என் மலர்
குழந்தை பராமரிப்பு
அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, தடுப்பூசிகள் இருக்கின்றனவா, என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கத்திரி வெயிலில் வருகிற அம்மை இப்போதே குழந்தைகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, இதற்குத் தடுப்பூசிகள் இருக்கின்றனவா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
வராமல் தடுக்க முடியுமா?
சின்னம்மை எனப்படுகிற சிக்கன்பாக்ஸால் பிரச்சனை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.
அவர்களை வற்புறுத்தியாவது நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள். தர்பூசணி மாதிரி சம்மர் சீசன் பழங்களைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான். சமையலில் நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.'
சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும். இந்த மாத்திரையைக் குழந்தைகளும் சாப்பிடலாம். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவும் கிடைக்கிறது.'
வராமல் தடுக்க முடியுமா?
சின்னம்மை எனப்படுகிற சிக்கன்பாக்ஸால் பிரச்சனை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.
அவர்களை வற்புறுத்தியாவது நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள். தர்பூசணி மாதிரி சம்மர் சீசன் பழங்களைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான். சமையலில் நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.'
சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும். இந்த மாத்திரையைக் குழந்தைகளும் சாப்பிடலாம். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவும் கிடைக்கிறது.'
பொதுவாகத் தட்டம்மை, பொன்னு வீங்கி போன்ற அம்மைகள் வராமல் தடுப்பதற்கு பிரைவேட் மருத்துவமனைகளில் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் என்றால் எம்.ஆர். தடுப்பூசி போடுகிறார்கள். ஒரு குழந்தையின் ஒன்பதாவது மாதத்திலேயே இந்தத் தடுப்பூசியைப் போடலாம். இதைத் தவிர, சிக்கன்பாக்ஸுக்கும் தடுப்பூசி இருக்கிறது. சிறு குழந்தைகள் என்றால், ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே போதும்.
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால், ஒரு மாதத்தில் இரண்டு டோஸ் கொடுக்க வேண்டும். வெறும் டோஸ் மட்டும் போட்டால் எதிர்ப்புசக்தி முழுமையாகக் கிடைக்காமல் சின்னம்மை வந்துவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கு மேலே சொன்ன தடுப்பூசிகளை போடப் போடுகிறீர்கள் என்றால், இவற்றைப் பற்றியெல்லாம் உங்கள் மருத்துவரிடம் தெளிவாக கேட்டு, பிறகு போட்டுக் கொள்ளலாம்.
இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும்.
இளைஞர்கள் நிறைந்த இந்திய நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது கல்வி. பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் நம் குழந்தைகள் வெற்றிபெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ.எஸ்.ஏ. என்ற அமைப்பு உலக அளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய ஓர் ஆய்வு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்கள்.
73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.
பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.
இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.
ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.
தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.
பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
73 நாடுகள் பங்கேற்ற அந்த ஆய்வில் நம் நாட்டின் தரவரிசை 72 ஆக இருந்தது. ஆகவே, பள்ளிக்கல்வியிலே நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண வேண்டும். தரத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
உலகிலேயே பள்ளிகளின் அதிக எண்ணிக்கை இது தான். இதிலே சுமார் 75 சதவீதம் அரசுப்பள்ளிகள், மற்றவை தனியார் பள்ளிகள். அரசுப்பள்ளிகளின் வெற்றிதான் நம் நாட்டு மாணவர்களின் கல்வித்தரத்தை முடிவு செய்யும். இதில் 3-ல் ஒரு பகுதி பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே படிக்கிறார்கள். அங்கே சராசரியாக இருக்க வேண்டிய எண்ணிக்கையைவிட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். மற்ற பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை அமர்த்துவது இல்லை.
பள்ளிக்கல்வியின் தர வரிசையில் உலகின் முதல் இடத்தில் இருப்பது தென்கொரியா. அந்த நாட்டில் ஆசிரியர்களுடைய தகுதியே மிக உயர்வானது. ஆசிரியர்களின் ஊதியம், அவர்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்கும் மதிப்பு அனைத்துமே வியக்கத்தக்கவை. ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களாக விண்ணப்பித்த எண்ணிக்கையில் சுமார் 5 சதவீதம் பேர்தான் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுமையான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சிக்கு பின்னர்தான் அவர்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இரண்டு தரப்புக்குமே அரசாங்க நிதியுதவி கிடைக்கிறது. சில பெற்றோர்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவியும் செய்கிறது. அவர்களுடைய வேலை நாட்களும், வேலை நேரமும் நம் நாட்டைவிட மிக அதிகம்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் குழந்தைகள் பள்ளியிலேயே இருப்பார்கள். பாதி நேரம் பொதுவான வகுப்புகளும் மீதி நேரம் தனி பயிற்சியும் நடக்கிறது. நம் நாட்டில் ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படுவது இல்லை. அதிலே ஒரு பகுதியினர்; பயிற்சி மையங்களுக்கு செல்லாமலேயே சான்றிதழ் பெறக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
இது அரசுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. ஆசிரியர்களை அரசு வேலைக்கு அமர்த்துவது எல்லா நேரங்களிலும் தகுதியை மட்டுமே வைத்து அமர்த்துவது இல்லை. ஆசிரியர் ஆவதற்கு பணச்செலவு செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிபட்டவர்கள் பள்ளியில் சேர்ந்த பின்னால் வேறு ஏதாவது தொழில் செய்து பணத்தை ஈட்ட முனைகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளைப் பற்றிய ஓர் ஆய்வில், ஆசிரியர்கள் சுமார் பாதிபேர் வேலைக்கு வருவது இல்லை என்று தெரியவருகிறது. மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரும் நாட்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனாலும் அரசின் கொள்கை முடிவுப்படி 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களும் மேல் வகுப்பிற்கு தகுதி பெற்றுவிடுகிறார்கள். இந்த முடிவு கல்வித்தரத்தையே கேள்வி குறியாக்கிவிட்டது. அமெரிக்க நாட்டில் அரசுப்பள்ளிகளை உள்ளாட்சிகள் நடத்துகின்றன. எந்தப் பள்ளி சிறப்பாக நடைபெறுகிறதோ அந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக குடியேறுகிறார்கள். அவர்கள் மூலம் அந்த உள்ளாட்சிக்கு வரித்தொகை அதிகமாக கிடைக்கிறது. இதன்விளைவாக உள்ளாட்சிகள் தங்களுக்குள் போட்டிபோட்டு பள்ளிகளை திறமையாக நடத்தி தரத்தை உயர்த்துகின்றனர்.
இன்னொருபுறம் ஒரு புதுமையாக சார்ட்டர் பள்ளிகள் என்று ஒன்றை அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களின் மாத ஊதியத்தை மாநில அரசுகள் கொடுக்கும். ஆனால் நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற சார்ட்டர் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக வளர்ந்து வருகின்றன. நம் நாட்டிலும் அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் தருணம் வந்துவிட்டது. அரசு அலுவலர்களும் மற்றும் அரசு ஊழியர்களும் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் அரசின் கவனம் அரசு பள்ளிகளின் பக்கம் திரும்பும்.
ஆசிரியர்களின் பயிற்சி முறையை இன்னும் பலப்படுத்த வேண்டும், கடுமையாக்க வேண்டும். அரசில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதியை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்ய வேண்டும். பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு இந்த மூன்றிலேயும் ஊழல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறையில்லாமல் செய்து தர வேண்டும். திறமையான நிர்வாகத்திற்கு புதிதாக வழிவகை செய்ய வேண்டும்.
தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசு எந்த உதவியும் செய்வது இல்லை. 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்று சட்டம் இயற்றி இருந்தாலும் தனியார் பள்ளிக்கு இது பொருந்தாது. 14-லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட வேண்டும். தனியார் பள்ளிக்கும், அங்கு படிக்கும் குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். தற்போது நம் நாட்டில் பல்வேறு அனுமதிகள் பெறுவதற்காக பள்ளிகள் நிறைய பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது. இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் கல்விச் செலவைக் குறைக்கலாம். தனியார் பள்ளிகளில் தகுதி உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவது இல்லை. இதை மாற்றுவதற்கு மாநில அரசுகள் தனியார் நிர்வாகங்களுடன் கலந்து பேசி ஆவன செய்ய வேண்டும். பள்ளிக்கல்வியில் உலக அளவில் சிறந்து விளங்கும் தென்கொரியா மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு நம்முடைய குழுக்களை அனுப்பி அவர்களுடைய அனுபவத்தை கண்டறிந்து நாம் கடைபிடிக்க வேண்டும்.
பின்லாந்து நாட்டைப்போல் கல்விக் கொள்கையை போல் நிரந்தர நிலை ஏற்படுத்துவதற்காக அரசும், எதிர்க்கட்சியும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். மக்களாட்சி மாண்புற வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் காண வேண்டுமானால் கல்விக்கு அதிகமான தொகையை செலவழித்து வளர்ந்த நாடுகளுடன் நாமும் போட்டிபோட வேண்டும். அப்போது நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ஜி.விஸ்வநாதன் வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்
வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு அடித்தளம் அமைத்துத்தருவது பெற்றோர்களின் கடமை என்பதில் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, தண்டனைகள் தருவது, அதனால் மனதளவில் தானும் காயமடைந்து, பிள்ளைகளையும் காயப்படுத்தி, பின் வருத்தப்படுவது என பழைய பாரம்பரியமான ஒழுக்கமுறையே கடைபிடிக்கிறார்கள். இவர்களெல்லாம் எதிர்மறை ஒழுக்கமுறைக்கு உதாரணம் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.
Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?
பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.
நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது. இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…
நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.
பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.
வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
Positive Discipline கொள்கைகள் நம் நாட்டு குழந்தைகளிடம் எப்படி நடைமுறைப்படுத்துவது?
பாசிட்டிவ் டிசிப்ளின் என்பது நல்ல விஷயம்தான். நம் நாட்டிற்கு ஒத்துவருமா என்று பார்க்க வேண்டும். அவர்களது கலாச்சாரத்தில் குறிப்பிட்ட வயதுக்குமேல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்து வாழ்வதில்லை. குழந்தையிலிருந்தே தற்சார்புடன் வாழக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு சில குழந்தைகளிடம் இந்த அணுகுமுறை செல்லுபடியாகும். எல்லா குழந்தைகளிடமும் செல்லாது. இன்னிக்கு பார்த்தால், நிறைய குழந்தைகள் சுயநலமாக இருக்கிறார்கள்.
நாம் சுயநலமாக இருக்கிறோம் என்பதை உணர்வதும் இல்லை. ‘என்னைத் தாண்டிதான் மற்றவை எல்லாம்’ என்று நினைக்கிறார்கள். அதற்கு தனிக்குடித்தன முறையா அல்லது சமூக மாற்றமா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் எப்போதுமே கனிவாக நடந்து கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. கண்டிப்பு ஒன்றுதான் மருந்தாக இருக்கிறது. இருந்தாலும் அதன் அடிப்படையில் சில விஷயங்களை கடைபிடிக்கலாம்…
நீண்ட நாள் கடைபிடிக்க வேண்டிய ஒரு பழக்கத்தை குழந்தையிடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம் என்றால், அதை நாம் பக்கத்திலிருந்து மெதுவாக புரியும்படி சொல்லித் தரவேண்டும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் நன்மை, அதனால் மற்றவர்களுக்கு என்ன நன்மை, அதை செய்யாமலிருந்தால் ஏற்படும் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைச் சரியாக செய்துவிட்டால், சின்னதாக பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
ஒரு பொருளை கேட்கும்போது எடுத்தவுடன் ‘நோ’ சொன்னால் கண்டிப்பாக அப்செட் ஆகிவிடுவார்கள். ஒரு 10 வயது பையன் லேப்டாப் கேட்கிறான் என்றால், அது அவனுக்குத் தேவையா? தேவையில்லையா என உணர வைக்க முயற்சி செய்யலாம். எடுத்தவுடன் வாங்கிக் கொடுத்துவிட்டாலும், அதன் மதிப்பை அவன் உணரமாட்டான்.
பெற்றோரைத்தான் குழந்தைகள் உதாரணமாகப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்கள் குழந்தை செய்யக்கூடாது என்று நினைத்தால், அதை நீங்கள் செய்யக்கூடாது. நல்ல நடத்தைகளை வளர்க்க, குழந்தை செய்யும் நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்த தொடங்குங்கள்.
வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சமூகம் என முத்தரப்பிலும் குழந்தைகள் விஷயத்தில் நேர்மறையாக அணுகுமுறை இருந்தால் நிச்சயம் ஒரு ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை வளர்க்க முடியும்.
இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பார் அப்பர். ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக மாணவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும்.
ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.
செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.
நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.
இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும்.
ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.
செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.
நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.
இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும்.
குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக் கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.
வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.
வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம்.
கோடை, கத்தரி வெயில்போல காட்டமாக வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. சிறுவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. மீதி மாணவர்களுக்கும் இன்னும் சில நாட்களே பள்ளி இயங்க இருக்கிறது. பின்னர் விடுமுறைதான். குட்டீஸ், நீங்கள் எல்லாரும் விடுமுறை என்றாலே குதூகலமாகிவிடுவீர்கள்தானே? கோடையில் நீங்கள் எங்கே செல்ல திட்டமிட்டு இருக்கிறீர்கள்? சுற்றுலாவுக்கா, உறவினர் வீட்டிற்கா, இல்லை கோடை பயிற்சி வகுப்புகளுக்கா? எங்கு சென்றாலும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியம். கோடை வெயிலின் கடுமை பற்றியும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்வோம்...
வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.
ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.
நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.

வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.
வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.
வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்!
வெயிலில் அலைந்தால்தானே நமக்குப் பாதிப்பு என்றுதான் பலரும் எண்ணுவோம். ஆனால் கோடையின் உக்கிரம் என்பது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவும் உடல் வெப்பம் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. உடல் சூடு, சரும பாதிப்புகள், அதிக வியர்வை, உடல் அசதி என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்லும்.
கோடை வெப்பத்தால் ஏற்படும் சோர்வு உங்களை எளிதில் களைப்படைய வைத்துவிடும் குட்டீஸ். எனவே வெயிலிலும், வெப்பம் நிறைந்த இடங்களிலும் நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் பிற விஷயங்களுக்காக நண்பர்களுடன்/ தோழிகளுடன் வெயிலில் திரிவது தவறாகும். குறிப்பாக உச்சி வெயலில் கண்டிப்பாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் அதிகமாக சுற்றுவதால் ஏற்படும் களைப்பு சிலரை மயக்கத்தில் தள்ளிவிடும் என்பதால் கவனம் தேவை. சக தோழர்களோடு விளையாடும்போது மயக்கமடைந்தால் அவர்களும் திகைப்படைவார்கள். முதலுதவி பற்றி யாருக்கும் தெரியாவிட்டால் சிக்கலாகிவிடும். எனவே விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், உடம்பு களைத்துவிட்டது தெரிந்தால், அதிகமாக தாகம் எடுப்பதை உணர்ந்தால் விளையாட்டிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நிழலில் இளைப்பாறுங்கள். தண்ணீர் மற்றும் பழரச பானங்களை பருகி உடலுக்கு தெம்பூட்டுங்கள்.
ஒருவேளை உங்களுடன் விளையாடும் தோழன்-தோழி யாராவது மயக்கமடைந்தால் உடனே அருகில் உள்ள பெரியோர்களின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள். பெற்றோருக்கும் தகவல் தெரிவியுங்கள். முடிந்தவரை, ஆள்நடமாட்டம் இல்லாத கண்மாய், காடுகளில் விளையாடுவதை தவிர்த்துவிடுங்கள். நிழல் நிறைந்த இடங்களில், வீட்டிற்கு அருகிலேயே விளையாடுங்கள்.
நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தாலும் வெயிலின் தாக்கம், உங்களை பாதிக்கலாம். தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் விளையாடுவதால், அந்த வெப்பம் தலைவலியை ஏற்படுத்தலாம். சருமத்தில் சுருக்கங்களையும், அதிகமான வியர்வை வெளியேற்றத்தையும் உண்டாக்கலாம். இதனால் தோல் வெளிறிப் போவதுண்டு. சிலருக்கு சருமம் கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நேர்மாறாக உடலின் சூடு குறைந்துவிடுவதும் உண்டு. நாக்கு வறட்சி அடிக்கடி ஏற்படும்.

வெயிலில் திரிந்து திரும்பியபின்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீர் அதிகமான மஞ்சள் நிறத்துடன் வெளியேறினால் கவனிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி ஏற்படுவது மஞ்சள் காமாலை பாதிப்பை குறிக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
வெயிலினால் வியர்வை மற்றும் சிறுநீருடன் சேர்த்து உப்புக்களும் வெளியேறுவது, களைப்புக்கு காரணமாகும். இதை ஈடு செய்ய தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். அல்லது எலுமிச்சை சாறுடன், உப்பு சேர்த்து பருகலாம். இனிப்பு தேவைப்படுபவர்கள் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டின் உள்ளே இருந்தாலும் சிறுகுழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும். வியர்க்குரு உள்ளிட்ட சரும பாதிப்புகள் ஏற்படும். உயரம் குறைவாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும். வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் அழுவது, சருமத்தை சொரிந்து கொண்டி ருப்பது, சுறுசுறுப்பாக விளையாடாமல் முடங்கிவிடுவது, சிறுநீரில் மாற்றங்கள் தெரிவது போன்ற நடவடிக்கைகள் தெரிந்தால் குழந்தையின் தாயார் அதிக கவனமாக குழந்தையை பராமரிக்க வேண்டும்.
வெப்பத்தை தணிப்பதற்காக சுகாதாரமற்ற வகையில் தயாரித்து விற்கப்படும் சர்பத் மற்றும் ஜூஸ்களை குடிக்க வேண்டாம். குளிர்பானங்களையும் தவிர்க்கலாம்.
வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குச் சென்றால், கைகால்களை கழுவாமல் எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டால், வெயிலில் திரியாமல், தனியறையில் இருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சின்னம்மை, மஞ்சள் காமாலை பாதிப்புகளுக்கு மருந்தும், சிகிச்சையும் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெயில் உயிர்களுக்கு பலவிதங்களில் நன்மை செய்கிறது. கோடை வெயிலாலும் பல நன்மைகள் உண்டு. ஆனாலும் கோடை வெயிலால் உடல் நிலையில் தாக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக விளையாட வேண்டும். சரியா குட்டீஸ்!
குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.
