரத்தை வெளியில் எடுத்து, ஓரங்களில் சிறிய ஸ்பூன் அல்லது கத்தியால் நெகிழ்த்தி விட்டு, இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், ப.மிளகாய் சேர்த்து தாளித்து ரவை டோக்ளா மேல் தூவி பரிமாறவும்.

    சூப்பரான ரவை டோக்ளா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி சாதம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பட்டை - ஒரு சிறு துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 2
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    புதினா - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 குழிக்கரண்டி

    அரைக்க:

    இஞ்சி - ஒரு சிறு துண்டு
    மிளகாய் வற்றல் - 3
    பூண்டு - 5 பல்
    பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
    முந்திரி - 5



    செய்முறை  :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

    தக்காளியைத் தனியாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கறுவாப் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் அதனுடன் கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கவும்.

    அடுத்து கழுவிய அரிசியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.

    சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.

    வறுவல், அப்பளம், தயிர் பச்சடி போன்றவை இந்த இஞ்சி சாதத்திற்கு ஏற்ற துணை உணவுகள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளுகுளு ஜூஸ் கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். இன்று கேரட் வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - ஒரு கப்
    நெய் - ஒரு டீஸ்பூன்
    பொடித்த முந்திரி, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப



    செய்முறை :

    பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவைக்கவும்.

    கேரட்டைக் கழுவித் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    குக்கரில் நெய்விட்டு, கேரட்டைச் சேர்த்து வதக்குங்கள்.

    காய்ச்சிய பாலை அரை கப் எடுத்து அதில் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்..

    ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து மீதமுள்ள பாலை கேரட்டுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள்.

    குளிர்ந்தவுடன் எடுத்து பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, குடிக்கக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

    சூப்பரான கேரட் கீர் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து இன்று எளிய முறையில் சூப்பரான பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - ஒன்று
    வெல்லம் - 1/2 கப்
    ஏலக்காய் - 5
    கடுகு - 3/4 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி



    செய்முறை :

    பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    மாங்காயை துருவிக்கொள்ளவும்.

    வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடிச்செய்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பச்சை மிளகாய் வதங்கியதும் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் துருவிய மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.

    மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.

    மாங்காயில் வெல்லம் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

    மாங்காயும், வெல்லமும் ஒன்றாக கலந்தப்பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

    ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும்.

    சுவையான மாங்காய் பச்சடி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×