என் மலர்tooltip icon

    சமையல்

    நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகில் காரசாரமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
    பெரிய பழுத்த தக்காளி - 2
    காய்ந்த மிளகாய் - 4
    வெந்தயம் - 1 சிட்டிகை
    சீரகம் - 1 சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - தேவையான அளவு

    தாளிக்க:

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஆறவிடவும்.

    அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்கவேண்டும்.

    தக்காளி தொக்கு பதத்துக்கு வந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    தக்காளி தொக்கு நன்கு ஆறியபிறகு, அதனோடு ஏற்கெனவே வறுத்து வைத்திருந்த பொருள்கள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    பிறகு இந்த கலவையோடு, எண்ணெய்யில் தாளித்த கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிப்பைச் சேர்த்தால் சுவையான மிளகு சட்னி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சை மிளகாயில் ஊறுகாய், குழம்பு சாப்பிட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பச்சை மிளகாயில் வித்தியாசமான காரமும், இனிப்பு சேர்ந்த அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1 கப்
    சர்க்கரை - கால் கப்
    முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்

    செய்முறை

    முந்திரி, பாதாம், திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயின் விதைகளை நீக்கி விடவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் ப.மிளகாயை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வேறு தண்ணீரில் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.

    பிறகு இந்த ப.மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அரைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

    ப.மிளகாய் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் சர்க்கரை சேர்த்து வதக்கவும்

    அடுத்து அதில் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.

    அல்வா பதம் வந்ததும் அதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான பச்சை மிளகாய் அல்வா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டைகோஸில் உள்ள தழைச்சத்தும் நார்ச்சத்தும் பெருங்குடலையும், மலக்குடலையும் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. இன்று முட்டைகோஸ் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைகோஸ் - ஒரு கப் (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - இரண்டு (நறுக்கியது)
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
    புளி - கால் எலுமிச்சை பழம் அளவு
    உப்பு - தேவைகேற்ப
    இஞ்சி - ஒரு சிறு துண்டு
    எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உடைத்த உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை

    கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

    வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதை அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

    சூப்பரான கோஸ் பச்சை மிளகாய் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இன்று வெங்காயத்தை வைத்து குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்    
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் கடலைப்பருப்பு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் ப. மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    தக்காளி - 2
    குடைமிளகாய் - 1
    பெ.வெங்காயம் - 3
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    சோயா சாஸ், தக்காளி சாஸ் - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை, எண்ணெய் - சிறிதளவு
    தண்ணீர், உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை கொட்டி வதக்கி வைக்கவும்.

    பிறகு சப்பாத்திகளாக தேய்த்து நடுவில் குடைமிளகாய் மசாலாவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து வைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழம்பில் பல்வேறு வெரைட்டி உள்ளது. அந்த வகையில் இன்று முட்டை கட்லெட் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை செய்வது சுலபம். சுவையோ அலாதி.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    பொட்டுகடலைமாவு - அரை கப்
    தேங்காய் - 1 (துருவவும்)
    பெ.வெங்காயம் - 3
    கேரட் - 1 (துருவவும்)
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    மிளகாய் - 5 (நறுக்கவும்)
    நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    தனியா - 2 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    பூண்டு - 6 பல்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை,
    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சிறுதீயில் இஞ்சி, பூண்டு, கசகசா, தனியா, சோம்பு போன்றவற்றை நன்றாக வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் தக்காளி, மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றையும் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.