குழந்தைகளின் வளர்திறன் நிலைகளில் - சமூக உரையாடலிலும், மனசீரொழுக்க நிலையிலும் ஏற்படும் பிறழ்ச்சியே “ஆட்டிசம்” எனப்படும் தற்காதல் நிலையாகும்.
சராசரியாக மற்ற குழந்தைகள் போல் உடல் வளர்ச்சியிலும், புழக்கத்திலும் எந்த தடுமாற்றமும் இல்லாத இந்த குழந்தைகளில், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதில் தடங்கலும், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்யும் “வார்ப்பு ஓழுக்க நிலையும்’, மிக நுண்ணிய கவனச்சார்பும் பிரதான மாற்றங்களாக காணப்படுகிறது. இவ்வகை நிகழ்வுகளால் வயதொத்த குழுமத்துடன் பழகும் முறையின்மை, மேலும் சமூக ஆற்றல் குறைப்பாடும் ஏற்படுகிறது. நோய் என்ற விளக்கத்தினுள் இவர்கள் அமைந்தாலும், இவர்களில் காணப்படும் சில அதீத திறன், இவர்களை வளர்திறன் மாற்றுத்திறனாளிகளாகவே வகைபடுத்த முடிகிறது.
ஆட்டிசம் வரக் காரணம் என்ன?
குறிப்பான காரணிகளை இதுவரை ஆதாரத்துடன் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆட்டிசம், மரபணு சார்ந்த நேர்ச்சியுள்ள குழந்தைகள் அதற்கு ஏதுவான சூழ்நிலையில் வளரும் பொழுது வெளிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணுக்காரணிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் “மேல்மரபியல்” இதற்கான பதிலை கூற வாய்புள்ளதாக அறியப்படுகிறது. மேல் மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின்- டி.என்.ஏ. வரிசையில் -எந்தவித மாற்றமும் இல்லாமலேயே ஒருசில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின் போது வெளிப்படுவதைக் குறிக்கிறது.
எப்பொழுது கண்டுபிடிக்க வேண்டும்?
எந்த ஒரு பிரச்சனையும் போல் ஆரம்பத்திலேயே கண்டறிய முற்படுவதே ஆட்டிஸம் பிரச்சனைக்கும் நல்லது. ஆனால், குறிப்பிட்ட வயது வரும் வரை அதன் அறிகுறிகள் தெளிவாக பிரித்து காணப்படுவது இல்லை. பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு, 12 முதல் 24 மாதங்களுக்குள், சூழ்நிலை கவனச்சிதறலும், சமூகத்தொடர்புக்கு குழந்தை எடுக்கும் முயற்சிகளில் சோர்வும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்த வயதினினும் குறைவாக கண்டுபிடிக்க, வளர்திறன் மருத்துவரின் வாயிலாக பார்த்தால் மட்டுமே முடியும்.
அதாவது, 2 வயது முடிந்த ஒரு குழந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர், சுமார் ஒரு மாதமாக மட்டுமே இது போன்ற மாற்றத்தை காண்பதாக கூறினாலும், குழந்தையை அடிக்கடி வீடியோ பதிவு செய்யும் இந்த காலத்தில், அந்த பதிவுகளை வளர்திறன் மருத்துவர் பார்க்கும் பொழுது கணிசமான மாற்றங்கள் 1 வயது முடிந்தவுடனேயே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
1 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஆட்டிஸம் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க ஆதாரபூர்வமான முறைமைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. ஆனால் அக்குடும்பத்தில் உள்ள வேறு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், வளர்திறன் குழந்தைகள் மருத்துவரின் கண்காணிப்பு மிக அவசியம்.
ஏன் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்?
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆட்டிஸம் பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு விரைவாக கண்டுபிடித்து பயிற்சிகளை துவக்குகிறோமோ அவ்வளவு துல்லியமாக முன்னேற்றங்களை காணமுடிகிறது. சமீப கால மருத்துவ அறிவியல் பதிவுகளில், சமூக தொடர்பு குறைபாடு மட்டும் கொண்ட குழந்தைகளுக்கு, ஆட்டிஸம் என்று முழுமையாக அறியப்படும் முன்னமே, பயிற்சியை துவங்கினாலும் நன்மையே பயத்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்பு கண்டறிய, அனைத்து குழந்தைகளுக்கும், 15 மாதம் முதல் 30 மாதம் முடிய வி-சிபிகிஜி எனப்படும் வினாநிரலை பயன்படுத்துவது சிறந்த முறையாகும். இதனை செயல்படுத்த எந்த ஒரு குழந்தைகள் மருத்துவரின் வெளிநோயாளிகள் காத்திருக்கும் நேரத்திலும் மேற்சொன்ன வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் பதிலுரைத்து விடலாம். குறிப்பாக ஆட்டிஸம் பாதிப்பு உறுதி செய்வதற்கான சிறப்பு கருவிகளில் (Diagnostic tools) பயிற்சி பெற்ற குழந்தைகள் வளர்திறன் மருத்துவரிடமே உங்களுக்கான சரியான பதில் கிடைக்கும்.
இதை சரி செய்ய உள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் யாவன?
ஆட்டிசம் ஒரு பேச்சு மற்றும் பேசும் தொடர்பு சார்ந்த மனத் தகைமை சீர்குலைவு பிரச்சனை. ஆகையால், முதல் நிலை சிகிச்சை முறை, தகைமை மற்றும் வாய்மொழி / வாய்மொழி அல்லாத சமூகத் தொடர்பு நிலையை உயர்த்தும் நோக்கத்தில் இருக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் கூட இந்த வகை பயிற்சியை அளிக்க முடியும். இருப்பினும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஏதுவான சூழலும் கற்றலுக்கு அவசியம் என்பதால், அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் கொண்டு செய்வதே நல்லது.
குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுக்கான தேவைகளை கேட்பதற்கும், தானே செய்து கொள்வதற்குமான பயிற்சியை தொழில் வழி சிகிச்சை முறைகள் மூலம் தர முடியும். தவிர இந்த குழந்தைகளில் சிலருக்கு சராசரியாக வெளியுலகம் தரும் வெளிச்சம், ஓலி, மற்றும் தொடுபுலன்சார் வேண்டாநிலை இருப்பின் அதனை களையும் தனித்துவ சிகிச்சை முறையையும் பயன்படுத்த வேண்டும்.
மருந்து மூலமாக ஆட்டிசம் நோயை குணபடுத்த முடியாது என்றாலும், ஐந்து வயதிற்கு மேல் சில மருந்துகள் சக நோயுற்ற நிலைகளில், இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் ஆதாரபூர்வமான சிறந்த சிகிச்சை முறைகள் என்ன?
ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த, அதிக முன்னேற்றத்தை கொடுத்துள்ள சிகிச்சை முறை “அப்ளைட் பிஹேவியர் அனாலிசிஸ்” (Applied Behavioural Analysis-ABA).. இந்த வகை சிகிச்சை அளிப்பவர்கள் உண்மையில் பயிற்சி பெற்றவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ள, உலக நாடுகள் வாரியாக அங்கீகாரம் பெற்றவர்களின் நிரலை இணையதளத்தில் காணலாம்
(<https://www.bacb.com/services/o.php?page=100155>)
எதை வைத்து சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பது?
ஆட்டிஸம் ஒரு அலைநிரல் தொகுப்பான சுகவீனம். அதாவது spectrum disorder என ஆங்கிலத்தில் கூறுவர். இதன் காரணம், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளின் முதல் நிலை அறிகுறிகளும், பின்னர் அவர்களின் இயற்கையான வளர்ச்சிப் போக்கும்- ஒரே குழந்தைக்குள்ளான தனிதிறன்களிலும், ஒரு வயதை உடைய பல்வேறு குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுதும், கணிசமான அளவில் மாறுபட்டு இருக்கும். இதனால் எல்லா ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. இவ்வகை சிகிச்சைகளின்அளவும், நோக்கமும் ஓவ்வொரும் குழந்தைக்கும் வேறுபடுமாதலால், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. அதனை கண்டறிந்து சரியான “தனித்துவ பயிற்சித் திட்டம்” குழந்தைகள் வளர்திறன் சிறப்பு மருத்துவர் மட்டுமே அளிக்க முடியும்.
இந்த சிகிச்சை முறையின் திருத்தியமைக்கப்பட்ட பரிமாணங்களும் உள்ளன. அவையாவன...
· எளிய பாடங்களும், நேரிடை வலுவூட்டலும் கலந்த பயிற்சி.
· கற்றலுக்கு, வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத தொடர்பை மேம்படுத்தும் பயிற்சி.
· ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான தகைமை பயிற்சி.
· வாய்மொழித் திறன் மேம்படுத்தும் பயிற்சி.
· விளையாட்டு வழிப் பயிற்சிகள்.
