என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளுக்கு நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே 12-வது வாரத்தில் சிறுநீர் பிரிய தொடங்கி விடும். குழந்தை பிறந்த பின்பு முதல் 24 மணி நேரத்தில் சிறுநீரகம் பிரிந்து விடும். அதற்கு மேல் பிரியாவிடில், ஒன்று சிறுநீர் உற்பத்தி குறைவு அல்லது பிரிந்த நீர் வெளியேறாமல் ஏதோ தடை என்பதை அறியலாம்.
செயலிழக்கும் அபாயம்
ஒருவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு இதயம் சரிவர இயங்காவிடில் அவருக்கு இதயத்துடன் சேர்ந்து சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மூளையில் ரத்தக்கசிவோ, தலைக்காயமோ ஏற்படின் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
சிறுகுழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் போது அழுதல் பெரிய குழந்தைகள் எனில் நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, பசியின்மை, எடை கூடாமை, அடிக்கடி வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், கண்ணில் கீழ் இமையிலோ, சுற்றிலோ ஏற்படும் வீக்கம், கை-கால்களில் வீக்கம். உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
பிரச்சினை
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை சாதாரணமாக சந்திக்கும் பிரச்சினை யூரின் இன்பெக்ஷன், சிறுநீர் பிரியும் போது வலி, எடை குறைவு, அடிவயிற்று வலி, அடிக்கடி காய்ச்சல், சிறுநீர் பழுப்பு, சிறுநீரில் ரத்தம் போன்றவை அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு, சவ்வு போன்ற உள் பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி யூரின் இன்பெக்ஷன் ஏற்படலாம்.
குழந்தைகள் படுக்க செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கு முன் நீராகாரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காபின் உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்கண்டிப்பாக சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். நடு இரவில் குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். பகல் நேரங்களில் சிறுநீரை எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க செய்ய வேண்டும். அப்போது மூத்திரைப்பையில் அதிக சிறுநீரை தாங்கும் திறன் அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை பரிசோதனை செய்து, டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கே.எழிலரசு கூறினார்.
செயலிழக்கும் அபாயம்
ஒருவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு இதயம் சரிவர இயங்காவிடில் அவருக்கு இதயத்துடன் சேர்ந்து சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மூளையில் ரத்தக்கசிவோ, தலைக்காயமோ ஏற்படின் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
சிறுகுழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் போது அழுதல் பெரிய குழந்தைகள் எனில் நீர்கடுப்பு அடி வயிற்றில் வலி, பசியின்மை, எடை கூடாமை, அடிக்கடி வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், கண்ணில் கீழ் இமையிலோ, சுற்றிலோ ஏற்படும் வீக்கம், கை-கால்களில் வீக்கம். உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
பிரச்சினை
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை சாதாரணமாக சந்திக்கும் பிரச்சினை யூரின் இன்பெக்ஷன், சிறுநீர் பிரியும் போது வலி, எடை குறைவு, அடிவயிற்று வலி, அடிக்கடி காய்ச்சல், சிறுநீர் பழுப்பு, சிறுநீரில் ரத்தம் போன்றவை அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு, சவ்வு போன்ற உள் பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி யூரின் இன்பெக்ஷன் ஏற்படலாம்.
குழந்தைகள் படுக்க செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கு முன் நீராகாரம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காபின் உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்கண்டிப்பாக சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். நடு இரவில் குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். பகல் நேரங்களில் சிறுநீரை எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க செய்ய வேண்டும். அப்போது மூத்திரைப்பையில் அதிக சிறுநீரை தாங்கும் திறன் அதிகரிக்கும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை பரிசோதனை செய்து, டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கே.எழிலரசு கூறினார்.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது.
கற்றல் குறைபாடு என்பது மூளையில் உள்ள செல்களின் பிணைப்பில் உண்டாகும் பிரச்சினை. கற்றல் குறைபாடு நோய் கிடையாது, ஆகையால் குணப்படுத்த முடியாது ஆனால் இதனை கையாள முடியும்.
தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள் மூலம் மட்டுமே இதனை கையாள முடியும். அதிக நேரம் டியூஷன் சென்று படிப்பதாலோ அல்லது 20 முறை எழுதி பார்ப்பதாலோ கல்வி கற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது. பத்தில் நான்கு குழந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கியுள்ளனர்.
இந்த குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ,சமூகத்திலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் ஒரு உண்மை என்னவென்றால் பத்தில் ஏழு சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னை யாரும் அங்கீகரிக்காத நிலையால் இறுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
“நீ புத்திசாலியான பையன் தானே, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் நன்றாக மதிப்பெண் பெறலாமே” என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனதில் தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவனின் சுய மதிப்பு குறையத்தொடங்கும்.
டீசல் வண்டியில் பெட்ரோல் நிரப்பினால் என்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாதல்லவா, அதேமாதிரி தான் சாதாரண பள்ளிகளில் கற்பித்தால் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் மூளைக்குள் சென்றடையாது. சிறப்பு பயிற்சி மேற்கொள்வதினால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும் !!
அவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு சிறப்பு கல்வியாளர் என்ற விகிதாச்சாரத்தின் மூலம் தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அதில் முக்கியமாக ஐம்புலன்கள் வழிமூலமாக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி சிறந்த பயிற்சி முறையாகும்.
பெற்றோர்கள் அணுக வேண்டியவர்கள்:
குழந்தைக்கு கற்றல் குறைபாடுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரை பார்த்து குழந்தையின் படிப்பு மற்றும் நடத்தையை பற்றி கேட்டறிதல் வேண்டும். பின்பு குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்., மனநல ஆலோசகரை அனுகி குழந்தையின் மனநிலை தொடர்பான அறிக்கை பெறுவது அவசியம்.
ஆய்வு அறிக்கை :
1. ஐ கியூ டெஸ்ட் (அறிவு திறன்)
2. குடும்பத்தில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கிறதா, சொந்தத்தில் திருமணமா ? தாய் கர்பமாக இருக்கும் பொழுது உடல் மற்றும் மன நலன், பிரசவத்தின் பொழுது ஏதாவது சிக்கல், பிறந்தவுடன் அழுகை மற்றும் எடை, ஒவ்வொரு
மைல்கல்லின் வளர்ச்சி, உதாரணமாக கழுத்து நின்றது, தவழ்வது,முட்டி போடுவது, நடப்பது, பேசுவது, மற்றும் பல.
3. படிப்பது, எழுதுவது
4. குழந்தையின் மன நலன்.
இந்த மனநிலை தொடர்பான அறிக்கையின்படி தற்பொழுது குழந்தை எந்த வயதிற்கானவளர்ச்சியில் உள்ளது என்று கண்டறிந்து பின்னர் அதற்கு தகுந்தவாறு சிறப்பு கல்வியாளரிடம் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் !!
ஐம்புலன்கள் வழியாக கற்றுக் கொள்ளும் முறை:
ஒரு குழந்தைக்கு எந்தப் புலன் வழியில் சிறந்த முறையில் கற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து அந்த முறையிலேயே கற்பித்தால் அந்த குழந்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும்.
