என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
    பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் அது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை.

    இன்று தொடங்குகிறது


    அந்த வகையில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 45 ஆயிரத்து 576 பேர் எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.

    நேரத்தை வீணாக்க கூடாது

    மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்திப் பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.

    சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது.

    விடைத்தாள்

    தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.
    தேர்வு பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன், அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் பலவிதமான உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    இந்த பதற்றத்தினால் மனதின் அலைச்சுழலும் அதிகரித்து விடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும். நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் தான் இயங்கிக் கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும், அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

    மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும், கேட்கும் பாடங்கள் சற்று குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.

    குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள், அதிகமான அலைச்சுழலில் மனம் இருந்தால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தை போக்குவது எப்படி?

    திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்காகத் தான். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக் கொள்ள வேண்டும்.

    மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும் போது ஆழ்ந்த மனதுடன், வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்குத் தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போது தான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும். 
    குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் வேலையை அவர்களே செய்யப்பழக்குவதன் நன்மைகள் மற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய அடிப்படைத் தகவல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    "பெண்ணோ, பையனோ... நீங்க நல்லாப் படிச்சா மட்டும் போதும். வீட்டு வேலையெல்லாம் நான் பார்த்துகிறேன் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் பேச்சாக இருக்கும். ஆனால், குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். அனைத்தையும் அறியும் வயது இது. சிறு வயதுக் குழந்தைகளாக இருந்தால் 'உனக்குத் தெரியாது, நீ கீழே கொட்டிடுவே, போட்டு உடைச்சிடுவே, உனக்கு எட்டாது, கைல குத்திப்பே... அத தொடாதனு சொல்லியிருக்கேன்ல, கிச்சன் உள்ள வராத' என்று ஏகப்பட்ட கட்டளைகளை நாமே பிறப்பிக்கிறோம். அதில் ஓரளவு நியாயம் உண்டு.

    வேலை செய்ய கற்றுக்கொள்ளும் போது பெரியவர்கள் போல் நேர்த்தியாகக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்ய வேலையை மீண்டும் பெற்றோர் செய்ய வேண்டியதிருக்கும். இதை நேர வீணடிப்பாக நினைக்க வேண்டாம். பொறுமையுடன் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வேலையைக் கற்றுத்தர வேண்டும்.  

    வீட்டில் சாப்பாட்டு நேரத்தின் போது தட்டுகளை எடுத்து வருவது, தண்ணீர் பிடித்து வருவது ஸ்பூன் எடுத்து வருவது போன்றனவும், சாப்பிட்ட பிறகு தட்டை எடுத்துக்கொண்டு போய், சிங்கில் போடுவது என வேலைகளை அவர்களுக்கென நிர்ணயம் செய்யுங்கள். துவைத்த துணிகளை மடித்து வைக்க அவர்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். துவைத்த துணிகளிலிருந்து `உன் துணியை மட்டும் தனியா அம்மாவுக்கு எடுத்துக்கொடு பார்ப்போம்' என்று பிரித்துக்கொடுக்க பழக்குங்கள். அப்படியே அப்பா துணி, அம்மா துணி என்று பிரித்து எடுத்துத் தந்தால் உங்களுக்கு மடித்து வைக்க எளிதாக இருக்கும்.



    3 வயதுக் குழந்தையெனில் காய்கறி கடைக்குப் போகும்போது அவர்களுக்குப் பிடித்த காய்கறியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள். வாங்கி வந்த காய்கறியை எந்த இடத்தில் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

    பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன், வீட்டுப் பாடங்களை எழுதி முடித்த பிறகு புத்தகங்களை அடுக்கி வைக்கப் பழக்கப்படுத்தலாம். உறங்கச் செல்லும் முன் பென்சில் பாக்ஸில் எல்லாம் இருக்கிறதா, நாளைக்குத் தேவையான நோட்டுப் புத்தகம் பையில் இருக்கிறதா என்பதையும் செக் செய்யச் சொல்லுங்கள்.

