என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். இந்த பிரச்சனைக்கு எந்த வகையான உணவை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
    இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். மேலும் இது கருவிற்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல பிரச்சனைகளைக் கொடுக்கும். அதிலும் கருச்சிதைவு ஏற்படவோ அல்லது மூளையின் வளர்ச்சியில் குறைபாட்டையோ ஏற்படுத்தும்.

    எனவே ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, அதனை சரியான அளவில் பராமரித்து வர வேண்டும். முக்கியமாக தைராய்டு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

    இப்போது தைராய்டிசம் கொண்ட கர்ப்பிணிகளுக்கான சில இயற்கை வைத்திய முறைகளை பார்க்கலாம்.

    2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டம்ளர் பாலில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்து, தைராய்டு ஹார்மோனை சீராகப் பராமரிக்கலாம்.



    முட்டையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை சீராக வைக்க உதவும். அதேப்போல் கேரட், பூசணிக்காய் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலமும் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். ஆனால் இவற்றை கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

    இந்த காய்கறிகளில் எல்லாம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்சாதவாறு செய்து, தைராய்டு ஹார்மோனின் கூட்டுச்சேர்க்கையைத் தடுக்கும்.

    இஞ்சி டீ அல்லது பட்டை டீ குடித்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதே சமயம் காபி, டீ மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    முழு கோதுமையால் செய்யப்பட்ட ஓட்ஸ், பார்லி, கோதுமை பிரட், செரில் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். அதே நேரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பிரட், சாதம் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், தைராய்டு பிரச்சனைகள் ஆரம்பமாகும். எனவே அதிகாலையில் எழுந்து சூரியனிடமிருந்து கிடைக்கும் வைட்டமின் டியை 15 நிமிடம் நின்று தவறாமல் பெற்று வாருங்கள். இதனால் வைட்டமின் டி அதிகரிப்பதோடு, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சி எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.
    அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கும், கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கும் முதுகுவலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
    இரண்டு - மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, முதுகு வலிப் பிரச்சனை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை! தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம்.

    இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்சனை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

    அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் ‘லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு ‘பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்! வாகனம் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை.

    * மிகவும் இறுக்கமான பேண்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். இவை இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.



    * அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் ‘லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

    * தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல! 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

    * குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம்.

    * தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும். நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!
    சாம்பார் சாதம், தயிர் சாதம், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த செட்டிநாடு அவித்த முட்டை பிரை சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
    புதினா -   சிறிதளவு
    மஞ்சள்தூள் -  அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

    அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

    இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

    பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

    முட்டையில் மசாலா ஏறியவுடன அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

    திருமணத்திற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே பெண், மணப்பெண் அலங்காரத்திற்கு தயாராகிவிட வேண்டும். முகூர்த்தம் நெருங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் எதிர்பார்த்த அளவுக்கு அலங்காரம் திருப்திகரமாக அமையாது. முதலில் உங்களுக்கு பிடித்தமான, அனுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு மணப்பெண் அலங்காரத்தில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது? இதுவரை எத்தனை பேருக்கு அலங்காரம் செய்திருக் கிறார்? அவர் மற்றவர்களுக்கு மேக்கப் செய்து எடுத்த போட்டோக்கள் இருக்கிறதா? என்பதை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உறவுக்கார பெண்ணுக்கு அலங்காரம் செய்திருந்தால் அவரின் ஆலோசனைகளை பெறுவதோடு, அவரை பயன் படுத்திக்கொள்வதும் நல்லது.

    அழகுக்கலை நிபுணர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்னால், அவரை நேராக சென்று பாருங்கள். உங்கள் சருமத்தின் தன்மை என்ன? சருமத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது? என்பதை அவரிடத்தில் தெளிவு படுத்திவிடுங்கள். அது எந்தமாதிரியான அலங்காரம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அவர் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்யும்.