* புலன் சார்ந்த கல்வி :
புலன் வழி கல்வி என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்களை பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்க முடியும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்றலில் முன்னேற்றம் ஏற்பட அவர்களுக்கு எந்த புலத்தின் மூலம் கற்பித்தால் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அதனை அறிந்து அதன் மூலம் கற்பிக்கலாம். இவ்வாறு கற்பிக்கப்படுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வமும் திறமையும் அதிகரித்து அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

* காட்சிப் பொருளின் மூலம் கற்றல்
அதாவது குழந்தைகள் படங்கள், ஓவியம், அல்லது பொருட்களை பார்த்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். படிக்கும் பாடங்களை
பாட்டு, இசை, நடனம் மூலமாக நேராகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் ஞாபக திறனும் மேம்படும்.
* கேட்டலின் மூலம் கற்றல்
கற்பிப்பதை ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு யோசிக்கும் திறனும் ஆர்வமும் அதிகமாகும். திரும்பத் திரும்ப ஒரு செய்தியினை கேட்டால் அது நன்றாக மூளையில் பதிந்து விடும். பொதுவாக குழந்தைகள் படிப்பதைவிட கேட்டலில் ஆர்வம் காட்டுவார்கள் உதாரணமாக ஆசிரியர் கதை சொன்னால் மாணவர்களின் கவனம் சிறிதுகூட சிதறாது.
அதேபோன்று தொலைக் காட்சியிலோ வானொலி பெட்டியிலோ கதையோ செய்தியும் கேட்கும்போது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக மிக அதிகமாக இருக்கும் இவற்றை அறிந்து அந்த குழந்தைகளுக்கு கேட்டல் மூலம் கற்பிக்கலாம் கற்பிக்கப்படும் பொருளை பதிவு செய்து அதை கேட்டலின் மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்
தொடு உணர் கல்வி
வீட்டில் உள்ள உப்பில் விரல்களால் எழுதுதல், எழுத்துக்களை வடிவமைத்தல் அதனைத் தொட்டுப் பார்த்தல் , நவதானியங்களை கொண்டு படங்களை உருவாக்கி அதனை தொட்டு விரல்களால் உணர முடியும். விரல்களை தண்ணீரில் ஈரப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சுவர்கள் மேல் எழுதி, அந்த எழுத்துக்கள் மறைவதற்குள் மற்றொரு எழுத்து எழுத வேண்டும். இதை ஒரு விளையாட்டுப்போல் கற்றுக் கொள்வார்கள். இவ்வாரு தொடு உணர்வின் மூலம் கற்றுக் கொடுப்பது கற்றலின் புதிய யுக்தி.
உடல் அசைவின் மூலம் கற்றல்
துரு துரு குழந்தைகளுக்கு இந்த வகை கற்றல் ஒரு வரப்பிரசாதம். உடல் அசைவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வகை கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கவனம் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும், நடனம் மற்றும் நாடகத்தில் இருக்கும் ஆர்வத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு தூண்டுதலாக அமையும்.
மூளை உடற்பயிற்சி (பிரைன் ஜிம்)
இந்த வகை கற்றலில் உபயோக படுத்தலாம். தோப்பு கர்ணம் தண்டனைகாக உபயோக படுத்தப்படுத்தப்பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் இது ஒரு வகையான மூளை உடற்பயிற்சி என்று வெளிநாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இடது - வலது பக்க மூளை தூண்டப்படுவது பிரைன் ஜிம் என்று பொருள். இரண்டு பக்க மூளையையும் செயல்படுத்துவதன் மூலம் கவனம் மேம்படும், புத்தி கூர்மை அடையும், ஞாபக சக்தி மெருகேரும், மூளை புத்துணர்ச்சி அடையும் மற்றும் புதிய நியூரான்களை உருவாக்க உதவும்.
பெற்றோர்களுக்கு : (பரம்பரையில் கற்றல் குறைபாடு )
பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்த்து பதற்றப்பட கூடாது .ஆறு வயது வரை குழந்தைகளுக்கு கற்று உணரும் பருவம். பள்ளிக்குச் செல்லும் முன்னே இதற்கான சில அறிகுறிகள் தெரியும். இருந்தாலும் பள்ளி சென்றால்தான்படிப்பதில் பிரச்சினை இருக்கிறதா மற்றும் , யாரை அணுக வேண்டும் என்பதையும் அறியமுடியும். கற்றல் குறைபாடு மரபனு சார்ந்ததாக இருப்பதால் விரைவிலேயே கண்டறிந்து மாற்று வழி சிறப்பு பயிற்சி அளிப்பது மிக அவசியம்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
என் குழந்தை எல்லா பாடத்திலும் நன்றாக படிப்பானா , கற்றல் குறைபாட்டிலிருந்து விடுபட்டு விடுவானா ? எவ்வளவு சீக்கிரம் இந்த குறைபாட்டை சரிப்படுத்த முடியும்? இந்த குறைபாடு போகப் போக சரியாகி விடுமா?
பயிற்சிக்கான கால நேரம் குறிப்பிடுவது கடினம். பெற்றோர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் தன் குழந்தையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.மேலும் பயிற்சிகளை பாதியில் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பது மிக மிக அவசியம் !!
தொடர்ச்சியான சிறப்பு பயிற்சிகள் மூலம் மட்டுமே இதனை கையாள முடியும். அதிக நேரம் டியூஷன் சென்று படிப்பதாலோ அல்லது 20 முறை எழுதி பார்ப்பதாலோ கல்வி கற்றுக்கொள்ள இயலாது.
தங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற கல்விதான் முக்கியமான காரணம் என்று பெற்றோர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு மாதிரி தெரிவிக்கிறது. பத்தில் நான்கு குழந்தைகள் கல்வியில் ஏதோ ஒரு வகையில் பின்தங்கியுள்ளனர்.
இந்த குழந்தைகள் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி ,சமூகத்திலும் சரி ஏதோ ஒரு வகையில் அவமானத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும் ஒரு உண்மை என்னவென்றால் பத்தில் ஏழு சிறார் குற்றவாளிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்கள். அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னை யாரும் அங்கீகரிக்காத நிலையால் இறுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
“நீ புத்திசாலியான பையன் தானே, இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து படித்தால் நன்றாக மதிப்பெண் பெறலாமே” என்று சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அந்தக் குழந்தையின் மனதில் தன் மேல் தான் தவறு இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மை உண்டாகும். இதனால் அவனின் சுய மதிப்பு குறையத்தொடங்கும்.
டீசல் வண்டியில் பெட்ரோல் நிரப்பினால் என்ஜின் ஸ்டார்ட் ஆக முடியாதல்லவா, அதேமாதிரி தான் சாதாரண பள்ளிகளில் கற்பித்தால் கற்றல் குறைபாடுள்ள குழந்தையின் மூளைக்குள் சென்றடையாது. சிறப்பு பயிற்சி மேற்கொள்வதினால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும் !!
அவர்களுக்கு சிறப்பு கல்வியாளர்கள் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு சிறப்பு கல்வியாளர் என்ற விகிதாச்சாரத்தின் மூலம் தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். அதில் முக்கியமாக ஐம்புலன்கள் வழிமூலமாக கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சி சிறந்த பயிற்சி முறையாகும்.