    8 வயதுக்குப் பிறகு, பள்ளி முடித்து வந்ததும் டிபன் பாக்ஸை கழுவி வைக்கச் சொல்லுவது, சாப்பிட்ட தட்டு, டம்ளரைக் கழுவி வைக்கச் சொல்லலாம். துவைக்க வேண்டிய அவர்களின் ஆடைகளை வாஷிங் மெஷினில் எடுத்துப் போடச் சொல்லலாம்.
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
    தேர்வு நேரத்தில் மிகவும் உணவுக் கட்டுப்பாடு அவசியம். மற்ற நேரங்களிலும் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்ல பண்பாடு. மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கல்வியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உணவு சாப்பிடாமல் இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. அதிகமாக சாப்பிட்டாலும் படிப்புக்கு இடையூறு செய்யக்கூடியது உணவு. மாணவர்களின் உடலுக்கும், கல்விக்கும் பாதிப்பில்லாமல் உணவுப் பழக்க வழக்கம் அமைய வேண்டும் அதற்கான சில டிப்ஸ்...

    காலையில் எழுந்ததும் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பல்துலக்கிய பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்தப் பழக்கமானது மலச்சிக்கலைப் போக்கும். பள்ளியிலும், மற்ற வேளைகளிலும் திடீரென கழிவறை செல்லும் உணர்வை தடுத்துவிடக்கூடியது இந்தப் பழக்கம். ஆரோக்கியமான இந்த பழக்கத்தை எத்தனை பேர் இப்போது பின்பற்றி வருகிறீர்கள்?

    காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதைப்போல ஒவ்வொரு மணி நேர இடை வேளைக்கும் ஒரு டம்ளர் (100 மி.லி.) தண்ணீர் குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு சுமார் 3 லிட்டர் தண்ணீர் பருகுவது ஆரோக்கியத்தை வழங்கும். தண்ணீர் குடிப்பது உடல் உஷ்ணத்தை தடுக்கும். பெரும்பாலான நோய் தாக்குதலை தடுக்கும்.

    ஒவ்வொரு உணவு நேரத்திற்கும் குறைந்தபட்சம் 6 மணி நேர இடைவேளை வேண்டும். 3 மணி நேர இடைவெளிக்குள்ளாக நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடக்கூடாது. தேவையற்ற நேரத்தில் பஜ்ஜி, போண்டா, பர்கர், பீஸா என்று சாப்பிடும் பழக்கமுள்ள மாணவர்கள் உடல் நலத்தை கெடுப்பதுடன், படிக்கும் மனநிலையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இடைவேளை உணவுகள்தான் உடல் பருமனையும், சோம்பலையும் கொண்டு வருகிறது. அதுவே நாளடைவில் தேவையற்ற நோய்கள் பரவவும் காரணமாகிறது.

    சாப்பிடும்போது நன்றாக சாப்பிட்டுவிட்டு, அடுத்த இடைவேளையில் உணவு உண்ணுங்கள். எப்போது சாப்பிட்டாலும் முழு வயிற்றை நிரப்ப வேண்டாம். எவ்வளவு ருசியாக இருந்தாலும், முக்கால் வயிறு சாப்பிட மனதை பழக்கப்படுத்துங்கள்.

    இடையில் பசித்தால் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் குடிக்கலாம். இளநீர், காய்கறி- பழ சாலட் உங்கள் ஸ்நாக்ஸ் உணவுகளாக இருக்கட்டும்.

    செயற்கை குளிர்பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பண்டங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது உடல்பருமனை தடுத்து, படிப்பில் மனம் லயிக்க துணை செய்யும்.

    ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை பழக்கமாக இல்லாமல் எப்போதாவது ருசிக்காக சாப்பிடுங்கள். அதுவும் மாலை வேளையில் மட்டும் சிறி தளவு சாப்பிடுங்கள். எண்ணெயில் செய்த இனிப்பு-காரம் மற்றும் மாமிசம் அளவுடன் சாப்பிடுங்கள். வயிறு பிரச்சினைகள் ஏற் படுவதை உணர்ந்தால் இவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

    காலையிலும், இரவிலும் பல்துலக்குவதையும், மலம் கழிப்பதையும் பழக்கமாக்குங்கள்.

    ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை பழக்கமாக மாற்றுங்கள். இரவு 11 மணிக்குள்ளாக தூங்கிவிடுங்கள். அதிகாலையில் எவ்வளவு சீக்கிரம் எழும்ப முடியுமோ, அதை பழக்கமாக்குங்கள். சிறுவர்கள் 8 மணி நேரமும், பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 மணி நேரத்திற்கு குறையாமலும் உறங்குவதை பழக்கமாக்க வேண்டும்.

