என் மலர்
குழந்தை பராமரிப்பு
கோடை விடுமுறையில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
கோடை விடுமுறையில் ஒரு வாரமோ, இரு வாரங்களோ பிள்ளைகளுடன் மகிழ்ச்சியோடு எங்கேனும் சென்றுவர வேண்டும் என்றும் நினைப்பீர்கள் அல்லவா! அதற்கான திட்டமிடலில் நீங்கள் அவசியம் செய்யக்கூடாதவை பற்றிப் பார்ப்போம்.
1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.
2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.
3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.
4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.
5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள்.
1. முதலில் திட்டமிடுவது பெற்றோரான உங்களின் வேலை மட்டும்தான் எனும் நினைப்பிலிருந்து வெளியே வாருங்கள். ஏனெனில், இந்தக் கோடை விடுமுறை உங்களின் பிள்ளைகளுக்கானது. எனவே, அவர்கள் எவ்வாறு செலவழிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பின்பு, குடும்பத்தினர் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஆலோசித்து விடுமுறைக்கான திட்டமிடலை முடிவுசெய்யுங்கள்.
2. ஆலோசனை செய்கிறேன் என்று அங்கு உங்களின் கருத்தைக் கடுமையாக வற்புறுத்தாதீர்கள். குடும்பத் தலைவர் எனும் முறையில் உங்கள்மீது மதிப்பும் சிறு அச்சமும் பிள்ளைகளுக்கு இருக்கக்கூடும். அதனால், நீங்கள் சொல்வதை மறுத்துப்பேச முடியாத நிலையில் இருக்கலாம். அவ்விதம் நிகழாத வண்ணம் நெகிழ்வான உரையாடலாக அமையட்டும்.
3. வெளியூர் செல்வது என முடிவெடுத்துவிட்டீர்கள் எனில், அங்கும் பாடப் புத்தகங்களை எடுத்துவர வேண்டும் என்ற விதியை உருவாக்காதீர்கள். அது, சுற்றுலா செல்லும் மனநிலையைக் கெடுத்துவிடலாம். சுற்றுலாவுக்கு வரவில்லை என்றும்கூட பிள்ளைகள் கூறிவிடலாம். ஒருவேளை, பிள்ளைகள் தாங்களாகவே பாடப் புத்தகங்களை எடுத்துவந்தால் அதற்கும் தடை போட வேண்டும்.
4. வெளியூர் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கும் இடம், உறவினர் வீடாகவோ அதன் அருகே இருக்கும் சுற்றுலா தளமாகவோ இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். பிள்ளைகள் பார்ப்பதற்கு விரும்பும் இடங்களாகத் தேர்வு செய்வதே நல்லது. அப்போதே, சுற்றுலா மகிழ்ச்சியோடு அமையும்.
5. கோடை விடுமுறையைக் கழிக்க வெளியூர் செல்வதுதான் ஒரே வழி என்று நினைத்துவிடவும் வேண்டாம். பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டே நண்பர்களோடு புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால், மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கள். உள்ளூரில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பிள்ளைகள் கூறினால், அங்கும் அழைத்துச் செல்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள்.
இவை தவிர, சுற்றுலா செல்லும்போது தன் நண்பர் யாரையாவது அழைத்துவருவதாக உங்கள் பிள்ளை சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் எனக் கறார்தனம் காட்டாதீர்கள். பிள்ளையின் நண்பரின் பெற்றோரோடு பேசி, அவரை அழைத்துச் செல்ல அனுமதிபெறுங்கள். முடிந்தால் இரு குடும்பங்களும் இணைந்து செல்வது இன்னும் சிறப்பானது. சுற்றுலா சென்றதுக்கான நினைவுகளை ஏந்தி வருவதற்கு தயாராகச் செல்லுங்கள்.
பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.
இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.
இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.
இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.
இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது. குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.
இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.
இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது. குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.
முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைப்பது இன்னமும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதுபற்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கல்வி முறை பற்றி விரிவாக கூறியிருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.
இதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும், 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.
மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
இந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.
முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இது இந்திய கல்வித்துறையின் குறைபாடுதான். சில வேளைகளில் பணத்தின் அளவு கல்லூரியின் உண்மையான கட்டணத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஒரு கோடி மாணவர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இருப்பதோ 20,769 கல்லூரிகளும் 490 பல்கலைக்கழகங்களும்தான். இதில்தான் ஒரு கோடி மாணவர்களும் சேருவதற்கு போட்டி போடுகிறார்கள். இந்த கல்லூரிகளிலும் சில மட்டும்தான் அதற்கான தகுதியை பெற்றிருக்கின்றன. மற்றவையெல்லாம் பெயரளவுக்குத்தான் கல்லூரிகள். இந்த நிலை பொதுவான பாடங்களுக்கு மட்டும்தான்.
