என் மலர்
பெண்கள் உலகம்

மாலை நேர சிற்றுண்டி சீராளம்
மாலையில் டீ, காபியுடன் சாப்பிட இந்த சீராளம் சூப்பராக இருக்கும். இன்று இந்த மாலை நேர சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

செய்முறை :
அரிசி, பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள பருப்பு துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இட்லி மிளகாய் பொடி மற்றும் தேங்காயைத் தூவி, சற்று பிரட்டி விட்டு எடுக்கவும்.
இது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டி.
இட்லியை வைத்தும் சீராளம் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

செய்முறை :
அரிசி, பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள பருப்பு துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இட்லி மிளகாய் பொடி மற்றும் தேங்காயைத் தூவி, சற்று பிரட்டி விட்டு எடுக்கவும்.
இது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டி.
இட்லியை வைத்தும் சீராளம் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






