என் மலர்
சமையல்
பிரவுன் ரைஸில் பிஸிபேளாபாத் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரவுன் ரைஸ் - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 7 கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1/2 கப்
பீன்ஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்
பொடி பண்ண :
கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
வற்றல் மிளகாய் - 5
பெருங்காயம் - 1 துண்டு
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிக்க :
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2
முந்திரிபருப்பு - 10

செய்முறை:
வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரவுன் ரைஸ் ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரவுன் ரைஸையும், மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
வேகவைத்த சாதம், பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அதில் வதக்கின காய்கறிகள், அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.
சாதம், பருப்பு, காய்கறிகள், பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்) சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..
முந்திரிபருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத் ரெடி.
பிரவுன் ரைஸ் - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 7 கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1/2 கப்
பீன்ஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
பட்டாணி - 1/2 கப்
பொடி பண்ண :
கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 10
வற்றல் மிளகாய் - 5
பெருங்காயம் - 1 துண்டு
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிக்க :
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2
முந்திரிபருப்பு - 10
நிலக்கடலை - 10 (உடைத்தது)

செய்முறை:
வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரவுன் ரைஸ் ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரவுன் ரைஸையும், மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.
பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
வேகவைத்த சாதம், பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அதில் வதக்கின காய்கறிகள், அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.
சாதம், பருப்பு, காய்கறிகள், பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்) சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..
முந்திரிபருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கி பரிமாறவும்.
சூப்பரான பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு காலையில் சத்தான பானம் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
பேரீச்சை - 5
காய்ச்சியப் பால் - 200 மி.கி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:
முதல்நாள் இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.
அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
கேழ்வரகு - 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
பேரீச்சை - 5
காய்ச்சியப் பால் - 200 மி.கி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:
முதல்நாள் இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.
அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.
சத்தான கேழ்வரகு மில்க் ஷேக் தயார். ( விருப்பப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்)
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாலக்கீரை சேர்த்து புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
பாலக்கீரை - 1 கப்
வெங்காயம் - 2
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு - 10
தாளிக்க:
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2

செய்முறை:
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
பாசுமதி அரிசி - 1 கப்
பாலக்கீரை - 1 கப்
வெங்காயம் - 2
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு - 10
தாளிக்க:
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:
பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
சூப்பரான பாலக் புலாவ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அடிக்கடி தோசை சாப்பிட்டு அலுத்தவர்கள் தாளிச்ச தோசை செய்து சாப்பிடலாம். இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - ஒரு கப்
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை தாளித்து மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும்.
தாளிப்பு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.
தோசை மாவு - ஒரு கப்
கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாயை தாளித்து மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைக் கல்லில் தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்த பின்பு எடுக்கவும்.
தாளிப்பு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.
பச்சை மிளகாயை விரும்பாதவர்கள் மோர் மிளகாயைப் பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கடைகளில் காஜூ பிஸ்தா ரோல் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முந்திரி பருப்பு - 25
பிஸ்தா - 15
சர்க்கரை - அரை கிலோ
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சில்வர் பேப்பர் இழை - தேவைக்கு

செய்முறை:
முந்திரி பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவையும் தோல் நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் முந்திரி கலவையை கொட்டி அதனுடன் பாதியளவு ஏலக்காய் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவுடன் மீதமுள்ள ஏலக்காய் தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் முந்திரி கலவையை பரப்பி அதன் மேல் பிஸ்தா கலவையை கொட்டி உருட்டிக்கொள்ளவும்.
முந்திரி பருப்பு - 25
பிஸ்தா - 15
சர்க்கரை - அரை கிலோ
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சில்வர் பேப்பர் இழை - தேவைக்கு