பெற்றோர்கள் அணுக வேண்டியவர்கள்:
குழந்தைக்கு கற்றல் குறைபாடுக்கான அறிகுறிகள் இருக்கிறது என்றால், பெற்றோர்கள் பள்ளி ஆசிரியரை பார்த்து குழந்தையின் படிப்பு மற்றும் நடத்தையை பற்றி கேட்டறிதல் வேண்டும். பின்பு குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்., மனநல ஆலோசகரை அனுகி குழந்தையின் மனநிலை தொடர்பான அறிக்கை பெறுவது அவசியம்.
ஆய்வு அறிக்கை :
1. ஐ கியூ டெஸ்ட் (அறிவு திறன்)
2. குடும்பத்தில் யாருக்காவது கற்றல் குறைபாடு இருக்கிறதா, சொந்தத்தில் திருமணமா ? தாய் கர்பமாக இருக்கும் பொழுது உடல் மற்றும் மன நலன், பிரசவத்தின் பொழுது ஏதாவது சிக்கல், பிறந்தவுடன் அழுகை மற்றும் எடை, ஒவ்வொரு
மைல்கல்லின் வளர்ச்சி, உதாரணமாக கழுத்து நின்றது, தவழ்வது,முட்டி போடுவது, நடப்பது, பேசுவது, மற்றும் பல.
3. படிப்பது, எழுதுவது
4. குழந்தையின் மன நலன்.
இந்த மனநிலை தொடர்பான அறிக்கையின்படி தற்பொழுது குழந்தை எந்த வயதிற்கானவளர்ச்சியில் உள்ளது என்று கண்டறிந்து பின்னர் அதற்கு தகுந்தவாறு சிறப்பு கல்வியாளரிடம் பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம் !!
ஐம்புலன்கள் வழியாக கற்றுக் கொள்ளும் முறை:
ஒரு குழந்தைக்கு எந்தப் புலன் வழியில் சிறந்த முறையில் கற்றுக்கொள்கிறது என்பதை அறிந்து அந்த முறையிலேயே கற்பித்தால் அந்த குழந்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும்.
* புலன் சார்ந்த கல்வி :
புலன் வழி கல்வி என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்களை பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்க முடியும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்றலில் முன்னேற்றம் ஏற்பட அவர்களுக்கு எந்த புலத்தின் மூலம் கற்பித்தால் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ அதனை அறிந்து அதன் மூலம் கற்பிக்கலாம். இவ்வாறு கற்பிக்கப்படுவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வமும் திறமையும் அதிகரித்து அவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

* காட்சிப் பொருளின் மூலம் கற்றல்
அதாவது குழந்தைகள் படங்கள், ஓவியம், அல்லது பொருட்களை பார்த்து கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். படிக்கும் பாடங்களை
பாட்டு, இசை, நடனம் மூலமாக நேராகவோ அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவர்கள் ஞாபக திறனும் மேம்படும்.
* கேட்டலின் மூலம் கற்றல்
கற்பிப்பதை ஒருமுறைக்கு பலமுறை கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு யோசிக்கும் திறனும் ஆர்வமும் அதிகமாகும். திரும்பத் திரும்ப ஒரு செய்தியினை கேட்டால் அது நன்றாக மூளையில் பதிந்து விடும். பொதுவாக குழந்தைகள் படிப்பதைவிட கேட்டலில் ஆர்வம் காட்டுவார்கள் உதாரணமாக ஆசிரியர் கதை சொன்னால் மாணவர்களின் கவனம் சிறிதுகூட சிதறாது.
அதேபோன்று தொலைக் காட்சியிலோ வானொலி பெட்டியிலோ கதையோ செய்தியும் கேட்கும்போது கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் மிக மிக அதிகமாக இருக்கும் இவற்றை அறிந்து அந்த குழந்தைகளுக்கு கேட்டல் மூலம் கற்பிக்கலாம் கற்பிக்கப்படும் பொருளை பதிவு செய்து அதை கேட்டலின் மூலம் அவர்களின் கற்றல் திறன் மேம்படும்
தொடு உணர் கல்வி
வீட்டில் உள்ள உப்பில் விரல்களால் எழுதுதல், எழுத்துக்களை வடிவமைத்தல் அதனைத் தொட்டுப் பார்த்தல் , நவதானியங்களை கொண்டு படங்களை உருவாக்கி அதனை தொட்டு விரல்களால் உணர முடியும். விரல்களை தண்ணீரில் ஈரப்படுத்திக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் சுவர்கள் மேல் எழுதி, அந்த எழுத்துக்கள் மறைவதற்குள் மற்றொரு எழுத்து எழுத வேண்டும். இதை ஒரு விளையாட்டுப்போல் கற்றுக் கொள்வார்கள். இவ்வாரு தொடு உணர்வின் மூலம் கற்றுக் கொடுப்பது கற்றலின் புதிய யுக்தி.
உடல் அசைவின் மூலம் கற்றல்
துரு துரு குழந்தைகளுக்கு இந்த வகை கற்றல் ஒரு வரப்பிரசாதம். உடல் அசைவின் மூலம் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வகை கற்றலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கவனம் மற்றும் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பு உண்டாகும், நடனம் மற்றும் நாடகத்தில் இருக்கும் ஆர்வத்தை வெளிக்கொண்டுவர இது ஒரு தூண்டுதலாக அமையும்.
மூளை உடற்பயிற்சி (பிரைன் ஜிம்)
இந்த வகை கற்றலில் உபயோக படுத்தலாம். தோப்பு கர்ணம் தண்டனைகாக உபயோக படுத்தப்படுத்தப்பட்டது என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் இது ஒரு வகையான மூளை உடற்பயிற்சி என்று வெளிநாட்டு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். இடது - வலது பக்க மூளை தூண்டப்படுவது பிரைன் ஜிம் என்று பொருள். இரண்டு பக்க மூளையையும் செயல்படுத்துவதன் மூலம் கவனம் மேம்படும், புத்தி கூர்மை அடையும், ஞாபக சக்தி மெருகேரும், மூளை புத்துணர்ச்சி அடையும் மற்றும் புதிய நியூரான்களை உருவாக்க உதவும்.
பெற்றோர்களுக்கு : (பரம்பரையில் கற்றல் குறைபாடு )
பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்த்து பதற்றப்பட கூடாது .ஆறு வயது வரை குழந்தைகளுக்கு கற்று உணரும் பருவம். பள்ளிக்குச் செல்லும் முன்னே இதற்கான சில அறிகுறிகள் தெரியும். இருந்தாலும் பள்ளி சென்றால்தான்படிப்பதில் பிரச்சினை இருக்கிறதா மற்றும் , யாரை அணுக வேண்டும் என்பதையும் அறியமுடியும். கற்றல் குறைபாடு மரபனு சார்ந்ததாக இருப்பதால் விரைவிலேயே கண்டறிந்து மாற்று வழி சிறப்பு பயிற்சி அளிப்பது மிக அவசியம்.
பெற்றோர்கள் கவனத்திற்கு:
என் குழந்தை எல்லா பாடத்திலும் நன்றாக படிப்பானா , கற்றல் குறைபாட்டிலிருந்து விடுபட்டு விடுவானா ? எவ்வளவு சீக்கிரம் இந்த குறைபாட்டை சரிப்படுத்த முடியும்? இந்த குறைபாடு போகப் போக சரியாகி விடுமா?
