என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இட்லி, குழிப்பணியாரம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிளகு காரச் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 5 (பெரியது)
    காய்ந்த மிளகாய் - 5
    மிளகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
    பெருங்காயம் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து கொள்ளவும்.

    அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

    அடுப்பை அணைத்து விட்டு வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும்.

    வதங்கியவற்றை ஆறவைத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதம கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து இறக்கவும்.

    சுவையான மிளகு கார சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு

    வதக்கி அரைக்க:

    பூண்டு பல் - 10
    மிளகு - 2 டீஸ்பூன்

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

    அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான நண்டு வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை, மாலை நேர உணவாக இந்த தாளித்த கொழுக்கட்டையை சாப்பிடலாம். இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - 2 கப்
    தேங்காய் - அரை மூடி
    காய்ந்த மிளகாய் - 6
    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுந்து - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    இட்லி அரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, நைசாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

    வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டி அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் கிளறி இறக்குங்கள்.

    மாவை சற்று ஆறியதும் மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

    சூப்பரான தாளித்த கொழுக்கட்டை ரெடி.

    இதற்கு தொட்டுகொள்ள சட்னி, கார சட்னி சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரம் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இந்த மாலை பிரெட் கச்சோரி. இன்று இந்த கச்சோரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 6,
    மைதா - அரை கப்,
    ரவை - 1 டீஸ்பூன்,
    சமையல் சோடா - அரை டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    சாட் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பொடி - அரை டீஸ்பூன்,
    உருளைக் கிழங்கு - 1



    செய்முறை :

    பிரெட்டை மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள்.

    உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள்.

    மைதா, ரவை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறிது நேரம் மூடிவையுங்கள்.

    பிரெட் தூள், மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத் தூள், சாட் மசாலா, ஆம்சூர் பொடி ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.

    மைதா கலவையைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பூரியாகத் திரட்டுங்கள்.

    திரட்டிய பூரியின் நடுவே பிரெட் கலவையை வைத்து மடித்து மீண்டும் பூரி போல் திரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் கச்சோரி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும் கத்தரிக்காய் வறுவல். இன்று கத்தரிக்காய் வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்திரிக்காய் - அரைக் கிலோ
    எண்ணெய் - தேவைக்கு.

    மசாலாவிற்கு :

    முழு பூண்டு - 1
    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    கத்திரிக்காயை நன்றாக கழுவி துடைத்து வட்ட துண்டு வடிவில் நறுக்கி வைக்கவும்.

    பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பூண்டு விழுது, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், சோள மாவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு அகலமான நான்ஸ்டிக் பேனில் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் மசால் தடவிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேகவிடவும். இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து நிதானமாக மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும். உடனே பரிமாறினால் கிரிஸ்பாக இருக்கும். பொரித்து வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறினால் சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.

    சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுண்டக்காய் - 1 கப்
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 4
    புளி - 75 கிராம்
    சின்ன வெங்காயம் - 10
    வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
    அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    புளியை கரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனித்தனியாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

    அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறவும்.

    குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

    கடைசியாக அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டு கொள்ள இந்த தால் டோக்ளி அருமையாக இருக்கும். இன்று தால் டோக்ளியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    பாசிப் பருப்பு - அரை கப்,
    தக்காளி - 2,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    பட்டை - சிறு துண்டு,
    உப்பு - தேவையான அளவு,
    ஓமம் - 1 டீஸ்பூன்,
    பூண்டு - 6 பல்,
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள்.

    கோதுமை மாவு, உப்பு, ஓமம் ஆகியவற்றைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடிவையுங்கள். பிறகு, அந்த மாவைச் சப்பாத்தியாகத் திரட்டி கத்தியால் இரண்டு அங்குல துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது வெட்டி வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும். அவை வெந்து மேலே வரும் போது தண்ணீரை வடித்து தனியாக வைத்து கொள்ளவும். இப்போது டோக்ளி துண்டுகள் தயார்.

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்துக் குழைய வேகவைத்து கொள்ளுங்கள்.

