என் மலர்tooltip icon

    சமையல்

    சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் முள்ளங்கி சாம்பார். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முள்ளங்கி - 1/4 கிலோ,
    சின்ன வெங்காயம் - 10,
    தக்காளி - 1,
    துவரம்பருப்பு - 1 கப்,
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
    புளி - சிறிய எலுமிச்சையளவு,
    குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கறிவேப்பிலை - சிறிது,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    வெந்தயம் -  1/4 டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிது.

    முள்ளங்கி சாம்பார்

    செய்முறை

    முள்ளங்கியை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    துவரம்பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் முள்ளங்கியை போட்டு வதக்கி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகாய் பொடி சேர்க்கவும்.

    முள்ளங்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முள்ளங்கி சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோம்பு கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோம்பு கீரை - 2 கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை  - சிறிது

    சோம்பு கீரை

    செய்முறை:

    சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில்ல நறுக்கி வைத்துள்ள சோம்பு கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    கீரை நன்கு வெந்தவுடன் அதனுடன் சிறிது துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

    சத்தான சோம்பு கீரை பொரியல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீமா டிக்கி டெல்லி, லக்னோவில் மிகவும் பிரபலமானது. விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. இன்று கீமா டிக்கியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் கீமா - 750 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பற்கள்  
    பச்சை மிளகாய் - 4
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    கீமா டிக்கி

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டன் கீமாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து அதில் கடலை மாவை சேர்த்து கட்லெட் பிடிக்கும் வகையில் கலவை இருக்குமாறு பார்த்து கொள்ளவும். சற்று தளர்வாக இருந்தால் மேலும் கடலை மாவை சேர்த்து கொள்ளவும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    அடுத்து அதில் ஊற வைத்துள்ள கீமா கலவையை வேண்டிய வடிவத்தில் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கீமா டிக்கி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரையை இவ்வாறு கட்லெட் போன்று செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிறுகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
    உருளைக்கிழங்கு - 3
    பொடித்த வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
    வறுத்துப் பொடித்த அவல் - 3 டேபிள்ஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    பிரெட் துண்டுகள் - 3
    சோள மாவு - இரண்டு டீஸ்பூன்
    எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

    சிறுகீரை கட்லெட்

    செய்முறை:

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

    பிரெட் ஓரங்களை எடுத்து விட்டு தண்ணீரில் நனைத்த பின்னர் தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த வேர்க்கடலை, இஞ்சி - பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், உப்பு, பிரெட் சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி சோள மாவு கரைசல் முக்கி எடுத்து அவல் பொடியில் புரட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான சிறுகீரை கட்லெட் ரெடி. ]

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் மெக்சிகன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    குடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    தக்காளி பேஸ்டு - 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    உப்பு எண்ணெய் - தேவையானது

    மெக்சிகன் ரைஸ்

    செய்முறை:

    பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    குடைமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், வெங்காயத்தாள், மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தக்காளி பேஸ்டு, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.

    எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மெக்சிகன் ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அடுப்பில் வைத்து சமைக்காமல் கற்றாழை, பழங்கள் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த சாலட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கற்றாழை ஜெல் - 1 கப்
    மாதுளை முத்துக்கள் - 1 கப்
    துருவிய கேரட் - 1 கப்
    ஆரஞ்சு பழம் - 1/2 கப்  (பொடியாக நறுக்கியது)
    குடைமிளகாய் - 1 கப்  ( பொடியாக நறுக்கியது)
    கொத்தமல்லி - 1/4 கப்  ( பொடியாக நறுக்கியது)
    புதினா இலை - 1/4 கப்
    உப்பு - தேவையான அளவு
    சாட் மசாலா - தேவையான அளவு

    கற்றாழை ஜெல்

    செய்முறை :

    கற்றாழை ஜெல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கற்றாழை, மாதுளை முத்துக்கள், துருவிய கேரட், ஆரஞ்சு பழம், குடைமிளகாய், கொத்தமல்லி, புதினா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்தால் கற்றாழை சாலட் தயார்.