    முட்டைகளை அடித்து நன்றாக கலக்கி அதனுடன் பொட்டு கடலை மாவு, கேரட், உப்பு, மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    சிறு சிறு கிண்ணங்களில் தெய் தடவி அதில் முட்டை கலவையை ஊற்றி இட்லி தட்டில் கட்லெட் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிறிது இஞ்சி, பூண்டு விழுது, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    அதனுடன் அரைத்த மசாலா கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் தூள்தூவி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து மசாலா வாசம் நீங்கியதும் இறக்கி அதனை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுள் முட்டை கட்லெட்டுகளை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் நேந்திரம் பழத்தில் கட்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நேந்திரம் பழம் - 3
    தேங்காய் துருவல் - 1 கப்
    நாட்டு சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    அரிசி மாவு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
    கோதுமை .மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    செய்முறை

    நேந்திரம் பழத்தை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பழத்தின் நடுவில் உள்ள கறுப்பு விதைகளை நீக்கி விட்டு பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாட்டு சர்க்கரை, பொடித்த தேங்காய் துருவலும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

    பின்னர் இதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இதில் ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் போது இறக்கி வைக்கவும்.

    மசித்து வைத்திருக்கும் பழத்தில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் அரிசி மாவை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

    கோதுமை மாவை ஒரு பவுளில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொஞ்சம் லூசான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    பிசைந்து வைத்த பழக்கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து தட்டி வட்ட வடிவமாகசெய்து கோதுமை மாவில் முக்கி பிரெட் தூளில் போட்டு நன்றாக புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்திருக்கும் கட்லெட்களை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

    நல்ல கிரிஸ்ப்பியான நேந்திரம் பழ கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலி சத்துமிக்க உணவு வகைகளுள் ஒன்று. இதில் சூப், கிரேவி போன்றவற்றை சமைக்கலாம். சரி வாங்க சுவையான சீஸ் ப்ரோக்கோலி செய்வது குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள் :

    நறுக்கிய ப்ரோக்கோலி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
    இஞ்சி- சிறிதளவு
    பூண்டு - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
    சீஸ் - 2 துண்டுகள்.

    செய்முறை :

    இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    சிறிதுநேரம் கழித்து ப்ரோக்கோலி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    கடைசியில் துருவிய சீஸ் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    சூடான சீஸ் ப்ரோக்கோலி தயார்..

    இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சுவையும் அதிகம்,சத்தும் அதிகம்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை மாவில் செய்கின்ற சப்பாத்தியை தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர்செய்யலாம். சரி வாங்க சப்பாத்தியை எப்படி சாஃப்டாக செய்வது குறித்து பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    கோதுமை மாவு -1 கப்
    மைதா மாவு -2 ஸ்பூன்
    உப்பு -தேவையான அளவு
    வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு அகண்ட பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.

    பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி....

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி வடகம், ஜவ்வரிசி வடகத்தை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாதத்தில் வடகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    வேக வைத்த சாதம் - 1 கப்
    மிளகாய் வத்தல் - 2
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், பெருங்காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.

    தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். அல்லது முறுக்கு செய்யும் அச்சில் இந்த மாவை போட்டு பிளாஸ்டிக் பேப்பரிலும் பிழியலாம்.

    பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால்  எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.

    இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும்.

    காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.

    குறிப்பு -

    மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காய்கறிகளை சாப்பிட மறுப்பவர்களுக்கு வாரம் ஒருமுறை அனைத்து காய்கறிகளையும் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காலி பிளவர் - 100 கிராம்
    கேரட் - 1
    சிறிய பீட்ரூட் - 1
    முள்ளங்கி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    காலி பிளவரை வெந்நீரில் 5 நிமிடம் வைத்து எடுத்து விடவும்.

    காலி பிளவர், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

    கேரட், பீட்ரூட், முள்ளங்கி மூன்றையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், துருவி வைத்துள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறவும்.

    நன்கு வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள்  தேங்காய்  துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.  

    சுவையான  கதம்ப பொரியல் ரெடி !

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்.:

    இளம் இஞ்சி - 25 கிராம்,
    பிஞ்சு பச்சை மிளகாய் - 10,
    புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் - ஒன்று,
    எண்ணெய் 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை.:

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்றாக கிளறவும். தொக்கு நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கிளறி இறக்கவும்.

    சூப்பரான இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×