என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    டயாபர் தேர்வு என்பது சின்ன விஷயமாக தோன்றினாலும், உங்கள் குழந்தையை மிக வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் டயாபரையே சார்ந்திருக்கிறது.














    குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன்.

    தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தை ஈரத்திலேயே ஊறி அலர ஆரம்பித்த பிறகுதான் அதை மாற்றுகிறார்கள். இதனால், எப்போதும் குழந்தை ஈரப்பதத்தோடு இருப்பதால் டயாபரில் கலந்துள்ள ரசாயனம் குழந்தையின் தோலில் பட்டு, புண்களை ஏற்படுத்திவிடுகிறது.

    அம்மாவிற்கு சௌகரியம்தான் இருந்தாலும், குழந்தையின் ஆரோக்கியம் முக்கிமாயிற்றே. தனித்துவமான உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள உங்களுக்காக டயாபர் தேர்வு செய்வதில் சில டிப்ஸ்கள் இதோ...

    உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கேற்ற டயாபரை தேர்ந்தெடுக்கும்போது, அது சரியாகப் பொருந்துவதால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தாது. இதனால் உங்கள் குழந்தை சௌகரியமாக உணரும்.

    அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான டயாபரை தேர்ந்தெடுக்கும்போது நனையாமல் இருப்பதும், ஈரப்பதமில்லாததாகவும் இருப்பது முக்கியம்.

    குழந்தை கால்களை அசைக்கும்போது இடுப்பு மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வு ஏற்படும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், சொரசொரப்பான டயாபர்கள் உரசி, அந்த இடங்களில் சிவந்து, தடித்துக் கொண்டு, சிலநேரங்களில் தோலே உரிந்தும் போய்விடும்.

    இதனால் எரிச்சல், வலி உண்டாகும். அதிலும் உங்கள் குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவானது என்றால் நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு உடலோடு பொருந்தக்கூடிய, மெல்லிய பருத்தித் துணியினாலான டயாபர்கள்தான் சிறந்தவை. அவை உராய்வை ஏற்படுத்தாது.

    அதிலும், வெயில் காலங்களில் குழந்தையின் தொடை இடுக்குகளில் வியர்வை அதிகம் சுரந்து உராய்வின் போது கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த பருவத்திற்குமே உராய்வை ஏற்படுத்தாத மென்மையான பருத்தித் துணி சிறந்ததாக இருக்கும்.

    பயணங்களிலும், டே கேரில் விடும்போதும் டிஸ்போசபல் டயாபரை உபயோகிப்பது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது மட்டும் உபயோகிக்கலாம். இருந்தாலும் குழந்தையின் உடல்நலம் கருதி, பெற்றோர்கள் கூடியவரை காட்டன் துணியால் ஆன டயாபரையேஉபயோகிப்பது நல்லது.

    உங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரக்கூடிய சுத்தமான, ஆரோக்கியமான டயாபர்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தரக்கூடிய அனைத்துமே மிகச்சரியானதாக இருக்க வேண்டும்.
    குழந்தை பிறந்த பிறகு, 5 வயது வரையிலும் குடல் தொடர்பான குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற ஷிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் ஷிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர்.

    நோய் அறிகுறிகள்

    இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்சனைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறிகளும் இந்நோயால் உண்டாகிறது.

    இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும்பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சனை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஷிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

    நோய்த்தடுப்பு முறைகள்

    இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

    கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-ஐ மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்னை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்சனை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

    வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    வெளியூர் பயணங்களின்போது, நன்கு வேகவைத்த உணவு மற்றும் சுத்தமான தண்ணீர், பழங்கள்போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும்.
    வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. முதல் குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்சும் பெற்றோர், அடுத்த குழந்தை பிறந்ததும் கொஞ்சல், முக்கியத்துவத்தை இரண்டாவது குழந்தைக்குக் கொடுக்கின்றனர். தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டதை உணரும் குழந்தையின் மனதில் ஏக்கம், கோபம் உள்ளிட்ட குணங்கள் அதிகரிக்கின்றன.

    பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது தவறு… தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும். உதாரணமாக, சண்டையின் போது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் குழந்தைக்கு, மூன்று நாள்கள் வீட்டில் ரிமோட்டின் மீதான உரிமையைத் தடை செய்யலாம்.

    சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம்.
    ஒவ்வொரு குழந்தையின் தேவையும் வித்தியாசப்படும்.

    கைக்குழந்தைக்கு, பள்ளி செல்லும் குழந்தையைக் காட்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைக்கு அதிகளவு பாடத்தில் உதவி செய்ய வேண்டியிருக்கலாம். அதனால், எல்லா நேரங்களிலும் இரு குழந்தைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பெற்றோர் இதை எண்ணிக் குழப்பமோ, குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம்.

    இரண்டு குழந்தைகளையும் நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. முதல் குழந்தையிடம், ‘உன் தங்கையைப் பார்த்துக் கத்துக்கோ’ என்பது, ‘உன் வயசில் அக்கா அழகா ரைம்ஸ் சொல்லுவா’ என்பது… இதுபோன்ற உரையாடல்களைப் பெற்றோரும் மற்றவர்களும் அறவே கைவிட வேண்டும். ஏனெனில், இரண்டு குழந்தைகளிடம் இடைவெளியும் வெறுப்பும் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.

    குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது, தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.



    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு எப்படிப் பேசுவது, பிரச்னையை எவ்வாறு அணுகி சமாளிப்பது, விட்டுக்கொடுப்பது போன்ற குணங்களும், திறன்களும் வளரும். பெற்றோருக்குக் குழந்தைகளின் பொழுதுகளில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தள்ளியிருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

    இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.

    ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்னையில் குறுக்கிடும்போது, யார் பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அவா்களுக்கு என்ன வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும் நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

    கோபத்தைக் கையாளும் முறையைக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் தான் கற்றுக் கொள்கின்றனா். எனவே, கோபமாக இருக்கும்போது பெற்றோர், தவறான வார்த்தைகளைப் பிரயோகிப்பது, கதவை அடித்துச் சாத்துவது, பொருளை வீசுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற விஷயத்தில் ஈடுபடாமல், தெளிவாகப் பேசித் தீா்த்துக் கொண்டால் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள்.

    தினமும் குடும்பத்தில் அனைவரும் சோ்ந்து சாப்பிடுவது, சேர்ந்து டி.வி பார்ப்பது, சேர்ந்து அரட்டையடிப்பது போன்றவை குடும்பத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும்.

    வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்.

    உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!
    முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் 5 லட்சம் குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது.

    பிறருடன் தொடர்புகொள்ளும் திறன் குறைவாக இருத்தல், குறுகிய கவனத்திறன் போன்ற பாதிப்புகள் கொண்டது `ஆட்டிசம்’ எனப்படுகிறது. இந்த ஆட்டிசம்தான் குழந்தைகளை அச்சுறுத்துகிறது.

    முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டுகளுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

    முதல் குழந்தை பிறந்ததற்குப் பின் எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக அடுத்த குழந்தை பிறக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் அபாயம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். பெற்றோருக்கு என்ன வயதாக இருந்தாலும் அது பிரச்சினையில்லை என்றும் கூறுகிறார்கள்.

    ஆட்டிசத்தை ஏற்படுத்தும் மற்ற காரணங்களையும் ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பு இடைவெளிக் குறைவால் ஏற்படும் பாதிப்பை அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.

    “நாங்கள் பல்வேறு கோணங்களில் அலசினாலும், இந்த உண்மையைப் புறக்கணிக்க இயலவில்லை” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நியார்க் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான பீட்டர் பியர்மான் கூறுகிறார். அதேநேரத்தில், இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

    முறையாகத் திட்டமிடாமையால் அமெரிக்காவில் குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது, 1995-ம் ஆண்டில் மொத்தக் குழந்தை பிறப்பில் 11 சதவீதமாக இருந்தது என்றால், 2002-ல் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யவேண்டியவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய பெற்றோர் பலரின் பிரச்சினையே, `எத்தனை தடவை சொன்னாலும் பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டவே மாட்டேங்கிறாங்க’ என்பதாகத்தான் இருக்கிறது. பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீட்டில் இந்த ஆதங்கக்குரல் சற்று அதிகமாகவே கேட்கிறது.

