என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
    • தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.

    * பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

    * வித்தியாசமான முறையில் ரவா கேசரி செய்ய வேண்டுமானால், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி கிளறினால் மாறுபட்ட சுவையில் ருசிக்கலாம்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

    * தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * பாகற்காய் வறுவல் செய்யும் போது முதலில் பாகற்காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமலிருக்கும்.

    * சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

    • பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் ஏற்புடையதல்ல.

    தினமும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 3 பேரீச்சம் பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் என்னவாகும் என்கிறீர்களா? அப்படி அதிகம் சாப்பிடுவது பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

    ஏனெனில் பேரீச்சம்பழங்கள் கலோரிகள் நிறைந்தவை. ஒரு பேரீச்சம் பழத்திலேயே 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். அதனை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக நார்ச்சத்து காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமான கோளாறுகளும் உண்டாகும்.

    பேரீச்சம் பழம் அதிக கிளைசெமிக் குறியீடுகளை (சுமார் 55) கொண்டிருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்புடையதல்ல.

    • பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
    • ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.

    பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?

    நெல்லிக்காய்

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.

    பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.

    கற்றாழை

    இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.

    எதனை பயன்படுத்தலாம்?

    நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.

    உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.

    • உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்க வழிவகை செய்யும்.
    • காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும்.

    காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும்.

    மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கவும் வழிவகை செய்யும்.

    காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். இளநீரை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    • ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும்.

    மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.

    இதில் அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பாம்பு, கரடி போன்றவை விரட்டும்போது மனிதர்கள் ஓடி, ஆபத்து காலத்தில் உயிர் தப்பிக்க இந்த கார்டிசோல் ஹார்மோன் தூண்டுகிறது. ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கிறது. அது போன்ற நிலையில் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பும், டைப்-2 வகை சர்க்கரை நோயும் உருவாகிவிடும். இந்த ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து பகுதியில் `எருமை திமில்' போன்ற கொழுப்பு திரட்சி நிலை காணப்படும். பொதுவாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது, இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை, தியானம் போன்றவற்றால் இந்த கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

    • சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை.
    • தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.

    கல்லூரி மாணவிகள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவே அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பலரும் அது குறித்த விழிப்புணர்வு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். தோழிகளிடம் கேட்பது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றை பார்த்து, அவற்றை பின்பற்றி சில மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எனவே இந்த பிரச்சினையை தவிர்க்க, நீங்கள் பார்ப்பதற்கு அழகாக தோன்ற, உங்களுக்கு உதவும் சில எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    * சரும பராமரிப்பு

    சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. உங்களது சரும வகைக்கு ஏற்ப கிளென்சரனை தேர்ந்தெடுத்து, ஒரு பருத்தி உருண்டையில் கிளென்சரனை தடவி இரவு தூங்கும் முன்பு உங்களது முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி விடும். அடுத்ததாக, சரும பொலிவை மேம்படுத்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவும்.

     

    * தலைமுடி பராமரிப்பு

    தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு கண்டிப்பாக குளிக்க வேண்டும். முக்கியமாக உங்கள் தலைமுடிக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

    * சூரிய ஒளி

    சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன் ஸ்கிரீன் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கும்.

    * முக அழகு

    வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறிதளவு பாலுடன், மஞ்சள் தூள், கடலை மாவு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி 'ஸ்கிராப்' செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களது முகம் பொலிவாக மாறும்.

    * உடல் பராமரிப்பு

    கல்லூரிக்கு சென்று வந்தவுடன் கண்டிப்பாக குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் வியர்வை வெளியேற்றப்படும். உடலுக்கு நீங்கள் லேசான சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம். தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும் மற்றும் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அப்போதுதான் பேசும்போது துர்நாற்றம் அடிக்காது. நகங்களை அவ்வப்போது வெட்டி விடுங்கள் மற்றும் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * சிம்பிள் மேக்கப்

    தினமும் கல்லூரிக்கு செல்லும்போது உங்களது சரும நிறத்திற்கு ஏற்ப சிம்பிளான மேக்கப் போட்டு செல்லுங்கள். அதாவது ஐஷாடோ, ஐ லைனர், மஸ்காரா, லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுபோல இரவு தூங்கும் முன் மேக்கப்பை அகற்ற மறக்காதீர்கள்.

    • சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
    • சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

    அம்மா... காலை உணவு ரெடியா:

    ஐயோ... சாப்பாடு வைக்க இவ்வளவு நேரமா?, அம்மா... எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க: ...

    இது தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. கணவன் பிள்ளைகளுக்காக சமையல் அறையில் தினமும் பெண்கள் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள்.

    சமையலின் ருசியை மட்டும் பார்க்கும் பலர் சமையலறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அங்குள்ள காற்று மாசுபட்டால் அது நம் வீட்டு பெண்களை பாதிக்கும்.