    புகை, மது போன்ற தீய பழக்கங்களை முற்றிலும் தடை செய்யுங்கள். இவை ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் கெடுக்கும். படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பது பழமொழி. ஆம் ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் பெற முடியும். யாகாவராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கு, பேச்சுக்கு மட்டுமல்லாமல், உணவுக் கட்டுப்பாட்டிற்கும் பொருந்தும். மாணவர்கள் உடல்நலனைக் காத்து, கல்வியிலும் வெற்றிக்கொடி நாட்டுங்கள்.
    பல்வலி என்பது மிக கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தருவது, அதுவும் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை.
    பற்சிதைவு என்பது பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனை அது. சரியான நேரத்தில் பற்சிதைவை குணப்படுத்தாவிட்டால், பல்லை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது! குழந்தைகளை பொறுத்தவரை, பற்களை சரியாக விளக்கினால், பற்சிதைவை தவிர்க்கலாம். ஏதேனும் காரணத்தினால் குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், அறிகுறிகளை கண்டுபிடித்து பல் மருத்துவரிடம் உடனடியாக காண்பிக்க வேண்டும். உங்கள் குழந்தை பற்சிதைவினால் அவதி படுகிறது என்பதை அறிய சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

    சூடான அல்லது குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் குழந்தை கூசுகிறது என்று சொன்னால், அது ஆபத்தின் அறிகுறி. பற்களில் அல்லது ஈறுகளில் ஏதேனும் தொற்று இருப்பதை அது உணர்த்துகிறது. இதனால் உணவை கடிக்கும் பொழுது அல்லது மெல்லும் பொழுது பல்லில் கூச்சம் அல்லது வலி ஏற்படும்.

    அப்படி இருக்கும் பொழுது, உங்கள் குழந்தையின் வாயை நன்றாக கழுவவும். தொற்றினால் வாயில் கசப்புத்தன்மை ஏற்படலாம். பல்லில் தோற்று ஏற்பட்டதற்கு கசப்பு தன்மை மற்றொரு அறிகுறி. வாயை கழுவிய பின்பும் துர்நாற்றம் அடித்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    உங்கள் குழந்தை பற்களில் தொல்லை என்று சொன்னால், முதலில் ஈறுகளை சரிபாருங்கள். ஈறுகள் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது நலம். சில இடங்கள் வீக்கமடைந்தோ அல்லது அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்றின் அறிகுறி.

    நெடு நாட்களுக்கு தொற்று இருந்தால், சிறிய கருப்பு புள்ளி வளர்ந்து விடும். மற்ற பற்களை விட அந்த பல் அடர்ந்த நிறத்தில் தெரியும். உங்கள் குழந்தையின் பற்களை அவ்வப்போது இந்த அறிகுறிக்காக பாருங்கள்.

    உங்கள் குழந்தை பல்லில் குத்தும் வலி இருக்கிறது என்று சொன்னால், அது பற்சிதைவாக இருக்கலாம். தொற்று ஆழமாக சென்றால், அது பெரிய தொல்லை ஏனென்றால் எதை உண்டாலும் கடுமையான வலி ஏற்படும். அந்த மாதிரி நேரத்தில் பல் மருத்துவரை பார்த்தால் அவசியம். 
    குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம்.
    வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழந்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!

    வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

    வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

    மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.
    பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி தான். ஆனால், தடுப்பூசி என்பது நம் ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியமாகும். தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி செந்திலாண்டவர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறும்போது,

    முன்பெல்லாம் அம்மை நோய், கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் இருமல், காலரா, நிம்மோனியா போன்ற நோய்களினால் இறப்பு சதவிகிதம் அதிகம். தடுப்பூசி என்பது கண்டறியப்பட்ட பின்பு இந்த நோய்களில் சிலவற்றை முற்றிலும் அழிக்க முடிந்தது. தடுப்பூசியினால் மற்ற நோய்களும் வராமல் தடுக்க முடியும்.

    உதாரணமாக, மூளைக்காய்ச்சல் நோய், மஞ்சள் காமாலை நோய், ஏ வகை மற்றும் பி வகை, காலரா, நிம்மோனியா, தட்டம்மை, பெரியம்மை, டைபாய்டு மிக முக்கியமாக ஸ்வைன்புளு பெண்களுக்கு பெருங்கொடுமை விளைவிக்கும். கர்ப்பப்பை கேன்சர் நோய் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. இப்போது உலகளவில் ஆராய்ச்சியில் எச்.ஐ.வி. நோய்க்கும் டெங்கு வைரஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும். சரியான முறையில் தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் நாம் இந்த மாதிரியான நோய்களுக்கு ஆளாக வேண்டியதிருக்கும்.

    ஆகவே தடுப்பூசி எடுத்து கொள்வோம். நோய்களில் இருந்து விடுபடுவோம். நோயற்ற வாழ்வை குழந்தைகளுக்கு அளிப்பது பெற்றோர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தூக்கத்தின் போது தான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.
    தூக்கத்தின் போது தான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம்.

    சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.

    அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல்.

    பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை.

    குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண்டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும்.

    பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண்மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீனாகச் செய்யப் பழக்குங்கள்.

    குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்சமின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள்ளுங்கள்.தூங்குவதில் பிரச்சனை செய்கிற குழந்தைகளுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். படுக்கையில் இருந்தபடி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

    மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறைகளின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

    உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது அதிக சிரமமின்றி எழுந்துகொள்கிறார்களா என கவனியுங்கள். அப்படி எழுந்துகொண்டால் இரவில் நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள் என அர்த்தம். குழந்தைகள் போதுமான அளவு தூங்காமலிருக்க வெளிப்புறச் சூழல்கள் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்.

    எனவே, தூக்கத்தில் பிரச்னை இருக்கும் பிள்ளைகளின் தூக்கத்தை கவனியுங்கள். குறட்டை விடுகிறார்களா, இரண்டு மூச்சுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கிறதா, சுவாசப் பிரச்னைகளைப் பார்க்கிறீர்களா? மருத்துவரை சந்திக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தும் அறிகுறிகள் இவை.

    தூக்கத்தில் நடப்பது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றாலும் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்தப் பிரச்னைகள் இருந்தால் குழந்தைநல மருத்துவரை அணுகுங்கள். ADHD பாதிப்புள்ள குழந்தைகளுக்கும் தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். பிற அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.
    இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
    இந்தக் காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் எல்லோருடைய மனதையும் எந்தளவுக்கு ‘பேஸ் புக்’, இன்ஸ்டாகிராம், ‘வாட்ஸ் அப்’ எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. டாஸ்மாக் பற்றி கருத்து சொல்லும் நாம் அதை ஒழிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற ஒருமித்த கருத்தை சொல்லி விடுவோம். அதைபோல் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று நம்மால் சொல்ல முடியாது.

    அதில் பல நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் இன்று பெரும்பாலான மாணவர்கள் தேடிப் போவது தீமைகளை நோக்கித்தான். அதையும் நம்மால் மறுக்க முடியாது. அதனால் இன்றைய பெற்றோர்கள் நிலை இரு தலைக்கொள்ளி எறும்பு நிலை தான். பத்து, பதினைந்து வயசு பள்ளிச் சிறுவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் கூட தங்களுடைய பெரும்பான்மையான நேரத்தை ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’பில் தான் கழிக்கிறார்கள். அவர்கள் செயல்களை கவனித்துப் பார்த்தால், அவர்கள் படிப்பு தொடர்பாகவோ, எதிர்கால முன்னேற்றத்திற்குரிய செய்திகளையோ அவர்கள் அதில் பார்ப்பதில்லை.

    அவர்களின் பள்ளித் தோழிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் படங்களையும் இதர செய்திகளையும் தான் பரிமாறிக்கொள்கிறார்கள். அல்லது அவர்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகள் புகைப்படங்கள், பார்த்த சினிமா, அதைப் பற்றிய கருத்துகளே அதில் நிறைந்திருக்கும். அவர்கள் தங்கள் பாட சம்பந்தமாகவோ வேறு நல்ல விஷயங்களையோ அவர்கள் பரிமாறிக்கொள்வதாக தெரியவில்லை. கல்லூரி மாணவர்கள், அவர்கள் வயதை ஒத்த இளைஞர்களின் பேஸ் புக், வாட்ஸ் அப் செய்திகள் இன்னும் மோசமாக இருக்கின்றன.

    தங்களுக்குப் பிடித்த நடிகைகளின் கவர்ச்சி படங்கள், அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய செய்திகள், தங்களுடைய வீர தீர செயல்களைக் காட்டும் பல போஸ்களில் போட்டோக்கள், அவைகளுக்கு ‘லைக்’குகள், ‘கமெண்ட்ஸ்’கள் என்று அவர்கள் படிக்க வேண்டிய நேரங்களை எல்லாம் இந்த ‘வாட்ஸ் அப்’பும், ‘பேஸ் புக்’கும் விழுங்கியிருக்கும். அதோடு அவர்கள் நிற்பதில்லை. இணையதளங்களில் இருந்து நிறைய ஆபாச வீடியோக்களை எடுத்து, அதை தங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள்.

