என் மலர்tooltip icon

    சமையல்

    உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சைப்பயறு - அரை கப்
    தேங்காய் துருவல் - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் பச்சைப்பயறை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.

    பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

    இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். சரி துவரைக்காயில் ஒரு சுவையான ரெசிபியைப் பார்ப்போமா?
    தேவையான பொருட்கள்

    துவரைக்காய் - கால் கிலோ
    பெரிய வெங்காயம்  - 1
    தக்காளி  - 2
    பூண்டு  - 4 பற்கள்
    தேங்காய் - 4 பெரிய துண்டுகள்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை ­ ஒரு கொத்து
    உப்பு ­ தேவையான அளவு

    செய்முறை

    துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளித்த பின்னர்  வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்கவும்.

    இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடுங்கள்.

    கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

    இந்த குருமாவை இட்லி, தோசை மற்றும் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த சப்பாத்தி உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பூசணிக்காய் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    துருவிய சிவப்பு பூசணிக்காய் - 2 கப்
    கோதுமை மாவு - 3 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

    பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி தயார்!
    தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல்மேக்கர் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 100 கிராம்  
    சி.வெங்காயம் - 100 கிராம்  
    தக்காளி - 3  
    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு  
    பச்சை மிளகாய் - 2  
    கடுகு - சிறிதளவு  
    பட்டை, கிராம்பு - சிறிதளவு  
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  
    மஞ்சள் தூள் - சிறிதளவு  
    தேங்காய் துருவல் - கால் கப்
    கப்  உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் மீல் மேக்கரை கொட்டி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் கால் மணி நேரம் ஆறவைக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயத்தை நறுக்கி தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுதை சேர்த்து கிளறவும்.

    வெங்காய கலவை பொன்னிறமாக மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

    மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை பிழிந்தெடுத்து விட்டு அதனையும் கொட்டி கிளறவிடவும்.

    அதனுடன் போதுமான அளவு தண்ணீர், தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி, புதினா தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான மீல்மேக்கர் கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
    சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.

    இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:

    சின்ன வெங்காயம் - 300 கிராம்
    பூண்டு - 1
    தேங்காய் பால் - 1 கப்
    வெல்லம் - 150 கிராம்
    வெந்தயம் - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    ஏலக்காய் - 4
    சுக்குத்தூள் - 1 சிட்டிகை
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை


    சின்னவெங்காயத்தை தோல் நீக்கி இடித்து கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.

    சீரகம், வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டை இடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இடித்த வெங்காயம், பூண்டை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து வேகவைத்து குழைக்கவும்.

    அடுத்து வெல்லத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.

    அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும்.

    அடுத்து சுக்குத் தூள், ஏலக்காய் தூளை சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள்.

    இதுதான் வெங்காய லேகியம்.

    இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக்கினை நாம் பேக்கரி கடைகளில் வாங்கி கொடுப்போம். இன்று எளிமையாகவும் வேகமாகவும் எப்படி கேக் பாப்ஸ்கள் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிளைன் சாக்லேட் கேக் - 200 கிராம்
    சாக்லேட் பிஸ்கெட் - ஒரு பாக்கெட்
    சுத்தமான தேன் - 2 அல்லது 3 ஸ்பூன்
    டார்க் சாக்லேட் - 200 கிராம்
    Nutella - 4 டேபிள் ஸ்பூன்
    சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு
    கலர் ஸ்ப்ரிங்க்லர்ஸ் -தேவையான அளவு
    லாலிபாப் ஸ்டிக்ஸ் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் 200 கிராம் பிளைன் சாக்லேட் கேக்கினை உதிர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

    பின் ஒரு பாக்கெட் சாக்லேட் பிஸ்கெட்டினை பவுடர் செய்து இதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு 4 டேபிள் ஸ்பூன் Nutella மற்றும் 2 அல்லது 3 ஸ்பூன் தேன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி வைக்க வேண்டும்.

    பிறகு 200 கிராம் டார்க் சாக்லேட்டை அடுப்பில் மீதமனான சூட்டில் உருக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உருட்டி வைத்துள்ள பந்துகளை உருக்கி வைத்துள்ள சாக்லேட்டில் முக்கி எடுக்க வேண்டும்.

    இந்த லாலிபாப் ஸ்டிக்கை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிரூட்டுங்கள்.

    இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள். இப்பொழுது கேக் பாப்ஸ் தயார்.

    தங்கள் குழந்தைகளுக்கு இப்பொழுது இந்த கேக் பாப்ஷை அன்போடு பரிமாறுங்கள்…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இதயம் சீராக செயல்பட உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உதவுகின்றன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - அரை கப்
    தேங்காய் துருவல் - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.

    பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

    இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்துமிக்க பொரியலை கொடுக்க வேண்டுமா? அப்போ வாரம் ஒரு முறை குடைமிளகாய் பொரியலை செய்து கொடுங்கள். இதனால் உடலில் ஈரப்பதமும் அதிகரிக்கும்.
    தேவையான பொருள்கள்:

    குடைமிளகாய் - 2
    தக்காளி - 3
    வெங்காயம் - 1
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    சீரகப்பொடி - 1/4 ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
    கடுகு - 1/2 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு தக்காளி, குடைமிளகாய் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பிறகு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிதளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளை ஈஸியாக மடக்க அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் தயிர் சாண்ட்விச்னா குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டம். சரி வாங்க தயிர் சாண்ட்விச்சை எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    கோதுமை பிரெட் - 4
    தயிர் - 1 கப்
    ஸ்வீட் கார்ன்  - 1/4 கப்
    முட்டைக்கோஸ் - 1/4 கப்
    கேரட் - 1/4 கப்
    குடைமிளகாய் - 1/4 கப்
    தேன் - தேவையான அளவு
    உப்பு - தேவியான அளவு
    மிளகு - தேவையான அளவு

    செய்முறை:

    முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நீக்கி கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு அதனுடன் சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் தேன், உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலந்து அதை தயிர் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு கலந்த தயிர் கலவையை வைக்கவும்.

    அதன் மேல் இன்னொரு பிரெட்டை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார்.

    இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வர்க்கி சுற்றுலா நகரமான ஊட்டியின் பாரம்பரிய உணவு பொருளாக திகழ்ந்து வருகிறது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    வர்க்கி தயாரிப்பதற்கு மூலப்பொருளாக மைதா மாவு உள்ளது. அதனுடன் சர்க்கரை, உப்பு, எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வர்க்கிக்கு புளிப்பு வர ஈஸ்ட் சேர்க்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ரவை, மைதா மாவு மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் மாவா மூலம் வர்க்கி தயாரிக்கப்படுகிறது. ஊட்டியில் தயார் செய்யப்படும் வர்க்கிகள் அனைத்தும் மரத்தால் ஆன மேஜைகளில் தான் கலவை செய்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டி வர்க்கிக்கு எப்போதுமே தனி சுவை என்ற பெயர் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    மைதா -   2 கப்
    சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    டால்டா - கால் கப்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - ஒரு டீஸ்பூன்
    ஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)
    தண்ணீர் - தேவையான அளவு.

    செய்முறை

    மைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுவதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.

    மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து  மாவில் ஊற்றி பிசையவும்.

    மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும்.  தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில்  மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும்.

    அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும். அவனை (Oven) அதன் அதிகபட்ச  வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும்.

    இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20  முதல் 30 நிமிடம் வேக விடவும்.

    வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.

    வீட்டிலேயே  ஈஸ்ட்

    தேவையான பொருட்கள்


    மைதா - கால் கப்
    தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு.

    செய்முறை

    இவை  அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள்  கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு  வாரம் வரை ஃப்ரிட்ஜில்  வைத்திருந்து உபயோகிக்கலாம். இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று  உபயோகிக்கலாம். ஈஸ்ட் ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில்  தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை தரப்பட்டிருக்கிறது.
    பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பட்டர் பீன்ஸ் - 1 கப்
    சோம்பு - கால் டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - கால் கப்
    இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    பட்டர் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி துருவலை கொட்டி தாளிக்கவும்.

    அதனுடன் பட்டர் பீன்ஸ், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

    மசாலா வாசம் நீங்கியதும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கி ருசிக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலாப்பழம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இன்று பலாப்பழம், பால் சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நறுக்கிய பலாப்பழத் துண்டுகள் - 2 கப்
    கோதுமை மாவு - அரை கப்
    சர்க்கரை - 2 கப்
    பால் - 2 கப்
    முந்திரி துண்டுகள் - தேவையான அளவு
    பாதாம் - தேவையான அளவு
    ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்
    நெய் - கால் கப்
    சமையல் எண்ணெய் - அரை கப்
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    செய்முறை

    ஒரு கப் பாலில் பலாத் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    பாதாமை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை நன்கு வறுக்கவும்.

    முந்திரியையும் பொன்நிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

    ஒரு வாணலியில் மீதமுள்ள பால், அரைத்த பலா விழுது, கோதுமை மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    கைவிடாமல் கிளறி இடைஇடையே நெய்யை சேர்த்து கொண்டே வரவும்.

    சர்க்கரை கரைந்து எல்லாம் சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும்போது கேசரி பவுடரைச் சிறிதளவு பாலில் கரைத்து ஊற்றவும்.

    முந்திரி, பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

    சுவையான பலாப்பழ அல்வா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×