என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    கேரட் - 2
    சீஸ் - 1/2 கப்
    கார்ன் - தேவைக்கேற்ப
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    சோள மாவு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - தேவைக்கேற்ப
    பிரெட் தூள் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    கேரட், சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கார்னை வேக வைத்து கொள்ளவும்.

    சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    உருண்டைகளை கரைத்து வைத்துள்ள சோள மாவில் முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

    தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீன்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பீன்ஸை வைத்து மதியம் சாப்பிட சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சான பீன்ஸ் - 200 கிராம்,
    உதிர் உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து.

    வறுத்து அரைக்க...

    காய்ந்த மிளகாய் - 3,
    துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்தெடுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பீன்ஸ், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறி விடவும்.

    பீன்ஸ் வெந்ததும் அரைத்த பொடி தூவி, சாதம், கறிவேப்பிலை, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான பீன்ஸ் சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி மரப்பா சாப்பிடலாம். இஞ்சி மரப்பாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு இஞ்சி அல்லது சுக்குப் பொடி - 100 கிராம்
    கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் - ஒரு கப்
    நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    இஞ்சியைத் தோல் சீவி மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கருப்பட்டி அல்லது சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து கம்பி பாகு பதம் வரும்வரை காய்ச்சுங்கள். (சிறிது பாகை எடுத்து தண்ணீரில் போட்டால் கரையாமல் இருக்கும். இது தான் பாகு பதம்).

    இந்த பக்குவம் வந்தவுடன் அரைத்த இஞ்சி விழுதை பாகில் சேர்த்து கைவிடாமல் நன்றாக கலக்கவும்.

    இந்தக் கலவை நன்றாக நுரைத்து திக்கான பதம் வந்ததும் அரை டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள்.

    ஆறியதும் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சூப்பரான இஞ்சி மரப்பா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    புலாவ், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிரெட் மஞ்சூரியன். இன்று இந்த மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6
    தக்காளி - 2 ,
    வெங்காயம் - 2
    சோள மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
    மைதா - ஒரு டேபிள் ஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    குடைமிளகாய் - 1 சிறியது,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு, , எண்ணெய் - தேவைக்கேற்ப



    செய்முறை :

    கொத்தமல்லி, குடை மிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

    பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவில் பிரட் துண்டுகளை நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

    இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள்.

    கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வறுத்து அரைத்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1/2 கிலோ (எந்த மீனாகவும் இருக்கலாம்)
    கடுகு - 1 டீஸ்பூன்.
    சின்ன வெங்காயம் - 10.
    தக்காளி - 1.
    கறிவேப்பிலை - சிறிது .
    புளி - (ஒரு சிறிய எலுமிச்சை அளவு).
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - தேவைக்கு.

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1 கப்.
    சின்ன வெங்காயம் - 10.

    வறுத்து அரைப்பதற்கு...

    வரமிளகாய் - 10.
    தனியா - 2 டேபிள் ஸ்பூன்.
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மியில், தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

    குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

    சூப்பரான சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எள்ளோதரை பொடியை செய்து வைத்து கொண்டால் தேவைப்படும் போது சாதத்தில் இந்த பொடியை சேர்த்து கிளறி பரிமாறலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு எள் - 200 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    வெல்லம் - நெல்லிக்காய் அளவு,
    காய்ந்த மிளகாய் - 12,
    உப்பு - தேவைக்கு,
    வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கருப்பு எள், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    நன்றாக ஆறியதும் வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    தேவையான போது வடித்த சாதத்தில் இந்தப் பொடியை கலந்து, சிறிது நல்லெண்ணெய், வேர்க்கடலை, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

    சூப்பரான எள்ளோதரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், தோசை, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கடாய் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 1 கப்
    குடைமிளகாய் - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    தக்காளி - 2
    மல்லி - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2



    செய்முறை:

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறிய பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.

    அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர், அத்துடன் வெங்காயத்தைசேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மல்லித் தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.

    பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ரோஸ் புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்,
    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
    ரோஸ் மில்க் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்,
    சைனா கிராஸ் - 3 கிராம்,
    தண்ணீர் - 1/4 கப்,
    ஸ்ப்ரிங்கிள்ஸ் (Sprinkles) - அலங்கரிக்கத் தேவையான அளவு. 



    செய்முறை  :

    சைனா கிராஸை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் இதைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். சைனா கிராஸ் நன்றாக கரைய வேண்டும்.

    இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, அதில் ரோஸ் மில்க் சிரப், சர்க்கரை சேர்க்கவும்.

    இந்த நேரத்தில் சைனா கிராஸ் முழுவதுமாக கரைந்திருக்கும். இந்த சைனா கிராஸில் பால் கலவையைப் ஊற்றி வேகமாக கைவிடாமல் கலக்கவும்.

    பதம் வந்தவுடன் இதை சின்னச் சின்ன கப்புகளில் ஊற்றவும். பிறகு மேலே ஸ்ப்ரிங்கிள்ஸ் (Sprinkles) சேர்த்து 3 மணி நேரம் குளிர வைக்கவும்.

    பிறகு ஓரங்களை கத்தியால் கீறி புட்டிங் தனியே வருமாறு எடுக்கவும். குளிரக் குளிர பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லெட் பன்னகோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சாக்லெட் பன்னகோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஃப்ரெஷ் கிரீம் - 1 கப்,
    பால் - 50 மி.லி.,
    தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
    சைனா கிராஸ் - 1 கிராம்,
    குக்கிங் சாக்லெட் - 100 கிராம்,
    சர்க்கரை - 50 கிராம்,
    வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்.



    செய்முறை :

    குக்கிங் சாக்லெட்டை பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும்.

    சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும்.

    இன்னொரு கடாயில் கிரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கைவிடாமல் கலக்கவும்.

    திக்கான பதம் வந்தவுடன் இந்த கலவையை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 5 மணி நேரம் குளிர வைக்கவும்.

    சூப்பரான சாக்லெட் பன்னகோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்தி, பூரி, சாத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த முட்டை பீன்ஸ் பொரியல் அருமையாக இருக்கும். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    நெய் - தேவையான அளவு
    பீன்ஸ் - 250 கிராம்
    பச்சைமிளகாய் - 4
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பீன்ஸ், ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    பீன்ஸ் நன்றாக வெந்தும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளறி விடவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை பீன்ஸ் பொரியல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இறாலுடன் சுரைக்காய் சேர்த்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இறால் சுரைக்காய் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - கால் கிலோ
    சுரைக்காய் - கால் கிலோ
    புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
    பச்சை மிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மல்லி தூள் - 3 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    பாட்டி மசாலா] மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
    பூண்டு - 6 பல்லு
    வெங்காயம் - 250 கிராம்
    தக்காளி - 250 கிராம்
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, சுரைக்காய், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.

    பின்பு [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்ததும் [பாட்டி மசாலா] மிளகுத் தூள் மற்றும் புளிக் கரைசலை சேர்க்கவும். தீயின் அளவை மிதமாக வைத்து கொதிக்க‌ விடவும்.

    கலவை 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி

    இறால் சுரைக்காய் குழம்பு தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், புலாவ், இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் ரோகன் ஜோஷ். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்லகாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - கால் கிலோ
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தக்காளி பியூரி - கால் கப்
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி,
    [பாட்டி மசாலா] சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    பட்டை, பிரிஞ்சியிலை, ஏலக்காய், லவங்கம் - தலா 2
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் மட்டன் சேர்த்து வதக்கி விட்டு வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் வரும் வரை வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள், [பாட்டி மசாலா] சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் தக்காளி பியூரியை சேர்த்து கொதிக்க விடவும்.

    எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்து வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×