search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலக் புலாவ்
    X
    பாலக் புலாவ்

    சூப்பரான பாலக் புலாவ்

    கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாலக்கீரை சேர்த்து புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    பாலக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 2
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    முந்திரிபருப்பு - 10

    தாளிக்க:

    பட்டை - 1
    கிராம்பு  - 2
    ஏலக்காய் - 2
    சோம்பு - 1 தேக்கரண்டி

    பாலக் புலாவ்

    செய்முறை:

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×