    நீங்கள் அவ்வப்போது பியூட்டி பார்லர் செல்பவராக இருந்தால் பேஷியல், வேக்சிங், திரெட்டிங், பேஷியல் போன்றவற்றில் முதலிலேயே கவனம் செலுத்துங்கள். திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது அவசரமாக திரெட்டிங், வேக்சிங் செய்தால் ஒருசிலருக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் திட்டுத் திட்டாக தோன்றிவிடும். ஒரு சிலருக்கு பிளீச்சிங், பேஷியல் செய்தால் அலர்ஜி உருவாகும். இந்த மாதிரியான தொந்தரவுகள் திடீரென்று உருவாகாமல் இருக்க, ஆரம்பத்திலேயே மேக்கப் விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். பேஷியல், கிளீனப் போன்றவற்றை செய்த பிறகு வெயிலில் செல்ல கூடாது. சோப், சிலவகை கிரீம்களை உபயோகிக்கவும் கூடாது. இதை எல்லாம் அழகுக்கலை நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதை மீறி உபயோகித்தால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

    நீங்கள் எந்த மாதிரியான அலங்காரத்தை எதிர்பார்க்கிறீர்கள்? எந்த வகையான மேக்கப் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் தெளிவாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அழகுக்கலை நிபுணரிடம் தெரிவித்துவிடுங்கள். சங்கீத், முகூர்த்தம், வரவேற்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் அலங்காரம் எந்தமாதிரி அமையவேண்டும் என்பதையும்- நகை, உடை எந்த மாதிரி அணியப்போகிறீர்கள் என்பதையும் அழகுக்கலை நிபுணரிடம் முதலிலேயே சொல்லிவிடுங்கள். திருமணத்திற்கு ஆடை எடுக்க போவதற்கு முன்பும், எடுத்த உடையை தைக்க கொடுப்பதற்கு முன்பும் அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். எந்த நிறத்தில் ஆடை தேர்வு செய்வது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது பற்றியும், உடல் அமைப்புக்கு ஏற்ப ஆடையை தைப்பது பற்றியும், எந்தமாதிரி ஆபரணம் உடலுக்கு கூடுதல் அழகு தரும் என்பது குறித்தும் அவர் உங்களுக்கு ஆலோசனை தருவார்.

    மணப் பெண்ணின் சரும அழகை மேம்படுத்த நிறைய வழிகள் இருக்கின்றன. கருப்பு புள்ளிகளோ, சுருக்கங்களோ, கருவளையங்களோ இருந்தால் அவைகளை சரி செய்ய வாய்ப்பு இருக்கிறது. புருவங்கள், கண்கள் அருகில் ஏற்படும் சுருக்கங்களையும் சரிப்படுத்திவிட முடியும். மூக்கின் ஓரங்களில் அழகை கூட்டவும் முடியும். உதடுகளில் கருமை தென்பட்டால் அதனை நீக்கவும் முடியும்.

    உங்கள் சருமத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப அழகுக் கலை நிபுணர் அலங்காரம் செய்வார். அதனால் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் முதலிலேயே அவரிடம் கூறிவிடுங்கள். அழகை மேம்படுத்த மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள், சிகிச்சைகள் தேவைப்பட்டால் காலம் தாழ்த்தாமல் திருமணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்பாகவே அதற்கு தயாராகிவிடுங்கள். குறைந்தபட்சம் மூன்று, நான்கு முறையாவது டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருக்கும். திருமணம் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக சிகிச்சை மேற்கொள்வது சிரமத்தையும், சிக்கலையும் உருவாக்கிவிடும்.