    இத்தனைக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் கட்டாயத்தில் உள்ளவர்கள் தான். அவர்களிடம் நல்ல தன்மையாக சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள். இதை பல பெற்றோர் உணர்வதில்லை. கண்டித்தால் மட்டுமே பிள்ளைகள் சரியான இலக்கை அடைவார்கள் என்பது அவர்கள் எண்ணம். ஒரு கட்டத்தில் பிள்ளைகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு வலுக்கும்போது, தங்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் ஆசியர்கள் வசம் விஷயத்தை கொண்டு போய் விடுகிறார்கள். இது பிள்ளைகளின் தன்மானத்தை உசுப்பி விட்டு விடுகிறது. இதனால் பெற்றோரை எப்படி பழி வாங்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

    தங்கள் விருப்பத்தை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகளையும் அந்த போராட்ட களத்தில் பல பெற்றோர் இறக்கி விட்டிருப்பார்கள். இந்த களத்தில் ஓடத்தொடங்கியிருக்கும் தங்கள் வீட்டுக்குழந்தைகள் சரியான இலக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்களா என்பதை பார்க்கும்விதமாக அவ்வப்போது பெற்றோர் மூக்கை நீட்டும்போதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

    இந்த மாதிரியான ஏமாற்றம் பெற்றோருக்கு ஏற்படாதிருக்க அவர்கள் செய்யவேண்டியது என்ன?

    பிள்ளைகளை தட்டிக்கொடுங்கள். அதுவரை சரியாகப் படித்தவர்களை `இந்த வகுப்பிலும் நீ உன்திறமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தட்டிக் கொடுங்கள். ஒருபோதும் `இந்த வருஷம் மட்டும் கோட்டை விட்டுட்டா படிப்பு சாம்ராஜ்யமே சரிந்து விடும்’ என்கிற மாதிரி பயமுறுத்தாதீர்கள். ரொம்பவும் கடினப்படுத்தும் பாடத்துக்கு அவசியப்பட்டால் திறமையான ஆசிரியர் வைத்து சிறப்புப்பயிற்சி கொடுங்கள்.

    பிள்ளைகளுக்கு படிப்பு விஷயத்தில் எல்லாமே செய்து விட்டோம். இனி படிப்பது அவர்கள் கடமை என்று எண்ணி நீங்கள் சீரியல் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. முக்கிய பரீட்சை நாட்களிலாவது உங்கள் நேரத்தை பிள்ளைகளுடன் செலவழிக்க வேண்டும். பாடத்தில் பிள்ளைகள் கேட்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் அளவுக்கு நீங்கள் கற்ற கல்வி உதவும் என்றால், அதையும் தயங்காமல் செய்யுங்கள்.

    நம் கல்வி முயற்சியில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் என்று பிள்ளைகள்உணர்ந்தாலே அவர்கள் படிப்பில் இன்னும் அதிக அக்கறையாகி விடுவார்கள். `நம்மை நேசிக்கும் பெற்றோருக்காவது நாம் சிறப்பான வெற்றியை பெற்றாக வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களிடம் நிலைவரப் பெற்று எப்படியாவது சாதிக்கத் தூண்டும். இந்த நிலை நீடிக்கும்போது ஆண்டுத் தேர்வு அவர்களை கல்வியில் சாதித்தவர்களாகவும் வெளிப்படுத்தும்.

    அன்பான அணுகுமுறைக்கு எப்போதுமே பலன் நிச்சயம்.
    குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
    குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.

    பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச்செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

    குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.

    குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.