இப்படி பல கேள்விகளை சிறப்பு கல்வி யாளரின் முன் பெற்றோர்கள் வைப்பார்கள். குழந்தையின் குறைபாட்டிற்கு தகுந்தவாறு பயிற்சி வகுப்புகள் அமையும்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.

அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.
சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.
பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.
சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
படிப்படியாக உயர்ந்து வருகிறது தமிழக கல்வித்துறை. தனியார் வசம் இருந்த கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் பள்ளிக்கூடங்களை சொந்தமாக்கி சாத்தியமாக்கி இருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தனியார் பள்ளிகள் வசம் இருந்த தூண்டில் இந்த கே.ஜி. வகுப்புகள். 5 வயது நிறைவடைந்த பின்னர்தான் அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததால், 3 வயதில் இருந்தே சமாளிக்க முடியாத குழந்தைகளை கே.ஜி. வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எல்லா வீடுகளையும் எட்டிப்பார்க்க, அந்த நுழைவு வாயில் தனியார் பள்ளிகளின் முக்கிய வாயிலாகவே உள்ளது.
ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது.
ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது.
இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல்கிறார்கள்.
இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்...
ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது.
தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.
ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது.
இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை.
எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.
மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி.
பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி.
மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி.
இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி.
இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.
-முடிவேல் மரியா
ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது.
ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது.
இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.
கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல்கிறார்கள்.
இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்...
ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது.
தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.
ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது.
இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை.
எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.
மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி.
பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி.
மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி.
இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி.
இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.
-முடிவேல் மரியா
தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம்.
தேர்வு நெருங்க நெருங்க பலருக்கும் பயமும், பதற்றமும் தொற்றிக் கொள்ளும். அப்படி அவசியமற்ற பயம் வரவேண்டாம் என்றால் தேர்வுக்கு தெளிவாக திட்டமிட்டு படித்தாலே போதுமானது. ஏறத்தாழ பாடத்திட்டங்கள் நிறைவு பெற்று முழுஆண்டுத் தேர்வுக்கு விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இனி மீதி இருக்கும் காலங்களை சரியாக திட்டமிட்டு படித்தால் பயமின்றி சாதனை படைக்கலாம். அதற்கான சில அடிப்படை விஷயங்கள் இங்கே...
தேவை புதிய அட்டவணை
அரையாண்டு விடுமுறை மற்றும் நீண்ட பொங்கல் விடுமுறை இடைவேளை உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது. பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான நேர ஒதுக்கீடு செய்து படிப்பது, எழுதிப் பார்ப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற கை கைகொடுக்கும்.
அதற்கான திட்டமிடலுக்கு சரியான புரிதல் அவசியம். முதலில் எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மன இறுக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். படிப்புக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே போதிய இடைவேளை மற்றும் மன இறுக்கம் போக்கும் பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய தேர்வு அட்டவணையை தயார் செய்யுங்கள்.
அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி திருப்புதல் செய்யுங்கள். இன்று முதல் தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.
தேர்வுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். இறுதி வாரத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மற்ற வாரங்களுக்குள் படித்து முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும். தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
படிப்பின்போது...
அட்டவணையின்படி படித்து முடிப்பதை வழக்கமாக்குங்கள். உங்கள் அட்டவணையை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் உதவியுடன் தினசரி பயிற்சிகளில் கேள்வி கேட்பது அல்லது எழுதிக்காட்டுவது என பயிற்சி மேற்கொள்ளலாம்.
சகதோழிகள், மாணவர்களை சேர்த்துக் கொண்டும் குழுவாக படித்து பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். பாடங்களை மற்றவர்களிடம் ஒப்புவிப்பது தவறுகளை தவிர்க்கவும், நினைவில் நிறுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும். எழுதிப்பார்க்க அதிக நேரம் கிடைக்காவிட்டால் இப்படிச் செய்வது சிறந்தது.
பள்ளியிலும், டியூசன்களிலும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை மகிழ்ச்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொள்ளுங்கள். வீட்டிலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளில் சுய தேர்வு எழுதி பரிசோதனை செய்யுங்கள்.
புதிய பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களை படிக்க அதிகாலை நேரத்தை ஒதுக்குங்கள். போதிய ஓய்வுக்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் காலைப்பொழுதில் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.
படிக்கும் இடத்தில் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தை படிக்க தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்களை இடைவேளைவிடுங்கள். 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்கி நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நகைச்சுவை துணுக்குகளை ரசிப்பது என மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயற்கை காட்சிகளைப் பார்த்தும், கண்களை மூடி தியானித்தும் கண்களுக்கு பயிற்சியளித்துக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்கு மற்றும் இடைவேளை நேரத்தில் படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.
தினசரி முடித்த பாடங்களை அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.

சராசரி மாணவர்கள்
சராசரியாக படிக்கும் மாணவர்கள், பாடங்கள் நிறைய சேர்ந்துவிட்டதை எண்ணி பதற்றப்பட வேண்டாம். அப்படி படபடப்புடன் படிப்பது ஏற்கனவே படித்த பாடங்களைக்கூட மறக்க வைத்துவிடும். அதுபோன்றவர்கள் முக்கியமான பாடங்களை மட்டும் படிக்க முயற்சியுங்கள். இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்கு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
ஆசிரியர், பெற்றோர் உதவியை நாடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் எளிதாக மதிப்பெண் பெறும் முறைகளை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்.
தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று விடுமுறை நாட்களையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள இடைவேளை நாட்களில் படித்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பயம் தொற்றுவதை தவிர்க்க முடியாது. மனச்சோர்வும் மிகுந்துவிடும்.
பாடங்களை படிப்பதுடன் நில்லாமல் எழுதிப் பார்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். படங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள், கிராப் வரைபடங்கள், மேப், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவை எளிதாக மதிப்பெண்கள் பெற உதவும் என்பதால் அவற்றை சரியாக பயிற்சி செய்வது அவசியம்.
உடல் நலன்
தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் முக்கியம். தொடர்ந்து படிப்பது மற்றும் பயத்துடன் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், ஆற்றல் இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நிறைய நேரம் படித்தும் மனதில் எதுவும் நிற்காவிட்டால் சிந்தனை சிதறல் இருப்பதாக அறியலாம். மனதை பக்குப்படுத்தும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படிக்க ஆரம்பித்தால் இந்த பிரச்சினைகளைப் போக்கலாம்.
மூச்சுப்பயிற்சியானது மூளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இது மனச்சோர்வின்றி படிக்க துணை செய்யும்.
நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே படிப்பதும் சிந்தனையை மழுங்கடிக்கும். காரம், புளிப்பு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்கும்.
காலை உணவை தவிர்க்கக்கூடாது. பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள்.
நீண்ட நேரம் படிப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்விழித்துப் படித்தால் கண்கள் சிவந்துவிடுவது, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். எனவே குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
செய்யக்கூடாதவை...
உணவுப் பழக்கத்தில் செய்யக்கூடாதவற்றை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
தேர்வு நேரத்தில் வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். காயம் மற்றும் விபத்து நேரும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பைக்குகளை ஸ்டைலாக ஓட்டுவது, கிணற்றில் டைவ் அடித்து குளிப்பது, பஸ்கள், ரெயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்றவை கூடாது. கடினமான வேலைகள், கூர்மையான ஆயுதங்கள், நெருப்பை பயன்படுத்தி செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் படிப்பை பாதிக்கும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை எதிர்கொள்ள விடாமலும் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.
