என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பன்னீர் புர்ஜி கிரேவி
Byமாலை மலர்9 March 2020 8:33 AM GMT (Updated: 9 March 2020 8:33 AM GMT)
நாண், பூரி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் புர்ஜி கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 1
துருவிய பன்னீர் - 2 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானது
கொத்தமல்லி - 1
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
வெங்காயம் - 1
தக்காளி - 1
துருவிய பன்னீர் - 2 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானது
கொத்தமல்லி - 1
பட்டை, லவங்கம், கிராம்பு - தலா 4
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து துருவிய பன்னீர், வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X