இதுவே தொழில்நுட்பக்கல்வி மற்றும் மருத்துவக் கல்வி என்று வருகிறபோது நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு வருடத்திற்கு 32,000 மருத்துவர்களும், 5 லட்சம் என்ஜினீயர்களும் தான் பட்டம் பெற முடியும். இதனால் ஏராளமான பணம் தருபவர்கள் மட்டுமே நன்கொடை கொடுத்து படிக்க முடியும்.
மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். ஆனால், பட்ட மேற்படிப்பு படிக்க இருக்கும் இடங்களோ 5 லட்சத்து 41 ஆயிரம் மட்டும்தான். நான்கில் ஒருவரே பட்டமேற்படிப்பை பெறமுடிகிறது. தேவை, வினியோகம் என்ற பொருளாதார கோட்பாட்டின்படி பார்த்தால் பட்டப்படிப்புக்கும் ரூ.10 லட்சம் செலவாகிறது என்றால் பட்ட மேற்படிப்புக்கு மேலும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
இந்தியாவில் நன்கொடை மிக அதிகம் என்பதால் இதே படிப்பை வெளிநாடுகளில் படிக்க மாணவர்கள் விருப்பப்படுகிறார்கள். அங்கு இந்தியாவைவிட குறைந்த செலவில் பட்டம் பெற முடியும் என்பதே இதற்கு காரணம். இந்த நிலை மாற கல்லூரிகளில் போதுமான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெரும் முதலீட்டில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தரமான கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை பெறுவதற்கே பணம் செலவழிக்க வேண்டியிருப்பது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வு.
முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல் கல்வியை அரசாங்கமே இலவசமாக தரும் நிலை இந்தியாவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும். நான்கு வழிச்சாலை, புல்லட் ரெயில் என்று கோடிக்கணக்கான பணத்தை திட்டங்களுக்காக செலவழிக்கும் அளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கும் நாடான இந்தியாவில் கல்வியை இலவசமாக கொடுப்பதும் சாத்தியமே என்கிறது அந்த ஆய்வு.
தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவின் போது வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக்கிடப்பதையும் அக்கம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.
குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.
21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.
இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.
காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.
தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் அ.முகமது அப்துல்காதர்,
முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,
மதுராந்தகம்.
தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.
குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.
21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.
இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.
காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.
தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் அ.முகமது அப்துல்காதர்,
முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,
மதுராந்தகம்.
மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
நாம், கோடையில், வெப்பம் குறைவாக இருக்கும் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறோம். தண்ணீர் நிறைந்த இடங்களில் குளியல்போட்டும், விளையாடியும் மகிழ்ச்சி கொள்கிறோம். மேலை நாடுகளில் தண்ணீர் பூங்காக்களுக்கும், பனிப்பிரதேசங்களுக்கும் படையெடுப்பது அங்குள்ள மக்களின் வாடிக்கை. மேலை நாட்டு குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். தண்ணீர் விளையாட்டுகள் என்றால் நீச்சல், படகுப்போட்டி, தண்ணீர் ஜிம்னாஸ்டிக், ஐஸ் சிற்பம் போன்றவையல்ல. வீட்டிலேயே எளிதாக விளையாடி மகிழும் வேடிக்கை விளையாட்டுகள். அப்படிப்பட்ட சில தண்ணீர் விளையாட்டுகளை நாமும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
தண்ணீர் குண்டு
சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால், அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும்.
இதேபோல மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர் கையிலும் பலூனை கொடுத்துவிட்டு நீரை துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்று கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ அவர் தோற்றவர் ஆவார். இந்த தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.
நீர் நிரப்புதல்
பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர் வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில் அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்பு கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.

குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு அவர்களை நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம் பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும்.
ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு விரைவாக செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
நனையாமல் தப்பித்தல்...
புல் தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர் துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம்.
முதலில் நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரை தெளிக்க தயாராக நிற்க வேண்டும்.
தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில் நனையாமல் ஓடிக்கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில் அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரை தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல் படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.

தண்ணீர் வாலிபால்
ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏராளமான பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில் உடையாமல் இருக்கும்.
குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து துண்டின் நுனி களைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும். துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக் கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
பலூன் பிடித்தல்
நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பெரிய வட்டத்தில் சிறுவர்களை சிறிது இடைவெளியில் நின்று கொள்ளுங்கள். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்யுங்கள். யார் பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர் கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும். இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் ஆவார்.
இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வு நேர உடைக்கு அல்லது குளியல் உடைக்கு மாறிக் கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால் குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் இந்த விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். குடிநீரில் விளையாடுவதையும், தண்ணீர் அதிகமில்லாத நேரத்தில் தண்ணீரை கொட்டி விளையாடுவதும் அம்மாவுக்கு சங்கடத்தை தரும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது குட்டீஸ். நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்தானே. சமர்த்து குட்டீஸ்...
தண்ணீர் குண்டு
சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால், அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும்.
இதேபோல மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர் கையிலும் பலூனை கொடுத்துவிட்டு நீரை துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்று கிறாரோ அவரே வெற்றி பெற்றவர். யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ அவர் தோற்றவர் ஆவார். இந்த தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.
நீர் நிரப்புதல்
பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர் வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில் அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்பு கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.

குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு அவர்களை நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம் பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும்.
ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு விரைவாக செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
நனையாமல் தப்பித்தல்...
புல் தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர் துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம்.
முதலில் நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக் கொள்ள வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரை தெளிக்க தயாராக நிற்க வேண்டும்.
தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில் நனையாமல் ஓடிக்கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில் அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரை தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல் படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.