ஆட்டிசம் குழந்தைகளின் அதீத சக்தி
பல நேரங்களில், ஏன்!... அனேகமாக நாம் அனைவருமே பேசத் தெரிந்திருப்பதனால் இவ்வுலகை ஆள தகுதி பெற்றோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். பேசும் சக்தி மற்ற உயிரினங்களிடமிருந்து மனித குலத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது. ஆனால், சற்றே கூர்ந்து நோக்கினால் இந்த பேசும் சக்தி இல்லாத உயிரினங்கள் இயற்கையோடு இசைந்து தன் இன வளர்ச்சிக்கும், இயற்கையின் சமநிலைக்கும் சிறந்த வகையில் பங்காற்றியுள்ளன.....ஆனால் நம்மால், அதனை சிதைக்கவே முடிந்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்புள்ளானவர்களின் ஆக்க சக்தி அவர்களின் பார்வை வழி கற்றலில் உள்ளது. உலகின் பல திறன் சோதனை முறைகளில், வாய்மொழி சோதனைகளே பிரதானம். சைகை முறை / வாய்மொழி அல்லாத சோதனை வழி கண்டறியப்பட்ட திறன் அளவில் சராசரி மனிதர்களை விட ஆட்டிசம் பாதிப்பு உள்ள பெரியவர்கள் ஓங்கியிருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது. ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கு அகன்ற பகுப்பாய்வு சார் மூளைத்திறன் அதிகம். அறிவியல் ஆராய்ச்சி உலகில் ஆட்டிசம் உள்ளோர் சிறந்து விளங்கும் வாய்ப்பு உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டிசம் ஒரு குறைதானா? என்ற சந்தேகமே மேலோங்கியிருக்கறது. செவிக்குறை, பார்வைக்குறை மற்றும் பிற உடற்குறையுள்ளோரை அணைத்து தன்னுள் எடுத்துக் கொண்ட சமூகமே முற்போக்கு சிந்தனை உள்ள சமூகம். அவ்வகையில், ஆட்டிசம் உள்ளோரை உயரிய இடத்தில் இவ்வுலகம் போற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை....!
சராசரியாக மற்ற குழந்தைகள் போல் உடல் வளர்ச்சியிலும், புழக்கத்திலும் எந்த தடுமாற்றமும் இல்லாத இந்த குழந்தைகளில், மற்றவர்களோடு தொடர்பு கொள்வதில் தடங்கலும், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்யும் “வார்ப்பு ஓழுக்க நிலையும்’, மிக நுண்ணிய கவனச்சார்பும் பிரதான மாற்றங்களாக காணப்படுகிறது. இவ்வகை நிகழ்வுகளால் வயதொத்த குழுமத்துடன் பழகும் முறையின்மை, மேலும் சமூக ஆற்றல் குறைப்பாடும் ஏற்படுகிறது. நோய் என்ற விளக்கத்தினுள் இவர்கள் அமைந்தாலும், இவர்களில் காணப்படும் சில அதீத திறன், இவர்களை வளர்திறன் மாற்றுத்திறனாளிகளாகவே வகைபடுத்த முடிகிறது.
ஆட்டிசம் வரக் காரணம் என்ன?
குறிப்பான காரணிகளை இதுவரை ஆதாரத்துடன் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆட்டிசம், மரபணு சார்ந்த நேர்ச்சியுள்ள குழந்தைகள் அதற்கு ஏதுவான சூழ்நிலையில் வளரும் பொழுது வெளிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணுக்காரணிகள் குறிப்பிடப்படவில்லை என்றாலும் “மேல்மரபியல்” இதற்கான பதிலை கூற வாய்புள்ளதாக அறியப்படுகிறது. மேல் மரபியல் என்பது பிறக்கும் குழந்தை உயிரியின்- டி.என்.ஏ. வரிசையில் -எந்தவித மாற்றமும் இல்லாமலேயே ஒருசில பண்புகள் அக்குழந்தையின் வளர்ச்சியின் போது வெளிப்படுவதைக் குறிக்கிறது.
எப்பொழுது கண்டுபிடிக்க வேண்டும்?
எந்த ஒரு பிரச்சனையும் போல் ஆரம்பத்திலேயே கண்டறிய முற்படுவதே ஆட்டிஸம் பிரச்சனைக்கும் நல்லது. ஆனால், குறிப்பிட்ட வயது வரும் வரை அதன் அறிகுறிகள் தெளிவாக பிரித்து காணப்படுவது இல்லை. பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு, 12 முதல் 24 மாதங்களுக்குள், சூழ்நிலை கவனச்சிதறலும், சமூகத்தொடர்புக்கு குழந்தை எடுக்கும் முயற்சிகளில் சோர்வும் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இந்த வயதினினும் குறைவாக கண்டுபிடிக்க, வளர்திறன் மருத்துவரின் வாயிலாக பார்த்தால் மட்டுமே முடியும்.
அதாவது, 2 வயது முடிந்த ஒரு குழந்தையின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பெற்றோர், சுமார் ஒரு மாதமாக மட்டுமே இது போன்ற மாற்றத்தை காண்பதாக கூறினாலும், குழந்தையை அடிக்கடி வீடியோ பதிவு செய்யும் இந்த காலத்தில், அந்த பதிவுகளை வளர்திறன் மருத்துவர் பார்க்கும் பொழுது கணிசமான மாற்றங்கள் 1 வயது முடிந்தவுடனேயே இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
1 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் ஆட்டிஸம் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க ஆதாரபூர்வமான முறைமைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. ஆனால் அக்குடும்பத்தில் உள்ள வேறு ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், வளர்திறன் குழந்தைகள் மருத்துவரின் கண்காணிப்பு மிக அவசியம்.
ஏன் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்?
“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆட்டிஸம் பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு விரைவாக கண்டுபிடித்து பயிற்சிகளை துவக்குகிறோமோ அவ்வளவு துல்லியமாக முன்னேற்றங்களை காணமுடிகிறது. சமீப கால மருத்துவ அறிவியல் பதிவுகளில், சமூக தொடர்பு குறைபாடு மட்டும் கொண்ட குழந்தைகளுக்கு, ஆட்டிஸம் என்று முழுமையாக அறியப்படும் முன்னமே, பயிற்சியை துவங்கினாலும் நன்மையே பயத்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்பு கண்டறிய, அனைத்து குழந்தைகளுக்கும், 15 மாதம் முதல் 30 மாதம் முடிய வி-சிபிகிஜி எனப்படும் வினாநிரலை பயன்படுத்துவது சிறந்த முறையாகும். இதனை செயல்படுத்த எந்த ஒரு குழந்தைகள் மருத்துவரின் வெளிநோயாளிகள் காத்திருக்கும் நேரத்திலும் மேற்சொன்ன வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர் பதிலுரைத்து விடலாம். குறிப்பாக ஆட்டிஸம் பாதிப்பு உறுதி செய்வதற்கான சிறப்பு கருவிகளில் (Diagnostic tools) பயிற்சி பெற்ற குழந்தைகள் வளர்திறன் மருத்துவரிடமே உங்களுக்கான சரியான பதில் கிடைக்கும்.
இதை சரி செய்ய உள்ள மருத்துவ சிகிச்சை முறைகள் யாவன?
ஆட்டிசம் ஒரு பேச்சு மற்றும் பேசும் தொடர்பு சார்ந்த மனத் தகைமை சீர்குலைவு பிரச்சனை. ஆகையால், முதல் நிலை சிகிச்சை முறை, தகைமை மற்றும் வாய்மொழி / வாய்மொழி அல்லாத சமூகத் தொடர்பு நிலையை உயர்த்தும் நோக்கத்தில் இருக்க வேண்டும். ஆரம்ப பள்ளிகளில் கூட இந்த வகை பயிற்சியை அளிக்க முடியும். இருப்பினும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஏதுவான சூழலும் கற்றலுக்கு அவசியம் என்பதால், அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள் கொண்டு செய்வதே நல்லது.
குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுக்கான தேவைகளை கேட்பதற்கும், தானே செய்து கொள்வதற்குமான பயிற்சியை தொழில் வழி சிகிச்சை முறைகள் மூலம் தர முடியும். தவிர இந்த குழந்தைகளில் சிலருக்கு சராசரியாக வெளியுலகம் தரும் வெளிச்சம், ஓலி, மற்றும் தொடுபுலன்சார் வேண்டாநிலை இருப்பின் அதனை களையும் தனித்துவ சிகிச்சை முறையையும் பயன்படுத்த வேண்டும்.
மருந்து மூலமாக ஆட்டிசம் நோயை குணபடுத்த முடியாது என்றாலும், ஐந்து வயதிற்கு மேல் சில மருந்துகள் சக நோயுற்ற நிலைகளில், இப்பொழுது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அறிவியல் ஆதாரபூர்வமான சிறந்த சிகிச்சை முறைகள் என்ன?
ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த, அதிக முன்னேற்றத்தை கொடுத்துள்ள சிகிச்சை முறை “அப்ளைட் பிஹேவியர் அனாலிசிஸ்” (Applied Behavioural Analysis-ABA).. இந்த வகை சிகிச்சை அளிப்பவர்கள் உண்மையில் பயிற்சி பெற்றவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ள, உலக நாடுகள் வாரியாக அங்கீகாரம் பெற்றவர்களின் நிரலை இணையதளத்தில் காணலாம்
(<https://www.bacb.com/services/o.php?page=100155>)
எதை வைத்து சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பது?
ஆட்டிஸம் ஒரு அலைநிரல் தொகுப்பான சுகவீனம். அதாவது spectrum disorder என ஆங்கிலத்தில் கூறுவர். இதன் காரணம், இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளின் முதல் நிலை அறிகுறிகளும், பின்னர் அவர்களின் இயற்கையான வளர்ச்சிப் போக்கும்- ஒரே குழந்தைக்குள்ளான தனிதிறன்களிலும், ஒரு வயதை உடைய பல்வேறு குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுதும், கணிசமான அளவில் மாறுபட்டு இருக்கும். இதனால் எல்லா ஆட்டிஸம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. இவ்வகை சிகிச்சைகளின்அளவும், நோக்கமும் ஓவ்வொரும் குழந்தைக்கும் வேறுபடுமாதலால், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை தர முடியாது. அதனை கண்டறிந்து சரியான “தனித்துவ பயிற்சித் திட்டம்” குழந்தைகள் வளர்திறன் சிறப்பு மருத்துவர் மட்டுமே அளிக்க முடியும்.