    B. இந்துமதி


    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் கீமாவில் பல்வேறு ருசியான உணவுகளை தயார் செய்யலாம். இன்று மட்டன் கீமாவை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கீமா - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    துவரம் பருப்பு - 50 கிராம்
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    புதினா - சிறிது
    கொத்தமல்லி - சிறிது
    ஏலக்காய்-  2
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    மட்டன் கீமா சூப்

    செய்முறை :

    துவரம் பருப்பு, மட்டன் கீமாவை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின் துவரம் பருப்பு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டிய பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    கடைசியாக அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    சுவையான மட்டன் கீமா சூப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு மாவில் குலுக்கு ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - அரை கப்
    பச்சரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    பொடித்த வெல்லம் - கால் கப்
    பொடித்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    உப்பு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

    கேழ்வரகு மாவு

    செய்முறை:

    கேழ்வரகு மாவை லேசாக வறுத்து அதனுடன் பச்சரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் நெய் தடவி கனமான தோசைகளாக வார்க்கவும்.

    பின்னர் அதனை சிறு துண்டுகளாக ரொட்டி போல் வெட்டிக்கொள்ளவும்.

    வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு ஆக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

    பின்னர் அதனை மீண்டும் கொதிக்க வைத்து ஓரளவு கட்டி பதம் வந்ததும் வேர்க்கடலை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    இந்த கலவையுடன் ரொட்டி துண்டுகளை கலந்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், பூரி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் புர்ஜி கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    துருவிய பன்னீர் - 2 கப்
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையானது
    கொத்தமல்லி - 1
    பட்டை, லவங்கம், கிராம்பு - தலா 4

    பன்னீர் புர்ஜி கிரேவி

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து துருவிய பன்னீர், வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பித்தம், வாந்தி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் நார்த்தை இலை ரசம் வைத்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நார்த்தை இலை - 5
    பச்சை மிளகாய் - 3
    சீரகம் - கால் டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்
    கடுகு, உப்பு, எண்ணெய் - சிறிதளவு

    நார்த்தை இலை

    செய்முறை:

    நார்த்தை இலை, மிளகாய், பூண்டு, கொத்தமல்லித் தழை போன்றவற்றை லேசாக இடித்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் இடித்த கலவையை கொட்டி வதக்கவும்.

    வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

    சத்தான நார்த்தை இலை ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், பூரியுடன் சாப்பிட முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்,
    முட்டைக்கோஸ் - 2 கப்,
    பச்சை மிளகாய் - 4,
    வெங்காயம் - 1,
    கறிவேப்பிலை - சிறிது,
    தக்காளி - 1,
    மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
    கரம் மசாலாப்பொடி - 1/2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிது.

    முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி

    செய்முறை

    முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை கழுவி அதில் போடவும்.

    பாசிப்பருப்புடன் பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலாப்பொடி, முட்டைக்கோஸ், தக்காளி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும்.

    பின் குக்கரைத் திறந்து உப்பு போட்டு நன்றாக மூடி விடவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்து சப்ஜியில் ஊற்றவும்.

    கொத்தமல்லி தூவி சூடாக சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.

    சூப்பரான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள், அரிசி சாதத்தை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் துருவியது - 1 கப்
    தயிர் - 1 1/2 கப்
    பச்சை திராட்சை - 1/2 கப்
    மாதுளை முத்துகள் - 1/2 கப்

    தாளிக்க:

    கடுகு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    இஞ்சி - 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையானது

    சுரைக்காய் பகாளாபாத்

    செய்முறை:


    இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    துருவிய சுரைக்காயை அடுப்பில் வாணலியில் தண்ணீர் சிறிது தெளித்து வேகவைத்து கொள்ளவும்,.. ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.

    ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
    தாளித்து  சுரைக்காய் கலவையில் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சுரைக்காய் பகாளாபாத் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×