தண்ணீர் வாலிபால்
ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏராளமான பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில் உடையாமல் இருக்கும்.
குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து துண்டின் நுனி களைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும். துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக் கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
பலூன் பிடித்தல்
நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பெரிய வட்டத்தில் சிறுவர்களை சிறிது இடைவெளியில் நின்று கொள்ளுங்கள். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்யுங்கள். யார் பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர் கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும். இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் ஆவார்.
இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வு நேர உடைக்கு அல்லது குளியல் உடைக்கு மாறிக் கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால் குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் இந்த விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். குடிநீரில் விளையாடுவதையும், தண்ணீர் அதிகமில்லாத நேரத்தில் தண்ணீரை கொட்டி விளையாடுவதும் அம்மாவுக்கு சங்கடத்தை தரும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது குட்டீஸ். நீங்கள் அப்படி செய்ய மாட்டீர்கள்தானே. சமர்த்து குட்டீஸ்...
இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும். மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.
குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.
குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.
குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.
குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.
இரண்டு வயது குழந்தைகள் கூட, போனில் வீடியோ பார்க்க ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.
திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?
குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.
ஒரு வீட்டின் வரவேற் பறைக்குள் நுழைந்தால், தந்தை ஃபோனில் இமெயில் படித்துக் கொண்டிருக்க, தாய் டிவி பார்த்துக்கொண்டிருக்க, பிள்ளைகள் ஐபேடில் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியை பார்ப்பது சகஜமானது தான். திரையில் அதிக நேரம் செலவிடுவது, அதிலும் பிள்ளைகள் மற்றும் இளம் வயதினர் இவ்வாறு செய்வது பரவலாகி வருகிறது. இரண்டு வயது குழந்தைகள் கூட, பல்வேறு சாதனங்களில் ஆறு மணி நேரம் வரை செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது உணவு உட்கொள்ளும் பிரச்சனை, குழந்தை பருவ பருமன், கவன சிக்கல், தூக்க பாதிப்பை உண்டாக்கலாம்.
திரையில் செலவிடும் எல்லா நேரங்களும் மோசமானது அல்ல. மணிக்கணக்கில் பார்க்க கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களும் அநேகம் உள்ளன. பல திரைகளில் விருப்பமானவற்றை பார்ப்பது குழந்தைகள் மனதை லேசாக்குகிறது. இது நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது அல்லவா?
குழந்தைக்கு போரடிக்கும் போது, வெளியே மழை பெய்து விளையாட முடியாமல் போனால், டிவி பார்க்கத்தோன்றும். நீண்ட தூரம் காரில் செல்லும் போது குழந்தை அடம்பிடித்தால், ஃபோனில் வீடியோ பார்க்கச் செய்து சமாளிக்கலாம். ஃபோனில் நண்பர்களுடன் பேச விரும்பும் போது, குழந்தை தன்னுடன் பேச சொல்லும் போது, ஐபேடை கையில் கொடுத்து சமாதானப்படுத்துவது இயல்பாக இருக்கிறது. இப்படி தான் குழந்தைகளின் வாழ்க்கையில் திரைகளின் தாக்கம் அதிகரித்துவிட்டது.
திரையில் செலவிடப்படும் நேரத்தை விட, திட்டமிடப்படாத விளையாட்டு நேரம் குழந்தை வளர்ச்சியில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்காணிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத திரை நேரம், வன்முறை சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க வைத்து பாதிப்பை ஏற்படுத்தலாம். பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு பொருத்தம் இல்லாத விஷயங்களை பார்க்கின்றனர். இது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். திரைகளில் நேரம் செலவிடுவது பிரச்சனை அல்ல; ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பது தான் சிக்கல்.
தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகனுக்கு அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும். சில நேரம் அப்பாக்களுக்கே பிள்ளைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டுமென்று தெரிவதில்லை. சொல்லித்தர வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்களை பட்டியலிட்டுள்ளோம்.
1 பெண்களை மதித்தல்:
மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.
2 பொறுப்பு:
நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு நிகழ்வுக்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அப்பாவின் கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும். எடுத்துக்காட்டு, பொதுச் செயல் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள். எந்தத் தயக்கம் காட்டாமல் உடனே பொறுப்பை ஏற்று செய்யவேண்டும்
3 உழைப்பு:
இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும். கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
4 விடாமுயற்சி வெற்றி தரும்:
தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில நேரம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.
5 மகிழ்ச்சியாக வாழ்தல்:
பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும். அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். செய்ய வேண்டும்.
1 பெண்களை மதித்தல்:
மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.
2 பொறுப்பு:
நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு நிகழ்வுக்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அப்பாவின் கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும். எடுத்துக்காட்டு, பொதுச் செயல் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள். எந்தத் தயக்கம் காட்டாமல் உடனே பொறுப்பை ஏற்று செய்யவேண்டும்
3 உழைப்பு:
இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும். கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
4 விடாமுயற்சி வெற்றி தரும்:
தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில நேரம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.
5 மகிழ்ச்சியாக வாழ்தல்:
பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும். அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். செய்ய வேண்டும்.
விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.
குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.
காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.
மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.
விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.
காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.
டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.
ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.
சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.
மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.
இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.
இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.
இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.
காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.
மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.
விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.
காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.
டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.
ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.
சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.
மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.
இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.
இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.
இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.
குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம். ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது. விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.
அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி. வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது. சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்கள் மனதில் சுற்றுலா எண்ணமும், விளையாட்டு எண்ணங்களும் அலைமோதும். கோடையின் கொடுமை தெரியாமல் குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. செல்போன் விளையாட்டுகளைவிட சிறந்தவை பாரம்பரிய விளையாட்டுகள். அவை செல்போன் விளையாட்டுகளைப்போல நம்மை சோர்வடைய வைப்பதில்லை. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
தாயம்
சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.
கிச்சுக்கிச்சு தாம்பளம்
கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.
பச்சைக்குதிரை
பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.

பல்லாங்குழி
பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
கிட்டிப்புள்
சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.
ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்
தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.
இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.

கயிறாட்டம்
சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.
ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.
இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.
பம்பரம்
சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
தாயம்
சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.
கிச்சுக்கிச்சு தாம்பளம்
கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.
பச்சைக்குதிரை
பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.

பல்லாங்குழி
பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.
கிட்டிப்புள்
சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.
ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்
தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.
இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.

கயிறாட்டம்
சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.
ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.
இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.
பம்பரம்
சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.