    இந்தியப் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பல வீடுகளில் சமையலறைக்குள் போதுமான வெளிச்சம் மற்றும் காற்று செல்லவும். அங்கு வெளியாகும் புகை மற்றும் வாயுக்களை காற்றோட்டம் செய்யவும் போதுமான காற்றோட்டம் இல்லை..

    இது பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

    2020-ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பற்ற சமையல் நடைமுறைகள் காரணமாக வீடுகளில் ஏற்படும் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறப்பதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில், 32 சதவீதம் இதய நோய், 23 சதவீதம் பக்கவாதம், 21 சதவீதம் சுவாச நோய்கள், 19 சதவீதம் மற்றும் 6 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    சமையலறை வாயுவிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடை நீண்ட காலமாக உள்ளிழுப்பது ஆயிரக்கணக்கான ஆஸ்துமா தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம்.

    சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

    சுவாச நோய்கள் தலைவலி, சோர்வு, கண்களில் எரிதல் கண்களில் நீர் வடிதல் மற்றும் அதிகரித்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.



    ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கியாஸ் எரிவதால் அறைக்குள் நைட்ரஜன் டை ஆக்சைடு கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வெளியாகின்றன. அதிக வெப்பநிலை எண்ணெயில் உணவை வறுக்கும்போது அதிக மாசுக்கள் வெளியிடப்படுகின்றன.

    சிலர் இன்னும் மரம் மற்றும் கரியைப் பயன்படுத்தி சமைக்கிறார்கள். இது கார்பன் டை ஆக்சைடு நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் புகையை அறைக்குள் வெளியிடுகிறது.

    சமையல் அறையில் வெப்பமான வானிலை நீரிழப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

    நீண்ட நேரம் நின்று சமைப்பது கீழ் முதுகு மற்றும் குதிகால் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பயோமாஸ் எரிபொருளை அதிகமாக உள்ளிழுப்பது பெண்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. இது நுரையீரல் திசுக்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.

    சமைக்கும் போது வெளியாகும் புகை மற்றும் வாயுக்கள் வெளியேற அனுமதிக்க கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட வேண்டும்.

    முடிந்தவரை குறுகிய நேரத்தில் சமையலை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

    அடிக்கடி சமையலறையை விட்டு வெளியே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து சிறிது நேரம் நடப்பது நல்லது.

    புகை மற்றும் வாயுக்களை வெளியேற்றுவதற்கு வெளியேற்றும் விசிறிகள் மற்றும் புகைபோக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    மின்சார அடுப்பு மூலம் இழப்பை ஓரளவு குறைக்கலாம்.

    ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தூண்டல் அடுப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    சமையலறைகள் சிறியதாகவும், காற்று மற்றும் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும்போது பெண்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கியாஸ் மற்றும் சமையல் எண்ணெய்களை சூடாக்குவதால் வெளியாகும் வாயுக்களால் பெண்கள் ஆஸ்துமாவை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்களும் வெளியில் இருந்து வரும் தூசியால் நோய்வாய்ப்படுகிறார்கள் என சுவாச நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது.
    • முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன.

    சிறுநீரை அதிகநேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் பலரும் பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழித்தால் கிருமிகளால் பாதிப்பு வரக்கூடும் என கருதி பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதையோ தவிர்த்து வருகின்றனர்.

    இவ்வாறு சிறுநீரை அடக்குவது அல்லது நீண்ட நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் அரை குந்து நிலை முழு சிறுநீர் பை காலியாவதை தடுக்கிறது. சிறுநீர் திரும்புதல், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    இது சிறுநீர்ப்பை அழுத்தத்தை அதிகரிக்கிறது. மற்றும் சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், சிறுநீர்ப்பை எரிச்சல் மற்றும் நீண்டகால பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.



    மேலும் சிறுநீர்ப்பை தசைகள் ஏற்படும் செயல்படும் விதத்தை பாதிக்கிறது. சிறுநீர் சேமிப்பது பாக்டீரியாக்கள் வளர ஒரு நல்ல சூழலை வழங்குகிறது. இது மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் அல்லது சரியாக உட்காராவிட்டாலும் 2 பழக்கங்களிலும் இடுப்பு, தலை, தசை பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் மேலும் கூறுகையில், பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது. முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன என்றனர்.

    • மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும்.
    • எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை.

    இன்றைய காலகட்டத்தில் அமைதியாக, மவுனமாக இருப்பவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் குரல் கொடுப்பவராக, சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிடுபவராக, அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவராக இருப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மதிப்பு உண்டு என்ற எண்ணமும் சிலரிடத்தில் இருக்கிறது. ஆனால் மவுனத்தை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த பதிவில் மவுனம் என்னென்ன வாழ்வியல் பாடங்களையெல்லாம் கற்றுத்தரும் என்று பார்ப்போமா?