    முகத்தில் முளைக்கும் தேவையற்ற முடிகளை நீக்க ‘லேசர் ஹேர் ரிமூவிங்’ செய்வதற்கு நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வேக்சிங், திரெட்டிங் செய்வதை தவிர்ப்பதற்கு இந்த வழியை நாடுகிறார்கள். இது குறித்து திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முடிவெடுத்து செயல்படுத்துங்கள். விரைந்து அழகை மேம்படுத்துவதற்கு ‘ஸ்டீராய்டு கிரீம்’ பயன்படுத்தவும் நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அது ஆபத்தானது. சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

    உடல் முழுவதும் சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்க பாடி வேக்சிங், முழு உடல் பாலிஷிங், ஹேர் ஸ்பா, ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், சுமூத்திங், ஹைட்ரா பேஷியல் போன்றவை இருக்கின்றன. இவைகளை செய்ய விரும்பும் பெண்கள் திருமணத்திற்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே தங்களை தயார்படுத்திவிட வேண்டும். கூந்தல் முடியை கலரிங் செய்வதாக இருந்தால் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தற்காலிகமாக பரிசோதித்து பார்த்துவிட வேண்டும். அது பார்க்க அழகாக இருந்தால் மட்டுமே நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்.

    பெண்களை கவரும் விதத்தில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறது ‘ஏர் பிரஷ் மேக்கப்’. அதிவேகமாக சருமத்தில் ஸ்பிரே செய்யும் முறை இது. சருமத்தில் லேசான கோட்டிங் செய்வதுதான் இந்த மேக்கப். இது ‘வாட்டர் ரூப்’ என்பதால் மழை, வியர்வைக்கு அழிந்து போகாது. இதனை செய்வதாக இருந்தால் அழகுக்கலை நிபுணருடன் ஆலோசனை பெற வேண்டும்.

    மணப்பெண் முகூர்த்தத்திற்கு உடுத்தும் புடவையின் பார்டர் என்ன நிறமோ அந்த கலரில் விரல், நகங்களை அலங்கரிப்பது இப்போது பேஷனாகியிருக்கிறது. மண மேடை எந்த மாதிரியான டிசைன்கள், நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்ப மணமக்களின் உடையும், மேக்கப் அலங்காரமும் அமைந்திருந்தால் பார்க்க அழகாக இருக்கும். 
    பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. பெற்றோர் பெண்களை பற்றி எப்போதும் ஆண் குழந்தைகளிடம் கவுரவமாகவே பேசவேண்டும்.
    ‘பெண் குழந்தைகளை கட்டுப்பாட்டோடு வளர்க்கவேண்டும்’ என்று காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், உடை அணிவது முதல் வெளியே சென்று திரும்புவது வரை பல விஷயங்களில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவளுக்கு வெளி இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கும் அவளே மூலகாரணம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    சமூகம் என்பது ஆண்-பெண் இருபாலரையும்கொண்டது. அப்படியிருக்கையில் ஏதாவதொரு வகையில் நடக்கும் சமூக குற்றத்திற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று கூறுவதில் அர்த்தமில்லை. இந்த தவறான கருத்து தவறு செய்யும் ஆண்களை சுலபமாக தப்பிக்க வழிவகை செய்துவிடுகிறது. பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. ஆண் குழந்தைகளை, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் வளர்க்கவேண்டும். வீட்டிலிருந்தே இதற்கான பாடத்தை தொடங்க வேண்டும். முதலில் அம்மா, சகோதரி என்று வீட்டிலுள்ளவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். அக்கம்பக்கத்து பெண்களையும் கேலி, கிண்டல் செய்வதை அனுமதிக்கக்கூடாது. பெண்களை பற்றி எப்போதும் ஆண் குழந்தைகளிடம் கவுரவமாகவே பேசவேண்டும்.

    ஒழுக்கம்

    பெண்கள் மட்டுமே ஒழுக்கம் என்ற விஷயத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று நிறைய பேர் எதிர்பார்க்கிறார்கள். அதுபற்றிய அறிவுரை பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை கற்றுக்கொடுத்து அதன்படி நடக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்களை எப்படி அழைக்கவேண்டும்? அவர் களிடம் எப்படி மரியாதையாக பழகவேண்டும்? என்பது போன்ற விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒழுக்கம் என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று என்பதை குழந்தை பருவத்திலேயே புரிய வைத்துவிடவேண்டும். ஒழுக்கத்தில் மிக முக்கியமானது பெண்களை மதிப்பது என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்திடவேண்டும்.

