search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நார்த்தை இலை ரசம்
    X
    நார்த்தை இலை ரசம்

    நார்த்தை இலை ரசம்

    பித்தம், வாந்தி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் நார்த்தை இலை ரசம் வைத்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நார்த்தை இலை - 5
    பச்சை மிளகாய் - 3
    சீரகம் - கால் டீஸ்பூன்
    பூண்டு - 5 பல்
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்
    கடுகு, உப்பு, எண்ணெய் - சிறிதளவு

    நார்த்தை இலை

    செய்முறை:

    நார்த்தை இலை, மிளகாய், பூண்டு, கொத்தமல்லித் தழை போன்றவற்றை லேசாக இடித்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் இடித்த கலவையை கொட்டி வதக்கவும்.

    வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.

    சத்தான நார்த்தை இலை ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×