செய்முறை:
முந்திரி பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவையும் தோல் நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் முந்திரி கலவையை கொட்டி அதனுடன் பாதியளவு ஏலக்காய் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அதுபோல் பிஸ்தாவுடன் மீதமுள்ள ஏலக்காய் தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் முந்திரி கலவையை பரப்பி அதன் மேல் பிஸ்தா கலவையை கொட்டி உருட்டிக்கொள்ளவும்.
அதனை சில்வர் பேப்பர் இழையை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளை கவரும் விதத்தில் ரோல் வடிவில் உணவுகளை தயார் செய்து சுவைக்க கொடுக்கலாம். இன்று பேரீச்சம்பழ நட்ஸ் ரோல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேரீச்சம்பழம் - 10
முந்திரி - 10
மைதா - 100 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 100 கிராம்

செய்முறை:
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுள் முந்திரிப் பருப்பை சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையையும், வெண்ணெயையும் பிசைந்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
உருண்டைகளின் நடுவில் கட்டைவிரல் பதியும்படி அழுத்திக்கொள்ளவும்.
அந்த இடத்தில் முந்திரி, பேரீச்சம் பழ துண்டு கலவையை வைத்து மூடவும்.
பின்பு உருண்டைகளை மைக்ரோ ஓவனில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.
பேரீச்சம்பழம் - 10
முந்திரி - 10
மைதா - 100 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 100 கிராம்
வெண்ணிலா எஸ்சன்ஸ் - 5 சொட்டுகள்

செய்முறை:
பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி அதனுள் முந்திரிப் பருப்பை சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரையையும், வெண்ணெயையும் பிசைந்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
உருண்டைகளின் நடுவில் கட்டைவிரல் பதியும்படி அழுத்திக்கொள்ளவும்.
அந்த இடத்தில் முந்திரி, பேரீச்சம் பழ துண்டு கலவையை வைத்து மூடவும்.
பின்பு உருண்டைகளை மைக்ரோ ஓவனில் அரை மணி நேரம் வேக வைக்கவும்.
ருசியான பேரீச்சம்பழ நட்ஸ் ரோல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிக்கன் ஷாவர்மா ரோலை ஹோட்டல், பாஸ்ட் புட் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் ஷாவர்மா ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 10
மைதா - 1 கப்
வெங்காயம் - 1
நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
மயோனீஸ் (முட்டை பாலேடு) - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டீ ஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காய்த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
ஊற வைத்த சாப்பத்தி மாவை சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் துண்டு கலவையை கொட்டி சிக்கன் நன்றாக வேகும் வரை புரட்டி எடுத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிய துண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும்.
சுட்டெடுத்த ரொட்டி மீது மயோனீஸ் தடவி நடுவில் சிக்கன் துண்டு கலவையை வைக்கவும்.
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 10
மைதா - 1 கப்
வெங்காயம் - 1
நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
மயோனீஸ் (முட்டை பாலேடு) - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டீ ஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காய்த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
ஊற வைத்த சாப்பத்தி மாவை சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் துண்டு கலவையை கொட்டி சிக்கன் நன்றாக வேகும் வரை புரட்டி எடுத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிய துண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும்.
சுட்டெடுத்த ரொட்டி மீது மயோனீஸ் தடவி நடுவில் சிக்கன் துண்டு கலவையை வைக்கவும்.
பின்னர் அதன் மேல் வெங்காயம், முட்டைக்கோஸ் தூவி ரோலாக சுருட்டி ருசிக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு வலிமையைத் தரும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குள்ளக்கார் அரிசி - கால் கிலோ
சீரகம் - 50 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 1 கிராம்

செய்முறை
முதலில் இரும்பு வாணலியில் குள்ளக்கார் அரிசியைச் சிறுதீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள குள்ளக்கார் அரிசி, சீரகம் மற்றும் பெருங்காயம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குள்ளக்கார் குருணைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கொர கொரப்பாக அரிசியை ஒரு கப் எடுத்து போட்டு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு கொதித்து கஞ்சியாக வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்து வைக்கவும்.
குள்ளக்கார் அரிசி - கால் கிலோ
சீரகம் - 50 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 1 கிராம்
இந்துப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் இரும்பு வாணலியில் குள்ளக்கார் அரிசியைச் சிறுதீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள குள்ளக்கார் அரிசி, சீரகம் மற்றும் பெருங்காயம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குள்ளக்கார் குருணைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கொர கொரப்பாக அரிசியை ஒரு கப் எடுத்து போட்டு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
நன்கு கொதித்து கஞ்சியாக வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்து வைக்கவும்.
சத்தான சுவையான குள்ளக்கார் அரிசிக் கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
சாக்லேட் சிரப் - 1/4 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
செர்ரி பழம் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதம மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் வெண்ணெயை தடவவும்.
அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.
அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும்.
இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும்.
பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிறப்பு ஊற்றி பரிமாறலாம்
எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
90 சதவிதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்பூசணி ஆகிய பழங்களை கொண்டு சுவையான எளிதில் செய்ய கூடிய சாலட் தயாரித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தர்பூசணி- 100 கிராம்
வெள்ளரி - 100 கிராம்
புதினா - சிறிதளவு
பன்னீர் - 50 கிராம்