    தவறுகள்

    தவறுகளை சுட்டிக்காட்டி கண்டிப்பதில் இருபாலினத்தவரிடமும் எந்த பாகுபாடும் காண்பிக்கக்கூடாது. யார் தவறு செய்தாலும் அவர்களை திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதற்காக கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தவறுகள் செய்வதற்கு பயமும், தவறு செய்திருந்தாலும் தங்களை திருத்தி கொள்வதற்கான மனப்பக்குவமும் உண்டாகும். மூளையும் அதற்காக பழக்கப்படும். எந்த ஒரு வேலையையும் யோசித்து நிதானமாக செய்யும் வழக்கமும் அவர்களுக்கு ஏற்படும்.

    சுதந்திரம்


    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்படுவதுதான் நடைமுறையில் இருக்கிறது. வெளியில் சென்று நண்பர்களுடன் அதிக நேரம் ஊர் சுற்றுவது, நேரம் கடந்து வீட்டிற்கு வருவது, மனம் விரும்பியபடி சிகை அலங்காரம் செய்துகொள்வது, விதவிதமாக உடை அணிந்துகொள்வது, வீட்டில் உள்ளவர்களை அதிகாரம் செய்வது, பெண்களைப் பற்றி தவறாக விமர்சிப்பது போன்ற பல விஷயங்களில் ஆண் பிள்ளைகளின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமை கொடுத்து கண்டிப்போடு வளர்க்க வேண்டும். ஊர்சுற்றுவது பெண்களுக்கு தவறு என்றால், அது ஆண்களுக்கும் தவறுதான். காலம் கடந்து வீடு திரும்புவது, எங்கு போகிறோம் என்பதை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் போவது எல்லாம் தவறுதான். அது ஆண், பெண் இருபாலருக்குமே பாதுகாப்பற்றதும்கூட.

    மமாக பாவித்தல்

    பெண்களை சமமாக பாவித்து மதிக்கும் பக்குவம் ஆண் களுக்கு வரவேண்டும். அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வீட்டில் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவருமே ஆண்-பெண் குழந்தைகளை சமமாக நடத்த வேண்டும். எந்த விதத்திலும் பெண்கள், ஆண்களுக்கு குறைந்தவரில்லை என்ற விஷயம் அவர்கள் மனதில் பதியவைக்கப்படவேண்டும்.



    தவறான விமர்சனம்

    பெண்களை கேலி செய்வது, மற்றவர்கள் முன் தரம்பிரித்து பேசுவது போன்றவை தவறு என்பதை புரிய வைக்கவேண்டும். எப்போது அந்த தவறை ஆண் குழந்தைகள் செய்தாலும் உடனடியாக தலையிட்டு முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். சிறுவர்கள் வெளியில் சென்று தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகும்போது அவர்களின் பேச்சையும், நடத்தையையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். தன்னைவிட மூத்தவர்கள் பெண்களை தவறாக விமர்சனம் செய்தால், தானும் அதுபோல் நடந்துகொள்ள முன்வருகிறார்கள். அதை அப்படியே அனுமதித்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் வரம்பு மீறி விமர்சனம் செய்ய தொடங்கி விடுவார்கள். சிலர் பள்ளி ஆசிரியைகளைகூட குரு என்றும் பார்க்காமல் தவறாக விமர்சிக்கிறார்கள். அது விளையாட்டுத்தனமானது அல்ல, விபரீதமானது என்பதை சிறுவர்களுக்கு புரியவைக்கவேண்டும்.

    பெண்களை அடிப்பது

    பெரும்பாலான சிறுவர்கள், பெண்களிடம் தங்கள் பலத்தைக்காட்ட நினைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே சட்டென்று அடித்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். இந்தப் பழக்கம் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. சகோதரி களுடன் சண்டை வரும்போது அவர்களை அடிக்க முற்படும் வழக்கத்தை கண்டித்து நிறுத்தாவிட்டால் அது வெளியிலும் தொடரும். இது பெரிய சிக்கலில் போய் முடியும்.