இந்த சிகிச்சை முறையின் திருத்தியமைக்கப்பட்ட பரிமாணங்களும் உள்ளன. அவையாவன...
· எளிய பாடங்களும், நேரிடை வலுவூட்டலும் கலந்த பயிற்சி.
· கற்றலுக்கு, வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத தொடர்பை மேம்படுத்தும் பயிற்சி.
· ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கான தகைமை பயிற்சி.
· வாய்மொழித் திறன் மேம்படுத்தும் பயிற்சி.
· விளையாட்டு வழிப் பயிற்சிகள்.
ஆட்டிசம் குழந்தைகளின் அதீத சக்தி
பல நேரங்களில், ஏன்!... அனேகமாக நாம் அனைவருமே பேசத் தெரிந்திருப்பதனால் இவ்வுலகை ஆள தகுதி பெற்றோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். பேசும் சக்தி மற்ற உயிரினங்களிடமிருந்து மனித குலத்தை உயர்த்தி காட்டியிருக்கிறது. ஆனால், சற்றே கூர்ந்து நோக்கினால் இந்த பேசும் சக்தி இல்லாத உயிரினங்கள் இயற்கையோடு இசைந்து தன் இன வளர்ச்சிக்கும், இயற்கையின் சமநிலைக்கும் சிறந்த வகையில் பங்காற்றியுள்ளன.....ஆனால் நம்மால், அதனை சிதைக்கவே முடிந்திருக்கிறது.
ஆட்டிசம் பாதிப்புள்ளானவர்களின் ஆக்க சக்தி அவர்களின் பார்வை வழி கற்றலில் உள்ளது. உலகின் பல திறன் சோதனை முறைகளில், வாய்மொழி சோதனைகளே பிரதானம். சைகை முறை / வாய்மொழி அல்லாத சோதனை வழி கண்டறியப்பட்ட திறன் அளவில் சராசரி மனிதர்களை விட ஆட்டிசம் பாதிப்பு உள்ள பெரியவர்கள் ஓங்கியிருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது. ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கு அகன்ற பகுப்பாய்வு சார் மூளைத்திறன் அதிகம். அறிவியல் ஆராய்ச்சி உலகில் ஆட்டிசம் உள்ளோர் சிறந்து விளங்கும் வாய்ப்பு உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்டிசம் ஒரு குறைதானா? என்ற சந்தேகமே மேலோங்கியிருக்கறது. செவிக்குறை, பார்வைக்குறை மற்றும் பிற உடற்குறையுள்ளோரை அணைத்து தன்னுள் எடுத்துக் கொண்ட சமூகமே முற்போக்கு சிந்தனை உள்ள சமூகம். அவ்வகையில், ஆட்டிசம் உள்ளோரை உயரிய இடத்தில் இவ்வுலகம் போற்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை....!
பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள்.
மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பள்ளி விடுமுறை காலம் வந்துவிட்டது. ஆனால் இந்த இரண்டு மாதங்கள் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த மாணவர்களுக்கு சில நாட்களிலேயே சலிப்பு தட்டியிருக்கும். எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை விட சிரமமானது எதுவும் இல்லை என்பது மாணவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டால் அது பள்ளிகளுக்குத்தான் விடுமுறையன்றி, கல்வி கற்பதற்கும், கொண்டாடுவதற்கும் விடுமுறையல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பல வித்தைகளை கற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்ட காலம். எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் விடுமுறை நாட்களில் ஒரு தமிழ் நாளிதழையும் ஒரு ஆங்கில நாளிதழையும் தவறாமல் படித்துவிட வேண்டும். நாகரிக மக்களின் அடையாளமே அவர்கள் உலக நிகழ்வுகளை தெரிந்திருப்பார்கள் என்பதுதான்.
உலகநாடுகள், உலக மக்கள்தொகை பெருக்கம் உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக வரலாறு, உலக வர்த்தகம், உலக தத்துவங்கள், உலக தொழில்நுட்பம் என்று உலகளாவிய விஷயங்களை தெரிந்தவர் தான் சமூகத்தில் முழு மனிதனாக மதிக்கப்படுகிறார். ஆனால் உலக அறிவு இல்லாத ஒரு மாணவன், நாகரிகம் எட்டிப்பார்க்காத காடுகளில் வாழும் கற்கால மனிதனுக்கு சமமாக கருதப்படுவார். செய்தித்தாள் படிக்காத சென்டினல் என்ற பழங்குடி மக்கள் இன்னும் அந்தமான் தீவுகளில் வாழ்கிறார்கள்.
அவர்களை பேட்டி காணச்சென்ற ஜான் ஆலன் சா என்ற அமெரிக்க செய்தியாளரைக் கொன்று கடலில் வீசிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் செய்தித்தாள் வாசிப்பது இல்லை. எனவே உலக நடப்பு நிலவரங்கள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தெரிந்த செய்திகள் எல்லாம் அந்த தீவில் பெய்த மழையும், அடித்த வெயிலும் உள்ள செடிகளும், கொடிகளும், மிருகங்களும்தான்.
பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் நேரம் இருந்திருக் காது. அதுவும் தீவிரமாக படிக்கும் மாணவர்களுக்கு நேரம் இருக்கவே இருக்காது. ஆனால் விடுமுறை நாட்களில் அதற்கான நேரம் நிச்சயம் இருக்கும். பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு மணிநேரம் ஓட்டபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இறகு பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்று வழக்கமாக விளையாடும் குழந்தைகள் கூட ஒரு மணிநேரம் ஓடியாக வேண்டும். பெற்றோர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலை ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்யத்தொடங்கலாம். சில வாரங்களுக்குப் பிறகு ஓடலாம். குடும்பமாக காலையில் ஓடினால் ஒரு குழு உணர்வை வீட்டில் ஏற்படுத்த முடியும். குடும்ப ஆரோக்கியம் பேணவும் அது உதவும்.
பிறநாட்டு மொழிகள் கற்றுக்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாதத்தில் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற பிறநாட்டு மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்க மாணவர்கள் முயற்சி செய்யலாம். இன்று ஆன்லைன் மொழிக்கல்வி வசதி இருக்கிறது. அது இலவசமாக கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு மொழி கல்வி இயற்கையாகவே வந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பல மொழிகளை ஒரே நேரத்தில் கற் கவும் முடியும். ஓரளவுக்கு புலமை பெற்றபின் அயல்நாடுகளுக்குச் சென்று நமது தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பும் இந்தப் பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் துறையில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது
சில மாணவர்களுக்கு கலை மீது தீராத ஆர்வம் இருக்கும். இசைக்கருவி வாசித்தல், பாடுதல், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் போன்ற கலைகளில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி எடுக்க சிறந்த நேரம் அடுத்த 60 நாட்கள். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் இளம் நெறியாளர்கள் இப்படி பயற்சி எடுத்தவர்கள்தான்.
எல்லா பெற்றோருக்கும் தேசிய கடமை ஒன்று உண்டு. அது குழந்தைகளுக்கு தரவேண்டிய அறிவியல் கல்வி. அறிவியலை கற்று சரியாக புரிந்துகொண்ட மக்கள் வாழும் நாடுகள் மட்டும்தான் இன்று சிறந்து விளங்குகின்றன. அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், சம நீதியையும், சம மரியாதையையும் வழங்க முன் வந்திருக்கிறார்கள். அறிவியல் சரியாக கற்ற மக்கள், சக மனிதனையும் பிற உயிரினங்களையும், கடலையும், காடுகளையும், மலைகளையும், நதிகளையும் உண்மையிலேயே நேசிக்கிறான். அவர்கள்தான் இயற்கையை பாதுகாக்க உண்மையான அக்கறையும் காட்டுகிறார்கள். மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திவிட்டார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வகையிலான அறிவியல் நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். இன்று அதற்கான ‘என்செக்கிளேப்பீடியா’ என்ற நூல்கள் வந்துவிட்டன. அவற்றை பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்களில் வாங்கித்தாருங்கள். அறிவியல் ஆர்வத்தை தட்டி எழுப்பினால் அந்த மாணவன் தானாகவே படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு அவனது அறிவியல் வேட்கையையும், அறிவியல் வளர்ச்சியையும் யாராலும் தடுத்து விட முடியாது.
மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் நாம் மாணவர்களுக்கு திணிக்கக் கூடாது. அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். விடுமுறைக்கால கல்விப்பயிற்சி அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் செய்பவையாகவும் அவர்கள் விரும்பும் காலத்தில் செய்வதுமாக இருத்தல் வேண்டும். எதையாவது ஒரு நல்ல காரியத்தை செய்து முடித்துவிட்டால் பெற்றோர்கள் அந்த பிள்ளையை பாராட்ட வேண்டும். ஒரு அற்புதமான கலையை 50 நாட்களில் கற்றுக்கொண்டால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதைப் போல சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச்செல்லலாம். நீங்கள் பிறந்த ஊருக்கு உங்கள் குழந்தையை அழைத்துச்சென்று நீங்கள் வாழ்ந்த சூழ்நிலையை விளக்கிக் கூறலாம்.