    அல்லது புலி, சிங்கம் மனிதனை அடித்துக் கொல்லும் காட்சி, இயற்கைப் பேரழிவுகள் நாடு நகரங்களை அழிக்கும் காட்சிகள் அதில் நிறைந்திருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு ‘அரியர்ஸ்’ அதிகம் ஏற்படக் காரணம் அவர்களின் படிப்புக்குச் செலவிட வேண்டிய நேரம் முழுவதையும் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ எடுத்துக் கொள்வது தான். இளைஞர்களும், யுவதிகளும் வீட்டில் தங்கள் அறைக் கதவை மூடிவிட்டு, பேஸ் புக்கில் மூழ்கி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ‘சாட்டிங்’கில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

    அது இன்னும் மோசமாகப் போய் முடிகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பொதுவான விஷயங்களையே பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக தங்கள் குடும்ப விஷயங்களைப் பரிமாறி, மெதுவாக அந்தரங்கமான விஷயங்களைப் பேசி, தங்களுடைய கவர்ச்சிப் படங்களை பரிமாறும் நிலைக்குப் போய் விடுவார்கள். பின்னர் செல்போனில் பேச்சு தொடரும். பின்னர் நேரில் சந்திக்க விரும்புவார்கள். அதன் பின் இருவரும் சேர்ந்து அவரவர் குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடுவார்கள்.

    ஒரு வாலிபனின் தந்தை மேல் நடுரோட்டில் லாரி மோதி விட்டது. அந்தச் செய்தியைச் சொல்ல ஒருவர் அவனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த மாணவன் ‘சாட்டிங்’கில் மும்முரமாக இருந்ததால் அவன் செல்போனை எடுக்கவில்லை. அவன் தந்தை சரியான உதவியின்றி நடு ரோட்டில் உயிர்விட நேர்ந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது அறிவியல் சாதனையால் நமக்கு கிடைத்த சமூக வலைத்தளங்களால் மாணவ, மாணவிகளுக்கு பெரிய அளவில் நன்மை கிடைப்பதாகத் தெரியவில்லை.

    பெரியவர்களும் மாணவ, மாணவிகளுக்கு புத்தி சொல்லும் தகுதியை இழந்து வருகிறார்கள். இன்று அவர்களும் நிறைய நேரத்தை அதில் செல விடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பிரபலங்களாக இருக்கும் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் என்று பல ஆயிரம் ‘பேஸ் புக்’ நண்பர்கள் அவர்களுக்கு இருப்பார்கள். நடிகர் நடிகைகள் அவர்கள் நடித்த படம், அவர்களுக்கு கிடைத்த சிறப்புகள் பற்றியும், எழுத்தாளர்கள் அவர்கள் எழுதி வெளிவந்த கதை, கட்டுரைகள் பற்றிய செய்திகளையும், அரசியல்வாதிகள், அவர்களுக்கு கிடைத்த பதவி, மாலை மரியாதைகளைப் பற்றிய செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.

    பேஸ் புக்கில் இருக்கும் நண்பர்கள் விழுந்து விழுந்து ‘லைக்’ போடுவார்கள். பலர் ‘கமெண்ட்ஸ்’ என்ற பெயரில் மணிக்கணக்கில் நேரத்தை செலவு செய்து பாராட்டுப் பத்திரங்கள் படிப்பார்கள். அதை அந்தப் பிரபலங்கள் தங்களுக்கு எத்தனை ‘லைக்ஸ்’ கிடைத்தன என்று பத்திரிகைகளில் தம்பட்டம் அடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் பெருமை பேசிக்கொள்ள காரணமாக இருந்த ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் அவர்களுக்கு கிடைத்த ஒரு பாராட்டையோ, அல்லது ஒரு நல்ல கருத்தையோ தங்கள் ‘பேஸ் புக்’கில் போட்டால் எந்தப் பிரபலங்களும் ‘லைக்’ கூட போடாது.

    சாதாரண மக்கள் அவர்களைப் பொறுத்தவரை உயிர் இல்லாத பொம்மைகள்தான். அவருக்கு லைக் போடுவதும், பாராட்டுத் தெரிவிப்பதும் அவர்களுக்கு முன் பின் தெரியாத அந்த சாதாரண மக்கள் தான். நிறையப் பேர் பிரபலங்களுக்குத் துதி பாட தங்கள் வாழ்க்கையில் நிறைய நேரத்தை செலவிடுகிறார்கள். பொதுவாகப் பார்க்கும் போது இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்தால் மனிதனின் நேரமும், ஆற்றலும் வீணடிக்கப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகளில் இருந்து கூட இன்றைய இளைய தலைமுறை தப்பித்துக்கொள்ள முடியும்.