    பொறுப்பு

    ஆண்களுக்கு நிறைய சமூக கடமைகள் இருக்கின்றன என்பதை சிறுவயதிலே அவர்களுக்கு உணர்த்தவேண்டும். வீட்டில் உள்ள பெண்களுக்கு துணையாக இருப்பதும், அதேபோல வெளியிலிருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதும் அவர்களுடைய கடமை. இந்த பொறுப்புணர்வு வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். மனதில் அலைபாயும் எண்ணங்களை தடுத்து நிறுத்தி, கல்வியில் கவனம் செலுத்த கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும் விஷயங்களைவிட நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தான் மனதில் நன்கு பதியும். நல்ல குடும்பத் தலைவராக, குடும்ப பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள மனைவி, அம்மா, சகோதரி மற்றும் உறவுப் பெண்களையும், மற்ற பெண்களையும் மரியாதையாக நடத்துங்கள். அதைப் பார்த்து உங்கள் ஆண்பிள்ளைகள் கற்றுக்கொள்ளட்டும். 
    சர்க்கரை நோயாளிகள் தினமும் கீரை, கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இவை இரண்டையும் வைத்து குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி மாவு - 1 கப்,
    கோதுமை மாவு - 1 கப்,
    கடுகு - ¼ டீஸ்பூன்,
    பெருங்காயம் - 1 சிட்டிகை அளவு,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சின்ன வெங்காயம் - 10,
    பச்சை மிளகாய் - 2,
    கீரை - 1 கப்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.

    ஓர் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து அத்துடன் இந்த வதக்கிய கீரை கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு (Thick batter) தோசை மாவு பதத்தில் கலக்கி 30 நிமிடம் தனியாக மூடி வைக்க வேண்டும்.

    அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடுபடுத்தவும். பின்பு பணியாரக்கல் குழிகளில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை அதில் ஊற்றி 2 நிமிடம் வேக விடவும். ஒருபக்கம் மொறுமொறுப்பாக வந்தவுடன் அதைத் திருப்பி விட்டு, 2 நிமிடம் வேக எடுத்து சூடாக இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு கீரை குழிப்பணியாரம்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இடுப்பில் உள்ள கூடுதல் சதையை குறைத்து இடுப்பிற்கு அழகான வடிவைக் கொடுக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: “அர்த்த” என்றால் பாதி. இந்த ஆசனம் உலகுக்கு முதலில் ஹடயோகத்தை போதித்த மத்ஸ்யேந்திரநாதர் பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் முழு நிலைமத்ஸ்யேந்திராசனம் ஒன்று உள்ளது. அதன் பாதிநிலை ஆசனமாக இது இருப்பதால் அர்த்த மத்ஸ்யேந்திராசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: கால்களை நீட்டி தரை விரிப்பின் மேல் உட்காரவும். பாதம் இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பிருட்சடத்திற்கு இருபக்கமும் சற்று தள்ளி இரண்டு உள்ளங்கைகளையும் ஊன்றி வைக்கவும். முழங்கைகளை மடக்காமல் நேராக இருக்கட்டும். முதுகை சிறிதளவு பின்னால் சாய்க்கவும். உடல் எடை மணிக்கட்டுப் பகுதியில் இருக்கட்டும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்களை மூடவும். இந்நிலைக்கு தண்டாசனம் என்று பெயர்.
    பிறகு வலது கையை மடக்கி முழங்கை பகுதியை இடது காலுக்கு வெளியே வைக்கவும்.

    மூச்சை வெளியே விட்டு இடது முழங்காலை வலது முழங்கையினால் அழுத்தி தள்ளியவாறு வலக்கை விரல்களினால் இடது பாதத்தின் அடிப்பகுதியை பிடித்துக் கொள்ளவும். இடது கையை பின்னோக்கி எடுத்துச் சென்று வலது தொடையை தொட முயலவும். தலையை இடது தோள் பக்கம் திருப்பி வைக்கவும். கண்களால் புருவமத்தியை பார்க்கவும்.

    இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் சாதாரண மூச்சுடன் நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு படம் 14&ல் உள்ள நிலைக்கு வந்து, கால்களை நீட்டி தண்டாசனம் செய்யவும்.



