என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சாதத்திற்கு அருமையான முள்ளங்கி சாம்பார்
Byமாலை மலர்13 March 2020 8:32 AM GMT (Updated: 13 March 2020 8:32 AM GMT)
சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் முள்ளங்கி சாம்பார். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
துவரம்பருப்பு - 1 கப்,
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சையளவு,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
செய்முறை
முள்ளங்கியை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம்பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் முள்ளங்கியை போட்டு வதக்கி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகாய் பொடி சேர்க்கவும்.
முள்ளங்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி சாம்பார் ரெடி.
முள்ளங்கி - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
துவரம்பருப்பு - 1 கப்,
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
புளி - சிறிய எலுமிச்சையளவு,
குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது.
செய்முறை
முள்ளங்கியை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம்பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் முள்ளங்கியை போட்டு வதக்கி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து அதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகாய் பொடி சேர்க்கவும்.
முள்ளங்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி சாம்பார் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X