search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudding"

    • ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    இதேபோல் ஞான சித்தி விநயாகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி,

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கில் பல்வேறு சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று நுங்கை வைத்து புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்கு - 10,
    பால் - ஒரு கப்,
    வெனிலா எசன்ஸ் - சிறிதளவு,
    சைனா கிராஸ் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு.



    செய்முறை:

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைக்கவும்.

    சைனா கிராஸை கால் கப் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

    பாலுடன் வெனிலா எசன்ஸ், சர்க்கரை, சைனா கிராஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சர்க்கரை கரைந்த பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    சிறிய கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    பிறகு ஒரு தட்டில் கிண்ணத்தை கவிழ்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×