அதிகமாக டி.வி. மற்றும் செல்போனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
தேவை புதிய அட்டவணை
அரையாண்டு விடுமுறை மற்றும் நீண்ட பொங்கல் விடுமுறை இடைவேளை உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்திருக்கும். அந்த உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இது. பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்குமான நேர ஒதுக்கீடு செய்து படிப்பது, எழுதிப் பார்ப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற கை கைகொடுக்கும்.
அதற்கான திட்டமிடலுக்கு சரியான புரிதல் அவசியம். முதலில் எல்லா நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மன இறுக்கத்தை ஏற்படுத்தாதீர்கள். படிப்புக்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே போதிய இடைவேளை மற்றும் மன இறுக்கம் போக்கும் பொழுதுபோக்கு அம்சத்துடன்கூடிய தேர்வு அட்டவணையை தயார் செய்யுங்கள்.
அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி திருப்புதல் செய்யுங்கள். இன்று முதல் தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.
தேர்வுக்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிடுங்கள். இறுதி வாரத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மற்ற வாரங்களுக்குள் படித்து முடிக்கும் வகையில் திட்டமிடுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும். தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிடுங்கள்.
படிப்பின்போது...
அட்டவணையின்படி படித்து முடிப்பதை வழக்கமாக்குங்கள். உங்கள் அட்டவணையை பெற்றோரிடம் காண்பித்து அவர்களின் உதவியுடன் தினசரி பயிற்சிகளில் கேள்வி கேட்பது அல்லது எழுதிக்காட்டுவது என பயிற்சி மேற்கொள்ளலாம்.
சகதோழிகள், மாணவர்களை சேர்த்துக் கொண்டும் குழுவாக படித்து பயிற்சி பெறுவது நல்ல பலன் தரும். பாடங்களை மற்றவர்களிடம் ஒப்புவிப்பது தவறுகளை தவிர்க்கவும், நினைவில் நிறுத்தவும் சிறந்த வாய்ப்பாக அமையும். எழுதிப்பார்க்க அதிக நேரம் கிடைக்காவிட்டால் இப்படிச் செய்வது சிறந்தது.
பள்ளியிலும், டியூசன்களிலும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை மகிழ்ச்சியுடன், முக்கியத்துவம் கொடுத்து எதிர்கொள்ளுங்கள். வீட்டிலும் நீங்கள் படித்த பாடப்பகுதிகளில் சுய தேர்வு எழுதி பரிசோதனை செய்யுங்கள்.
புதிய பாடங்கள் மற்றும் கடினமான பாடங்களை படிக்க அதிகாலை நேரத்தை ஒதுக்குங்கள். போதிய ஓய்வுக்குப் பிறகு மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் காலைப்பொழுதில் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் பதிந்துவிடும்.
படிக்கும் இடத்தில் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியான இடத்தை படிக்க தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சில நிமிடங்களை இடைவேளைவிடுங்கள். 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்கி நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, நகைச்சுவை துணுக்குகளை ரசிப்பது என மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயற்கை காட்சிகளைப் பார்த்தும், கண்களை மூடி தியானித்தும் கண்களுக்கு பயிற்சியளித்துக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்கு மற்றும் இடைவேளை நேரத்தில் படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டாம்.
தினசரி முடித்த பாடங்களை அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.
இறுதியாக ஒதுக்கி வைத்த வாரத்தில் முந்தைய தேர்வு வினாத் தாள்களுக்கு விடையளிக்கலாம்.

சராசரி மாணவர்கள்
சராசரியாக படிக்கும் மாணவர்கள், பாடங்கள் நிறைய சேர்ந்துவிட்டதை எண்ணி பதற்றப்பட வேண்டாம். அப்படி படபடப்புடன் படிப்பது ஏற்கனவே படித்த பாடங்களைக்கூட மறக்க வைத்துவிடும். அதுபோன்றவர்கள் முக்கியமான பாடங்களை மட்டும் படிக்க முயற்சியுங்கள். இதுவரை படித்த பாடங்களை மீண்டும் நன்கு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
ஆசிரியர், பெற்றோர் உதவியை நாடுங்கள். ஒவ்வொரு பாடத்திலும் எளிதாக மதிப்பெண் பெறும் முறைகளை ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்.
தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று விடுமுறை நாட்களையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள இடைவேளை நாட்களில் படித்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தேர்வு பயம் தொற்றுவதை தவிர்க்க முடியாது. மனச்சோர்வும் மிகுந்துவிடும்.
பாடங்களை படிப்பதுடன் நில்லாமல் எழுதிப் பார்க்கவும் நேரம் ஒதுக்குங்கள். படங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள், கிராப் வரைபடங்கள், மேப், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்றவை எளிதாக மதிப்பெண்கள் பெற உதவும் என்பதால் அவற்றை சரியாக பயிற்சி செய்வது அவசியம்.
உடல் நலன்
தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதை எதிர்கொள்ள உடல் ஆரோக்கியமும் முக்கியம். தொடர்ந்து படிப்பது மற்றும் பயத்துடன் படிப்பது போன்றவற்றால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், ஆற்றல் இழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நிறைய நேரம் படித்தும் மனதில் எதுவும் நிற்காவிட்டால் சிந்தனை சிதறல் இருப்பதாக அறியலாம். மனதை பக்குப்படுத்தும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து மனதை ஒருமுகப்படுத்திவிட்டு படிக்க ஆரம்பித்தால் இந்த பிரச்சினைகளைப் போக்கலாம்.
மூச்சுப்பயிற்சியானது மூளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். இது மனச்சோர்வின்றி படிக்க துணை செய்யும்.
நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே படிப்பதும் சிந்தனையை மழுங்கடிக்கும். காரம், புளிப்பு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்கும்.
காலை உணவை தவிர்க்கக்கூடாது. பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு தண்ணீர் பருகுங்கள்.
நீண்ட நேரம் படிப்பதால் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்விழித்துப் படித்தால் கண்கள் சிவந்துவிடுவது, கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளலாம். எனவே குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படியுங்கள்.
செய்யக்கூடாதவை...
உணவுப் பழக்கத்தில் செய்யக்கூடாதவற்றை ஏற்கனவே தெரிந்து கொண்டோம்.
தேர்வு நேரத்தில் வேறு சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். காயம் மற்றும் விபத்து நேரும் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. உதாரணமாக பைக்குகளை ஸ்டைலாக ஓட்டுவது, கிணற்றில் டைவ் அடித்து குளிப்பது, பஸ்கள், ரெயில்களில் தொங்கியபடி பயணிப்பது போன்றவை கூடாது. கடினமான வேலைகள், கூர்மையான ஆயுதங்கள், நெருப்பை பயன்படுத்தி செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் படிப்பை பாதிக்கும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் தேர்வை எதிர்கொள்ள விடாமலும் செய்துவிடும் என்பதால் கவனம் தேவை.