    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளைகளைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

    ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

    குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித்தனியாக செய்ய வேண்டும். `உன்னைவிட அவன் ஒசத்தி’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

    குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    பவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த குழந்தைகளின் இளம் சருமத்திற்கு ஏற்றது என்று பல்வேறு விதமான பவுடர்களும், கிரீம்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உள்ளபடியே அவை குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது? அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தொடர்பான கேள்விகளும்.. நிபுணர்களின் பதில்களும்..!

    பிரபலமான நிறுவனத்தின் ‘பேபி சோப்’ பயன்படுத்தியும், குழந்தையின் சருமம் வறண்டு போகிறதே ஏன்?

    பொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது. அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.

    பிறந்த குழந்தையை தினமும் சுடுநீரில் குளிப்பாட்டலாமா?

    குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாகக்கொண்ட குழந்தைகளை இரண்டு, இரண்டரை கிலோ எடை வரும் வரை பெரும்பாலும் குளிப்பாட்டுவதில்லை. உடல்சூட்டை பராமரிக்க அவ்வாறு செய்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குளிப்பாட்டும்போது சளித்தொந்தரவும், காய்ச்சலும் ஏற்படலாம். அதிக சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. இளம் சுடுநீரில்தான் குளிப்பாட்டவேண்டும். பால்குடிக்கும் குழந்தைகளின் கழுத்து இடுக்கில் பால் வடிந்து அழுக்கு படிந்திருக்கும். அதனால் அடிக்கடி கழுத்துப் பகுதியை துடைத்து சுத்தம்செய்யவேண்டும்.

    குழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா?

    ஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.

    நல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

    எப்போதிருந்து குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பூசலாம்?

    இரண்டு வயது வரை அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    குழந்தைகளின் சருமத்தை ஜொலிக்கவைக்க என்ன செய்ய வேண்டும்?

    குழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதற்கான கிரீம்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது அவர்கள் பாரம்பரியம், கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவு போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டது. சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ போன்றவை உதவும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது விஞ்ஞானரீதியாக நிரூபணமாகவில்லை. அதுபோல் கடலை மாவு, சிறுபயறு மாவு போன்றவைகளை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லதல்ல. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு அவை ஏற்றதல்ல.

    குழந்தைகளின் பிஞ்சு முடிகளுக்கு ஷாம்பு தேவையா?

    குழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

    குழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.

    குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக ‘டயாபர்’ பயன்படுத்தலாமா?

    அதிக நேரம் டயாபர் பயன்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும். திட்டுகளும், பருக்களும் தோன்றும். அதற்கான கிரீமை பயன்படுத்தி குணப்படுத்தவேண்டும். உள்ளே காட்டன் துணி வைக்கப்பட்டிருக்கும் டயாபர் கடைகளில் கிடைக்கும். தேவைப்படும்போது மட்டும் அதனை பயன்படுத்துங்கள். அதிக தூர பயணம் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட நேரத்தில் பழையதை மாற்றிவிட்டு புதியதை இணைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்து குழந்தை மலஜலம் கழித்திருந்தால் உடனே டயாபரை அப்புறப்படுத்திவிடுவது அவசியம். பின்பு தண்ணீரால் மென்மையாக தேய்த்துக்கழுவி, ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு துடைத்துவிட்டு புதிய டயாபரை இணைக்கவேண்டும். 
    சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்ந்தால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற மனோபாவம் மாணவர்களிடம் வந்துவிட்டது. இதன்காரணமாக, இந்த ஆண்டு 61 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் போய் சேர்ந்திருக்கிறார்கள்.
    அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை உறுதிசெய்யவேண்டும் என்ற சீரியநோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    என்றாலும், தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் 3,100 பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருக்கிறது. 812 பள்ளிக்கூடங்களில் 15 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. 2014-15-ல் அரசு பள்ளிக்கூடங்களிலுள்ள மாணவர்களின் சேர்க்கை 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 ஆக இருந்தநிலையில், 2018-19-ல் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது.

    தற்போது ஏறத்தாழ 59 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இது ஒரு அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் சேருவதற்குத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்குகாரணம், ‘நீட்’ தேர்வுதான். ‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பு 10-ம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ்-2-வில் அதிக மார்க் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை விட்டுவிட்டு, மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்வார்கள்.

    ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறவேண்டுமென்றால், மாநில கல்வித்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பில் படித்தால் போதாது. சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்ந்தால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற மனோபாவம் மாணவர்களிடம் வந்துவிட்டது. இதன்காரணமாக, இந்த ஆண்டு 61 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் போய் சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல், பல பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 வகுப்பில் பயோலஜி பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. வணிகவியல் பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம், மாணவர்கள் மத்தியில் மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர வேண்டுமென்றால், தனியாக ‘கோச்சிங்’ வகுப்பில் சேர தங்களால் முடியுமா?, அதற்கு நிறைய பணம் செலவாகும்.

    அந்தளவு நமக்கு பணவசதி இல்லை என்ற தயக்கத்தால், வணிகவியல் பிரிவில் படித்து கலைக்கல்லூரியில் சேர்ந்தால்போதும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். இந்தநிலை தொடர்வது நல்லதல்ல. இதற்கு காரணம், அரசு பள்ளிக்கூடங்களில் கல்வித்தகுதி சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

    இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிக்கூடங்களைவிட, தனியார் பள்ளிக்கூடங்களில்தான் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணம் பரவலாக இருப்பதால்தான், அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை வீதமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமென்றால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்ற சீர்த்திருத்தங்களை எல்லாம் செய்வதில் முனைப்பு காட்டுவதுபோல, கல்வித்தரத்தை உயர்த்துவதில் அதிக முனைப்பு காட்டவேண்டும்.
    நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது.
    இன்று இந்திய குடிமைப் பணிகளான ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத முடியும். இருந்தாலும் வங்கியின் வாயில் காவலர் முதல், உதவியாளர், உயர் அதிகாரி பணி வரை அனைத்து பணிகளுக்கும் மண்டல மொழியறிவுடன், பிறமொழி அறிவும் சோதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆங்கில அறிவு அவசியமாக கருதப்படுகிறது.

    எனவே போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதிகளும், அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு வினாக்களும் கேட்கப்படுகின்றன. வங்கிப் போட்டித் தேர்வில் ஆங்கில அறிவை சோதிக்கும் தனித்தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

    இயல்பாக பள்ளிப் படிப்பைத் தாண்டினாலும் ஆங்கில அறிவு அவசியம். அதுதான் பட்டப்படிப்பு படிக்கவும், முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளவும் கைகொடுக்கும். படிப்பு முடிந்துவிட்டால் வேலைக்கும், வேலை தவிர்த்து சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தாலும், பெரிய அளவில் வியாபாரம் செய்ய நினைத்தாலும் ஆங்கில மொழி அறிவின் தேவையை உணர முடியும்.

    ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருப்பதும், இன்றைய இணையதள பயன்பாட்டால் உலகம் மிகமிக சுருங்கிவிட்டதாலும், அங்கும் ஆங்கிலம் அடிப்படையாக இருப்பதாலும் இந்த மொழி தெரிந்திருப்பது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் உதவும்..

    போட்டித் தேர்வுகளில் ஆங்கில அறிவை பல விதங்களில் சோதித்து அறிகிறார்கள். குறிப்பிட்ட ஆங்கில உரைநடையை கொடுத்துவிட்டு அதிலிருந்து கேள்வி கேட்பது, ஒரு வாக்கியத்தில் இடைவெளியை நிரப்பும் சரியான சொல்லை தேர்வு செய்வது, இணைப்புச் சொல், தொடர்புச் சொல், ஒரே பொருள் தரும் சொல், எதிர்பொருள் தரும் சொற்களை அறிவது என ஆங்கில இலக்கண அறிவை துல்லியமாக சோதிக்கும்படியான கேள்விகளை கேட்டிருப்பார்கள்.

