
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பெரிய பழுத்த தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்
செய்முறை :
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஆறவிடவும்.
அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்கவேண்டும்.
தக்காளி தொக்கு பதத்துக்கு வந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
தக்காளி தொக்கு நன்கு ஆறியபிறகு, அதனோடு ஏற்கெனவே வறுத்து வைத்திருந்த பொருள்கள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.