
கோதுமை மாவு -1 கப்
மைதா மாவு -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.
பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.