செய்முறை
பழங்களை கழுவி, தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
சுடு தண்ணீரில் பன்னீரை 5 நிமிடங்கள் போட்டு வைத்த பின், நறுக்க வேண்டும்
ஒரு பாத்திரத்தில் பழங்களையும் பன்னீரையும் சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
கடைசியாக புதினா சேர்த்து, பரிமாறவும்
தர்பூசணி- 100 கிராம்
வெள்ளரி - 100 கிராம்
புதினா - சிறிதளவு
பன்னீர் - 50 கிராம்
தேன்/ எலுமிச்சை சாறு - விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை
பழங்களை கழுவி, தோலை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
சுடு தண்ணீரில் பன்னீரை 5 நிமிடங்கள் போட்டு வைத்த பின், நறுக்க வேண்டும்
ஒரு பாத்திரத்தில் பழங்களையும் பன்னீரையும் சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.
கடைசியாக புதினா சேர்த்து, பரிமாறவும்
சுவையான தர்பூசணி வெள்ளரி பன்னீர் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பினை சைடிஷ் ஆகவும், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 1/2 கப்,
முட்டை - 4,
பச்சை மிளகாய் - 3,
கேரட் - 1,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
மொசரெல்லா சீஸ் - 1/2 கப்,

செய்முறை
கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட், தக்காளி, வெங்காயம், துருவிய மொசரெல்லா சீஸ், சோளம் ஒசேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பின் ஒரு மப்பின் சிலிகான் மோல் எடுத்து அதில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றவும்.
ஒரு கடாயை சூடு செய்துபின் அதில் ஒரு stand-யை வைத்து அதன்மேல் சிலிகான் மோல் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும். கமகமக்கும் சுவையான முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பின் ரெடி.
கொத்தமல்லி - 1/2 கப்,
முட்டை - 4,
பச்சை மிளகாய் - 3,
கேரட் - 1,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
உப்பு - தேவைக்கு,
கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
மொசரெல்லா சீஸ் - 1/2 கப்,
சோளம் - 2 டீஸ்பூன்.

செய்முறை
கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட், தக்காளி, வெங்காயம், துருவிய மொசரெல்லா சீஸ், சோளம் ஒசேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பின் ஒரு மப்பின் சிலிகான் மோல் எடுத்து அதில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றவும்.
ஒரு கடாயை சூடு செய்துபின் அதில் ஒரு stand-யை வைத்து அதன்மேல் சிலிகான் மோல் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும். கமகமக்கும் சுவையான முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பின் ரெடி.
மைக்ரோ ஓவன் என்றால் 180c பிரீஹீட் செய்து 10 நிமிடம் வைக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மா, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு கப்
ராஜ்மா - அரை கப்
இஞ்சி - சிறு துண்டு
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
மிளகு - 2 டேபிஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும்.
ஊறியதும் தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும்.
பாசிப்பருப்பு, வேர்க்கடலை உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிதமான தீயில் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
புழுங்கல் அரிசி - ஒரு கப்
ராஜ்மா - அரை கப்
இஞ்சி - சிறு துண்டு
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
மிளகு - 2 டேபிஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும்.
ஊறியதும் தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும்.
பாசிப்பருப்பு, வேர்க்கடலை உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிதமான தீயில் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா - பாசிப்பருப்பு அடை அடை.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