ஒரு கடினமான சாகச பயணமாக ஒரு மலை மீது ஏறலாம். 50 கி.மீட்டர் தூரம் நடக்கலாம். வெகு துரத்திற்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.
புனித ஜார்ஜ் கோட்டை, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற வரலாற்று பிரசித்திப்பெற்ற இடங்கள், இயற்கை எழில்மிக்க உயிரியல் பூங்காவிற்கு போய் வரலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாதலங்களுக்கு சென்று வரலாம்.
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு விடுமுறையில் நீச்சல் கற்றுத்தருவது சாலச்சிறந்தது. அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு முப்பது நாட்கள் அனுப்பி வைத்தால் குழந்தை நீச்சல் கற்றுக்கொள்ளும். அதன் பின்னர் நீர்நிலைகளை பார்த்தால் ஏற்படும் அச்சம் அகன்றுவிடும். மிருக காட்சி சாலை, காவல் நிலையம், ரெயில் நிலையம் என்று குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டலாம். அருங்காட்சியகத்திற்கும் மீன் காட்சியகத்திற்கும், கோளரங்கத்திற்கும் அவசியம் அழைத்துச்செல்ல வேண்டும்.
பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள். பல அடிப்படை கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நாட்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னதுபோல கோடாரியை தீட்ட வேண்டிய நாட்கள். எதிர்காலத்தில் மாணவச்செல்வங்கள் படைக்கப்போகும் சாதனைக்கு இந்த நாட்களில் உங்களது உடலையும், உள்ளத்தையும் பட்டை தீட்ட பயன்படுத்துங்கள்.
முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை இயக்குனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டால் அது பள்ளிகளுக்குத்தான் விடுமுறையன்றி, கல்வி கற்பதற்கும், கொண்டாடுவதற்கும் விடுமுறையல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பல வித்தைகளை கற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்ட காலம். எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் விடுமுறை நாட்களில் ஒரு தமிழ் நாளிதழையும் ஒரு ஆங்கில நாளிதழையும் தவறாமல் படித்துவிட வேண்டும். நாகரிக மக்களின் அடையாளமே அவர்கள் உலக நிகழ்வுகளை தெரிந்திருப்பார்கள் என்பதுதான்.
உலகநாடுகள், உலக மக்கள்தொகை பெருக்கம் உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக வரலாறு, உலக வர்த்தகம், உலக தத்துவங்கள், உலக தொழில்நுட்பம் என்று உலகளாவிய விஷயங்களை தெரிந்தவர் தான் சமூகத்தில் முழு மனிதனாக மதிக்கப்படுகிறார். ஆனால் உலக அறிவு இல்லாத ஒரு மாணவன், நாகரிகம் எட்டிப்பார்க்காத காடுகளில் வாழும் கற்கால மனிதனுக்கு சமமாக கருதப்படுவார். செய்தித்தாள் படிக்காத சென்டினல் என்ற பழங்குடி மக்கள் இன்னும் அந்தமான் தீவுகளில் வாழ்கிறார்கள்.
அவர்களை பேட்டி காணச்சென்ற ஜான் ஆலன் சா என்ற அமெரிக்க செய்தியாளரைக் கொன்று கடலில் வீசிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் செய்தித்தாள் வாசிப்பது இல்லை. எனவே உலக நடப்பு நிலவரங்கள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தெரிந்த செய்திகள் எல்லாம் அந்த தீவில் பெய்த மழையும், அடித்த வெயிலும் உள்ள செடிகளும், கொடிகளும், மிருகங்களும்தான்.
பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் நேரம் இருந்திருக் காது. அதுவும் தீவிரமாக படிக்கும் மாணவர்களுக்கு நேரம் இருக்கவே இருக்காது. ஆனால் விடுமுறை நாட்களில் அதற்கான நேரம் நிச்சயம் இருக்கும். பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு மணிநேரம் ஓட்டபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இறகு பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்று வழக்கமாக விளையாடும் குழந்தைகள் கூட ஒரு மணிநேரம் ஓடியாக வேண்டும். பெற்றோர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலை ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்யத்தொடங்கலாம். சில வாரங்களுக்குப் பிறகு ஓடலாம். குடும்பமாக காலையில் ஓடினால் ஒரு குழு உணர்வை வீட்டில் ஏற்படுத்த முடியும். குடும்ப ஆரோக்கியம் பேணவும் அது உதவும்.
பிறநாட்டு மொழிகள் கற்றுக்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாதத்தில் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற பிறநாட்டு மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்க மாணவர்கள் முயற்சி செய்யலாம். இன்று ஆன்லைன் மொழிக்கல்வி வசதி இருக்கிறது. அது இலவசமாக கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு மொழி கல்வி இயற்கையாகவே வந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பல மொழிகளை ஒரே நேரத்தில் கற் கவும் முடியும். ஓரளவுக்கு புலமை பெற்றபின் அயல்நாடுகளுக்குச் சென்று நமது தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பும் இந்தப் பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் துறையில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது
சில மாணவர்களுக்கு கலை மீது தீராத ஆர்வம் இருக்கும். இசைக்கருவி வாசித்தல், பாடுதல், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் போன்ற கலைகளில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி எடுக்க சிறந்த நேரம் அடுத்த 60 நாட்கள். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் இளம் நெறியாளர்கள் இப்படி பயற்சி எடுத்தவர்கள்தான்.
எல்லா பெற்றோருக்கும் தேசிய கடமை ஒன்று உண்டு. அது குழந்தைகளுக்கு தரவேண்டிய அறிவியல் கல்வி. அறிவியலை கற்று சரியாக புரிந்துகொண்ட மக்கள் வாழும் நாடுகள் மட்டும்தான் இன்று சிறந்து விளங்குகின்றன. அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், சம நீதியையும், சம மரியாதையையும் வழங்க முன் வந்திருக்கிறார்கள். அறிவியல் சரியாக கற்ற மக்கள், சக மனிதனையும் பிற உயிரினங்களையும், கடலையும், காடுகளையும், மலைகளையும், நதிகளையும் உண்மையிலேயே நேசிக்கிறான். அவர்கள்தான் இயற்கையை பாதுகாக்க உண்மையான அக்கறையும் காட்டுகிறார்கள். மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திவிட்டார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வகையிலான அறிவியல் நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். இன்று அதற்கான ‘என்செக்கிளேப்பீடியா’ என்ற நூல்கள் வந்துவிட்டன. அவற்றை பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்களில் வாங்கித்தாருங்கள். அறிவியல் ஆர்வத்தை தட்டி எழுப்பினால் அந்த மாணவன் தானாகவே படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு அவனது அறிவியல் வேட்கையையும், அறிவியல் வளர்ச்சியையும் யாராலும் தடுத்து விட முடியாது.
மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் நாம் மாணவர்களுக்கு திணிக்கக் கூடாது. அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். விடுமுறைக்கால கல்விப்பயிற்சி அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் செய்பவையாகவும் அவர்கள் விரும்பும் காலத்தில் செய்வதுமாக இருத்தல் வேண்டும். எதையாவது ஒரு நல்ல காரியத்தை செய்து முடித்துவிட்டால் பெற்றோர்கள் அந்த பிள்ளையை பாராட்ட வேண்டும். ஒரு அற்புதமான கலையை 50 நாட்களில் கற்றுக்கொண்டால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதைப் போல சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச்செல்லலாம். நீங்கள் பிறந்த ஊருக்கு உங்கள் குழந்தையை அழைத்துச்சென்று நீங்கள் வாழ்ந்த சூழ்நிலையை விளக்கிக் கூறலாம்.
ஒரு கடினமான சாகச பயணமாக ஒரு மலை மீது ஏறலாம். 50 கி.மீட்டர் தூரம் நடக்கலாம். வெகு துரத்திற்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.
புனித ஜார்ஜ் கோட்டை, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற வரலாற்று பிரசித்திப்பெற்ற இடங்கள், இயற்கை எழில்மிக்க உயிரியல் பூங்காவிற்கு போய் வரலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாதலங்களுக்கு சென்று வரலாம்.
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு விடுமுறையில் நீச்சல் கற்றுத்தருவது சாலச்சிறந்தது. அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு முப்பது நாட்கள் அனுப்பி வைத்தால் குழந்தை நீச்சல் கற்றுக்கொள்ளும். அதன் பின்னர் நீர்நிலைகளை பார்த்தால் ஏற்படும் அச்சம் அகன்றுவிடும். மிருக காட்சி சாலை, காவல் நிலையம், ரெயில் நிலையம் என்று குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டலாம். அருங்காட்சியகத்திற்கும் மீன் காட்சியகத்திற்கும், கோளரங்கத்திற்கும் அவசியம் அழைத்துச்செல்ல வேண்டும்.
பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள். பல அடிப்படை கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நாட்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னதுபோல கோடாரியை தீட்ட வேண்டிய நாட்கள். எதிர்காலத்தில் மாணவச்செல்வங்கள் படைக்கப்போகும் சாதனைக்கு இந்த நாட்களில் உங்களது உடலையும், உள்ளத்தையும் பட்டை தீட்ட பயன்படுத்துங்கள்.
முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை இயக்குனர்.
பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும்.