    * கவனிக்கும் திறனை வளர்த்தெடுக்கும்

    உங்களிடம் மற்றவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு பேசாமல், அவர்களின் பேச்சில் வெளிப்படும் உணர்வுகளை கவனிக்க வேண்டும். உடல்மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களின் பேச்சு ஆழ்மனதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். கவனிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கும். ஏனெனில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை, மவுனமாக, அமைதியாக இருப்பவர்கள்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

    * தெளிவை தரும்

    ஏதேனும் ஒரு செயலில் அவசர அவசரமாக ஈடுபடும்போது நம்முடைய கவனமெல்லாம் எப்படியாவது அதனை சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில்தான் இருக்கும். திடீரென குறுக்கீடு எழுந்தால், மற்றவர்கள் உங்கள் செயல்பாட்டை விமர்சனம் செய்தால் உடனே கோபம் கொந்தளிக்கும்.

    அது அந்த செயலில் இருந்து கவனத்தை திசை திருப்பிவிடக்கூடும். அந்த சமயத்தில் மவுனமாக அவர்களின் கருத்தை ஆமோதித்துவிட்டு, அதன் பிறகு அதிலிருக்கும் நிறை, குறைகளை நிதானமாக அலசி ஆராய்ந்து செயல்படுவதுதான் சிறப்பானது. அந்த மனத்தெளிவை மவுனம் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். மீண்டும் சரியான பாதையில் எண்ணங்களை கட்டமைக்க வழிவகை செய்யும்.

    * அர்த்தமுள்ள வார்த்தைகளை பேச வைக்கும்

    மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும். அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் ஊக்குவிக்கும். அந்த சொற்களில் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதற்கும், அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மவுனம் கற்றுக்கொடுக்கும். குறைவாக பேசினாலும் அற்புதமாக பேசினார் என்ற பாராட்டையும் பெற்றுக்கொடுக்கும்.

    * உடல் சக்தியை பாதுகாக்கும்

    தேவையற்ற கருத்துகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். அந்த இடத்தில் மவுனம்தான் சிறந்தது. அது நேரமும், உடல் சக்தியும் வீணாகுவதை தடுக்கும். ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

    அதிலும் எதிர்மறை கருத்துகளை தெரிவிப்பவர்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை தொடர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த முறை தேவையற்ற பேச்சுகளை பேசுவதற்கு முன்வர மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினாலும் நீங்கள் அதனை மவுனமாக கடந்து சென்று விடுவீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.



    * ரகசியம் காக்கச் செய்யும்

    எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை. மவுனம் உங்கள் வாழ்க்கையை இன்னும் ரகசியம் நிறைந்ததாக மாற்றும். அந்த ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக மற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    * கேட்கும் திறனை அதிகரிக்கும்

    நீங்கள் ஒரு பேச்சாளராக இருப்பதை விட கேட்பாளராக இருப்பது எளிதானது. மற்றவர்களின் பேச்சை ரசித்து கேட்க தொடங்கும்போது இயல்பாகவே உங்கள் மனம் அமைதியாகும். நீங்கள் அதிகமாக கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும்போது அவர்களும் ஆர்வமாக பதிலளிப்பார்கள். மீண்டும் கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

    * உணர்ச்சி ரீதியாக புத்திசாலியாக்கும்

    மவுனம் உங்களை உணர்ச்சி ரீதியாகவும் புத்திசாலியாகவும் மாற்றும். தன்னுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பேசுபவர், தன் பேச்சை கேட்பவரிடம் ஆலோசனையையோ, அனுதாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. ஆழ்மனதில் பதிந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தான் எதிர்பார்க்கிறார். அவரது மனக் குமுறலை எந்த குறுக்கீடும் செய்யாமல் மவுனமாக கேட்பதையே அவர் விரும்பவும் செய்வார். உங்கள் மவுனம் அவரை ஆசுவாசப்படுத்தும். உங்களையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய நல்ல மனிதராக அடையாளம் காட்டும்.

    • சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும்.
    • சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.

    அந்தக் காலத்தில், ஒரு சோப்பை வீட்டிலுள்ள அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் அப்பொழுது நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதனால், குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதே.

    பலவிதமான சரும அமைப்புகள் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். இப்படியிருக்கும்போது, ஒரே சோப்பை பலர் உபயோகிப்பதால், தீமைதான் அதிகமே தவிர, நன்மை இல்லை.

    பாத்ரூமில் பலர் சோப்பை உபயோகித்தபின் அதன் மீது நிற்கும் நுரையைக் கழுவாமல் சோப்பை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் ஏற்கனவே சோப்பை உபயோகித்தவருக்கு ஏதாவது சரும நோய் இருந்திருந்தாலும் நன்றாகக் கழுவி உலர வைத்துவிட்டால் அடுத்தவர் உபயோகிக்கும்போது தொற்று ஏற்படாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பாகும்.

    சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் கிருமிகள் போன்றவை சோப்பின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். ஆக, ஒரு சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.

    நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள் உபயோகிக்கும்போது, அந்த சோப்பின் மூலம் அதிகமாக கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. வெளிக்காயம், அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்கள், 'எக்ஸிமா' என்று சொல்லக்கூடிய சரும நோய் உள்ளவர்களிடமிருந்து கண்டிப்பாக சருமநோய் பரவத்தான் செய்யும்.

    ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நீங்கள் உபயோகித்த சோப்பை நன்கு கழுவி, உலரவிட்டு உபயோகிக்க வேண்டும். கணவன்-மனைவி என்றாலும் கூட இதே முறையைத்தான் கடைப்பிடித்தாக வேண்டும்.

    இப்பொழுதெல்லாம் 'லிக்யுட் சோப்' என்கிற திரவ வடிவ சோப்புக் கரைசல் பாட்டில்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தும்போது தொற்று என்கிற பேச்சுக்கே இடமில்லை.

    சோப்பை நாம் உபயோகிப்பதே, நம் உடம்பை சுத்தம் செய்ய, நம் உடம்பு புத்துணர்ச்சி பெற, நம் உடம்பில் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், எண்ணெய் படலம், வியர்வை நாற்றம் முதலியவற்றை அகற்றத்தான். எனவே அந்த சோப் தரமானதாக இருக்க வேண்டும்.

    தோல் பராமரிப்பு என்பது, பாத்ரூமுக்கு போனவுடன் 2 சொம்பு தண்ணீரை ஊற்றி, சோப்பை உடல் முழுவதும் ஒரு நிமிடத்தில் தேய்த்துவிட்டு, தண்ணீரை மறுபடியும் ஊற்றிக் கொண்டு, பாத்ரூமை விட்டு வெளியே ஓடி வந்துவிடுவதல்ல. சிறிது கவனம், சிறிது நேரம், சிறிது அக்கறை, தரமான குளியல் சோப்புடன் சேரும்போது, அந்தக் குளியல், ஆனந்தக் குளியலாக எப்பொழுதும் இருக்கும்.

    • பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும்.
    • பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும்.

    தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏறேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.

    இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

    'டீனியா கப்பைடிஸ்' என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.

    இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.

    இதற்கான சித்த மருத்துவம்: சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.

    பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று 'மாலசீயா'. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்து பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.

    தலையில் ஏற்படும் எக்ஸீமா என்னும் கரப்பானில் தோல் அழற்சி, அரிப்பு, சிறுசெதில் மற்றும் வீக்கத்துடன் இருக்கும். சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை என்பது ஒரு பொதுவான, நீண்டகால நாள்பட்ட நோயாகும். இதில் தலையில் செதில்கள், ஊறல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படும். இவற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள்:

    கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    அரிப்பு இருந்தால், கந்தக பற்பம் 200மி.கி., சிவனார் பற்பம் 200மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும். தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.

    • நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
    • நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    பொதுவாக சாதம் வடித்தவுடன் அந்த கஞ்சியை கீழே ஊற்றிவிடுகிறோம். அதன் நன்மைகள் தெரிந்தவர்கள் மட்டும் தான் அந்த கஞ்சியை கீழே ஊற்ற மாட்டார்கள். நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நீராகாரம் என சொல்லி அதை வீணாக்காமல் குடித்துவிடுவர். அவர்களைப் போல நீங்களும் வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டால் அதை வீணாக கீழே ஊற்ற மாட்டீர்கள்.

    சாதம் வடித்த கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. சாதத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறதோ அதே அளவு ஆற்றல் இந்த கஞ்சியிலும் உள்ளது. இளஞ்சூடான வடித்த கஞ்சியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால் வயிறும் நிறைந்துவிடும் தேவையான ஆற்றலும் கிடைத்துவிடும்.

    சாதம் வடித்த இந்த கஞ்சியில் பி1,பி2,பி6 ஆகியவை உள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மக்னீசியம் சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் எலக்ரோலைட்டுகளை சமநிலைப்ப்படுத்துகிறது. சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கும், சில நேரத்தில் சருமத்தில் எரிச்சலை போக்கவும், முகப்பருக்களை குறைப்பதற்கும் கூட பயன்படுகிறது.

    இதிலுள்ள பொட்டாசியம் உடலில் உள்ள சோடியம் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    காலையில் எழுந்தவுடன் வடித்த கஞ்சி குடித்தால் அந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதுமட்டுமின்றி வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவதால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அன்றைய நாளைக்கு தேவையான ஆற்றலும் கிடைத்து விடும்.

    ×