    இந்த கேள்விகளுக்கு குறித்த வரைமுறையோ, பாடப்பகுதியோ கிடையாது. தேர்ந்த இலக்கண அறிவும், சிறந்த மொழி அறிவும்தான் இதில் முழு மதிப்பெண் பெற உதவும். கணித வினாக்கள், பொது அறிவு வினாக்கள் போல மாதிரி பயிற்சி செய்து மொழியறிவு வினாவுக்கு பயிற்சி பெற முடியாது. ஆனால் இலக்கண விதிகளை மனதில் ஏற்றிக் கொண்டால், அதிகம் பயிற்சி செய்யாவிட்டாலும் சரியான பதில்களை தேர்வு செய்துவிட முடியும். இருந்தாலும் பொருளறிந்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு, தொடர்ந்த ஆங்கில வாசிப்புத் திறனால், நிறைய சொற்களுக்கு பொருள் அறிந்து வைத்திருந்தால் மட்டுமே பதில் அளிக்க முடியும்.

    எழுத்துத் தேர்வில் மட்டுமல்லாது நேர்காணலின்போதும் ஆங்கில உரையாடலே மையமாக இருக்கும். தாய்மொழி நேர்காணலை எல்லா இடத்திலும் எதிர்பார்க்க முடியாது. வேலைக்கான நேர்காணலில் எவ்வளவோ திறமை பெற்ற இளைஞர்கள், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் தடுமாறி தோல்வி அடைந்து திரும்பியிருக்கிறார்கள்.

    நீங்கள் போட்டித் தேர்வில் ஜெயித்து, சிறந்த வாழ்க்கைப் பாதையை அமைக்கவும், தகவல் தொடர்பை பெருக்கிக் கொள்ளவும் ஆங்கில அறிவை வளர்ப்பது அவசியமாகிறது. அதை கற்றுக்கொள்ள சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை...

    முதலில் ஆங்கிலம் எனக்குப் புரிவதில்லை. பல முறை படிக்க முயன்றும் முடியவில்லை. எவ்வளவு படித்தாலும் சிறிது காலத்தில் மறந்துவிடுகிறது அல்லது குழப்பம் வருகிறது. என்னால் படிக்க முடியாது என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்களை மாற்றுங்கள். “நான் ஆங்கிலத்தை கற்றே தீர வேண்டும். அது என்னால் முடியும்” என்ற நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள்.

    தினமும் குறிப்பிட்ட மணி நேரங்களை ஆங்கிலம் படிக்க ஒதுக்குவதை வாடிக்கையாக்குங்கள். அதற்காக ஆங்கில தினசரிகள், வார இதழ்கள், கதைகளை வாசிப்பதை வழக்கமாக்குங்கள். புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் படியுங்கள். அதே பொருள் தரும் வேறு சொற்களை ஆங்கிலத்திலேயே அறிய முற்படுங்கள்.

    தினசரி வாசிப்பு பயிற்சியுடன், மேற்படி கூடுதலான ஆங்கிலப் பயிற்சியும் அவசியம். நீங்கள் வாசித்த செய்தி அல்லது கதையை நீங்களே உங்கள் சொந்த நடையில், நீங்கள் அறிந்த சொற்களைக் கொண்டு எழுதிப் பாருங்கள். சொல் தடுமாற்றங்களைத் தவிர்க்க அதிகமான சொற்களை அறிய முயலுங்கள். இன்றைய இணையம் உங்கள் தேடலை எளிமையாக்கும். தெரியாத வார்த்தைகளுக்கும், புதிய வார்த்தைகளுக்கும் உடனே அர்த்தம் அறிவது இப்போது சுலபம்தான்.

    வார்த்தைகள் அதிகம் பழகப்பழக, பேசுவது சுலபமாகிவிடும். பேசிப் பழக பயம் கொள்ளாதீர்கள். தவறாகப் பேசிவிடுவோமோ? என்று எண்ண வேண்டாம், தவறுகளை திருத்திக் கொள்ளலாம். ஆனால் தயங்கி நின்றால் தொடங்காமலே தோல்விதான் மிஞ்சும். தவறாக பேசினால் மற்றவர்கள் ஏளனமாக நினைப்பார்களோ என்று நினைத்தால் முதலில் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் பேசிப் பழகுங்கள், தவறுகளை சுட்டிக்காட்டச் சொல்லி திருத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேச முயற்சி செய்யுங்கள். விரைவில் யார் முன்னிலையிலும் ஆங்கிலம் பேச வந்துவிடும்.