    இந்தப் ‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ மோகத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை போலிருக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு இந்த மோகம் நல்லதல்ல. அதை எப்படியாவது பிரியமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, அவர்களை ஸ்மார்ட் போன் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு ‘ரோல் மாடல்’ என்று சொல்வார்கள்.

    நம்மிடம் இருக்கும் குறைகள் தான் அவர்களிடமும் படியும். நாமே எந்த நேரமும் ஸ்மார்ட் போனும் கைகளுமாக இருந்தால், நம் குழந்தைகளுக்கு எப்படி அதன் தீமையை எடுத்துச் சொல்வது. குழந்தை வளர்ப்பில், ஸ்மார்ட் போன்கள் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை பாதிக்காதபடி பார்த்துக்கொள்வது, பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமையாக இன்று மாறிவிட்டது.

    துடுப்பதி ரகுநாதன்
    இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம்.
    இன்றைய தொழில்நுட்பத்தால் கோடைகாலத்தில் நாம் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் இன்றைய குழந்தைகள் மறந்தது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகவே நாம் பார்க்கிறோம். அக்காலத்தில் நமக்கு புளியங்கொட்டை, சோழி மற்றும் முத்துகள் கொண்டு வயதுக்கு வந்த பெண்கள் பல்லாங்குழி ஆடுவது மிகச்சாதாரணமாக பார்க்க முடியும். பல்லாங்குழிக்கு பின்னால் விரலுக்கு பயிற்சி கணக்கு பயிற்சி, பெண்கள் வீட்டு வேலைகளை தெளிவாக சிறப்பாக செய்யவும் மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம் போன்ற பல அரிய பழக்கங்கள் விடுமுறை நாட்களிலே கற்றுக்கொள்ள முடியும்.

    இப்பொழுது பல்லாங்குழி பலகையே எந்த ஒரு வீட்டிலும் பார்க்க முடியவில்லை. கால் உடைந்த குதிரையாக சீரியலும், டிக்-டாக்கும் கைப்பேசிக்குள்ளே அடைப்படுவது குழந்தை, பெண்களுக்கு நல்லதா?. பருப்பு கடைஞ்சி விளையாடி அனைவருக்கும் பிரித்துக்கொடுக்கும் குழந்தை நாட்போக்கில் சமுதாய அக்கறையோடு வளர்ந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யும். காளையை அடக்கவும் செய்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.

    பாரம்பரிய விளையாட்டு தாய்-தந்தை, பெரியோர்கள் உறவுகள், நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமைந்துள்ளது. இதே போல் கோலி, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பாண்டியாட்டம், கண்ணாமூச்சி, பச்சைக் குதிரை, திருடன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்காய், கில்லி போன்ற விளையாட்டுகள் பயனுள்ள பொழுதுபோக்கு மட்டும் அல்ல மனிதாபிமானம், விடாமுயற்சி, சிந்திக்கும் திறன், தன்னம்பிக்கை என சுய ஒழுக்கங்கள் வளர காரணமாக இருப்பது என்பது மறைக்கமுடியாத உண்மை. மனக்கூர்மை, படைப்பாற்றல் நினைவாற்றல் மேம்பாடு, சுயசிந்தனை, உடல் மனப்பயிற்சி போன்ற குணங்களை கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டு.

    கூடி விளையாடிய ஆட்டங்கள் இன்று மறைந்து விட்டன. அக்கம்பக்கம் பழகவே தயங்கும் இன்றைய இளம் தலைமுறையிடம் குழு விளையாட்டில் குழந்தைகள் ஈடுபட வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக வழக்கொழிந்து போகும் பாரம்பரிய விளையாட்டை தேடிப்பிடித்து பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.

    பாரம்பரிய விளையாட்டில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதை அறியாத இளைஞர்கள் கைப்பேசியில் விளையாடி தங்களுக்கான அடையாளங்களை தொலைத்துவிடுகின்றனர். எனவே நம் பாரம்பரிய விளையாட்டை பேணி காக்க வேண்டும்.

    முனைவர் கரு.செந்தில்குமார், நூலகர், கோவை.
    தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.
    தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.

    * 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.

    * ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

    * குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.

    * கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

    * தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

    * ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    * குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.

    * குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.

    * ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.

    எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்

    * 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.

    * அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.

    * ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.

    * நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.
    பல மாணவர்கள் தேர்வின் பொழுது பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள். மிதமான பதட்டம் நம் செயலை செய்ய உதவும், இந்த பதட்டம் அதிகமாகும் பொழுது அது நமது செயல்பாட்டை பாதிக்கும்.
    “முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை !!
    முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை !!
    முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை !!

    தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். தேர்வு நாள் நெருங்க நெருங்க பதற்றம் அடைவது இயல்பு தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக மாறும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். தன்னம்பிக்கை குறையும்.

    பல மாணவர்கள் தேர்வின் பொழுது பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள். மிதமான பதட்டம் நம் செயலை செய்ய உதவும், இந்த பதட்டம் அதிகமாகும் பொழுது அது நமது செயல்பாட்டை பாதிக்கும். மனச்சோர்வு, பதட்டம் அடைவது ஒரு மனம் நலம் சார்ந்த விஷயம். மிக அதிகமான பதட்டம் தேர்வு எழுதும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இந்த பதட்டமான சூழ்நிலை மாணவர்களுக்கு மாணவர் வேறுபடும். சில மாணவர்களுக்கு தலைவலி, சிலருக்கு பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வு, சிலருக்கு தேர்வு எழுதும்போது கவனச்சிதறல் ஏற்படும்.

    தேர்வின் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றம் :

    மனப்பதற்றம் சிறிய அளவு முதல் பெரியளவு வரை மனதை பாதிக்கக்கூடும். சில மாணவர்கள் தேர்வுக்கு முன் பீதி அடைவார்கள். இது அவர்களுக்கு (தனக்கு) மட்டுமே நடக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் எல்லா மாணவர்களும் தேர்வு சமயத்தில் இது போன்ற பதட்டத்தை (மனது படபட என துடிக்கும்) ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்டிருப்பர்.

    உடல் ரீதியான அறிகுறிகள்:


    உடலில் வியர்வை வியர்ப்பது, வேகமான இதயத்துடிப்பு, மயக்கம், வாந்தி, அடிக்கடி பேதியாவது போன்ற உணர்வுகள் என்று பல அறிகுறிகள் தென்படும் . இந்த பதட்டம் மாணவர்களை கடுமையாக தாக்கும் பொழுது உடலுக்கு நோய்த்தொற்று ஏற்படும்.

    அறிவாற்றல் மற்றும் நடவடிக்கை:


    எதிர்மறையான எண்ணங்கள் கொண்டால் தேர்வின்போது கவனச்சிதறல் மற்றும் அதிகப்படியான இதயத்துடிப்பை உணர்வார்கள். பல மாணவர்கள் அதிகப்படியான பதட்டத்தினால் கேள்வித்தாள் வாங்கி அதனை படித்த உடன் தேர்வுத் தாளில் தனக்குத் தெரிந்த விடையை எழுதாமலேயே வந்துவிடுவார்கள். பதட்டத்தின் காரணமாக எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தும் தேர்வுத்தாள் களில் பதில் எழுதாமலேயே வந்துவிடுவார்கள்.

    உணர்ச்சிவசப்படுதல்:

    மனப்பதற்றம், சுயமதிப்பு இல்லாமை, கோபம், நம்பிக்கையின்மை இவைகளே மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனை நீக்கினால் இந்த பிரச்சினையை தடுக்கலாம்.

    நினைவாற்றலை மேம்படுத்தும் வழிகள்:

    நேர்மையான சுய உறுதிமொழி கொண்ட வாசகங்களை ஒவ்வொரு கருத்துக்கும் (கான்செப்ட்), சமன்பாடுகளுக்கும், எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு ஒரு நேர்மறையான உறுதிமொழியை அதனுடன் பொருத்தி நினைவுபடுத்திக் கொண்டால் நினைவாற்றல் மறக்காமல் இருக்கும். உதாரணமாக ‘என்னால் முடியும’ என்ற வாசகத்தை ஒரு கருத்துக்கு பொருத்திப் படிப்பதினால் கணித சூத்திரத்திற்கு பயன்படுத்தி பார்ப்பதன் மூலம் எளிதில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். மிகக் கடினமான சமன்பாடுகளைக் கூட எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். நேர்மையான சுய உறுதிமொழி 2 அல்லது 3 வாக்கியமாக இருத்தல் அவசியம்.

    குழந்தைகளுக்கு தேர்வின் பொழுது ஏற்படும் மன பதட்டம் படிப்பை சார்ந்து மட்டுமே இருப்பது இல்லை , வேறு பல காரணங்களும் உள்ளன. இப்பொழுது மாணவர்கள் படிப்பதற்காக விடுமுறையில் இருப்பார்கள். வீட்டின் சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் அரவணைப்பு அவர்களின் பதட்டத்தை குறைக்கும் கருவியாக இருப்பது அவசியம்.

     இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருந்தால் மூளை சோர்வடைந்து விடும். மேலும் அளவுக்கு அதிகமான தகவல் என்னும் நிலைக்கு தள்ளிவிடும். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் விபத்து உண்டாவதை போலவே, மூளைக்கு மிக அதிக வேலை பளு கொடுத்தால் உடலுக்கும் மனதிற்கும் சோர்வை ஏற்படுத்தும். இதனால் பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால் மன அழுத்தம் உண்டாகும்.

    தினமும் 45 நிமிடம் படிப்பு மற்றும் 15 நிமிடம் ஒய்வு என்ற விகிதத்தில் படித்தால் மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.இந்த ஓய்வு எடுக்கும் இடைவெளியில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அன்றைய தினம் படித்து முடித்த பின் சிறிது நேரம் கைபேசி உபயோக படுத்தலாம். சமூக வலைத்தளங்கள் தன் வலையில் சிக்க வைக்க உங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறைய தளத்திற்கு தாவ வைக்கும். ஆகையால் நீங்கள் ஸ்மார்ட் ஆக இதில் இருந்து தப்பிக்க, பாடல்கள் கேட்கலாம், மோட்டிவேஷனல் ஸ்பீச் பார்க்கலாம், மெடிடேஷன் பண்ணலாம்.

    தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் மூளைக்கும் உடலுக்கும் சக்தி கொடுக்கும். நேரம் இல்லை என்று சொல்லாமல் என் ஆரோக்கியத்திற்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். மாடி படி ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங், மாடியில் அல்லது வீட்டில் பேசி கொண்டே நடப்பது , குழந்தைகளுடன் விளையாடுவது, இப்படி பல நடவடிக்கைகள் நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும் மூளைக்கு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நடப்பதை உடற்பயிற்சி என்று சொல்வதை விட இது நம் உடலுக்கு தேவையான அசைவு என்று சொல்லலாம்.

    தேர்வு என்பது நீங்கள் ஒரு வருடமாக படித்த பாடத்தை படித்து எழுதுவதாகும்.. பின்பு இதற்கான மதிப்பீடுவழங்கப்படும். பள்ளியில் நிறைய திருப்புதல் தேர்வு வைத்து இருப்பார்கள். எந்த தலைப்பு உங்களுக்கு கடினமானதாக இருக்கிறதோ அதை மீண்டும் மீண்டும் எழுதிப்பாருங்கள். அல்லது முக்கிய வார்த்தையை நினைவில் வைத்து பயிற்சி செய்து பாருங்கள்.

    நீங்கள் உங்களாலான அனைத்து முயற்சியும் செய்து தேர்வை எழுத தயார் நிலையில் உள்ளீர்கள்.‘என்னால் முடியும்’ போன்ற தன்னம்பிக்கை வாசகத்தை அடிக்கடி மனதுக்குள் சொல்லி பாருங்கள். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து புன்னகையுடன் சொன்னால் இன்னும்புத்துணர்ச்சி உண்டாகும். பத்து வருடம் கழித்து உங்கள் மதிப்பென்களை யாரும் நினைவில் வைத்து இருக்க மாட்டார்கள். உங்களது நல்லொழுக்கம் தான் உங்களை வாழ்க்கையில் வெற்றி பெற உதவும்.

    தேர்வு எழுதும் விதிமுறைகள் மற்றும் அனைத்து தேவைகளையும் உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வு எழுதும் பள்ளியின் பாதையை முன்கூட்டியே சென்று நேரத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். பதினைந்து நிமிடம் முன்னதாகவே செல்வது பதட்டத்தை தவிர்க்கவும் மற்றும் நிதானமாக தேர்வை எதிர் கொள்ள உதவும்.

    தேர்வுக்கு படிக்கும் பொழுதும், தேர்வின் பொழுதும் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும்

    மற்றும் நேர்மறையான மனநிலை (positive mood) உண்டாகும். Self-affirmations காலையில் எழுந்ததும் சில சுய உறுதிமொழிகளை உங்களுக்குள் சொல்லி பழகுங்கள், உதாரணமாக :

    1. என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது, நான் தேர்வை நன்றாக எழுதுவேன்.
    2. என்னால் முடியும், என்னால் கண்டிப்பாக முடியும்
    3. புதிய நாள், புதிய வாய்ப்பு, புதிய தொடக்கம், இந்த நாள் இனிய நாள்
    vcopevandhana@gmail.com
    ×