    கால்களை மாற்றி மேற்கண்ட முறைப்படி மீண்டும் ஒருமுறை பயிற்சி செய்யவும். ஆரம்பத்தில் முடிந்தளவு காலம் பயிற்சி செய்யவும். இருகால்களையும் மாற்றி செய்யும் கால அளவுசமமாக இருக்கட்டும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: முதுகுத் தண்டு, இடுப்பு மறறும் மூச்சின் மீதும், ஆக்ஞா அல்லது மணிப்புர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
    பயிற்சிக் குறிப்பு: புதிதாக பழகும் போது சிலருக்கு சுவாச இயக்கம் வேகமாக இருக்கும். ஆனாலும் பழகப்பழக சாதாரண நிலைக்கு வந்து விடும். மெல்லிய உடல்வாகு உள்ளவர்கள் சுலபமாக இந்த ஆசனத்ததை செய்ய முடிகிறது. தொந்தி வயிறு உள்ளவர்கள் செய்வதற்கு கடினமாக இருக்கும்.

    தடைக் குறிப்பு: விரை வாதம், மூல நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாது. தைராய்டு வீக்கம், குடலிறக்கம், வயிற்றில் புண் உள்ளவர்கள் யோக நிபுணரிடம் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும்.

    பயன்கள்: ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதில் மிகச் சிறந்த ஆசனம் இது. அஜீரணம் நீங்கும். பசி அதிகமாகும். தொந்தி குறையும். குடலில் தீயகிருமிகள் உண்டாவதை தடுக்கிறது. இடுப்பில் உள்ள கூடுதல் சதையை குறைத்து இடுப்பிற்கு அழகான வடிவைக் கொடுக்கும். மலச்சிக்கல் நீங்கும். நீரிழிவுக்கு பயனுள்ள ஆசனம் இது. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் எனும் நோயை விரைவில் குணப்படுத்துகிறது. கருப்பை பலம் பெரும். மாதவிலக்கு ஒழுங்குபடும்.
    வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம்.
    வெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் முதல் பாதிப்பு உடலில் நீர் சத்து குறைவது தான். இதனை கொஞ்சம் கூட அலட்சியமாக விட்டு விடக்கூடாது. உடலில் 2/3 பங்கு நீர் சத்துதான். இதனால் தான் கண் அசைவுகள். மூட்டு அசைவுகள், ஜீரணம், நச்சுக்கள் வெளியேறுதல், சரும பாதுகாப்பு இப்படி நீர் சக்தியின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    சர்க்கரை நோயாளிகள், தீக்காயம் பட்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு நீர்சக்தி குறைய அதிக வாய்ப்பு உண்டு. இவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் கீழ்கண்ட அறிகுறிகளை அறிந்து கொண்டால் நீர் சக்தி குறைபாட்டிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

    * இருதய படபடப்பு: உடலில் நீர் சத்து குறையும் பொழுது தாது உப்புகள், சர்க்கரை அளவு இவற்றில் பாதிப்பு ஏற்படும். இதனால் இருதய படபடப்பு ஏற்படும் . அதிக வியர்வையினால் மக்னீசியம் குறைபாடு  ஏற்பட்டு இதனாலும் இருதய படபடப்பு ஏற்படலாம்.

    * வாய் துர்நாற்றம்: நம் வாயிலுள்ள எச்சில்  தான் நம் பற்களை சொத்தை, பல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றது. பற்களை சுற்றி இவை ஒரு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்றது. உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக அல்லது தேவையான  எச்சில் நம் வாயில் இருக்காது. வாய் வறண்டு விடும் இதனால் அதிக பாக்டீரியாக்கள் வாயில் உருவாகி துர்நாற்றத்தினை ஏற்படுத்தும். வறண்ட வாய் பல் சொத்தை, பல் பாதிப்பு இவற்றினை ஏற்படுத்தும்.