    அரைத்த கலவையுடன் உப்பு, [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மிளகாய்த் தூள், வெந்த பாசிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் டோக்ளி துண்டுகளைச் சேர்த்து அடுப்பை 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான தால் டோக்ளி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு காய்கறி, சீஸ் சேர்த்து முட்டை ரோல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த முட்டை சீஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் - தலா 1
    கோஸ் - சிறிதளவு (துருவியது)
    வெங்காயத்தாள் - சிறிதளவு (நறுக்கியது)
    வறுத்த தேங்காய்த் துருவல் - சிறிதளவு
    சீஸ் - 25 கிராம்
    [பாட்டி மசாலா] மிளகுத் தூள் - சிறிதளவு,
    உப்பு - சிறிதளவு,
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு



    செய்முறை :

    வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், கோஸ், வெங்காயம், கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், வெங்காயத் தாளைச் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை மெலிதாக ஊற்றி வெந்ததும் மேலே கலந்து வைத்துள்ள காய்கறிகளை வைத்து அவற்றின் மேல் [பாட்டி மசாலா] மிளகுத் தூளைத் தூவுங்கள்.

    பிறகு சீஸைத் துருவிச் சேர்த்து அப்படியே சுருட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    கடைசியாக அதன் மேல் வறுத்த தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான முட்டை சீஸ் ரோல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் வெண்டைக்காய் வறுவல். இன்று இந்த வெண்டைக்காய் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    வெண்டைக்காய் - 1/2 கிலோ
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    [பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
    அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :
     
    வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும்.
     
    ஒரு பாத்திரத்தில் [பாட்டி மசாலா] கரம் மசாலா, அரிசி மாவு, [பாட்டி மசாலா] மல்லித் தூள், சோள மாவு, [பாட்டி மசாலா] மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
     
    இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான வெண்டைக்காய் வறுவல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேசரி என்றால் மிகவும் பிடிக்கும். பப்பாளி சேர்த்து கேசரி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த கேசரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்
    பப்பாளிப்பழத் துண்டுகள் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
    காய்ந்த‌ திராட்சை - சிறிது
    ஏல‌க்காய் பொடி - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு வாண‌லியில் நெய்யை விட்டு, அதில் ரவையைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும். இதில் நெய்யை தாராளமாக ஊற்றி செய்தால் சூப்பராக இருக்கும்.

    அதே வாண‌லியில் முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

    பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்.

    ரவை எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் பப்பாளிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

    மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான பப்பாளிப்பழ கேசரி ரெடி.

    கவனிக்க: இந்த கேசரிக்கு "புட் கலர்" எதுவும் சேர்க்கத் தேவையில்லை. பப்பாளி சேர்த்தவுடன், கேசரிக்கு இயற்கையான ஆரஞ்சு நிறம் கிடைத்து விடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட இந்த சீராளம் சூப்பராக இருக்கும். இன்று இந்த மாலை நேர சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 1/2 கப்
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவைக்கேற்றவாறு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
    இட்லி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    அரிசி, பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

    பின்னர் அதில் கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள பருப்பு துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இட்லி மிளகாய் பொடி மற்றும் தேங்காயைத் தூவி, சற்று பிரட்டி விட்டு எடுக்கவும்.

    இது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டி.

    இட்லியை வைத்தும் சீராளம் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் பலவீனமானவர்கள் அடிக்கடி மட்டன் சூப் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று மட்டன் எலும்பு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    வெங்காயம் - 1/4 கிலோ
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு  விழுது - 10 கிராம்
    [பாட்டி மசாலா] மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
    [பாட்டி மசாலா] தனியாத்தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு  - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு


     
    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு எலும்பை நன்றாக சுத்தம் ஒன்றும் பாதியாக நசுக்கி வைக்கவும்.
     
    கடாயில் 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும்.
     
    அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] தனியாத் தூள், [பாட்டி மசாலா] மஞ்சத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தண்ணீர் 5 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து தேவையான அளவு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
     
    சுவைப்பார்த்து அதற்கேற்றவாறு [பாட்டி மசாலா] மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து கொள்ளலாம்.
     
    சுவைக்க சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×