    உச்சரிப்பு முறைகள் சரியாக அமைய, ஆங்கில டி.வி. சானல்களை பார்க்கலாம். செய்திகளை கேட்கலாம். ஆங்கில சினிமாக்களையும் ரசிக்கலாம். மொழி பெயர்ப்புடன் வெளிவரும் சினிமாக்கள் ஏராளமான வார்த்தைகளை கற்றுக் கொள்ள துணை செய்யும்.

    ஆங்கில மொழியறிவு மிக்க ஒருவரை பயிற்சியாளராகவோ, உதவியாளராகவோ நியமித்துக் கொள்வது சிறந்தது. ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்த நண்பர்களிடம் பேசிப் பழகுவதும் நல்ல பலன் தரும். பேசிப்பழக இலக்கணம் தடையாக இருப்பதில்லை. ஆனால் இலக்கணம் தெரிந்தால் பிழையின்றி பேசலாம். எழுதவும் செய்யலாம்.

    தினசரி பயிற்சியும், தொடர் முயற்சியும் உங்கள் ஆங்கில மொழியறிவை துரிதப்படுத்தும். தீவிர முயற்சி எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் இந்த முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். தயக்கத்தை விட்டொழித்து பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டால் செந் தமிழ் மட்டுமல்ல எம்மொழியும் நாப்பழக்கத்தில் வந்துவிடும். வெற்றியைத் தந்துவிடும்.

    பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.
    குழந்தைக்கு பசி ஏற்படுவதை நான் எப்படி அறிவது என்ற கேள்வி தாய்மார்களின் மனதில் எழலாம். பிறந்த குழந்தைகள் எப்பொழுது பசியாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்கு எவ்வளவு உணவு அளிக்க வேண்டும் என்பது புதிய தாய்மார்களுக்கு பெரிய சந்தேகமாக, கேள்வியாக இருக்கும்.

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் அமுதை பிறந்த தருணம் முதல் ஆறு மாத காலம் வரை கண்டிப்பாக தாய்மார்கள் அளிக்க வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு பசி எடுத்தால், பால் குடிப்பது, பாலை உறிஞ்சுவது போன்ற செய்கைகளை செய்யும், குழந்தை அன்னையின் மார்பகத்தை நோக்கியே முகத்தைக் கொண்டு வரும்; தலையை திருப்பிக் கொண்டே இருக்கும், குழந்தைக்கு அதிகம் பசி எடுத்தால், அழ ஆரம்பித்து விடும் - இது போன்ற அறிகுறிகள் மூலம் குழந்தைக்கு பசி எடுப்பதை அன்னையர்கள் அறியலாம்.

    மேலும் குழந்தைக்கு இரவில் அதிகம் பசி எடுக்கும், குழந்தைக்கு பால் குடிக்க வேண்டும் என்ற உணர்வும் இரவில் அதிகம் ஏற்படும். முதல் மாதத்தில் குழந்தைக்கு எடை குறைவு ஏற்பட்டால், பயம் கொள்ள வேண்டாம்; இது இயற்கையே! குழந்தை பிறந்த பின் முன்பு இருந்த எடையில் 10% எடையை இழக்கும்; பின் சிறிது நாட்களிலேயே குழந்தையின் எடை கூடத் தொடங்கி, இழந்த எடையை குழந்தையின் உடல் பெற்று விடும்.

    குழந்தைகளுக்கு எப்பொழுது உணவு அளித்தாலும், அவர்கள் வயிறு நிரம்பும் வரை மட்டுமே உணவு அளிக்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக உணவினை திணிக்க கூடாது. குழந்தைகள் தனக்கு பசி எடுப்பதையும், உணவு வேண்டாம் என்பதையும் தனது அறிகுறிகள் மற்றும் தனது செயல்களின் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
    கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது.
    பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவம் சிலருக்கு தெரியாது. ஏதாவதொரு பிரச்சினையை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருப்பார்கள். அதற்கு எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் தடுமாறும் மனநிலையில் இருப்பார்கள். அந்த சமயத்தில் மற்றவர்கள் ஜாலியான மனநிலையிலோ, கேலி செய்யும் தொனியிலோ பேசினால் உக்கிரமாகி கோபத்தை வெளிப்படுத்தி மற்றவர்களிடம் கொட்டிவிடுவார்கள்.