    * உணவினை சிறிது மாற்றுங்கள்: தர்பூசணி, வெள்ளரி என நீர்சத்து மிகுந்த பழங்கள் காற்கறிகளை உண்ணுங்கள். இவை உடலில் நீர் சத்து குறைவதினை வெகுவாய் தவிர்க்கும்.

    * மூட்டுகளில், தசைகளில் வலி: மூட்டுகளில் உள்ள தசை நார்கள் 65&80 சதவீதம் நீர் நிறைந்தவை. உடலில் நீர் குறையும் பொழுது இங்கு உராய்வு ஏற்பட்டு வலியும் வீக்கமும் ஏற்படும்.

    மக்னீசிய குறைபாடு தசைகளில் வலியினை ஏற்படுத்தும் கீரை, பச்சை காய்கறிகள் உண்பது இக்குறைபாடுகளைத் தவிர்க்கும்.



    * தலைவலி: மூளை ஒருதிரவ மைக்குள்தான் இருக்கின்றது. இந்த திரவம் குறைய ஆரம்பித்தால் மூளை மண்டை எலும்பில் இடிக்கலாம். இது தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும் நீர் சத்து குறையும் பொழுது மூளைக்கு ரத்த ஓட்டமும் குறைகின்றது. இதனால் குறைந்த ஆக்ஸிஜன், குறைந்த சர்க்கரை அளவு ஏற்படுகின்றது. எனவே தலைவலி ஏற்படும் பொழுது ஓரிரு தம்ளர் நீர் பருகுங்கள். தலைவலி அநேகமாகச் சரியாகலாம்.

    * நீர்தான் நாம் உண்ணும் உணவினை சிறு சிறு துண்டுகளாக்கி செரித்து உடல் சத்துக்களை உறிஞ்சு கொள்ள உதவுகின்றது. நீரில் கரையும் வைட்டமின் சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றது. கழிவுப் பொருள் வெளியேற உதவுகின்றது.

    * சோர்வு, சக்தியின்மை: நீர் சக்தி குறைவு போன்றவை ரத்த அழுத்தத்தினை உயர்த்தும். இருதயம் கூடுதல் வேலை செய்ய வேண்டி ஆகிவிடும். இது உங்களை சோர்வாக ஆக்கக் கூடும்.

    * அடர்ந்த நிற சிறுநீர்: சிறுநீரகம் திரவ நிலையில் உடலில் சரியான நிலையில் வைக்கவே செயல்படுகின்றது. தேவையான அளவு நீர் குடிக்கும் பொழுது சிறுநீரகம் சீராக செயல்படுவதால் வெளியேறும் சிறுநீர் நிறமற்றோ அல்லது மிக லேசான மஞ்சள் நிறத்திலோ இருக்கும். ஆனால் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது ரத்த அழுத்தத்தினை சீராக வைப்பதற்காக சிறுநீரகம் நீரினை உடலுக்குத் திருப்பும். இதனால் வெளியேறும் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தேவையான அளவு நீர் சத்து இல்லாத பொழுது சிறுநீரக கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

    * வறண்ட சரும உதடு: சருமம் 30 சதவீதம் நீரினைக் கொண்டது. சருமம் உருவாக்கும் எண்ணை நீர் வற்றுவதனைத் தவிர்க்கும். அடிக்கடி குளிப்பது, வறண்ட காற்று, உஷ்ணம், சரும கிருமி பாதிப்பு இவை சரும நீரினை வற்றச் செய்யலாம். இது சருமத்தினை வறட்சியானதாகவும், அரிப்பு டையதாகவும் ஆக்கும்.
     
    * குழப்பம்: குறைந்த நீர் குடிப்பது மனக்குழப்பம், கோபம் இவற்றினை உருவாக்கும்.

    ஆக 21/2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அளவாக 2 பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் கொண்டு அவ்வப்போது சிறிது சிறிதாக குடியுங்கள். 
    நல்ல வி‌ஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான வி‌ஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுகின்றன.
    இன்டர்நெட்டை எத்தனை பேர் தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நல்ல வி‌ஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான வி‌ஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுகின்றன. அதிலும் பெரும் அளவில் இளைஞர்கள் தான் இன்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒரு நோயாக மாறி விட்டதாக அமெரிக்க உளவியல் கழகம் கூறி, அதற்கு இன்டர்நெட் உபயோக சீர்குலைவு என்றும் பெயரிட்டிருக்கிறது.