இன்று (ஏப்ரல் 2-ந்தேதி) சர்வதேச குழந்தைகள் புத்தகதினம்.
உலக ஆசிரியர் தினம், உலகப் பெற்றோர் தினம்போல குழந்தைகள் புத்தக தினம் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புதிய குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் உருவாக வாய்ப்பாகவும் அமையும். சீன மொழியிலோ, ரஷிய மொழியிலோ, ஆங்கில மொழியிலோ குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி அபாரமானது.
தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சியோ குழந்தை படைப்பாளிகளின் வளர்ச்சியோ அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஏற்படும்வரை தமிழில் குழந்தை இலக்கியம் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் பிசி என்னும் விடுகதைகள் மட்டுமே குழந்தைகளுக்கானவையாக, குழந்தைகள் விரும்புகின்றவையாக இருந்தன எனலாம். அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய பாடல்கள் குழந்தைகளுக்கு அறம் பயிற்றுவிக்கும் பாடல்களாக இருந்தன. இவற்றைக் குழந்தைகளுக்கான பாடல்களாகக் கொள்ள இயலாது.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு முதலிய குழந்தைப் பாடல்களை எழுதினார். அதே காலத்தில் பாரதியாரும் ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற ஒரே ஒரு பாடலை குழந்தைப் பாடலாக எழுதி தமிழ்நாட்டுக் குழந்தைகளைத் தன்வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் எழுதிய பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள். குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகள் விரும்பும் பாடல்கள்.
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கா.நமசிவாய முதலியார் போன்றவர்கள் குழந்தைப் பாடல்கள் எழுதினாலும் குழந்தைகளைக் கவரும் பாடல்களை எழுதிக் குவித்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவே ஆவார். மாமரத்தில் ஏறலாம் மாங்காயைப் பறிக்கலாம் என்று எழுதத் தொடங்கியவர் பாடலை முடிக்கும்பொழுது குழந்தைகளை மயக்கும் மாயாஜாலம் காட்டுகிறார்.
வாழை மரத்தில் ஏறலாம் என்றால் அடுத்த அடி வாழைக்காயைப் பறிக்கலாம் என்றுதான் நமக்குச் சொல்லத் தோன்றும். வள்ளியப்பா பாடலை முடிக்கும் நேர்த்தியைப் பாருங்கள்.
வாழை மரத்தில் ஏறலாம் வழுக்கி வழுக்கி விழுகலாம்என்று எழுதியிருக்கிறார். இதைப் படிக்கின்ற குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
வள்ளியப்பா குழந்தைகள் விரும்பும் பாடல்களை எழுதினார். வள்ளியப்பா எழுதிய பாடலைப் படித்த குழந்தை, வள்ளியப்பா போலவே பாடல் எழுதும் வகையில் பாடல்களைப் படைத்தவர் அவர்.
வள்ளியப்பா எழுதிய பாடல் நில் நில் நில் நில்லாவிட்டால் உடனே ஓடிச் செல் செல் செல், புல் புல் புல், புல்லைப் பிடுங்கி வயலை உழுதால், நெல் நெல் நெல்இதைப் படித்து ரசித்துக் குதிக்காத பிள்ளைகளே இருக்க முடியாது.
வள்ளியப்பா ஒருமுறை கொத்தமங்கலம் சுப்புவைப் பார்க்கப் போயிருந்தார். வா வா வா வள்ளியப்பா என்று வரவேற்றவர் “உன்னால் மட்டும்தான் குழந்தைப் பாடல் எழுத முடியுமா? எங்கள் வீட்டுப் பேரனும் பாடல் எழுதியிருக்கிறான் கேள்” என்று சொல்லிவிட்டு “டேய் வந்து பாடுடா” என்றார். பாட்டி பாட்டி பாட்டி, பாட்டி சேலையை ரெண்டாக் கிழிச்சா, வேட்டி வேட்டி வேட்டி என்று அந்தப் பையன் பாடியதைக் கேட்டு மலைத்துப் போய்விட்டார் வள்ளியப்பா.இப்படிப்பட்ட பாடல்கள்தான் குழந்தைப் பாடல்களின் இலக்கணம்.
குழந்தை இலக்கியப் படைப்பாளி என்பவன் குழந்தைகளோடு ஓடி ஆடி குழந்தைகள் பேசுவதைப் பேசி குழந்தையாக மாறினால்தான் தரமான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும்.
தமிழ்வழிக் கல்விதான் நாற்பதுகள் தொடங்கி எண்பதுவரை தமிழ்நாட்டில் இருந்தது. எண்பதுகளுக்குப் பின் ஆங்கிலவழிக் கல்வி மோகம் ஏற்பட்டு தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போல் கிளம்பி வளர தமிழ் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலை. யாரும் சட்டம் போட்டுப் புறக்கணிக்கவில்லை. தானாகவே புறக்கணிக்கப்பட்டு தமிழ்வழிக் கல்வி சரிந்தது. பிள்ளைகளுக்கு பாடம் தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கத் தவறினோம். வாரம் ஒருமுறை நூல்நிலைய வகுப்பு ஒன்று இருக்கும். அப்போது பிள்ளைகள் நூல்நிலையம் சென்று கதை வரலாறு பாடல் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவ்வளவாக இருக்கவில்லை. மேலைநாடுகளில் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க நிறைய செலவழிக்கிறார்கள். சிறுவயது முதலே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்தான் மக்கள் அறிவு வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் போற்றி வாங்கப்படும்.
வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர்களின் படைப்புகள் வெளிவர பதிப்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழந்தைப் புத்தகங்கள் நிறைய வெளிவர உழைத்தார். அவர் காலத்தில் குழந்தை இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம். ஆனால் தற்போதைய நிலை கவலைக்குரியது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை வைத்து மட்டும் புத்தகங்கள் வெளிவருவது குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.
பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும். குழந்தை இலக்கிய வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. புத்தகங்களை குழந்தைகளுக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்தும் நேர்த்தி முக்கியமானது. உடல் மொழி, குரல் இனிமை, நிகழ்வை நடித்துக்காட்டிச் சொல்லும் பாங்கு, இவற்றால் அந்தப் புத்தகத்தின் வீச்சு மேம்பட வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவில் தொடக்கப்பள்ளிகளிலேயே பிள்ளைகளைக் குழந்தைப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தில் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
வயதுக்கேற்ற வகையில் நூல்நிலையங்களில் புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். வயதுக்கேற்ற வகையில் எனது பாடல்களை மூன்று முதல் எட்டு வயது, 9 முதல் 11 வயது, 12 முதல் 16 வயது என வகைப்படுத்தி வயதுக்கேற்ற பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன். இப்படி வகைப்படுத்துவதால் அந்தந்த வயதுப் பிரிவினருக்கேற்ற புத்தகங்களை அவர்களிடம் போய்ச்சேரச் செய்யலாம்.
இந்தக் குழந்தைகள் புத்தக தினத்தில் ஒன்றை நம் நினைவில் கொள்ள வேண்டும்.
படிப்பது அறிவு வளர்ச்சிக்கு. ஏட்டுக்கல்வி அறிவை வளர்க்கலாம். பண்பை, அன்பை வளர்ப்பது இலக்கியங்கள் மட்டுமே. பெற்றோர்கள் நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மிகச்சிறந்த இலக்கியங்களை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். படைப்பாளிகள் குழந்தைகள் விரும்புகிற அவர்களைப் பண்படுத்துகிற தரமான இலக்கியங்களைப் படைத்துத் தரவேண்டும். சிறுவயதில் வாசிக்கும் பழக்கத்தைப் படியவிட்டால் வாழ்க்கையின் இறுதிவரை வாசிக்கின்ற பழக்கம் நம்மை விட்டு விலகாது. நிறையப் படிப்போம். பண்பை வளர்ப்போம். அன்பைப் பகிருவோம். இதுவே குழந்தை இலக்கியப் பயன்பாட்டின் உச்சம்.
குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, சென்னை.
உலக ஆசிரியர் தினம், உலகப் பெற்றோர் தினம்போல குழந்தைகள் புத்தக தினம் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புதிய குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் உருவாக வாய்ப்பாகவும் அமையும். சீன மொழியிலோ, ரஷிய மொழியிலோ, ஆங்கில மொழியிலோ குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி அபாரமானது.
தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சியோ குழந்தை படைப்பாளிகளின் வளர்ச்சியோ அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஏற்படும்வரை தமிழில் குழந்தை இலக்கியம் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் பிசி என்னும் விடுகதைகள் மட்டுமே குழந்தைகளுக்கானவையாக, குழந்தைகள் விரும்புகின்றவையாக இருந்தன எனலாம். அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய பாடல்கள் குழந்தைகளுக்கு அறம் பயிற்றுவிக்கும் பாடல்களாக இருந்தன. இவற்றைக் குழந்தைகளுக்கான பாடல்களாகக் கொள்ள இயலாது.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு முதலிய குழந்தைப் பாடல்களை எழுதினார். அதே காலத்தில் பாரதியாரும் ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற ஒரே ஒரு பாடலை குழந்தைப் பாடலாக எழுதி தமிழ்நாட்டுக் குழந்தைகளைத் தன்வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் எழுதிய பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள். குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகள் விரும்பும் பாடல்கள்.