அதிகமாக டி.வி. மற்றும் செல்போனை பார்ப்பதை தவிர்த்துவிட்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
நம் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் போதும், வெளியில் செல்லும் போதும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை சொல்லித்தர வேண்டும். அந்த பாதுகாப்பு விதிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்
* முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும்.
* குழந்தைகள் அதிக அளவில் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர். என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
* எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.
* நம் வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.
* கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா - அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால், அவர்களிடம் உதவி கேட்கச் சொல்லலாம்.
* குழந்தைகள் அதிக அளவில் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர். என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
* எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.
* நம் வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.
* கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா - அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால், அவர்களிடம் உதவி கேட்கச் சொல்லலாம்.
குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
குழந்தைகள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். களைப்பாகும் வரை விளையாடுவார்கள், கலகலவெனப் பேசுவார்கள், திடீரென அமைதியாகிவிடுவார்கள், சட்டென பூரிப்படைவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட குணம் என்று ஒன்றிருக்கும்.
குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே!
சில குழந்தைகள் எல்லா இடங்களிலும் தாங்கள்தான் முதலாவதாக, முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னுடைய இலக்கு இதுதான் என முடிவு செய்து, அதில் ஜெயிப்பதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து செய்துகொண்டிருப்பார்கள். அதிகம் யோசிப்பார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் வெளியே பேசாத, யாரிடமும் பகிராதவர்களாக இருப்பார்கள். அதுவே, அவர்களின் பெற்றோர் வருந்துவதற்கான காரணமாக இருக்கும்.
இவர்களைப் பற்றி வருந்த எதுவுமில்லை. தங்களின் இலக்கைத் துரத்தும் வேகத்தில் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் துண்டித்திருப்பார்கள். ஆனால், நாம் வலியச்சென்று பேசும்போது நிச்சயம் காது கொடுப்பார்கள். அப்படிப் பேசும்போது ‘முதல் மதிப்பெண், முதல் பரிசு இதெல்லாம் மட்டும் வெற்றியல்ல. மற்றவர்களுக்கு உதவுவதும், விட்டுக்கொடுப்பதும் முக்கியம். தோல்வி தரும் அனுபவங்களும் பாடங்களே’ என்று வலியுறுத்தலாம்.
சில குழந்தைகள் நேர்த்தியை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். புத்தகம், பொம்மை என தனது பொருட்களை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது தொடங்கி, தனது தட்டு தூய்மையாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்பதுவரை, அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பார்கள். ‘நல்ல விஷயம்தான். ஆனா, அதிலேயே அதிக நேரத்தை விரையமாக்குறா’ என்பது பெற்றோரின் புகாராக இருக்கும்.
இவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க்கை கற்றுக்கொடுக்க வேண்டும். ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரத்தில் தனது புத்தக அலமாரியை அடுக்கிக்கொண்டிருக்க்கூடாது என சொல்லுங்கள். ‘அதிகம் பயன்படுத்துகிற பொருட்களை முன்னாடியும் பயன்படுத்தாத பொருட்களை பின்னாடியும் வைத்தால், எடுக்கச் சுலபமாக இருக்கும், அடிக்கடி கலைந்துபோகின்ற பிரச்னையும் இருக்காது’ என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களைப் பழக்கலாம். இதன் மூலம் தங்களின் நேரத்தைச் சேமிக்க வைக்கலாம்.
சில குழந்தைகள் எப்போதும் நண்பர்களுடனே இருப்பார்கள். அவர்கள் இருந்தால்தான் இவர்கள் முகத்தில் சந்தோஷத்தையே பார்க்க முடியும். பெரும்பாலும் இவ்வகை குழந்தைகள் படிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
திருத்துவதாக நினைத்து, இவர்களைப் பெற்றோர் அவர்களின் குழுவில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும். ட்யூஷன், குரூப் ஸ்டடி, குழுவாக சேர்ந்து தோட்டம் அமைப்பது போன்ற குழு செயல்பாடுகளின் மூலம் அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்.
குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே!
சில குழந்தைகள் எல்லா இடங்களிலும் தாங்கள்தான் முதலாவதாக, முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். தன்னுடைய இலக்கு இதுதான் என முடிவு செய்து, அதில் ஜெயிப்பதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து செய்துகொண்டிருப்பார்கள். அதிகம் யோசிப்பார்கள். ஆனால், இதைப் பற்றியெல்லாம் வெளியே பேசாத, யாரிடமும் பகிராதவர்களாக இருப்பார்கள். அதுவே, அவர்களின் பெற்றோர் வருந்துவதற்கான காரணமாக இருக்கும்.
இவர்களைப் பற்றி வருந்த எதுவுமில்லை. தங்களின் இலக்கைத் துரத்தும் வேகத்தில் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களைத் துண்டித்திருப்பார்கள். ஆனால், நாம் வலியச்சென்று பேசும்போது நிச்சயம் காது கொடுப்பார்கள். அப்படிப் பேசும்போது ‘முதல் மதிப்பெண், முதல் பரிசு இதெல்லாம் மட்டும் வெற்றியல்ல. மற்றவர்களுக்கு உதவுவதும், விட்டுக்கொடுப்பதும் முக்கியம். தோல்வி தரும் அனுபவங்களும் பாடங்களே’ என்று வலியுறுத்தலாம்.
சில குழந்தைகள் நேர்த்தியை தீவிரமாக கடைப்பிடிப்பார்கள். புத்தகம், பொம்மை என தனது பொருட்களை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது தொடங்கி, தனது தட்டு தூய்மையாகக் கழுவப்பட்டிருக்கிறதா என்பதுவரை, அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் 100 சதவிகிதம் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பார்கள். ‘நல்ல விஷயம்தான். ஆனா, அதிலேயே அதிக நேரத்தை விரையமாக்குறா’ என்பது பெற்றோரின் புகாராக இருக்கும்.
இவர்களுக்கு ஸ்மார்ட் வொர்க்கை கற்றுக்கொடுக்க வேண்டும். ஹோம்வொர்க் செய்ய வேண்டிய நேரத்தில் தனது புத்தக அலமாரியை அடுக்கிக்கொண்டிருக்க்கூடாது என சொல்லுங்கள். ‘அதிகம் பயன்படுத்துகிற பொருட்களை முன்னாடியும் பயன்படுத்தாத பொருட்களை பின்னாடியும் வைத்தால், எடுக்கச் சுலபமாக இருக்கும், அடிக்கடி கலைந்துபோகின்ற பிரச்னையும் இருக்காது’ என ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களைப் பழக்கலாம். இதன் மூலம் தங்களின் நேரத்தைச் சேமிக்க வைக்கலாம்.
சில குழந்தைகள் எப்போதும் நண்பர்களுடனே இருப்பார்கள். அவர்கள் இருந்தால்தான் இவர்கள் முகத்தில் சந்தோஷத்தையே பார்க்க முடியும். பெரும்பாலும் இவ்வகை குழந்தைகள் படிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
திருத்துவதாக நினைத்து, இவர்களைப் பெற்றோர் அவர்களின் குழுவில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கு மன உளைச்சலைத் தரும். ட்யூஷன், குரூப் ஸ்டடி, குழுவாக சேர்ந்து தோட்டம் அமைப்பது போன்ற குழு செயல்பாடுகளின் மூலம் அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பெரியவர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதை குழந்தைகள் கற்றுக்கொள்ளும்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை செய்யக்கூடியவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள்தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும். படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.
அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உரிய நேரத்தில் தூங்கச்செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்திக்கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும். எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அவனை வெற்றியாளனாக உயர்த்தும்.
சின்னச்சின்ன நல்ல பழக்கங்கள்தான் உயர்ந்த இடத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கும். படிப்பு மற்றும் பணம் மட்டும் ஒருவன் மீது மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக நல்ல பண்புகள் தான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத்தரக்கூடியது. அதிகாலையில் எழுவது, தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது, சுத்தம் பேணுவது, பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்பது போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு குழந்தையும் நல்லவர்களாக வளர காரணமாக இருந்திடும்.
அதிகாலையில் எழுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உரிய நேரத்தில் தூங்கச்செல்வதும் முக்கியமானது. அதேபோல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கொடுக்க வேண்டும். உணவை மீதமாக்காமல் தேவையான அளவுக்கு வாங்கி சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பழக்க வேண்டும். அதை அவர்கள் எவ்வளவு சரியாக செய்து முடிக்கிறார்கள் என்பதையும் உடன் இருந்தே கவனிக்க வேண்டும். தவறு செய்கிறபோது அதை திருத்திக்கொள்ளவும், தோல்வியில் இருந்து மீண்டு வரவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரச்செய்ய வேண்டும். உடல் தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து ஆகும். அதற்கு சேதாரம் ஏற்பட்டால் வாழ்வு சுருங்கி விடும். எனவே உடற்பயிற்சிக்கும், விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதை குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
எனவே பெரியவர்கள் முடிவுகளால் மட்டுமே வளர்கிற குழந்தைகள் சுயமாக சிந்திப்பது இல்லை. அது மிகவும் ஆபத்தானது. எனவே சுயமாக சிந்தித்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எப்போதும் திறந்து இருக்க வேண்டும். அதுதான் அவனை வெற்றியாளனாக உயர்த்தும்.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
இன்று பல வீடுகளில் குழந்தைகளை சமாதானப்படுத்தும் சாதனம் செல்போன்தான். அழும் குழந்தை கூட செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பிக்க, நன்மை, தீமை அறியாத பருவத்தில் இருக்கும் அவர்களிடம் செல்போனை கொடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
செல்போன் போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் அதிக நேரத்தைச் செலவிடுவது குழந்தைகளின் உடல்நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதே குழந்தை நல மருத்துவர்களின் கருத்து.
தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்று சரிவரப் பரிசோதித்த பெற்றோர்கள் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் எப்போதெல்லாம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கு தக்க கட்டுப்பாடுகளை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு கண்டிப்பாக அதை அனுமதிக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
நவீன தொழில்நுட்பக் கருவிகளுடன் குழந்தைகள் செலவிடும் நேரம், அவர்களது தூக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த முடிவுகள் குறித்த விவாதம் குழந்தைகள் நல மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் இடையே எழுந்திருக்கிறது.
இந்த ஆராய்ச்சிக்காக டி.வி., செல்போன், கணினி போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளில் குழந்தைகள் செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 14 வயதுடைய ஆண், பெண் குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்தின் ராயல் குழந்தைகள் நல கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், அடிக்கடி பல தளங்களில் கூறப்படுவதைப் போன்று தொழில்நுட்பக் கருவிகளின் திரைகளில் நேரத்தைச் செலவிடுவது உடல்நலனுக்கு மிக மோசமான விளைவை உண்டாக்கும் என்று கூற முடியாது.
ஆனால் அதேவேளையில், வரம்பை மீறி அதிகளவிலான நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுவதற்கும், உடல் பருமன், மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட முடிவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராயல் கல்லூரி ஆய்வாளர்கள், உடல் பருமன், மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கொண்டுள்ளவர்கள் அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிடுகிறார்களா அல்லது அதிக நேரத்தை மின்னணு திரைகளில் செலவிட்டதால் அவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை எனத் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல்நலனுக்கும் அவர்கள் மின்னணு திரைகளில் நேரத்தைச் செலவிடுவதற்கும் தொடர்புள்ளதாகக் கூறும் வகையிலான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் தங்களது பரிந்துரையில் அதற்கான வரம்புகள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு குழந்தைகளுக்குப் பயன்படும் செல்போன்கள், கணினிகள் போன்றவை குறித்து பெற்றோர்களுக்கு கவலை உண்டாக்கும் வகையிலான தவறான செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன என்று ராயல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் மாக்ஸ் டேவ் கூறுகிறார்.
அதேநேரம் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் அவசியம், குழந்தைகள் செல்போன்களை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்று பெற்றோர்கள் கண்காணித்து வருவது முக்கியம் என்பதே ஒட்டுமொத்த ஆய்வாளர்களின் கருத்து.
குழந்தையின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது தாயின் கடமை. குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.
0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.
6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.
8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்வோம்.
0 முதல் 4 மாதங்கள்: பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4 முதல் 6 மாதங்கள்: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதனுடன் தாய்ப்பால் கொடுத்து வருவதும் அவசியம்.
6 மாதங்கள் 8 வரை: இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அலர்ஜி வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர்த்து மற்றவற்றை கொடுக்கலாம்.
8 முதல் 10 மாதங்கள்: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10 முதல் 12 மாதங்கள்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.
பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
தலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவனாக இருக்கிறோம் என்ற உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்க கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும். எது சிறந்த கல்வி, எது உண்மையான அழகு என்பதை நாலடியார் அழகாகச், சிறப்பாகச் சொல்கிறது. நல்ல ஒழுக்கங்களை, கற்றுத் தரும் கல்வி அறிவே இன்று மிக முக்கியத் தேவை. முன்பு மாணவர்கள் குருகுலத்தில் தங்கி குருவிடம் நல்ல பண்புகள், ஒழுக்கங்கள் என்று கற்றுக்கொண்டார்கள். படிப்பு முடிந்து அவர்கள் வரும்போது வாழ்வை எதிர்கொள்ளும், தீரம், தைரியம், நம்பிக்கை மனம் முழுதும் நிரம்பி இருக்கும்.
ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களை, அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதற்கு சாட்சியாக எத்தனை விதமான செய்திகள். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை. பெற்றோர் திட்டியதால் மாணவர் விஷம் குடித்து சாவு, தந்தையைக் கொன்ற மகன், ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன் என்ற செய்திகளை படிக்கும்போது மனம் பதறுகிறது.
படிக்கும் காலத்தில் பாதை மாறுவது, பெரியவர்கள், ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடப்பது, கண்டித்தால் உடனே விபரீத முடிவு எடுப்பது என்று இன்றைய இளைய சமுதாயம் பயமுறுத்துகிறது. தான் தவறு செய்தாலும் திட்டுவது, மனம் நோகப் பேசக் கூடாது, கண்டிக்கக் கூடாது என்றால் அவர்களை எப்படிதான் திருத்துவது, ஆசிரியர் எப்படி திட்டுவது.
எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் குழந்தைகள் இவர்கள். இவர்கள் நன்றாகப் படித்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறைதான் ஆசிரியரின் கண்டிப்பில் இருக்கும். இதேபோல்தான் பெற்றோர்களும். நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தவர்கள். நமக்காக பாடுபட்டு, தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு, ஒரு தவறை சுட்டிக் காட்டித் திட்டவோ, கண்டிக்கவோ உரிமை இல்லையா?