    இன்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, இன்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போலத் தோன்றுவது, இன்டர்நெட் தடைப்படும்போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளைப் பார்க்க முடியாமல், அந்த வேலை நேரத்தையும் இன்டர்நெட்டிலேயே செலவழிப்பது, நிஜ மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு இன்டர்நெட்டில் அரட்டை, விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டும் தான். இன்றைய பெண்கள் செல்போனை வெட்டிப் பேச்சுக்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்தும் டீக்கடையில் அமர்ந்தும் வெட்டிப் பேச்சு பேசிப் பொழுதைக் கழிக்கும் பெரிசுகளைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு. ஆனால் இன்று செல்போனில் அதையே இன்றைய இளைய தலைமுறையினர் செய்வது அவர்களுடைய எதிர்காலம் மட்டுமல்லாமல், அவர்களால் உருவாகப் போகும் சமூக எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.

    அறிய வேண்டியயை, செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்க, எந்நேரமும் செல்போனில் பேசிக் கொண்டும், மெசேஜ் அனுப்பிக்கொண்டும் தங்கள் நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது வேதனை தருகிறது. நேரடி வெட்டிப் பேச்சுகள் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைவது உண்டு. ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவுக்கு வருவதே இல்லை.

    இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் இதுதான். இந்தக் காலத்தை திருடிக் கொண்டு வீணடிக்க எதையும், யாரையும் அனுமதிக்காதீர்கள். இன்டர்நெட், செல்போன் வசதிகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்துங்கள். அதை ஆக்கபூர்வ வேலைகளுக்காக பயன்படுத்தி, அதில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். 
    கோடை காலத்தில் வயதானவர்கள் எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம்.
    கோடை வெப்பம் வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கும். எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சனையில் இருந்து மீண்டுவிடலாம். கோடை காலத்தில் முதுமை பருவத்தை இனிமையாக கழிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!

    வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பயண திட்டங்களை வகுக்க வேண்டும். வெளியே செல்லாமல் உடற்பயிற்சி கூடங்களிலேயே அனைத்து விதமான பயிற்சிகளையும் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வெயிலின் தாக்கத்தால் காலை, மாலை வேளையில் போதிய நடைப்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போனால் டிரெட்மில்லில் நடைப்பயிற்சியை தொடரலாம். மால்களுக்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தால் அங்கு நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    நடைப்பயிற்சிக்கு இணையாக நீச்சல் பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கும்.


    திட உணவுகளை விட திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எனினும் காபின் கலந்த பானங்கள், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று திரவ உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம் நிறைந்த உணவுகள், பானங்கள், சூப் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அவை உடலில் உள்ள திரவ இழப்பை ஈடு செய்யும். அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியம்.

    நீரிழப்பு அறிகுறிகள், உடல் சோர்வு, தாகம், அழற்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    வெளியே செல்வதாக இருந்தால் அகலமான தொப்பியை அணிந்து செல்வது நல்லது. 
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வடு மாங்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு மாங்காய்கள் - ஒரு கிலோ
    மிளகாய்ப்பொடி - 50 கிராம்
    கடுகு பொடி - 25 கிராம்
    நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை

    மாங்காய் காம்களை நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.

    இந்த வடு மாங்காயில் நல்லெண்ணெய் போட்டு பிரட்டி, கடுகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மேலாக பரவலாகப் போட்டு காற்று போகாமல் மூடி வைக்கவும்.

    தினமும் ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.

    10 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம்.

    சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் நொறுக்குத்தீனியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.
    உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.

    அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது.

    மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.

    ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

    * டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.



    * எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.

    * டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் தொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.

    * சிலர் ஜிலேபி, ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.

    * பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். இந்தியாவின் சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.

    இந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
    ×