
ப.மிளகாய் - 1 கப்
சர்க்கரை - கால் கப்
முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
சோள மாவு - 1 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை
முந்திரி, பாதாம், திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.
ப.மிளகாயின் விதைகளை நீக்கி விடவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் ப.மிளகாயை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வேறு தண்ணீரில் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.
பிறகு இந்த ப.மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அரைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
ப.மிளகாய் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் சர்க்கரை சேர்த்து வதக்கவும்
அடுத்து அதில் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் அதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.