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கா.நமசிவாய முதலியார் போன்றவர்கள் குழந்தைப் பாடல்கள் எழுதினாலும் குழந்தைகளைக் கவரும் பாடல்களை எழுதிக் குவித்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவே ஆவார். மாமரத்தில் ஏறலாம் மாங்காயைப் பறிக்கலாம் என்று எழுதத் தொடங்கியவர் பாடலை முடிக்கும்பொழுது குழந்தைகளை மயக்கும் மாயாஜாலம் காட்டுகிறார்.
வாழை மரத்தில் ஏறலாம் என்றால் அடுத்த அடி வாழைக்காயைப் பறிக்கலாம் என்றுதான் நமக்குச் சொல்லத் தோன்றும். வள்ளியப்பா பாடலை முடிக்கும் நேர்த்தியைப் பாருங்கள்.
வாழை மரத்தில் ஏறலாம் வழுக்கி வழுக்கி விழுகலாம்என்று எழுதியிருக்கிறார். இதைப் படிக்கின்ற குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
வள்ளியப்பா குழந்தைகள் விரும்பும் பாடல்களை எழுதினார். வள்ளியப்பா எழுதிய பாடலைப் படித்த குழந்தை, வள்ளியப்பா போலவே பாடல் எழுதும் வகையில் பாடல்களைப் படைத்தவர் அவர்.
வள்ளியப்பா எழுதிய பாடல் நில் நில் நில் நில்லாவிட்டால் உடனே ஓடிச் செல் செல் செல், புல் புல் புல், புல்லைப் பிடுங்கி வயலை உழுதால், நெல் நெல் நெல்இதைப் படித்து ரசித்துக் குதிக்காத பிள்ளைகளே இருக்க முடியாது.
வள்ளியப்பா ஒருமுறை கொத்தமங்கலம் சுப்புவைப் பார்க்கப் போயிருந்தார். வா வா வா வள்ளியப்பா என்று வரவேற்றவர் “உன்னால் மட்டும்தான் குழந்தைப் பாடல் எழுத முடியுமா? எங்கள் வீட்டுப் பேரனும் பாடல் எழுதியிருக்கிறான் கேள்” என்று சொல்லிவிட்டு “டேய் வந்து பாடுடா” என்றார். பாட்டி பாட்டி பாட்டி, பாட்டி சேலையை ரெண்டாக் கிழிச்சா, வேட்டி வேட்டி வேட்டி என்று அந்தப் பையன் பாடியதைக் கேட்டு மலைத்துப் போய்விட்டார் வள்ளியப்பா.இப்படிப்பட்ட பாடல்கள்தான் குழந்தைப் பாடல்களின் இலக்கணம்.
குழந்தை இலக்கியப் படைப்பாளி என்பவன் குழந்தைகளோடு ஓடி ஆடி குழந்தைகள் பேசுவதைப் பேசி குழந்தையாக மாறினால்தான் தரமான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும்.
தமிழ்வழிக் கல்விதான் நாற்பதுகள் தொடங்கி எண்பதுவரை தமிழ்நாட்டில் இருந்தது. எண்பதுகளுக்குப் பின் ஆங்கிலவழிக் கல்வி மோகம் ஏற்பட்டு தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போல் கிளம்பி வளர தமிழ் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலை. யாரும் சட்டம் போட்டுப் புறக்கணிக்கவில்லை. தானாகவே புறக்கணிக்கப்பட்டு தமிழ்வழிக் கல்வி சரிந்தது. பிள்ளைகளுக்கு பாடம் தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கத் தவறினோம். வாரம் ஒருமுறை நூல்நிலைய வகுப்பு ஒன்று இருக்கும். அப்போது பிள்ளைகள் நூல்நிலையம் சென்று கதை வரலாறு பாடல் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவ்வளவாக இருக்கவில்லை. மேலைநாடுகளில் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க நிறைய செலவழிக்கிறார்கள். சிறுவயது முதலே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்தான் மக்கள் அறிவு வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் போற்றி வாங்கப்படும்.
வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர்களின் படைப்புகள் வெளிவர பதிப்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழந்தைப் புத்தகங்கள் நிறைய வெளிவர உழைத்தார். அவர் காலத்தில் குழந்தை இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம். ஆனால் தற்போதைய நிலை கவலைக்குரியது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை வைத்து மட்டும் புத்தகங்கள் வெளிவருவது குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.
பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும். குழந்தை இலக்கிய வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. புத்தகங்களை குழந்தைகளுக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்தும் நேர்த்தி முக்கியமானது. உடல் மொழி, குரல் இனிமை, நிகழ்வை நடித்துக்காட்டிச் சொல்லும் பாங்கு, இவற்றால் அந்தப் புத்தகத்தின் வீச்சு மேம்பட வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவில் தொடக்கப்பள்ளிகளிலேயே பிள்ளைகளைக் குழந்தைப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தில் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.
வயதுக்கேற்ற வகையில் நூல்நிலையங்களில் புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். வயதுக்கேற்ற வகையில் எனது பாடல்களை மூன்று முதல் எட்டு வயது, 9 முதல் 11 வயது, 12 முதல் 16 வயது என வகைப்படுத்தி வயதுக்கேற்ற பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன். இப்படி வகைப்படுத்துவதால் அந்தந்த வயதுப் பிரிவினருக்கேற்ற புத்தகங்களை அவர்களிடம் போய்ச்சேரச் செய்யலாம்.
இந்தக் குழந்தைகள் புத்தக தினத்தில் ஒன்றை நம் நினைவில் கொள்ள வேண்டும்.
படிப்பது அறிவு வளர்ச்சிக்கு. ஏட்டுக்கல்வி அறிவை வளர்க்கலாம். பண்பை, அன்பை வளர்ப்பது இலக்கியங்கள் மட்டுமே. பெற்றோர்கள் நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மிகச்சிறந்த இலக்கியங்களை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். படைப்பாளிகள் குழந்தைகள் விரும்புகிற அவர்களைப் பண்படுத்துகிற தரமான இலக்கியங்களைப் படைத்துத் தரவேண்டும். சிறுவயதில் வாசிக்கும் பழக்கத்தைப் படியவிட்டால் வாழ்க்கையின் இறுதிவரை வாசிக்கின்ற பழக்கம் நம்மை விட்டு விலகாது. நிறையப் படிப்போம். பண்பை வளர்ப்போம். அன்பைப் பகிருவோம். இதுவே குழந்தை இலக்கியப் பயன்பாட்டின் உச்சம்.
குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, சென்னை.
விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு அண்டை அயலார் மற்றும் உறவினர்களிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் கூடி விளையாட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதில் ஈடுபட வேண்டும்.
செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்து கொண்டு மாணவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. அது மாணவர்களிடம் மனஅழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பொழுதுபோக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விட்டு மாணவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மாணவ- மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசு மற்றும் உணவு உள்பட எந்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எங்கு செல்கிறேன்? எவ்வளவு நேரமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மறக்காமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் நடந்த சுவையான, சோகமான நிகழ்வுகள் என்று எது இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது. வீட்டினரின் ஆதரவோடு தான் மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை சொன்னால் தான் அதற்கான தீர்வுகளை பெரியவர்கள் காண முடியும்.
எந்த தவறையும் மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் விடு முறையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளையும் முறையாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்து கொண்டு மாணவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. அது மாணவர்களிடம் மனஅழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பொழுதுபோக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விட்டு மாணவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மாணவ- மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசு மற்றும் உணவு உள்பட எந்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எங்கு செல்கிறேன்? எவ்வளவு நேரமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மறக்காமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் நடந்த சுவையான, சோகமான நிகழ்வுகள் என்று எது இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது. வீட்டினரின் ஆதரவோடு தான் மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை சொன்னால் தான் அதற்கான தீர்வுகளை பெரியவர்கள் காண முடியும்.
எந்த தவறையும் மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் விடு முறையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளையும் முறையாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள்.
நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.
குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.
இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.

குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.
பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.
இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
வாய் பராமரிப்பை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே சொல்லித்தர வேண்டியது அவசியம். சொத்தைப் பல் இருந்தால் நீங்களாகவே சிகிச்சை எடுக்காமல் பல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. இன்று சொத்தைப் பல்லை அடைப்பது உட்பட பல்வேறு நவீன பல் மற்றும் வாய் சீரமைப்புச் சிகிசைகள் புழக்கத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொண்டு பல் மற்றும் வாயைச் சீரமைக்கலாம். கண் பார்வைக் குறைபாடு அளவுக்கு அதிகமான செல்போன், டி.வி, கணிப்பொறி பயன்பாடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு, ஃபோட்டோ போபியா போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.
இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.

குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.
பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.
இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
வாய் பராமரிப்பை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே சொல்லித்தர வேண்டியது அவசியம். சொத்தைப் பல் இருந்தால் நீங்களாகவே சிகிச்சை எடுக்காமல் பல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. இன்று சொத்தைப் பல்லை அடைப்பது உட்பட பல்வேறு நவீன பல் மற்றும் வாய் சீரமைப்புச் சிகிசைகள் புழக்கத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொண்டு பல் மற்றும் வாயைச் சீரமைக்கலாம். கண் பார்வைக் குறைபாடு அளவுக்கு அதிகமான செல்போன், டி.வி, கணிப்பொறி பயன்பாடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு, ஃபோட்டோ போபியா போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.
அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.
பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.
பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.
பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.
பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.