கல்வியும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கடினமாக இருக்கிறது. தேர்ச்சி என்ற ஒரு இலக்கை மட்டுமே வைத்து கல்வி நிறுவனங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சிறிது கூட ஓய்வு என்றில்லாமல் எப்போதும் எதோ ஒரு தேர்வு வந்து கொண்டிருக்கிறது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதாவது வகுப்புகள் வைத்து மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தடை ஏற்படுத்தி விடுகின்றனர்.
சிறிது கவனம் பிசகினாலும் தேர்ச்சி அடைய முடியாது என்று பயம். தொழில்நுட்ப உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாழ்வில் ஸ்திரமாக்கி நிற்க வேண்டும் என்ற பயம் மாணவர்கள் மனதில். போட்டிகளைச் சமாளித்து முதலிடத்தை தக்க வைக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்ற பதற்றம் கல்வி வியாபார நிறுவனங்களிடம்.
மனம் ஒரு மாற்றத்திற்கு ஏங்குகிறது. அப்போது ஒரு சினிமா, பாடல், மனசை குறுகுறுக்க வைக்கும் விஷயத்தில் கவனம் போய் விடுகிறது. பல மாணவிகள் படிக்கும் காலத்தில் பாதை மாறிப் போவது இதனால்தான். இந்த நேரத்தில் ஒரு சின்ன வழிகாட்டலை ஆசிரியரும், பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டினால் பெற்றோர்களும் உடனே அது குறித்து புகார் தருவது, அரசியல் பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியரை தரக் குறைவாகப் பேசுவது என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த ஆசிரியரும் ஆசைப்பட்டு மாணவர்களை திட்டுவதில்லை. அவர்கள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டியது ஒரு ஆசிரியராக அவர்களது கடமை. ஆசிரியர் கண்டிப்பது நல்ல பண்புகளுடன் நடக்கத்தான் என்ற உணர்வும், ஆசிரியையும் பள்ளியில் அவளுக்கு ஒரு தாய் என்ற உணர்வும் மாணவர்களுக்கு வர வேண்டும்.
“கல்வி கரையில், கற்பவை நாள் சில” என்கிறது அதே நாலடியார். “நல்ல ஒழுக்கமுள்ள பெற்றோர்களும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இன்று நம் தேவை” என்கிறார் மகாத்மா. கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும்.
மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும்.
ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும். கல்வியின் முழு வடிவம் என்ன என்று ஆசிரியர்கள் தெளிவாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளம் அவர்கள். சம்பளம் வாங்குவதும், தேர்ச்சி சதவீதம் காட்டுவதும் மட்டுமே வேலை அல்ல. ஒரு சமூகமே அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்படும். அதை உணர்ந்து கனிவோடும், அன்போடும், நல்ல எண்ணங்களுடன் மாணவ சமுதாயத்தை அணுக வேண்டும்.
பாடத்துடன் நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்பிக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்.
ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களை, அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதற்கு சாட்சியாக எத்தனை விதமான செய்திகள். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை. பெற்றோர் திட்டியதால் மாணவர் விஷம் குடித்து சாவு, தந்தையைக் கொன்ற மகன், ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன் என்ற செய்திகளை படிக்கும்போது மனம் பதறுகிறது.
படிக்கும் காலத்தில் பாதை மாறுவது, பெரியவர்கள், ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடப்பது, கண்டித்தால் உடனே விபரீத முடிவு எடுப்பது என்று இன்றைய இளைய சமுதாயம் பயமுறுத்துகிறது. தான் தவறு செய்தாலும் திட்டுவது, மனம் நோகப் பேசக் கூடாது, கண்டிக்கக் கூடாது என்றால் அவர்களை எப்படிதான் திருத்துவது, ஆசிரியர் எப்படி திட்டுவது.
எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் குழந்தைகள் இவர்கள். இவர்கள் நன்றாகப் படித்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறைதான் ஆசிரியரின் கண்டிப்பில் இருக்கும். இதேபோல்தான் பெற்றோர்களும். நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தவர்கள். நமக்காக பாடுபட்டு, தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு, ஒரு தவறை சுட்டிக் காட்டித் திட்டவோ, கண்டிக்கவோ உரிமை இல்லையா?
கல்வியும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கடினமாக இருக்கிறது. தேர்ச்சி என்ற ஒரு இலக்கை மட்டுமே வைத்து கல்வி நிறுவனங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சிறிது கூட ஓய்வு என்றில்லாமல் எப்போதும் எதோ ஒரு தேர்வு வந்து கொண்டிருக்கிறது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதாவது வகுப்புகள் வைத்து மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தடை ஏற்படுத்தி விடுகின்றனர்.
சிறிது கவனம் பிசகினாலும் தேர்ச்சி அடைய முடியாது என்று பயம். தொழில்நுட்ப உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாழ்வில் ஸ்திரமாக்கி நிற்க வேண்டும் என்ற பயம் மாணவர்கள் மனதில். போட்டிகளைச் சமாளித்து முதலிடத்தை தக்க வைக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்ற பதற்றம் கல்வி வியாபார நிறுவனங்களிடம்.
மனம் ஒரு மாற்றத்திற்கு ஏங்குகிறது. அப்போது ஒரு சினிமா, பாடல், மனசை குறுகுறுக்க வைக்கும் விஷயத்தில் கவனம் போய் விடுகிறது. பல மாணவிகள் படிக்கும் காலத்தில் பாதை மாறிப் போவது இதனால்தான். இந்த நேரத்தில் ஒரு சின்ன வழிகாட்டலை ஆசிரியரும், பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டினால் பெற்றோர்களும் உடனே அது குறித்து புகார் தருவது, அரசியல் பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியரை தரக் குறைவாகப் பேசுவது என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
எந்த ஆசிரியரும் ஆசைப்பட்டு மாணவர்களை திட்டுவதில்லை. அவர்கள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டியது ஒரு ஆசிரியராக அவர்களது கடமை. ஆசிரியர் கண்டிப்பது நல்ல பண்புகளுடன் நடக்கத்தான் என்ற உணர்வும், ஆசிரியையும் பள்ளியில் அவளுக்கு ஒரு தாய் என்ற உணர்வும் மாணவர்களுக்கு வர வேண்டும்.
“கல்வி கரையில், கற்பவை நாள் சில” என்கிறது அதே நாலடியார். “நல்ல ஒழுக்கமுள்ள பெற்றோர்களும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இன்று நம் தேவை” என்கிறார் மகாத்மா. கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும்.
மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும்.
ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும். கல்வியின் முழு வடிவம் என்ன என்று ஆசிரியர்கள் தெளிவாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளம் அவர்கள். சம்பளம் வாங்குவதும், தேர்ச்சி சதவீதம் காட்டுவதும் மட்டுமே வேலை அல்ல. ஒரு சமூகமே அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்படும். அதை உணர்ந்து கனிவோடும், அன்போடும், நல்ல எண்ணங்களுடன் மாணவ சமுதாயத்தை அணுக வேண்டும்.
பாடத்துடன் நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்பிக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்.