    அவர்கள் எதற்காக கோபப்படுகிறார்கள் என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரியாது. இப்படி சம்பந்தமில்லாமல் அடுத்தவர்கள் மீது கோபப்படுவது பலருக்கு பழக்கமாகிவிட்டது. பின்னர் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு சமாதானப்படுத்துவார்கள். ஆயிரம்தான் சமாதானம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரும் இருக்கமாட்டார்கள். அதனால் தேவையில்லாமல் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் உருவாகி விரிசல் ஏற்பட்டுவிடும்.

    கோபம் என்பது வாழ்க்கையில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும். தான் பேசுவதை நியாயப்படுத்தியே காட்டும். வேண்டாத கடும் வார்த்தைகளை வெளிக்கொண்டுவரும். நம்மைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை மற்றவர்களிடம் விதைத்துவிடும். கோபம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். அதேவேளையில் அது விவேகமானதாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. நம் கோபத்தை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் அதை நியாயமான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

    நம்முடைய கோபம் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும். அதில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும். அப்போது தான் நமக்கு நியாயம் கிடைக்கும். நாம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக நம்முடைய ஆதங்கம் வெளிப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை ஆத்திரப்படவைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. அதனால் எந்த பிரயோஜனமுமில்லை.

    நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் கோபம் வரலாம். அது நமக்கு நியாயமானதாகவும் தெரியலாம். அதேவேளையில் மற்றவர்களின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கோபம் மட்டும் நியாயத்தை பெற்றுத் தந்துவிடாது. காட்டுத் தீ போன்று கொடூரமானது கோபம். அதிலும் பொது இடத்தில் பலர் முன் கோபப்படும்போது நம்முடைய பொறுமையற்ற குணத்தை அது பிரதிபலிக்கும்.

    நம்மை பற்றிய தவறான அபிப்பிராயங்களை அவர்களிடம் உண்டாக்கிவிடும். ‘பொறுப்பற்றவர்கள் தான் இப்படி பொது இடத்தில் கோபப்படுவார்கள். தங்கள் இயலாமையை வெளிப்படுத்த இப்படி நடந்து கொள்வார்கள்’ என்று கோபப்படுபவர்களை கடுமையாக சாடுவார்கள். சிலர் எப்போது ‘நாலு பேர் கூடுவார்கள். நம் கோபத்தை காட்டலாம்’ என்று காத்திருப்பார்கள். தாம் கோபப்படுவதை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும், தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது எதுவும் நடக்காது.

    கோபப்படுவது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது. நியாயமான விஷயத்திற்கு கோபப்படலாம். ஆனால் சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் வகையில் அந்த கோபம் அமைந்துவிடக் கூடாது. கோபம் என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று தான். அதை எப்படி எங்கே எந்த அளவு வெளிப்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கிறது. நாம் யாரிடம் கோபத்தை காண்பிக்கிறோம், எதற்காக கோபப்படுகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது தைலம் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
    ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். ஆனால், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில், கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    இதை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் போது, பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய தைலத்தை, குழந்தைகளுக்கு தடவும் போது, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு அதிக கற்பூர தன்மை கொண்ட தைலத்தை பயன்படுத்துவதால், வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படவும், வாய்ப்புகள் அதிகம்.

    அதிலும், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷ பாதிப்பு ஏற்படும் போது, ‘சலைன் நேசல்’ என்ற உறிஞ்சும் சொட்டு மருந்தை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

    மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு பிற மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தில் கொண்டு போய் விடும்.

    மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல், எதையும் மேற்கொள்ளக் கூடாது.
    ×